Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிந்தவும் சகோதரர்களும்

Featured Replies

மகிந்தவும் சகோதரர்களும்

வியாழன் 22-02-2007 04:01 மணி தமிழீழம் [சிறீதரன்]

ஸ்ரீலங்காவின் வெளிவிவகார அமைச்சராக மகிந்த ராஜபக்சவின் சகோதரரான பசில் ராஜபக்சசே செயல்பட்டு வருவதாக இராஜதந்திர தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன

தனது கட்டுப்பாட்டிற்குள் செயல்படக் கூடியவரான ரோஹித போகொல்லாகமவிற்கு வெளிவிவாகர அமைச்சு பதவியை வழங்கி விட்டு வெளிவிவகார அமைச்சருக்குரிய பணிகளை பசில் ராஜபக்சவே மேற்கொண்டு வருவதாக தெரியவந்துள்ளது

ஸ்ரீலங்கா ஜனாதிபதியின் சிறப்பு தூதுவராக அறிவிக்கப்பட்டுள்ள பசில் ராஜபக்ச இந்தியாவிற்கும் ஜப்பானுக்கும் மேற்கொண்ட விஜயங்கள் அவருக்கு வழங்கப்பட்டுள்ள இராஜதந்திர அந்தஸ்திற்கு எடுத்துக் காட்டு என இராஜநத்திர தரப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன

ஒரு நாட்டின் அமைச்சு பதவியினையோ அமைச்சு செயலாளர் பதவியினையோ வகிக்காத ஒருவரை ஜப்பான் போன்ற முக்கிய நாடு ஒன்றின் வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட முக்கிய பிரமுககர்கள் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளமை முக்கியத்துவமானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளனர்

இதேபோல் அண்மையில் பசில் ராஜபக்ச இந்தியாவிற்கு விஜயம் செய்த போது இலங்கைக்கான இந்திய தூதுவர் ஆலோகர் பிரசாத்தும் இந்தியா சென்றுள்ளார்

பொதுவாக ஒரு நாட்டு அரச தலைவரின் விஜயத்தின் போது குறிப்பிட்ட நாட்டின் தூதுவரும் உடன் செல்வது வழமை என்றம் ஆனால் மகிந்த ராஜபக்சவின் சிறப்பு தூதுவரான பசில் ராஜபக்சவின் விஜயத்தின் போது இந்திய தூதுவர் கலந்து கொண்டமை அவருக்கு வழங்கப்பட்டுள்ள முக்கியத்துவத்தையே எடுத்துக் காட்டுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

ஸ்ரீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பொம்மை ஜனாதிபதியாக்கி வெளிநாட்டு இராஜதந்திர நடவடிக்கைகளை அவருடைய ஒரு சகோதரர் பசில் ராஜபக்சவும் உள்ள நாட்டு விவகாரங்கள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மற்றுமொரு சகோதரரான கோட்பாய ராஜபக்சவும் முன்னெடுத்து வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

இதேவேளை ராஜபக்ச குடும்ப அங்கத்தவர்கள் ஏறத்தாள 60 பேர் ஸ்ரீலங்கா அரசாங்க செயல்பாடுகளில் நேரடியாக தலையீடகளை மேற்கொள்வதுடன் அரசாங்க திணைக்களங்கள் மற்றும் அமைச்சுக்களை கட்டுப்படுத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

ஸ்ரீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினதும் அவருடைய குடும் உளவினர்களதும் இந்த நடவடிக்கையானது ராஜபக்ச குடும்பத்தின் சர்வாதிகார ஆட்சிக்குள் இலங்கை கொண்டு செல்லப்படுவதை எடுத்துக்காட்டுவதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்

Pathivu

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.