Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உருமாற்றம்!

Featured Replies

உருமாற்றம்!

 

இலங்­கையில்  கொண்­டு­வ­ரப்­ப­ட­வுள்ள மேற்­படி பயங்­க­ர­வாத எதிர்ப்பு சட்டம் தொடர்பில் பலர் தமது அதி­ருப்­தி­க­ளையும் எதிர்ப்­பு­க­ளையும் தெரி­வித்­தி­ருப்­பது இங்கு கவ­னத்தில் கொள்­ளப்­ப­ட­வேண்­டிய விட­ய­மாகும். அந்த வகையில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு, மற்றும் சர்­வ­தேச  அமைப்­புகள் பல தமது அதி­ருப்­தி­களை  முன்­வைத்­துள்­ளன.

 

நடை­மு­றை­யி­லுள்ள பயங்­க­ர­வாத சட்­டத்­துக்கு மாற்­றீ­டாக புதிய பயங்­க­ர­வாத எதிர்ப்புச் சட்­ட­மொன்றை கொண்டு வரு­வ­தற்­கான ஏற்­பா­டு­களை மேற்­கொண்டு வரு­கின்ற நிலையில் வர­வி­ருக்கும் புதிய சட்­ட­மா­னது சாதா­ரண மனி­த­னொ­ரு­வனின் அடிப்­படைச் சுதந்­தி­ரத்தைக் கூட பறித்­தெ­டுத்­து­விடக் கூடிய மிக மோச­மான சட்டம் என பல தரப்­பி­னரால் சுட்­டிக்­காட்­டப்­ப­டு­கி­றது.

இலங்­கையில் தங்கள் இனத்தின் விடு­த­லைக்­காக போரா­டிய தமிழ் இளை­ஞர்­களை பயங்­க­ர­வா­திகள் என்றும் தேச­வி­ரோ­திகள் என்றும் சுட்­டிக்­காட்­டிய சட்டம் முன்னாள் ஜனா­தி­பதி ஜே.ஆர். ஜெய­வர்­தனவால் 1978 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதி புலிகள் தடைச் சட்­டமும் 1979 ஜூலை 20 ஆம் திகதி பயங்­க­ர­வாத தடைச் சட்­டமும் அமு­லுக்கு கொண்­டு­வ­ரப்­பட்­டது. தமிழர் பிரச்­சி­னைக்கு இரா­ணுவத் தீர்வு காண விழைந்த அர­சாங்க நட­வ­டிக்­கை­களில் ஒரு முக்­கிய முயற்­சி­யாக 1979 ஜூலையில் பாராளு­மன்­றத்தில் பயங்­க­ர­வாத தடுப்புச் சட்­டத்தை (PTA) நிறை­வேற்­றி­ய­தாகும். இப்­ப­யங்­க­ர­வாதச் தடைச் சட்டம் நிறை­வேற்­றப்­பட்­டதால் அன்­றைய நிலையில் அர­சாங்­கத்­துக்கு எதி­ராக தமிழ் இளை­ஞர்­களின் சினம் வேகம் கொண்ட நிலையில் அவர்கள் ஆயுதப் போராட்ட இயக்­கத்தின் நோக்­கத்தை அதி­க­ரித்துக் கொண்­டது. மாத்­தி­ர­மல்ல விரை­வு­ப­டுத்­தவும் முற்­பட்­டனர்.

பேரா­சி­ரியர் எஸ்.ஜே. தம்­பையா என்­பவர் ஸ்ரீலங்கா இனச்சகோ­த­ரப்­ப­டு­கொ­லை­களும் ஜன­நா­யகம் சிதைந்து போதலும் எனும் தனது நூலில் இப்­ப­யங்­க­ர­வாதத் தடைச் சட்­டத்தின் பிர­தான அம்­சங்­களை அதை­யொத்­த­தான பிரித்­தா­னிய சட்­டத்­துடன் ஒப்­பிட்டுக் காட்டியிருந்தார். அதில், இதன் முக்­கி­ய­மான அம்­சங்­க­ளான சிறை­யி­லி­ருக்­கும்­போது பொலி­ஸா­ருக்கு அளிக்கும் வாக்­கு­மூலம் ஏற்றுக் கொள்­ளக்­கூ­டிய சம்மத வாக்கு மூல­மாக அங்­கீ­க­ரிக்­கலாம். மேலும் இச்­சட்­ட­மா­னது இச்­சட்­டத்தின் கீழ் குற்­றஞ்­சாட்­டப்­பட்ட எந்த ஒரு­வ­ரதோ அல்­லது முக­வரின் அல்­லது பிர­தி­நி­தி­யி­னதோ பாது­காப்பில் அல்­லது கட்­டுப்­பாட்டில் அல்­லது உட­மையில் உள்ள ஆவ­ணங்கள் யாதா­யினும் அதை எழு­தி­யவர் அல்­லது ஆக்­கி­ய­வரை அழைக்­காமல் அவ­ருக்கு எதி­ராக வழக்கில் சான்­றாக பயன்­ப­டுத்­தப்­ப­டக்­கூடும்.

