Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எகிறும் தென்னிலங்கையும் குமுறும் தமிழர் தாயகமும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எகிறும் தென்னிலங்கையும் குமுறும் தமிழர் தாயகமும்

தெற்கின் பௌத்த சிங்கள மேலாண்மைப் போக்குடைய இனவாதிகள் மட்டுமல்லாமல் அவர் களுடன் கைகோர்த்து நிற்கும் ஆட்சியாளர்களும் அதி காரத்தில் இருப்போரும் கூட , இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் போர்நிறுத்தத்துக்கு வழி செய்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை முற்றாக எதிர்க்கின்றார்கள்.

அதைக் கிழித்தெறிய வேண்டும் என்ற இனவாதிகளின் கூச்சலுக்கு தலைசாய்க்கின் றார்கள். ஆனால் அப்படிக்கிழித்தெறியும் அதிகாரமும் முழு விருப்பமும் இருந்தும்கூட அதைச் செய்யாமலும், செய்ய முடியாமலும் அவர்கள் விழிபிதுங்கி நிற்கும் விநோதத்தை விபரீதத்தை இப்பத்தியில் நேற் றுப் பார்த்தோம். அதற்கு சில காரணங்கள் உண்டு. அவற்றுள் ஒன்றைப் பார்ப்போம்.

ஆட்சிக்கு வந்த மஹிந்த ராஜபக்ஷ, மூன்று மாதத்துக்குள் விடுதலைப்புலிகளுடன் முதற்சுற்று சமரசப்பேச்சுக்களை நடத்தினார். மேற்படி புரிந்துணர்வு ஒப்பந்தத்தைக் குறைந்தபட்சம் மாற்றியாவது தீரு வோம் என்று சூளுரைத்துக்கொண்டு "ஜெனிவா ஐ" பேச்சுக்குச் சென்ற அவரது அரச பிரதிநிதிகள் அணி, அங்குபோய் அந்த ஒப்பந்தத்தை முழு அளவில் நடை முறைப்படுத்துவோம் என எழுத்தில் கையெழுத்திட்டு ஒப்புக்கொண்டு வரவேண்டியதாயிற்று. விரும்பாத ஒரு வேலையை வேறுவழியின்றிச் செய்துவிட்டு நாடு திரும்பிய அரச பிரதிநிதிகள் குழு, தங்கள் செயற்பாட்டை மூடி மறைப்பதற்காக ஒப்பந்தத்தை "ஜெனிவா ஐ" பேச்சின்போது மாற்றியமைக்க இணக் கம் கண்டுள்ளோம் என்று "கோயபலஸ்" பாணியில் பொய்ப்பிரசாரம் செய்யவேண்டியுமாயிற்று.

இவ்வாறு இந்த ஒப்பந்தத்தை எதிர்த்துக்கொண்டு எதிர்ப்பவர்களாகத் தம்மை வெளிப்படுத்திக் கொண்டு அதே நேரம் ஒப்பந்தத்தைக் கைவிடாமல் கடைப்பிடிப் பவர்களாகவும் தம்மைக் காட்டியும் கூறியும் கொள்ள வேண்டிய தேவை இக்கட்டு அரசுத்தரப்புக்கு. அதற்கான காரணங்கள் பல.

முதலாவது பிரதான காரணம், இந்தப் போர் நிறுத்தத்தின் ஆக்கபூர்வமான பலாபலன்களை தென்னிலங்கைச் சிங்களமே முழுமையாக அனுபவித்து வருகிறது. யுத்தநிறுத்தத்தின் பெறுபேறு தமிழர் தாயகத்துக்கு எந்தப் பயனையும் அளிக்கவேயில்லை. ஆகவே, தமிழர்களுக்குக் கிடைக்காமல் தமக்கு மட்டும் கிடைக்கும் அந்தப் பலாபலன்களை இழக்க அல்லது துண்டித்துக் கொள்ள தென்னிலங்கை விரும்பவில்லை; தயாரில்லை.

2002 முற்பகுதியில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்தாக முன்னர் யுத்தத்தினால் தென்னிலங்கை மோசமான பாதிப்பில் வீழ்ந்து கிடந்தது. கட்டுநாயக்கா படைத்தளம் மீதான பெரும் அழிவுத் தாக்குதலை அடுத்து நாட்டின் பொருளாதாரம் படுத்துவிட்டது. யுத்தம் வீட்டு வாசலைத் தட்டுவதை எதிர்பார்க்காத தென்னிலங்கை வாசிகள் கலங்கிப் போயினர்.

அந்த வேளையில்தான் யுத்தத்துக்குத் தற்காலிக மாகவேனும் ஓய்வு கொடுக்கும் போர் நிறுத்தத்துக்கு வழி செய்யும் புரிந்துணர்வு ஒப்பந்தம் தென்னிலங்கைக்கு ஆபத்பாந்தவனாக வந்து சேர்ந்தது. சிங்கள தேசத்தில் அதனால் ஆரம்பத்தில் முழு அமைதி நிலை ஏற்பட்டது. பொருளாதாரம் மேம்பட்டது. அழிவுகள் நிறுத்தப்பட்டன.

