Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திரைப்பட விமர்சனம்: சங்கிலி புங்கிலி கதவத் தொற

Featured Replies

திரைப்பட விமர்சனம்: சங்கிலி புங்கிலி கதவத் தொற

 
 
சங்கிலி புங்கிலி கதவத் தொற திரைப்படம்
 
படம் சங்கிலி புங்கிலி கதவத் தொற
 
நடிகர்கள் ஜீவா, ஸ்ரீதிவ்யா, ராதிகா, சூரி, தேவதர்ஷினி, தம்பி ராமைய்யா, ராதாரவி, கோவை சரளா
 
இசை விஷால் சந்திரசேகர்
 
இயக்கம் ஐக்

சில ஆண்டுகளுக்கு முன்பாக தமிழ் சினிமாவில் துவங்கிய பேய் அலை இன்னமும் ஓயவில்லை. கடந்த வாரம் சரவணன் இருக்க பயமேன். இந்த வாரம் சங்கிலி புங்கிலி கதவத் தொற.

வாசு (ஜீவா) ஒரு ரியல் எஸ்டேட் தரகர். விற்காத வீடுகளைக்கூட விற்கச் செய்பவர். தனக்கென ஒரு வீட்டை அடையாளம் கண்டு, அந்த வீட்டில் பேய் இருப்பதாக புரளியை ஏற்படுத்தி குறைந்த விலைக்கு வாங்கிவிடுகிறார்.

அதே வீட்டுக்கு ஜம்புலிங்கம் (தம்பி ராமைய்யா) என்பவரும் உரிமைகோரி அதே வீட்டில் தங்குகிறார்.

ஜம்புலிங்கத்தின் மகள் ஸ்வேதா (ஸ்ரீ திவ்யா).

ஜம்புலிங்கத்தின் குடும்பத்தை விரட்ட, மீண்டும் பேய் இருப்பதுபோல பயமுறுத்தலில் ஈடுபடுகின்றனர் வாசுவும் அவனது நண்பனும் (சூரி).

ஆனால், அந்த வீட்டில் உண்மையிலேயே சங்கிலியாண்டவன் (ராதாரவி) என்ற பேய் இருக்கிறது.

அந்த வீட்டில் ஏன் பேய் இருக்கிறது, வாசுவுக்கு வீடு கிடைத்ததா என்பதுதான் மீதிக் கதை.

சங்கிலி புங்கிலி கதவத் தொற திரைப்படம்

அந்த பங்களாவில் மழை பெய்யும் இரவில் ஒரு தம்பதியும் குழந்தையும் வந்து தங்குகிறார்கள்.

வீட்டில் வேலை பார்ப்பவர், அவர்கள் சாப்பிட உணவு வாங்கச் செல்கிறார். அவர் உணவு வாங்கிவிட்டுவரும்போதுதான் அந்தத் தம்பதிக்குத் தெரிகிறது, அந்த வேலைக்காரர் இறந்து போய் பல வருடங்களாகிவிட்டது என்பது. இந்தக் காட்சியுடன் ரகளையாகத் துவங்குகிறது படம்.

பேய் + நகைச்சுவை என்பது தமிழ் சினிமாவில் ரொம்பவுமே வெற்றிகரமான ஃபார்முலா என்பதால் இந்தப் படத்திலும் அதையே முயற்சித்திருக்கிறார்கள்.

அதனால், படத்தில் சூரி, தம்பி ராமைய்யா, கோவை சரளா, மயில்சாமி என பல நகைச்சுவை நட்சத்திரங்கள்.

சங்கிலி புங்கிலி கதவத் தொற திரைப்படம்

ஒரு வீட்டில் ஏதோ ஒரு காரணத்தால், பேய் குடியேறுவதும் பிறகு அந்த வீட்டுக்கு வருபவர்கள் அதை வெளியேற்ற முயல்வதும்கூட உலகம் முழுவதும் பல திகில் திரைப்படங்களில் காணப்பட்ட கதைதான். அதனால் கதை எவ்வித ஆச்சரியத்தையும் ஏற்படுத்துவதில்லை.

முதல் பாதியில், கதாநாயகன் வீடுகளை விற்க செய்யும் தந்திரங்கள், பெரிய பங்களாவை குறைந்த விலைக்குவாங்க செய்யும் முயற்சிகள், காதல் என விறுவிறுப்பாக நகர்கிறது படம்.

