Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெளிவிவகார அமைச்சர் போகொல்லாகமவா? பசில் ராஜபக்‌ஷவா? - கருணாநாயக்கா கேள்வி

Featured Replies

இராணுவத் தளபதிகள் மூலமாகவே யுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டுமெனத் தெரிவித்த ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கா, இலங்கையின் தற்போதைய வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவா அல்லது பசில் ராஜபக்ஷவா எனவும் கேள்வியெழுப்பினார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை பொதுநிறுவனங்கள் தொடர்பான பாராளுமன்ற குழுவின் அறிக்கை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் தொடர்ந்தும் தெரிவித்ததாவது;

நாடு சீரழிந்து செல்கிறது. பொருளாதாரமும் கீழ்மட்ட நிலையில் காணப்படுகிறது. அதிகாரி தொடக்கம் ஊழியர் வரை எங்குமே ஊழல் தலைவிரித்தாடுகிறது.

நாட்டின் கணக்காய்வாளர் நாயகமாக செயற்பட்ட மாயாதுன்ன நடுநிலையாக செயற்பட்டவர் எனினும், அவர் சமர்ப்பித்த அறிக்கைகள் பற்றி கவனத்தில் கொள்ளப்படவில்லை.

அதிகாரிகள் அரசியல் செல்வாக்கு மூலமாக பதவியை பெற்றுக்கொள்வதால் அவர்கள் கடமையுணர்வு குறித்து அறியாதுள்ளனர்.

சுதந்திரதின உரையில் ஜனாதிபதி நல்லாட்சி பற்றி குறிப்பிட்டார். அவர் இதனை செயலிலும் வெளிக்காட்டவேண்டும். இந்நாட்டை கீழ்நிலைக்கு தள்ளிய பெருமை முன்னாள் ஜனாதிபதி திருமதி குமாரதுங்கவையே சாரும்.

98 நிறுவனங்களை விற்பனை செய்து சில மில்லியன் ரூபாய்களையே வருமானமாகப் பெற்றுள்ளனர்.

அமைச்சர்களின் எண்ணிக்கையை ஜனாதிபதி குறைக்க வேண்டும். இதன்போது தேவையற்ற செலவுகளை குறைக்க கூடியதாகவிருக்கும். நாட்டின் சுதந்திரத்திற்கு பின்னர் சுதந்திரமடைந்த பல நாடுகள் இன்று பொருளாதாரத்தில் சிறந்து விளங்குகின்றன.

ஐ.தே.க. ஆட்சியில் குறைகள் இருந்திருக்கலாம். ஆனால், மக்களுக்கு சிறந்த சேவையாற்றியிருக்கிறது.

நாட்டின் பணவீக்கம் 21 சதவீதமாக தற்போது காணப்படுகிறது.

வாழ்க்கைச்செலவு மிகவுயர்ந்த நிலையில் காணப்படுகின்றமையால் மக்கள் பெரும் துன்பங்களை எதிர்கொள்கின்றனர்.

நாட்டின் அபிவிருத்திக்கு சமாதானமே பிரதானம். சமாதானமின்றி அபிவிருத்தி சாத்தியமில்லை.

யுத்தம் இராணுவ தளபதிகள் மூலமாகவே மேற்கொள்ளப்பட வேண்டும். இராணுவம் பல வெற்றிகளை ஈட்டியுள்ளது. அவர்களுக்கு எமது நன்றிகள். இராணுவத் தளபாடங்களை இறக்குமதி செய்ய ஒரு குழு (நிறுவனம்) செயற்படுவதாக அறிகிறோம். இந்நிறுவனத்தில் யார் பொறுப்பாக இருக்கிறார்கள் என்பதை இச்சபைக்கு அறிவிக்க வேண்டும்.

இன்று அரசாங்கம் `சிக்குன் குனியா' வைக்கூட கட்டுப்படுத்த முடியாத நிலையில் காணப்படுகிறது. நாட்டில் நெத்தலி மீன்கள் அகப்பட்டுக்கொள்ள சுறா மீன்கள் தப்பிவிடுகின்றன.

இந்நாட்டை ஐ.தே.க.ஆண்டிருக்காவிட்டால் இலங்கை இப்போது சோமாலியா நாட்டினைப்போன்று மாறியிருக்கும்.

பௌத்த பிக்குமார்களுக்கே மக்கள் வாக்குகளை கடந்த பொதுத்தேர்தலில் வழங்கினார்கள். ஆனால் இன்று பாருங்கள் பிக்குமார்களுக்கு யாரோ அமைச்சராகியுள்ளனர். ஏன் இந்த பிக்குமார்களினால் அமைச்சர்களாக செயற்படமுடியாது?

அமைச்சர் ரோஹித போகொல்லாகம இந்நாட்டின் வெளிவிவகார அமைச்சரா? அல்லது பசில் ராஜபக்ஷ வா? ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதிப் பணம் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது. சவுதியில் 4 இலங்கையர்களுக்கு சிரச்சேதம் செய்யப்பட்டுள்ளது. அவர்களை காப்பாற்ற நாம் என்ன நடவடிக்கை மேற்கொண்டோம்?

புலிகளுடன் அரசாங்கம் பேச்சிலீடுபட முன் ஆளும் தரப்பிற்குள் முதலில் சமாதானம் உருவாக வேண்டும். உலகில் அதிகூடிய அமைச்சர்கள் இலங்கையிலேயே உள்ளனர். இதுவோர் கின்னஸ் சாதனையாகும்.

முதலீட்டுச் சபையின் 40 மில்லியன் ரூபா பணம் கடந்த வருடம் ஜனாதிபதி செயலகத்தினால் தொப்பி தைப்பதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது.

அமைச்சர் சம்பிக ரணவக்க பாதாள உலக தலைவர் போன்று செயற்படுகிறார். முச்சக்கர வண்டி ஓட்டுநர்களின் வயிற்றிலடிக்கும் செயற்பாட்டில் அவர் ஈடுபட்டுள்ளார்

http://www.thinakkural.com/news/2007/2/22/...s_page21886.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.