Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புலந்த்சாஹர் நெடுஞ்சாலையில் பயங்கரம்: 4 பெண்கள் பலாத்காரம்; தட்டிக்கேட்ட உறவினர் கொலை- 6 பேருக்கு போலீஸ் வலை

Featured Replies

 
பாதிக்கப்பட்டவர்கள் சென்ற கார்
பாதிக்கப்பட்டவர்கள் சென்ற கார்
 
 

உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்சாஹரில் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற காரை வழிமறித்து அதிலிருந்த 4 பெண்களை 6 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்தது.

மேலும் இதைத் தடுக்க முயன்ற அக்குடும்பத்தைச் சேர்ந்த ஆண் ஒருவரை அக்கும்பல் படுகொலை செய்தது. பின்னர் அவர்களிடம் இருந்து நகை, பணம் உள்ளிட்ட பொருட்களைத் திருடிவிட்டு அக்கும்பல் தப்பிச் சென்றுள்ளது. பலாத்காரம் செய்யப்பட்ட பெண்கள் 4 பேர் நொய்டா மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். உள்ளூர் எம்.எல்.ஏ.வும் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் மருத்துவமனையில் பாதிக்கப்பட்ட பெண்களை நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார்.

எம்.எல்.ஏ., தீரேந்திர சிங், "ஜேவாரில் இருந்து புலந்த்சாஹர் நோக்கி ஒரு குடும்பத்தினர் காரில் சென்றனர். வியாழக்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் புலந்த்சாஹர் தேசிய நெடுஞ்சாலையில் அவர்களது வாகனம் வந்தபோது அவர்களது வாகனம் திடீரென நின்றது. அப்போது அவர்கள் வாகனத்தை 6 பேர் கொண்ட கும்பல் சூழ்ந்துகொண்டது. வாகனத்தில் இருந்தவர்களை அக்கும்பல் கீழே இறக்கியுள்ளது. 50 வயது பெண் உள்பட 4 பெண்களை அவர்கள் பலாத்காரம் செய்துள்ளனர். இதைத் தடுக்க முயன்ற நபரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளனர். பின்னர், அவர்களிடமிருந்த நகை, பணத்தையும் கொள்ளையடித்துள்ளனர். அங்கிருந்து தப்பிச் சென்ற அக்கும்பலை கைது செய்ய போலீஸ் தனிப்படை அமைத்துள்ளது" என்றார்.

காவல்துறை உறுதி:

"இந்த கொடூரச் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் நிச்சயம் பிடிபடுவார்கள். அவர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கொள்ளையர்களால் கொலை செய்யப்பட்ட நபரின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது" என்று காவல்துறை உயரதிகாரி லவ் குமார் தெரிவித்தார்.

2016 சம்பவத்தைப் போலவே..

கடந்த 2016-ம் ஆண்டு உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த குடும்பத்தினர் தங்களது உறவினரின் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஷாஜஹான்பூருக்கு காரில் சென்றனர். அப்போது நள்ளிரவு நேரத்தில் டெல்லி கான்பூர் நெடுஞ்சாலையில் புலந்த்சாஹர் என்ற இடத்தில் அவர்களது காரை கொள்ளை கும்பல் வழிமறித்தது.

பின்னர் காரில் இருந்த இரு ஆண்களை கயிற்றால் கட்டிவிட்டு, தாயையும் (35) அவரது 14 வயது மகளையும் ஆள் இல்லாத பகுதிக்கு இழுத்துச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தது.

தற்போது மீண்டும் அதேபோல் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

http://tamil.thehindu.com/india/புலந்த்சாஹர்-நெடுஞ்சாலையில்-பயங்கரம்-4-பெண்கள்-பலாத்

  • கருத்துக்கள உறவுகள்
தேசிய நெடுஞ்சாலையில் கூட்டு வண்புணர்வுக்கு இரையான பெண்கள்: - தொடரும் கொடூரம் 
[Thursday 2017-05-25 18:00]
இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் தேசிய நெடுஞ்சாலையில் காரில் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பெண்களை வழிப்பறி கும்பல் ஒன்று தாக்கி கூட்டு வன்புணர்வு செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.வியாழக்கிழமை அன்று அதிகாலை 1:30 மணியளவில் நொய்டா பகுதியிலிருந்து புலேந்தஷர் பகுதிக்கு 4 பெண்கள் உள்ளிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் காரில் சென்று கொண்டிருந்தனர்.

இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் தேசிய நெடுஞ்சாலையில் காரில் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பெண்களை வழிப்பறி கும்பல் ஒன்று தாக்கி கூட்டு வன்புணர்வு செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.வியாழக்கிழமை அன்று அதிகாலை 1:30 மணியளவில் நொய்டா பகுதியிலிருந்து புலேந்தஷர் பகுதிக்கு 4 பெண்கள் உள்ளிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் காரில் சென்று கொண்டிருந்தனர்.  

அப்போது 6 பேர் கொண்ட மர்ம கும்பல் ஆயுதங்களுடன் இவர்களது வாகனத்தை வழிமறித்து அவர்களிடம் இருந்த நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்துள்ளது.பின்னர் காரில் இருந்த பெண்களை கடத்திச் சென்று பல மணி நேரமாக கூட்டுவன்புணர்வில் ஈடுபட்டுள்ளனர்.பெண்களை காப்பாற்ற முயன்ற உறவினர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் பெரும் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.இந்த சம்பவம் குறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். மேலும் வன்புணர்வு செய்யப்பட்ட பெண்கள் நான்கு பேரும் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.கொலை செய்யப்பட்டவரின் உடலும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டிருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். மேலும் சம்பவம் நடந்த பகுதியில் பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் மிக நீளமான தேசிய நெடுஞ்சாலை உத்தரப்பிரதேசத்தில் தான் அமைந்துள்ளது.மேலும் இந்த நெடுஞ்சாலையில் வழிப்பறி, திருட்டு போன்ற கொள்ளை சம்பவங்களும், பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்படுவதும் தொடர்ந்து நடந்துவருகின்றது. இவையனைத்தும் நள்ளிரவு நேரங்களிலேயே நடைபெறுகிறது. இந்த குற்றசம்பவங்களை தடுக்க நொய்டா மற்றும் உத்தரப்பிரதேச பொலிசாரோ அல்லது அந்த மாநில அரசோ எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என சமூக ஆர்வலர்களும் பாதிக்கப்பட்டவர்களும் குற்றம் சாட்டியுள்ளனர்.கடந்த ஜூலை மாதம் 13 வயது சிறுமியும் அவரது தாயும் இது போன்று உத்தரப்பிரதேச தேசிய நெடுஞ்சாலையில் வழிப்பறி கும்பலால் கடத்தி கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.