இடைவேளைக்குப் பின் பேய் அறிமுகமாகிவிட, மேலும் விறுவிறுப்பாக நகரும் என எதிர்பார்த்தால், ஏமாற்றம்தான். மிகச் சாதாரணமான திகில் காட்சிகள், அதை விரட்டுவதற்கு கோவை சரளா சொல்லும் மிகச் சாதாரணமான யோசனை, நீநீநீண்ட க்ளைமேக்ஸ்...என பொறுமையைச் சோதித்துவிடுகிறது படம்.

சங்கிலி புங்கிலி கதவத் தொற திரைப்படம்

ஜீவா, ஸ்ரீ திவ்யா ஆகியோருக்கு மேலும் ஒரு படம். குறிப்பிட்டுச் சொல்லும்படி ஏதும் இல்லை.

சூரியின் காமெடிக் காட்சிகள் ரொம்பவும் மோசமில்லை. ஆனால், அவருடைய சிறந்த படங்களில் இந்த படமும் ஒன்று எனச் சொல்ல முடியாது.

பேயாக வரும் ராதாரவி, சிறிது நேரமே வந்தாலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துகிறார்.

விஷால் சந்திரசேகரின் இசையில் "கட்டதொரைக்கு கட்டம் சரியில்ல" பாடல் மட்டுமே தேறுகிறது.

பேய்ப்படம் என்பதாலும் நடிகர் பட்டாளத்தாலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த சங்கிலி புங்கிலி, அந்த எதிர்பார்ப்பை நிறைவுசெய்யவில்லை. மற்றுமொரு சாதாரண பேய்ப் படமாக கடந்துசெல்கிறது.

தம்பி ராமைய்யாவையும், தேவதர்ஷினியையும் வைத்து உருவாக்கியிருக்கும் இரட்டை அர்த்த காமெடி இல்லாமலிருந்தால் குழந்தைகளுக்கான படமாகவாவது இருந்திருக்கும்.

http://www.bbc.com/tamil/arts-and-culture-39976463

  • தொடங்கியவர்

இந்த பேய் பயமுறுத்துது... ஆனா, எப்படி தெரியுமா? - சங்கிலிபுங்கிலி கதவ தொற விமர்சனம்

 
 

ஒரு கைவிடப்பட்ட பங்களா. வழக்கம் போல அதில் பேய் இருக்கிறது. வழக்கம் போல் ஒருவர் அந்த வீட்டை வாங்குகிறார். வழக்கம் போல அந்தப் பேய் குடிவந்தவர்களை பாடாய்ப்படுத்துகிறது. வழக்கம் போல் பேய் ஓட்டுபவர் ஒருவர் வந்து பேயின் ஃப்ளாஷ்பேக்கை சொல்கிறார். வழக்கம் போல் அந்த வீட்டில் வசித்த நல்ல மனிதரை சொந்தக்காரர்கள் சேர்ந்து கொன்றுவிடுகிறார்கள். வழக்கம் போல் அவர் பேயாக மாறிவிடுகிறார், அந்த பேயை எப்படி சாந்தப்படுத்தி அனுப்பி வைத்து வீடுவாங்கியவர் வீட்டை அடைகிறார் என்பதை வழக்கமான க்ளைமாக்ஸில் சொல்லியிருக்கிறார்கள். 

பேய்

ஜீவாவுக்கு, வழக்கமான நடிப்புதான். ஸ்ரீதிவ்யாவுக்கும் அவருக்கும் ஆரம்ப அத்தியாயம் தொடங்கி கடைசி வரை வரும் காதல்.... ஆவ்...! சூரியின் காமெடியில் இதிலும் அச்சு அசல் வடிவேலு சாயல். ஒரு படத்தில் கவுண்டமணி மனைவியாக வரும் கோவை சரளாவுக்கு அல்வா கொடுத்த செந்தில் காமெடி டிராக், வேறொரு படத்தில் வடிவேலு சொல்லும் இலவு காத்த கிளிக்கதை டிராக், சந்திரமுகி வடிவேலு அரண்மனை எபிசோட் என்று பலவற்றின் தழுவலில் காமெடி செய்ய முயற்சித்திருக்கிறார்கள்.    

படம் ஆரம்பத்திலேயே பேய் வந்துவிட்டாலும், ‘ப்ச்.. கொஞ்சம் ஓரமாப் போய் நில்லு’ என்று கதையை எதிர்பார்க்கிறார்கள் ரசிகர்கள். ஜீவா, குடித்துவிட்டு வந்து ‘சங்கிலியாண்டி’ ராதாரவியிடம் அண்ணாமலை ஸ்டைலில் பேசும் காட்சி, கலகல. அந்தக் காட்சியை, ‘உனக்குத்தான் தெரியுமே... கூட்டிக் கழிச்சுப் பாரு’ என்று ராதாரவியிடமே சொல்லி முடித்த விதமும் ரசிக்க வைக்கிறது.