அத்­துடன் அத்­த­கைய ஆவ­ணங்­களின் உள்­ள­டக்­கத்தை அதில் குறிப்­பிட்ட சான்­றா­தா­ரங்­களைப் பொருள் கொள்­ள­மு­டியும் என்றும் இச்­சட்டம் கூறு­கி­றது. பயங்­க­ர­வாத செயலில் யாரா­வது ஒருவர் ஈடு­பட்டால் 5 முதல் 20 ஆண்­டுகள் வரை அல்­லது ஆயுள் வரை சிறைத் தண்­டனை விதிக்க இச்­சட்­டத்தில் ஏற்­பா­டுள்­ளது.

பிரித்­தா­னி­யாவில் இதே பெயரைக் கொண்ட பயங்­க­ர­வாத தடுப்பு ஐக்­கிய ராஜ்­ஜிய சட்டம் 1974 இல் ஆக்­கப்­பட்டு பின்னர் இரத்துச் செய்­யப்­பட்டு சில திருத்­தங்­க­ளுடன் 1978 இல் மீண்டும் சட்­ட­மாக்­கப்­பட்­டது. இலங்­கையில் இச்­சட்­ட­மா­னது ஐக்­கிய ராஜ்­ஜி­யத்தை விட மனித உரி­மை­களை பார­தூ­ர­மாக பாதிக்­க­வல்­லது என பேரா­சி­ரியர் தம்­பையா குறிப்­பிட்­டி­ருந்­த­துடன் வட அயர்­லாந்­தி­லுள்ள நிலை­மை­களைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­காக வரை­யப்­பட்ட ஐக்­கிய ராஜ்­ஜி­யத்தின் சட்­டமே இலங்­கையின் பயங்­க­ர­வாத சட்­டத்­துக்கு முன்­னு­தா­ர­ண­மென சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தார்.

ஐக்­கிய ராஜ்­ஜி­யமும் இச­்சட்­டத்தை நடை­மு­றைக்கு கொண்டு வரு­வ­தற்கு கார­ண­மாக இருந்­தது, வட அயர்­லாந்தில் அப்­போது காணப்­பட்ட நிலை­மை­க­ளாகும். அதே­போன்றே 1978 இல் தமிழ்ப் புலிகள் என்ற ஆயுதப் போராட்ட இயக்கம் பல்­வேறு நட­வ­டிக்­கை­களிலும் பொலிஸ் படை­யினர் மீது எதிர் தாக்­குதல் நடத்­து­வ­திலும் மற்றும் திரு­நெல்­வேலி, நீர்­வேலி, கிளி­நொச்சி ஆகிய இடங்­க­ளி­லுள்ள வங்­கிகள் கொள்ளை இடப்­பட்­டமை, இன்­னொரு உணர்ச்­சி­ம­ய­மான தாக்­குதல் என்ற வகையில் அவ்ரோ விமானம் இரத்­ம­லா­னையில் வைத்து குண்டு வைத்து தகர்க்­கப்­பட்­டமை போன்ற இன்­னோ­ரன்ன அரச விரோத செயல்­களை அடக்­கவும் கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்டு வரும் நோக்­கிலும் பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தை உரு­வாக்­கினார். ஜே.ஆர். ஜெய­வர்­தன அவர்கள்.

