Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போர்நிறுத்த உடன்படிக்கையில் நம்பிக்கை இல்லையென்றால் மேடையில் விமர்சிப்பதை விட்டு அதனை ரத்துச் செய்ய வேண்டும்

Featured Replies

போர்நிறுத்த உடன்படிக்கையின் மீது நம்பிக்கையில்லையென்றால் அது குறித்து மேடைகளில் விமர்சிப்பதை விடுத்து அதனை முடிவுக்குக் கொண்டு வருமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை வலியுறுத்தியிருக்கும் ஐக்கிய தேசியக் கட்சி ஜனாதிபதியோ அவரது அரசாங்கமோ இதனை ஒருபோதும் செய்யப்போவதில்லை எனவும் அதற்கான தைரியம் அரசிடம் கிடையாதெனவும் சுட்டிக் காட்டியுள்ளது.

சமஷ்டிவாதிகளும் ஒற்றையாட்சிவாதிகளும் இரண்டறக் கலந்த அரசாங்கத்தால் தீர்வுக்கான யோசனைகள் எதனையும் முன்வைக்க முடியாத இக்கட்டான நிலை ஏற்பட்டிருப்பதாகவும் ஐ.தே.க.தெரிவித்துள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கட்சியின் செய்தியாளர் மாநாட்டின்போதே இத்தகவல்கள் வெளியிடப்பட்டன.

கட்சியின் ஊடகப் பேச்சாளர் பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க இங்கு கருத்துத் தெரிவிக்கையில் கூறியதாவது;

ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவின் அரசாங்கம் இன்று பெரும் அரசியல் நெருக்கடிக்குள் சிக்கித் தடுமாறிக்கொண்டிருக்கின்றது. யுத்தம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஸ்ரீபதி சூரியாராச்சி தெரிவித்த கருத்துகள் நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாட்டமைச்சராக இருந்த மங்கள சமரவீர அமைச்சுப் பதவியில் இருக்கும்போதே அரசின் ஊழல் செயற்பாடுகள் முறைகேடுகள், சிலரது எதேச்சதிகார நடவடிக்கைகள் போன்றவற்றைச் சுட்டிக்காட்டி ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்துக்கு இன்று வரையில் பதிலளிக்கப்படாத நிலை தொடர்வதால் நாட்டு மக்களின் சந்தேகம் வலுவடையத் தொடங்கியுள்ளது.

ஜனாதிபதி மக்களின் சந்தேகத்தைப் போக்குவதற்கு உடனடி நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். இன நெருக்கடிக்கு அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கான உறுதியான நிலைப்பாடெதுவும் அரசிடம் இருப்பதாகத் தெரியவில்லை. 1994 ஆம் ஆண்டு முதல் ரணில் விக்கிரமசிங்க பேச்சுவார்த்தை மூலமான அரசியல் தீர்வொன்றின் அவசியத்தையே வலியுறுத்தி வருகிறார். அவர் பதவி வகித்த காலகட்டத்தில் அதற்கான பல்வேறு நடவடிக்கைகளையும் எடுத்ததையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் மகிந்த ராஜபக்‌ஷ நாட்டு மக்களுக்கு அளித்த உறுதிமொழி பதவிக்கு வந்து மூன்று மாதத்துக்குள் கிளிநொச்சி சென்று புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை நேரில் சந்தித்து அரசியல் தீர்வைக் காண்பேன் என்பதாகும். ஆனால், ஒரு வருடமும் மூன்று மாதங்களும் கடந்த நிலையிலும் எதுவுமே நடந்ததாகத் தெரியவில்லை. ஜனாதிபதியையும், இந்த அரசையும் பதவியிலமர்த்திய சில சக்திகள் போராட்டம் நடத்துவதிலும், சுவரொட்டிகளை ஒட்டுவதிலுமே காலம் கடத்திக்கொண்டிருக்கின்றனர். போர்நிறுத்த உடன்படிக்கையை ரத்துச் செய்ய வலியுறுத்தி வருகின்றனர். ஜனாதிபதிகூட போர்நிறுத்த உடன்படிக்கையின் மீது அதிருப்தி கொண்டிருப்பதாகவே தெரிகிறது. உடன்படிக்கையில் குறிப்பிட்டிருக்கும் ஒரு அம்சத்தின்படி 14 நாட்களுக்குள் அறிவித்து இதனை முடிவுக்குக் கொண்டு வரமுடியும்.

இந்த நடவடிக்கையை ஜனாதிபதியோ, அரசோ ஒருபோதும் செய்யப்போவதில்லை. அப்படிச் செய்தால் ஏற்படக்கூடிய பின்விளைவுகளை அவர்கள் தெரிந்து வைத்துள்ளனர். அதனை வெளியேசொல்வதற்கு அவர்களுக்கு தைரியமில்லை.

பண்டாரநாயக்க குடும்பத்தின் ஆட்சியில் நடந்தவற்றை விட மிகமோசமான அதிகார துஷ்பிரயோகம் இன்று ராஜபக்ஷ குடும்ப ஆட்சியில் நடந்துவருகின்றது. எவரும் தட்டிக்கேட்க முடியாத நிலை மூச்சுவிட்டால் பதவி பறிபோய்விடும். அரசாங்கத்தில் இருக்கும் அமைச்சர்கள் நிலை மிகவும் பரிதாபத்துக்குரியதாகும். பெயரளவில் தான் அவர்கள் அமைச்சுப் பதவிகளில் இருக்கின்றனர். ராஜபக்‌ஷ சகோதரர்கள் நால்வர்தான் அதிகாரம் செலுத்துகின்றனர். இவர்களின் தீர்மானமே இறுதி முடிவு. இதனை மீற எவராலும் முடியாது.

பேரழிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் தேசத்தையும், மக்களையும் மீட்டு ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக மக்களை ஒன்று திரட்டும் வேலைத் திட்டத்தை ஐக்கிய தேசியக் கட்சி மீண்டும் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளது.

மார்ச் மாதம் 17 ஆம் திகதி கொழும்பில் நடைபெறும் விசேட மாநாட்டோடு மக்களை அணிதிரட்டிய ஜனநாயகப் போராட்டம் ஆரம்பிக்கப்படும். ஜனநாயகத்தை நேசிக்கும் சகல சக்திகளையும் இதில் இணைத்துக்கொள்ள நாம் முடியு செய்துள்ளோம்.

http://www.thinakkural.com/news/2007/2/22/...s_page21838.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.