ஆனால், தமிழர் தேசத்தைப் பொறுத்தவரை ஒப்பந்தம் கைச்சாத்தாகிய ஆரம்ப காலத்தில் யுத்தத்தின் சத்தம் ஓய்ந்ததே தவிர ஆக்கபூர்வமாக எதுவுமே நடக்கவில்லை. முழுமையான சுமுகநிலை உரு வாகவில்லை. இயல்பு நிலை திரும்பவில்லை. இராணுவ ஆக்கிரமிப்பு அச்சுறுத்தல் தீவிரமடைந்ததே தவிர குறையவே இல்லை. அழிவுகளும், மனிதப் பேரவலங்களும் விண்ணை முட்ட எழுந்தன. மென்மேலும் தமிழர் தாயகம் இராணுவ ஆக்கிரமிப்புக்கு உள்ளாக, தாயக மண்ணிலிருந்து விரட்டப்பட்ட தமிழரின் எண்ணிக்கை மேலும் பல லட்சங்களால் உயர்ந் தது. போர்நிறுத்த காலத்தில் வீடு, வாசல்களை இழந்து, அன்றாட ஜீவனோபாயத்தைத் துறந்து, உறவுகளையும் உடைமைகளையும் பறிகொடுத்து, அவல வாழ்வோடு அந்தரிக்கும் தமிழரின் துயரம் பெருங்குமுறலாய்த் தொடர்கிறது. திறந்த வெளிச் சிறைவாழ்வும், பொருளாதாரத் தடையும், யுத்தச் சீரழிவும் தமிழர் தாயகத்தின் மீது முழு அளவில் திணிக்கப்பட "கோமாளித்தனமான யுத்த நிறுத்தம்" தொடர்கிறது.

அதேசமயம் சமாதானத்தின் திரைக்குப்பின்னால் ஒரு நிழல் யுத்தத்தை அதன் நிஜவடிவத்தை உலகுக்கு மூடி மறைத்துக்கொண்டு தமிழர் தாயகத்தில் அரசுத்தரப்பினால் தடையேதுமின்றி மேற்கொள்ளவும் இந்த யுத்தநிறுத்தம் உதவுகின்றது.

ஆக, சமாதானத்தின் பலாபலன் தமிழ் மக்களைச் சென்றடையவில்லை. தாங்கமுடியாத அளவிற்கு அன்றாட வாழ்க்கைச்சுமையும், வாழ்வாதார வறுமையும் அவர்களை நசுக்கி வருகின்றன.

தமிழர்களுக்குத் தொடர் துயரத்தையும், தங்களுக்கு சாதக பலாபலன்களையும், அதேநேரம் தமிழர் தாயகத்துக்கு எதிராகக் கெடுபிடி நடவடிக்கைகளை முழு அளவில் முன்னெடுத்து தமிழர் தாயகத்தின் கழுத்தை இராணுவ நடவடிக்கைகள் மூலம் திருகுவதற்கு வாய்ப்பான சூழலையும் தந்துநிற்கும் யுத்த நிறுத்தத்தை அவ்வளவு சுலபமாகத் தூக்கி எறிந்து விடத் தென்னிலங்கை தயாராக இல்லை.

யுத்தப் பேரவலத்துக்குள் மூழ்கி, தமிழர் தாயகம் ஒருபுறம் குமுறிக்கொண்டிருக்க சமாதானத்தின் யுத்தநிறுத்தத்தின் முழுப் பலனையும் தான் மட்டுமே நன்கு அனுபவித்து, பெற்றுக்கொண்டு, அதன்மூலம் தனது பொருளாதாரத் தைக் கட்டி எழுப்பி, மேம்படுத்தி, அதன் வாயிலா கத் தனது இராணுவப் பலத்தையும் பெருக்கி விருத்தி செய்துகொண்டு, இப்போது எந்தக் கணத்தில் யுத்தநிறுத்தத்தை முறித்து, முழு அளவிலான யுத்தத்தைத் தமிழர் தாயகம் மீது கட்டவிழ்த்து விடலாம் என்ற சிந்தனையோடு மறுபுறத்தே எகிறிக்கொண்டு நிற்கின்றது தென்னிலங்கை.

யுத்தநிறுத்த ஒப்பந்தத்தை முறிக்க விரும்பியும் அதை இதுவரை செய்யாமல் தென்னிலங்கைத் தலைமை காலத்தை இழுத்தடித்து வந்தமைக்கு மேலும் சில காரணங்கள் உண்டு. அந்த யுத்தநிறுத்த ஒப்பந்தத்துக்கு ஐந்து ஆண்டுகள் பூர்த்தி அடைந்த நிலையில் அவற்றை நாளை இப்பத்தியில் பார்ப்போம்.

-உதயன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.