Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மான்செஸ்டர் தாக்குதல்: அமெரிக்காவுடன் தகவல் பரிமாற்றத்தை நிறுத்திய பிரிட்டன்

Featured Replies

மான்செஸ்டர் தாக்குதல்: அமெரிக்காவுடன் தகவல் பரிமாற்றத்தை நிறுத்திய பிரிட்டன்

 
 
இந்த ஆதாரங்கள் சம்பவ இடத்திலிருந்து சேகரிக்கப்பட்டதாக நியு ஆர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளதுபடத்தின் காப்புரிமைNEW YORK TIMES Image captionஇந்த ஆதாரங்கள் சம்பவ இடத்திலிருந்து சேகரிக்கப்பட்டதாக நியு ஆர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது

மான்செஸ்டர் அரங்க தாக்குதல் குறித்து பிரிட்டன் காவல்துறை பகிர்ந்து கொண்ட புலன் விசாரணை தகவல்களை ஊடகங்களில் கசியவிட்ட அமெரிக்காவிடம் இனிமேல் தகவல்களை பகிர்வதை பிரிட்டன் காவல்துறை நிறுத்திவிட்டதாக பிபிசிக்கு தெரியவருகிறது.

நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் குண்டுவெடிப்பு இடிபாடுகள் தொடர்பான புகைப்படங்கள் வெளியானதால் பிரிட்டன் அதிகாரிகள் கோபமடைந்துள்ளனர்.

குழந்தைகள் உட்பட 22 பேர் கொல்லப்பட்டு, 64 பேர் காயமடைந்த மான்ச்செஸ்டர் தாக்குதல் நடந்த சில மணி நேரத்தில் வெடிகுண்டு தாக்குதலுக்கு காரணம் சல்மான் அபேடி என்று அமெரிக்க ஊடகங்களில் செய்தி வெளியானது.

நேட்டோ நாடுகளின் கூட்டமைப்பு கூட்டத்தில், இதுகுறித்த கவலைகளை பிரிட்டன் பிரதமர் தெரீசா மே, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிடம் பகிர்ந்து கொள்வார்.

கிரேட்டர் மான்செஸ்டர் காவல்துறையினர் சாதாரண இருதரப்பு புலனாய்வு உறவுகளை தொடரலாம் என்று நம்பிக்கை வெளியிட்டாலும், தற்போது அமெரிக்கா மீது அதிருப்தியில் இருப்பதாக பிபிசி புரிந்து கொண்டுள்ளது.

களத்தில் விசாரணையை முன்னெடுத்து செல்லும் புலனாய்வு அமைப்பு, தேசிய பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை அமைப்புக்கு அந்தத் தகவல்களை அளிக்கிறது. அது பின்னர் அரசின் அனைத்து துறைகளுக்கும் பகிரப்படுகிறது. அத்துடன், பிரிட்டன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து இடையிலான ஐந்து நாடுகள் புலனாய்வு ஒப்பந்தத்தின்படி, (Five Eyes intelligence sharing agreement ) மீதமுள்ள நான்கு நாடுகளுக்கும் புலனாய்வு தகவல்களை பகிர்ந்து கொள்வது வழக்கம்.

மான்செஸ்டர் தாக்குதல்: அமெரிக்காவுடன் தகவல் பரிமாற்றத்தை நிறுத்திய பிரிட்டன்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

லிபிய வம்சாவளியைச் சேர்ந்த 22 வயது அபேடி என்பவரால் நடத்தப்பட்ட மான்செஸ்டர் தீவிரவாதத் தாக்குதல் தொடர்பாக மொத்தம் எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கல்லூரியில் அபேடியை அறிந்த இரண்டு பேர், அவரது தீவிரவாத கருத்துகள் குறித்து அவசரத் தொலைத் தொடர்பு எண்ணுக்கு அழைத்து காவல்துறையினரிடம் பேசியதாகவும் கூறப்படுகிறது.