இப்­பொ­ழுது உரு­வாக்­கப்­ப­ட­வுள்ள பயங்­க­ர­வாத எதிர்ப்­புச்­சட்டம் பற்­றிய விளை­வுகள் எவ்­வாறு இருக்­கு­மென விமர்­சிக்­கப்­ப­டு­கி­ற­தென்­பதைப் பார்ப்­போ­மாயின்,

புதிய பயங்­க­ர­வாத சட்­ட­மூ­லத்தைக் கொண்­டு­வர அமைச்­ச­ர­வையில் திருத்­தங்கள் முன்­வைக்­கப்­பட்ட நிலையில் புதிய திருத்­த­மா­னது பல்­வேறு கடுந்­தன்­மை­களைக் கொண்­ட­தாக காணப்­ப­டு­வ­தாக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் உட்­பட மனித உரிமை ஆர்­வ­லர் பலர் குற்­றச்­சாட்­டு­களை முன்­வைத்­துள்­ளனர்.

1) கடந்த காலத்­தி­லி­ருந்த பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தை விடவும் புதிய சட்­ட­மா­னது கடுந்­தன்மை கொண்­டது.

2) பயங்­க­ர­வாதம் என்ற பதத்தின் வரை­வி­லக்­கணம் மாற்­றப்­பட்டு அவ­சி­ய­மற்ற அனைத்­தையும் இணைத்த வகையில் பயங்­க­ர­வாதம் என்­ப­தற்­கான வரை­வி­லக்­கணம் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது.

3) சாதா­ரண குற்­றங்­களை இழைத் த­வர்கள் கூட பயங்­க­ர­வாத வரை­வி­லக்­க­ணத்­துக்குள் வரக்­கூ­டிய வகையில் திருத்தம் அமைந்­துள்­ளது.

4) இவ்­வ­ரைவு சிவில் உரி­மை­களை கட்­டுப்­ப­டுத்­து­வ­தா­கவும் அரச பாது­காப்பு அமைப்­புகள் மீதான நீதித் துறையின் கட்­டுப்­பாட்­டினை குறை­வ­டைய செய்­துள்­ளது என பல்­வேறு விமர்­ச­னங்கள் புதிய வரைபின் மீது முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது. இதில் முத­லா­வது விடயம் பயங்­க­ர­வாதம் என்­ப­தற்கு இவ்­வ­ரைபில் கொடுக்­கப்­பட்­டுள்ள வரை­வி­லக்­கணம் தொடர்பில் சர்ச்­சைகள் உரு­வா­கி­யுள்­ளன.

முன்­மொ­ழி­யப்­பட்ட பயங்­க­ர­வா­தத்­துக்­கான வரை­வி­லக்­க­ண­மா­னது சர்­வ­தேச மட்­டத்தில் பயங்­க­ர­வாத நட­வ­டிக்­கைகள் தொடர்­பி­லான எல்­லை­க­ளுக்கு அப்பால் செல்­வ­தா­கவும் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது. இதன் கருத்து யாதெனில் சர்­வ­தேச நாடு­க­ளி­லுள்ள பயங்­க­ர­வாத சட்­டங்கள் தொடர்­பாக வரை­ய­றுக்­கப்­பட்­டி­ருக்கும் நிய­தி­க­ளுக்கு அப்பால் இலங்­கையின் வரைவில் வேண்­டு­மென்றே ஒரு­வரை சிக்­க­வைக்கும் நோக்­கிலும் பயங்­க­ர­வா­தி­யென அடை­யா­ள­மிட்டு காட்டும் வகை­யிலும் இவ்­வ­ரை­வி­லக்­கணம் அமைந்து காணப்­ப­டு­வ­தாக சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

ஏலவே குறிப்­பிட்­ட­து­போல கடந்­த­கால பயங்­க­ர­வாத (PTA) தடைச் சட்­டத்தை விட மிக­மோ­ச­மான பரிந்­து­ரைக்கு உட்­பட்­ட­தாக புதிய பயங்­க­ர­வாத தடைச்­சட்டம் அமைந்து காணப்­ப­டு­வ­தாக கூட்­ட­மைப்பின் யாழ். மாவட்டப் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ. சுமந்­திரன் கருத்துத் தெரி­விக்­கையில் கூறி­யுள்ளார்.

