Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சோனியா தலைமையில், 17 எதிர்க்கட்சித் தலைவர்கள் பங்கேற்ற கூட்டத்தில், 'ஜனாதிபதி தேர்தலில், பொது வேட்பாளரை நிறுத்துவது' என, தீர்மா னிக்கப்பட்டு உள்ளது.

Featured Replies

gallerye_233911735_1778282.jpg

 

 

 

spaceplay / pause

qunload | stop

ffullscreen

shift + slower / faster

volume

mmute

seek

 . seek to previous

126 seek to 10%, 20% … 60%

 

புதுடில்லி: காங்கிரஸ் தலைவர், சோனியா தலைமையில், 17 எதிர்க்கட்சித் தலைவர்கள் பங்கேற்ற கூட்டத்தில், 'ஜனாதிபதி தேர்தலில், பொது வேட்பாளரை நிறுத்துவது' என, தீர்மா னிக்கப்பட்டு உள்ளது.
இந்த விஷயத்தில், ஏகமனதாக வேட்பாளரை தேர்வு செய்வதில், கருத்து வேறுபாடு ஏற்பட்டால், தீர்வு காண, குழு அமைக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

 

Tamil_News_large_1778282_318_219.jpg


தற்போதைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம், ஜூலை, 25ல் முடிகிறது. புதிய
ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க, ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

மத்தியில் ஆளும், பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணி நிறுத்தும் வேட்பாளர் வெற்றி பெற அதிக வாய்ப்புகள் இருந்தாலும், கூட்டணி யில் இல்லாத சில கட்சிகளின் ஆதரவும் தேவைப்படுகிறது. அதற்காக, சில மாநில கட்சிகளின் ஆதரவை பெற, பா.ஜ., முயற்சித்து வருகிறது.

 

விருந்து


இந்நிலையில், பா.ஜ., வுக்கு நெருக்கடி கொடுக் கும் வகையில், எதிர்க்கட்சிகள் இணைந்து, பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என, சில கட்சிகள் குரல் கொடுக்கின் றன.அதன் படி, பீஹார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தள தலை வருமான நிதிஷ் குமார், சில எதிர்க்கட்சி தலைவர்களுடன் பேசத்துவங்கினார். அது போல, மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியும், இந்த விஷயத்தில், முழு வேகத்தில் ஈடுபட்டு உள்ளார்.

காங்., தலைவர் சோனியா உள்ளிட்டோரை, இது தொடர்பாக, அவர் சந்தித்துப் பேசினார்.
இதன், அடுத்த கட்டமாக, காங்கிரஸ் தலைவர் சோனியா, எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு, மதிய உணவு விருந்துக்கு நேற்று அழைப்பு விடுத்திருந்தார். பார்லிமென்ட் வளாகத்தில் நேற்று நடந்த விருந்தில், 17 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்துக்குப் பின், திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி கூறியதாவது:
ஜனாதிபதி தேர்தலில், எதிர்க்கட்சிகளின் சார்பில், பொது வேட்பாளரை நிறுத்துவது என, தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாரை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவது என்பது குறித்து விவாதிக்கவில்லை. விரைவில் அது குறித்து முடிவு செய்யப்படும்.

ஜனாதிபதி வேட்பாளர் தேர்வில்,கட்சிகளுக் குள் ஒருமித்த கருத்து ஏற்படாவிட்டால், தேவை பட்டால், ஒரு குழுவை அமைத்து முடிவு காண்பது என்றும் திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

 

காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் இந்த முடிவால், ஜனாதிபதி தேர்தல் மிகவும் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
நிதிஷ் புறக்கணிப்பு?:'ஜனாதிபதி தேர்தலில், எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும்' என, முதலில் குரல் கொடுத்தவர், பீஹார் முதல்வ ரும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ்குமார். ஆனால், டில்லியில் எதிர்க்கட்சி கள் சார்பில் நேற்று நடந்த கூட்டத்தில், அவர் பங்கேற்க வில்லை.
மொரீஷியஸ் பிரதமர் வருகையை ஒட்டி, பிரதமர் மோடி, இன்று அளிக்கும் விருந்தில், நிதிஷ்குமார் கலந்து கொள்ளப் போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

அ.தி.மு.க., நிலை என்ன?


சோனியா தலைமையில் நடந்த, மதிய விருந்து கூட்டத்தில், தமிழகத்தில் இருந்து, தி.மு.க., சார்பில் ராஜ்யசபா எம்.பி., கனிமொழி பங்கேற்றார். அதே நேரத்தில், அ.தி.மு.க.,வுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

அ.தி.மு.க., வின் இரண்டு அணிகளும், போட்டி போட்டு, மத்தியில் ஆளும், பா.ஜ., அரசுக்கு ஆதரவாக செயல்படுகின்றன.அதே நேரத்தில், ஜனாதிபதி தேர்தலில், தங்களின் நிலைப்பாடு என்ன என்பதை இரண்டு அணிகளும் இதுவரை அறிவிக்கவில்லை.
 

ஒன்று சேர்ந்த எலியும், பூனையும்!


காங்கிரஸ் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், மேற்கு வங்கத்தில், எலியும், பூனையுமாக உள்ள, திரிணமுல் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் தலைவர்கள் பங்கேற்ற னர்.அதுபோல, உத்தர பிரதேசத்தில், பரம விரோதிகளாக இருக்கும், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதியும் பங்கேற்றனர்.

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத், ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த, சரத் யாதவ், கே.சி.யாதவ், கம்யூனிஸ்ட் தலைவர்கள் சீதா ராம் யெச்சூரி, சுதாகர் ரெட்டி, டி.ராஜா, உள்ளிட் டோரும் பங்கேற்றனர்.காங்கிரஸ் தரப்பில், துணை தலைவர் ராகுல், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மூத்த தலைவர்கள் அகமது படேல்,குலாம் நபி ஆசாத் பங்கேற்றனர்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1778282

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.