சிதறிக்கிடந்த பொருட்களின் (இடிபாடுகளின்) புகைப்படங்கள் இங்கிலாந்தின் விருப்பத்திற்கு எதிராக அபிடியின் அடையாளத்தை, அமெரிக்கா வெளிப்படுத்தியதால் உள்துறை செயலாளர் அம்பர் ரூட் "எரிச்சலடைந்தார்" என்றும், இதுபோன்ற செயல்கள் "மீண்டும் நடக்கக்கூடாது" என்று எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது.

 

எனினும், குண்டு வெடிப்பு நிகழ்ந்த இடத்தில் இருந்து சிதறியுள்ள பொருட்கள் கொண்ட புகைப்படங்களை நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டதற்கு, பிரிட்டன் சிவில் நிர்வாக அதிகாரிகள் (வொயிட் ஹால்) மற்றும் பிரிட்டன் காவல்துறை உயரதிகாரிகள் கோபமடைந்துள்ளனர்.

புகைப்படங்கள் கசிந்ததற்கு வெள்ளை மாளிகை காரணம் அல்ல, அமெரிக்க சட்ட அமலாக்க அமைப்பே காரணம் என இங்கிலாந்து அதிகாரிகள் நம்புவதாக பிபிசி பாதுகாப்பு நிருபர் கோர்டன் கோரேரா தெரிவித்தார்.

அமெரிக்கா இரண்டாவது முறையாக இதுபோன்ற தகவலை கசியவிட்டிருப்பதாகவும், இந்த நடவடிக்கை அமெரிக்காவின் மீது "அவநம்பிக்கையையும், அதிர்ச்சியையும்" ஏற்படுத்தியுள்ளதாக பிரிட்டன் அரசுத்தரப்பு தெரிவிக்கிறது.

மான்செஸ்டர் தாக்குதல்: அமெரிக்காவுடன் தகவல் பரிமாற்றத்தை நிறுத்திய பிரிட்டன்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

இது நம்பிக்கையை மீறி "அங்கீகாரமற்ற வெளிப்படுத்தல்" என்றும் "பயங்கரவாதத்திற்கு எதிரான புலன் விசாரணையை" சிதைத்துவிட்டதாகவும் பிரிட்டனின் தேசிய காவல்துறை தலைவர்கள் சபை கூறுகிறது.

சந்தேக நபர் பற்றிய தகவல்கள் வெளியானதால், அவருடன் தொடர்புடையவர்களை கைது செய்ய 36 மணி நேரமானது என்றும், எந்தவித துப்பும் இன்றி, பயங்கரவாத எதிர்ப்புத் துறை புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்தனர்.

புகைப்பட கசிவு தொடர்பாக கவலை வெளியிட்டுள்ள கிரேட்டர் மான்சசெஸ்டர் மேயர், இது குறித்து அமெரிக்க தூதரிடம் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

2005, ஜூலை ஏழாம் தேதியன்று நடைபெற்ற லண்டன் வெடிகுண்டு தாக்குதல் சம்பவம் குறித்த புலனாய்வு தகவல்களை ஏற்கனவே அமெரிக்கா வெளியிட்டிருப்பதை குறிப்பிட்டு, தகவல்களை கசியவிடுவது அமெரிக்காவுக்கு புதிதல்ல என்றும், அந்த சமயத்தில் லண்டன் காவல்துறைத் தலைவராக இருந்த லார்ட் பிளேர் கூறுகிறார்.

"அந்த சம்பவத்தின்போது குண்டுகள் தயாரிக்கப்பட்டிருந்ததைப் பற்றிய முழுமையான விவரங்களை அமெரிக்கா வெளியிட்டதற்கு பிறகான நிலையை தற்போதைய தகவல் கசிவு நினைவூட்டுகிறது" என்று அவர் கூறினார்.

"விஷயங்களை வெளியிடும் விதத்தில் அமெரிக்கா வித்தியாசமாகவே செயல்படுகிறது. இது மிகவும் கடுமையான விதிமீறல், எனவே நான் அச்சப்படுகிறேன்" என்று லார்ட் பிளேர் கூறுகிறார்.

தாக்குதல் குறித்த பிற முன்னேற்றங்கள்:

• கிரேட்டர் மான்செஸ்டர் பகுதியில் விதிங்டனில் உள்ள ஒரு முகவரியில் வியாழனன்று மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் இருவர் கைது செய்யப்பட்டது உட்பட, இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் எட்டு பேரை காவலில் எடுத்துள்ளனர்.

• இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், பிரிட்டன் நேரப்படி காலை 11 மணிக்கு ஒரு நிமிட மெளன அஞ்சலியை இங்கிலாந்து அரசு அறிவித்தது.

• கன்சர்வேடிவ் மற்றும் லேபர் கட்சியினர் உள்ளூர் பொதுத் தேர்தல் பிரசாரத்தை வியாழனன்றும், தேசிய தேர்தல் பிரசாரத்தை வெள்ளியன்றும் மேற்கொள்ளவிருக்கின்றனர்.

• ஐரோப்பிய லீக் கால்பந்துப் போட்டியின் இறுதியில் வெற்றி பெற்ற மான்செஸ்டர் யுனைடெட் அணியின் ரசிகர்கள், திங்கட்கிழமையன்று நடைபெற்ற தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் நினைவாக ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினார்கள்.

http://www.bbc.com/tamil/global-40048072

  • தொடங்கியவர்

’உங்களோட தொந்தரவா போச்சு’ - அமெரிக்க ஊடகம் மீது டிரம்ப் பாய்ச்சல்

 

மான்செஸ்டர் குண்டு வெடிப்பின் புகைப்படங்கள் அமெரிக்க ஊடகங்களில் வெளியானதால் இங்கிலாந்து அதிருப்தி தெரிவித்திருந்தது. இதனால், சம்பந்தப்பட்ட ஊடகங்களுக்கு அதிபர் டிரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 
’உங்களோட தொந்தரவா போச்சு’ - அமெரிக்க ஊடகம் மீது டிரம்ப் பாய்ச்சல்
 
வாஷிங்டன்:

மான்செஸ்டர் குண்டு வெடிப்பின் புகைப்படங்கள் அமெரிக்க ஊடகங்களில் வெளியானதால் இங்கிலாந்து அதிருப்தி தெரிவித்திருந்தது. இதனால், சம்பந்தப்பட்ட ஊடகங்களுக்கு அதிபர் டிரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரத்தில் அமெரிக்காவின் பிரபல பாப் பாடகி ஏரியனா கிராண்ட்டின் இசை நிகழ்ச்சி கடந்த புதன் நடைபெற்றது. சுமார் 10.30 மணியளவில் நிகழ்ச்சி நடைபெற்ற அரங்கில் பலத்த சத்தத்துடன் குண்டுகள் வெடித்தது. இதனால் அங்கு குழுமியிருந்த 22 பேர் உயிரிழந்தனர். சுமார் 58-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
201705260234013761_Copy%20of%20Copy%20of
மான்செஸ்டர் தாக்குதலுக்கு தாங்கள் தான் காரணம் என டெலகிராம் செயலி வழியாக ஐ.எஸ் இயக்கத்தினர் அறிவித்தனர். இத்தாக்குதலுக்கு முக்கிய காரணமான தற்கொலைப்படை தீவிரவாதி 22 வயதான சல்மான் அபேதி என அறிவித்த போலீசார், இதில் தொடர்புடைய  7 பேரை கைது செய்துள்ளனர்

குண்டுவெடிப்பின் போது அந்த இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அமெரிக்க ஊடகங்கமான நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளியானது. இதனால், அதிருப்தியடைந்த இங்கிலாந்து, விசாரணை நடைபெறும் போது இத்தகைய செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கது எனவும், 'இது அமெரிக்காவின் நம்பிக்கை துரோகம்' எனவும் கடுமையாக விமர்சித்துள்ளது.

மேலும், இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் இந்த புகைப்படங்களை பார்க்கும் போது மீண்டும் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாவார்கள் என தெரிவித்துள்ளது.

இங்கிலாந்தின் குற்றச்சாட்டால் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடும் கோபமடைந்துள்ளார். நடைபெற்ற சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ள டிரம்ப், ஊடகங்களின் இந்த செயல்கள் மிகுந்த தொந்தரவாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/05/26023359/1087201/Manchester-attack-Trump-condemns-media-leaks.vpf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.