கடந்­த­கால பயங்­க­ர­வாத தடைச் சட்­ட­மா­னது இலங்­கையில் கடந்த நாலு தசாப்­த­கா­லத்­துக்கு மேலாக எத்­த­கைய விளை­வு­க­ளையும் அனர்த்­தங்­க­ளையும் குறிப்­பாக தமிழ் இளை­ஞர்­க­ளுக்கு எதி­ராக உரு­வாக்­கி­யுள்­ளது என்­பதை சாதா­ர­ண­மாக அறிந்து கொள்­ளக்­கூ­டிய விட­ய­மாகும். சிறைச்­சா­லை­களில் நீண்­ட­கா­ல­மாக விடு­விக்­கப்­ப­டா­மலும் விசா­ரணை செய்­யப்­ப­டா­மலும் உள்ள தமிழ் இளை­ஞர்­களை விடு­விக்கும் விட­யத்தில் நட­வ­டிக்கை விரை­வில் எடுக்­கப்­படும். உடன் மேற்­கொள்­ளப்­படும் என இலங்கை அர­சாங்கம் கூறி வந்த போதிலும் இது­வரை அவர்களை விடு­தலை செய்­வ­தற்கோ பொது மன்­னிப்பு வழங்­கு­வ­தற்கோ முடி­யாமல் இருப்­ப­தற்கு காரணம் பயங்­க­ர­வாத தடைச் சட்­ட­மாகும்.

பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தை வாபஸ் பெறு­கி­றோ­மென இலங்கை அர­சாங்கம் சர்­வ­தே­சத்­துக்கு பல்­வேறு தட­வைகள் உறு­தி­ய­ளித்­தி­ருந்த போதும் இச்­சட்­டத்தை அது வாபஸ் பெற­வில்லை. கற்றுக் கொண்ட பாடங்கள் நல்­லி­ணக்க ஆணைக்­கு­ழுவின் அறிக்­கையில் (2011) பயங்­க­ர­வாத தடுப்புச் சட்­டத்தின் கீழ் கைதானோர் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருப்போர் தொடர்­பாக சுயா­தீன ஆலோ­சனைக் குழுவை நிய­மித்து குற்­ற­வியல் சட்­டத்தின் கீழ் தவறு இழைத்­து­விட்­டார்கள். என்­ப­தற்­கான ஆதா­ரங்கள் இருப்பின் குற்றப் பத்திரங்­களை தாக்கல் செய்­வ­தற்கும் அவ்­வாறு எதுவும் இல்­லாத பட்­சத்தில் விடு­விப்­ப­தற்கும் தீர்க்­க­மான முடிவை எடுப்­பது அவ­சி­ய­மா­னது என ஆணைக்­குழு வலி­யு­றுத்­தி­யி­ருந்த போதும் இவ்­வ­றிக்கை வெளி­வந்து ஆறு வரு­டங்கள் கடந்து விட்ட நிலை­யிலும் கூட இது­வரை எது­வித பரி­கா­ரங்கள் காணப்­ப­ட­வில்லை. வெறு­ம­னவே பயங்­க­ர­வாத தடுப்புச் சட்டம் என்ற கோதாவில் நீண்­ட­கா­ல­மாக நூற்­றுக்­க­ணக்­கான தமிழ் இளை­ஞர்கள் சிறையில் வாடு­வதைப் பார்க்­கின்றோம்.

இதே­போன்றே 2014 ஆம் ஆண்­ட­ளவில் முன்னாள் மனித உரிமை ஆணை­யாளர் நாயகம் நவ­நீ­தம்­பிள்­ளை­ய­வர்கள் தான் சமர்ப்­பித்­துள்ள அறிக்­கையில் பயங்­க­ர­வாத தடுப்புச் சட்­டத்­தையும் தன்­னிச்­சை­யான தடுப்புக் காவல்­களை அனு­ம­திக்கும் அதன் கீழான ஒழுங்கு விதி­க­ளையும் இரத்து செய்­யு­மாறு வலி­யு­றுத்­தி­யி­ருந்தார்.

ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை 2012 ஆம் ஆண்­டி­லி­ருந்து இவ்­வி­டயம் தொடர்பில் பயங்­க­ர­வாத தடைச்­சட்டம் நீக்­கப்­பட வேண்­டு­மென்ற கருத்தை வலி­யு­றுத்­தி­வந்த நிலை­யிலும் இலங்­கைக்கு விஜயம் செய்து அறிக்­கை­களை சமர்ப்­பித்­தி­ருந்த விசேட நிபுணர் குழுக்­களும் பயங்­க­ர­வாத தடைச்­சட்டம் நீக்­கப்­ப­ட­வேண்டும் என்ற விட­யத்தை அடிக்­கடி வலி­யு­றுத்தி வந்­தி­ருக்­கின்­றன. அத்­துடன் 2015, 2016 ஆகிய ஆண்­டு­களில் நடை­பெற்ற மனித உரிமைப் பேர­வையில் இலங்கை அர­சாங்­கத்தின் சார்பில் உரை­யாற்­றி­யி­ருந்த வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீரவும் நடை­மு­றை­யி­லுள்ள பயங்­க­ர­வாத தடைச்­சட்டம் நீக்­கப்­படும் என்ற வாக்­கு­று­தி­களை நல்­கி­யி­ருந்தார்.

இந்­நி­லை­யி­லேயே தற்­பொ­ழுது அர­சாங்கம் நடை­மு­றையில் இருக்­கின்ற பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தை நீக்கி விட்டு புதிய பயங்­க­ர­வாத எதிர்ப்பு சட்­டத்தை கொண்­டு­வ­ரு­வ­தற்கு முயற்­சி­களை மேற்­கொண்­டு­வ­ரு­கின்­றது.

கடந்த ஏப்ரல் மாதம் அளவில் (2017 ஏப்ரல்) பயங்­க­ர­வாத எதிர்ப்பு சட்டம் தொடர்­பான திருத்தம் அமைச்­ச­ர­வையில் அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டது. இந்த சட்டம் தொடர்­பாக கருத்துத் தெரி­வித்த அமைச்­ச­ரவைப் பேச்­சாளர் ராஜித சேனா­ரத்ன மேற்­படி சட்­ட­மா­னது சர்­வ­தேச தரங்­க­ளுக்கு அமைய உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. ஐரோப்­பிய ஒன்­றியம் இச்­சட்­டத்­துக்கு இணக்கம் தெரி­வித்­த­தா­கவும் கூறி­யி­ருந்தார். மேலும் குறிப்­பி­டு­கையில் இன்னும் சட்­ட­மூலம் தயா­ரிக்­கப்­ப­ட­வில்லை. அதற்­கான கொள்கை திட்டம் மட்டும் உரு­வாக்­கப்­பட்­டது என்றும் அவர் தெரி­வித்­தி­ருந்தார்.

இலங்­கையில் கொண்­டு­வ­ரப்­ப­ட­வுள்ள மேற்­படி பயங்­க­ர­வாத எதிர்ப்பு சட்டம் தொடர்பில் பலர் தமது அதி­ருப்­தி­க­ளையும் எதிர்ப்­பு­க­ளையும் தெரி­வித்­தி­ருப்­பது இங்கு கவ­னத்தில் கொள்­ளப்­ப­ட­வேண்­டிய விட­ய­மாகும். அந்த வகையில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு மற்றும் சர்­வ­தேச அமைப்­புகள் பல தமது அதி­ருப்­தி­களை முன்­வைத்­துள்­ளன.

இவ்­வ­கையில் இலங்­கையின் பிர­தான எதிர்க்­கட்­சி­யான தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு சார்ந்த பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுமந்­திரன், கருத்துத் தெரி­விக்­கையில்; பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்­துக்கு மாற்­றீ­டாக கொண்­டு­வ­ரப்­ப­ட­வுள்ள சட்­டத்­தி­ருத்­தங்கள் மிகவும் மோச­மா­ன­தா­கவும் மக்­களின் அடிப்­படைச் சுதந்­தி­ரத்தை அடக்கி ஒடுக்கும் வகை­யிலும் அமைந்­துள்­ள­தென்றும் முன்­மொ­ழி­யப்­பட்­டுள்ள இவ்­வ­ரைபு சந்­தேக நபர் ஒருவர் கைது செய்­யப்­பட்ட பின்னர் நீதி­பதி முன்­னி­லையில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்­டாலும் நீதி­பதி நிறை­வேற்று அங்கத்தில் ஒரு பகு­தி­யாக இருக்கும் படிக்­கான அர­சியல் யாப்­புக்கு எதி­ரான நீதித்­து­றையின் தனித்­து­வத்தை இல்­லாமல் செய்­வ­தற்கு உத­வி­யாக இருக்­கின்­றது.

