Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இனம் விற்று, நிலம் விற்று, மண் விற்று பிழைப்பு நடத்தியவர்கள் நாமல்ல… பா.உ ச.வியாழேந்திரன்

Featured Replies

10254_1495733005_hyu.JPG

இனம் விற்று, நிலம் விற்று, மண் விற்று பிழைப்பு நடத்தியவர்கள் நாமல்ல… பா.உ ச.வியாழேந்திரன்

இனம் விற்று, நிலம் விற்று, மண் விற்று பிழைப்பு நடத்தியவர்கள் நாமல்ல… பா.உ ச.வியாழேந்திரன்.

 

2009ம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த பின்னர் கடந்த அரசின் ஆசீர்வாதத்துடன் சில அரச அதிகாரிகளும், அரசின் முகவர்களும் மண், காணி அபகரிப்பு போன்றவற்றில் ஈடுபட்டு வியாபாரம் செய்து வந்ததை நாம் அறிவோம். அதற்கான ஆதாரங்களை வெருகல் தொடக்கம் துறைநீலாவணை வரையுள்ள மக்களிடம் கருத்து கேட்டறிந்தால் நன்கு தெரியும். 2009ற்கு முன் இந்த மாவட்டத்தில் உள்ள நிலங்களும் இன்று இந்த மாவட்டத்தில் உள்ள நிலங்களின் நிலையையும் இந்த மக்களிடம் கேட்கும்போது மக்களே கூறுவார்கள். இவர்களைப் போன்ற சில அதிகாரிகள் இன்றைய நல்லாட்சியிலும் தொடர்ந்தும் இது போன்ற வியாபாரங்களில் ஈடுபடுவது நாம் அறிந்த விடயமே! மஹிந்த ஆட்சியிலும் உழைப்புத்தான். மைத்திரி ஆட்சியிலும் உழைப்புத்தான். இந்த பச்சோந்திகள் தங்களுடைய கதிரைகளை தக்க வைத்துக்கொள்வதற்காக காலத்திற்கு ஏற்றாற்போன்று நாடகம் ஆடுகின்றனர்.

 

தங்களை இனப்பற்றாளர்கள் போன்று காட்டிக்கொள்ள சில இணையத்தள , முகப்புத்தக எழுத்தாளர்களை வைத்துக்கொண்டு அவ்வப்போது வெளியிடும் அறிக்ககைளை நாம் அறிவோம். இதை சில ஊடகங்கள் வெளியிடுவது கவலைக்குரிய விடயமாகும். எமது ஈழவிடுதலைப் போராட்டம் எதற்காக நடந்தது என்பதை இன்று பலர் மறந்து விட்டார்கள். மண் மீட்பிற்காக பலர் தமது இன்னுயீர்களை தியாகம் செய்தார்கள். இன்று அவ்வாறு தியாகம்  செய்தவர்களுடைய தியாகத்தைக் கூட மதிக்காமல் வெளி மாவட்டத்தவரை இங்கு கொண்டு வந்து, அபிவிருத்தி என்ற போர்வையிலும் ஏனைய விடயங்களாலும் இந்த மாவட்டத்தினுடைய நிலத்தை அபகரித்து இந்த நிலங்களை விற்கின்ற ஒரு சில நயவஞ்சகர்களை நாம் அறிவோம். மட்டக்களப்பு மாவட்டத்தில் 2009ம் ஆண்டிற்குப் பின்னர் அபிவிருத்தி என்ற போர்வையில் வெளிமாவட்டத்தாருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. 2009ம் ஆண்டிற்கு முன் ஒரு லோட் மண்கூட இம் மாவட்டத்தில் இருந்து வெளி மாவட்டத்திற்கு சென்றதில்லை. ஆனால் இன்று பல ஏக்கர் நிலங்களில் இருந்து மண்களை வெளி மாவட்டத்திற்கு கொண்டு செல்வதற்கு அனுமதி அளித்த அதிகாரிகளை நாம் அறிவோம். இப்படியான அதிகாரிகளை ஆய்வு செய்து அது பற்றிய செய்திகளை வெளியிட முடியாத முதுகெலும்பில்லாத, தங்களை ஊடகவியலாளர்கள் என்று அடையாளப்படுத்துவோர் செய்யும் செயற்பாடானது எமக்கான துரோகம் அல்ல! மாறாக இந்த மண்ணிற்காக தங்களுடைய உயிரை தியாகம் செய்த எம் உறவுகளுக்கும், இம் மாவட்ட மக்களுக்கும் செய்யும் துரோகமாகும்.