காஞ்ஜூரிங், அனேபெல் போன்ற ஹாலிவுட் இறக்குமதி பூச்சாண்டிகளையே லெப்ட்டில் டீல் செய்துகொண்டிருக்கிறார்கள் தமிழ் ரசிகர்கள். இவர்களிடம் பின்னால் இருந்து ஒரு கை முன்னால் இருப்பவரின் தோளை தொடும்போது பியானோவை அலறவிட்டு பயமுறுத்த நினைப்பதெல்லாம் கோபம் வரச் செய்யும் காமெடி. தமிழ் சினிமாவை ஐந்து வருடங்களாக பேய் பிடித்து ஆட்டுகிறது. அதனாலேயே, திகில் காட்சிகளில் 'நீதான் பயங்கரமான ஆளாச்சே இன்னும் நல்லா பயமுறுத்து' என்கிற மோடிலேயே அசால்ட்டாக இருக்கிறார்கள்.   பேய்ப்படத்தில் பேய் இருக்கிறதோ இல்லையோ கண்டிப்பாக இருக்கவேண்டிய ஆள் கோவை சரளா. இதிலும் இருக்கிறார். சூரி, ஜீவாவின் இலை உடைக் காமெடி ’கொஞ்சம் சிரிச்சுக்கோங்க ப்ளீஸ்’ என வேண்டுகோள் வைக்கிறது. தேவதர்ஷினி, தம்பி ராமையா இருவருக்குமான காட்சிகளில் இரட்டை அர்த்தமெல்லாம் , இலை மறை காயென்றெல்லாம் இல்லாமல், ஒரே அர்த்தமாக ஒலித்துத் தொலைக்கிறது. 

சங்கிலி புங்கிலி கதவத்தொற

படத்தின் ஸ்டார் நடிகர் ராதாரவிதான். அந்த ஃப்ளாஷ்பேக் காட்சியில் குடும்பத்தின் ஒற்றுமை கண்டு சந்தோஷப்படும்போதும், பேத்தி கேட்கும் அந்த ஒற்றைக் கேள்வியில் உடைந்து போகும்போதும் நச் நடிப்பு. இரண்டாம் பாதியில் பேய் என்கிற பெயரில் அந்தப் பவுடரை முகத்தில் அப்பாமல் இருந்திருந்தால், இன்னும் அவர் நடிப்பை ரசித்திருக்கலாம். ஆனாலும் உடல்மொழியில் மிரட்டுகிறார். அவருக்கு இணையாக நடிக்கும் இன்னொருவர் ராதிகா. தோன்றும் காட்சிகளிலெல்லாம்... அசால்ட்டாக அசத்துகிறார்! 

கங்கை அமரன், அனிருத், சிம்பு, ஜி.வி.பிரகாஷ்குமார், பிரேம்ஜி என்று எல்லாரையும் பாடவைத்திருக்கிறார் இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர். அவற்றில் கங்கை அமரன் பாடும் பாடல் கேட்கலாம் ரகம். பின்னணி இசை... இன்னும் பூச்சாண்டி காமித்திருக்கலாம். டி.எஸ்.சுரேஷ் எடிட்டிங்கில் ஃப்ளாஷ்பேக் காட்சிகளில் காட்டிய கச்சிதம், படம் முழுவதும் இருந்திருக்கலாம். சத்யன் சூரியனின் ஒளிப்பதிவு அந்த பங்காளாவை லாங் ஷாட்டில் காட்டும்போது எக்ஸ்ட்ரா உற்சாகத்துடன் இருந்திருக்கிறது.

 

இன்னும் தமிழ் ஹீரோக்களில் பேய்ப்படத்தில் நடிக்காமல் இருக்கிறது யாருன்னு பார்த்து ஜீவாவையும் அந்த நோட்டில் மொய் எழுத வைத்துவிட்டார்கள். அட்லியின் ‘ஏ ஃபார் ஆப்பிள்’ நிறுவனம் தயாரித்த முதல் படமான இதை, புதுமுக இயக்குநர் ஐக் இயக்கியிருக்கிறார். தமிழ் சினிமா பேய் பட ஹிஸ்ட்ரியை மனதில் வைத்து, இன்னும்  மிஸ்ட்ரி சேர்த்திருக்கலாம்!

http://www.vikatan.com/cinema/movie-review/89805-sangili-bungili-kadhava-thorae-review.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.