சித்­தி­ர­வ­தை­யினைத் தடுப்­ப­தற்­கான பாது­காப்­பான முக்­கி­ய­மான அம்­சங்­களில் ஒன்­றான வாக்­கு­மூ­லங்­களை இல்­லா­தொ­ழித்தல் போன்­றவை ஆரம்­பத்தில் உறு­தி­ய­ளிக்­கப்­பட்­டி­ருந்­தாலும் பின்னர் அவை மாற்­றப்­பட்­டுள்­ளன. இச்­சட்­ட­மா­னது பயங்­க­ர­வா­தத்­தோடு எவ்­வ­கை­யிலும் தொடர்­பில்­லா­த­வர்­களின் உரி­மை­களை பாரி­ய­ளவில் மீறு­வ­தற்கு அங்­கீ­காரம் வழங்­கி­யுள்­ளது என சுமந்­திரன் குறிப்­பிட்­டி­ருந்தார்.

இலங்­கையில் கொண்­டு­வ­ரப்­ப­ட­வுள்ள பயங்­க­ர­வாத எதிர்ப்புச் சட்டம் தொடர்­பாக அனைத்­து­லக மற்றும் ஆபி­ரிக்க தொடர்­பு­பட்ட சட்­டத்­திற்­கான பிரிட்­டோ­ரியா நிறு­வனம் மனித உரி­மை­க­ளுக்­கான நிறு­வகம் ஆகிய இரு அமைப்­பு­களும் இணைந்து இலங்­கையின் பயங்­க­ர­வாத எதிர்ப்புச் சட்டம் தொடர்­பாக அண்­மையில் முன்­வைக்­கப்­பட்ட முன்­மொ­ழி­வுகள் தொடர்­பாக கூட்­ட­றிக்­கை­யொன்றை வெளி­யிட்­டுள்­ளன.

அவ்­வ­றிக்­கையில் அவர்கள் சுட்­டிக்­காட்­டி­யி­ருப்­ப­தா­வது;

2016 ஆம் ஆண்டில் பயங்­க­ர­வாத எதிர்ப்பு சட்டம் தொடர்­பாக முன்­வைக்­கப்­பட்ட சட்ட வரை­பா­னது புதிய உள்­ள­டக்­கத்தைக் கொண்­டி­ருக்­கின்­ற­போதும் இலங்­கையில் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டுள்ள அனைத்­து­லக மனித உரி­மைகள் நிய­மங்­க­ளுக்கும் விதி­க­ளுக்கும் முர­ணாக அமைந்­துள்­ளது. இந்த பரிந்­து­ரைகள் வெளிப்­ப­டைத்­தன்­மை­யற்ற மூடி­ம­றைப்­பு­க­ளா­க­வே­யுள்­ளன. பயங்­க­ர­வாத எதிர்ப்பு தடைச்­சட்­ட­மா­னது மனித உரி­மைகள் சட்­டத்­துக்கு ஏற்ப மாற்­றப்­பட வேண்டும். இச்­சட்­ட­மூ­ல­மா­னது 2017 ஏப்ரல் 6 ஆம் திக­தி­ய­ளவில் (06.04.2017) இணை­யத்தில் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

இச்­சட்ட மூல­மா­னது அனைத்­து­லக மனித உரிமை விதி­மு­றை­களைக் கருத்தில் கொள்­ளத்­த­வ­றி­ய­தாக இலங்­கை­யி­லுள்ள சட்ட அறி­ஞர்கள் மற்றும் மனித உரிமை ஆர்­வ­லர்கள் கடும் விமர்­ச­னங்­களை முன்­வைத்­துள்­ளனர்.