 

நான் அரசியலுக்கு புதிதாக வந்தவன.ஒரு சிறிய அளவிலான காணியைக்கூட அபகரித்தவனும் அல்ல! மற்றவர்களுக்கு விற்றவனும் அல்ல !எந்தவெரு மதுபானசாலையும்,மண் அனுமதிப்பத்திரமும் எனது பெயரில் இல்லை! நான் இந்த மண்ணையும் நிலத்தையும் பாதுகாப்பதில் மிகக் கவனமாக இருக்கின்றேன். இப்பொழுது நான் பாராளுமன்ற உறுப்பினராக வந்த பின் இம் மாவட்டத்தில் நடைபெறுகின்ற அனைத்து மக்களுடைய போராட்டங்களிலும் தெரு நாய் போல கலந்து கொண்டு, மக்களோடு மக்களாக நின்று அவர்களது போராட்டத்திற்கு வலு சேர்க்கும் முகமாக ஜனநாயக ரீதியாக நானும் ஈடுபட்டு வருகின்றேன். இந்த மண்ணையும், நிலத்தையும் பாதுகாப்பதற்காக அகிம்சை ரீதியாகப் போரடினோம். ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டோம். தற்போது அகிம்சை ரீதியாக  அறவழிப் போராட்டங்களில் ஈடுபடுகின்றோம். ஆகவே மக்கள் போராட்டங்களில் கலந்து கொள்வது மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையில் கலந்து கொள்வது எமது கடமையாகும். மட்டக்களப்பில் எழுகதமிழ் நடைபெற்றது அதில் நான் கலந்து கொண்டேன்! அது பிழையா? மக்களுடைய பிரச்சனைகளை சர்வதேசத்திற்கு கொண்டு செல்வதற்காக நடந்தது .அதன் பின்பு இன்று கல்குடாவில்  அமைக்கப்படுகின்ற எரிசாராய மதுபான உற்பத்திச்சாலைக்கு எதிராக மட்டக்களப்பில் ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றது. அந்த ஆர்ப்பாட்டங்களிலும் நான் கலந்து கொண்டு வருகின்றேன். அது பிழையா? அத்துடன் சட்டவிரோதமான மண் அகழ்விற்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இவற்றிலும் நான் கலந்து கொள்கின்றேன். இது பிழையா? காணி அபகரிப்பு தொடர்பான ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன அவற்றிலும் நான் கலந்து கொள்கின்றேன். இது பிழையா?  ஒன்றுமே செய்யாமல் இருப்பவர்கள் தான் இவர்கள் பார்வையில் உத்தம புருசர்கள். சில அடிவருடிகள், சில பச்சோந்திகள், சில நயவஞ்சகர்கள் இவ்வாறான போராட்டங்கள் எங்களுடைய தூண்டுதலின் பெயரில் நடைபெறுவதாகவும் கூறிக்கொண்டு , தங்களை உத்தம புத்திரராகக் காட்டிக்கொண்டும் தங்களுக்கு சார்பான சில இணையத்தள ஊடகவியலாளர்களை வைத்துக்கொண்டு அறிக்கை விடுகின்ற கேவலமான நடவடிக்கைகளை நான் இனிமேலும் பார்த்துக்கொண்டிருக்க மாட்டேன். இனிவரும் காலங்களில் இவர்கள் தங்களை திருத்திக்கொள்ள வேண்டும் . அவ்வாறு தங்களை இவர்கள் திருத்திக் கொள்ளாதவிடத்து இவர்களின் பெயர்களை நான் பாராளுமன்றத்தில் பகிரங்கமாக கூறி இவர்களுக்கு எதிரான விசாரணைகளை மேற்கொள்வதற்கு நான் தயங்க மாட்டேன்

 

http://www.battinaatham.com/description.php?art=10254

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.