இச்­சட்­ட­மா­னது தனிப்­பட்ட ரீதி­யாக தயா­ரிக்­கப்­பட்­டி­ருப்­ப­துடன் இது தொடர்­பாக பொது­மக்­க­ளுடன் ஆலோ­சனை பெறப்­ப­ட­வில்லை. இது ஜன­நா­யக தன்­மை­யற்ற செயற்­பாடு ஆகு­மென இவ்­வ­றிக்­கையைத் தயா­ரித்த பேரா­சி­ரியர் கிறிஸ்ரோப் கெயின்ஸ் மற்றும் ரொபி­பிஷர் ஆகிய இரு­வரும் கருத்துத் தெரி­வித்­துள்­ளனர்.

இலங்­கையில் பிரித்­தா­னி­யர்­களின் ஆட்சி நில­விய காலத்தில் தேசியக் கிளர்ச்­சி­யா­ளர்கள் அல்­லது சுதந்­திர வீரர்கள் தொடர்பில் அடக்­கி­யா­ளு­வ­தற்கு உரு­வாக்­கப்­பட்ட சட்­டங்கள் அதன் பின்னே 1971 ஆம் ஆண்டு சேகு­வரா புரட்­சி­யா­ளர்கள் என்ற வகையில் கிளர்ச்­சி­யா­ளர்­களை அடக்­கு­வ­தற்­காக சாதா­ரண குற்­ற­வியல் சட்­டங்­களே பயன்­ப­டுத்­தப்­பட்­டன. இக்­கி­ளர்ச்சி நடை­பெற்ற கால­கட்­டத்தில் சுமார் 25000 சிங்கள இளைஞர்களும் யுவதிகளும் கொல்லப்பட்டார்கள் என உத்தியோகப்பற்றற்ற செய்திகள் தெரிவித்திருந்தன.

ஆனால் 1978 –1979 ஆம் ஆண்டுகளில் கொண்டுவரப்பட்ட பயங்கரவாத சட்டமானது (PTA) தமிழ் இளைஞர்களின் விடுதலை வேட்கையை அடக்குவதற்காக உலகப் பயங்கரவாத தடைச்சட்டங்களையெல்லாம் தேடியெடுத்து ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் உருவாக்கப்பட்டதே நடைமுறையிலுள்ள பயங்கரவாத தடைச்சட்டமாகும்.

இப்பயங்கரவாத சட்டமே புதிய வடிவில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமாக தற்பொழுது உருமாற்றம் பெற்றுவருகின்ற நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வவுனியாவில் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றில் ரெலோ அமைப்பினர் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தொடர்பில் பின்வரும் விடயங்களைத் தெரிவித்திருந்தனர். இம்மசோதா சட்ட மாக்கப்படுமானால் தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாத சட்டத்தைவிட மோசமான ஏற்பாடுகளைக் கொண்டுள்ளது. இச்சட்டத்தை தமிழ் மக்கள் மாத்திரமல்ல முழு இலங்கைத்தீவும் எதிர் கொள்ள வேண்டிவரும்.

தோற்கடிக்கப்பட்டதாக கூறப்படும் பயங் கரவாதத்தை எதிர்ப்பதற்கு எதற்காக இவ்வாறான சட்டமூலம் தேவைப்படுகிறது. இலங்கை அரசுக்கு சிறுபான்மை மக்களாகிய தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் தங்க ளுடைய உரிமைகளையும் கோரிக்கைக ளையும் வலியுறுத்த முயற்சிக்கின்றபோது அவர்களுக்கு எதிராக இச்சட்டம் பாவிக்கப் படும்.

ஆகவே இச்சட்டமூலம் அனைத்து தரப்பினராலும் எதிர்க்கப்பட வேண்டிய சட்டமாகும். ஜனநாயகத்தை நேசிக்கின்ற ஒவ்வொருவரும் இதுபற்றி கவனம் செலுத்த வேண்டும். இந்நாட்டிலுள்ள அரசியல் கட்சிகள் எவையாக இருந்தாலும் ஜனநாயகத்தை மதிக்கின்ற ஒவ்வொரு கட்சியும் இச்சட்டத்தை எதிர்க்கும் தார்மீகப் பொறுப்புக்கொண்டவை. எனவே பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு அனைத்து கட்சிகளும் எதிர்க்க அணிதிரள வேண்டுமென தமிழீழ விடுதலை இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது. 

திரு­மலை நவம்

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-05-20#page-2

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.