Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விரைவில் வழக்கு...! கோடநாடு எஸ்டேட்டை மீட்க முன்னாள் உரிமையாளர் அதிரடி

Featured Replies

விரைவில் வழக்கு...!
கோடநாடு எஸ்டேட்டை மீட்க
முன்னாள் உரிமையாளர் அதிரடி
 
 
 
 

''கோடநாடு எஸ்டேட்டை மீட்டெடுப்பது குறித்து, இன்னும் ஒரு வாரத்தில், இறுதி முடிவு எடுப்பேன்,'' என, அதன் முன்னாள் உரிமையாளர் பீட்டர் கிரேக் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார்.

 

Tamil_News_large_1780606_318_219.jpg

ஜெ., சசிகலா ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கில், பட்டியலில் முக்கிய இடம் பிடித்தது, நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோடநாடு எஸ்டேட். இதன் முன்னாள் உரிமையாளர் கிரேக் ஜோன்ஸ், தற்போது உயிருடன் இல்லை; இவரது மகன், பீட்டர் கிரேக் ஜோன்ஸ், கர்நாடக மாநிலம் கூர்க் பகுதியில், குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.
 

ரூ. 33 லட்சத்திற்கு வாங்கினோம்


கூடலுாருக்கு சமீபத்தில் வந்திருந்த பீட்டர் கிரேக் ஜோன்ஸ், அளித்த பேட்டி:பிரிட்டன் பிரஜைகளான நாங்கள், எங்கள் தந்தை கிரேக் ஜோன்சுடன் இங்கு வந்த போது, 1975ல், கோத்தகிரியில் உள்ள கோடநாடு டீ எஸ்டேட்டை, 33 லட்சம் ரூபாய்க்கு வாங்கினோம். அதில், 60 ஏக்கரை விற்றபின், 900 ஏக்கர் மட்டுமே எங்களிடம் இருந்தது. இந்த எஸ்டேட் வர்த்தகம் தொடர்பாக, விஜயா, கனரா வங்கிகளில் எங்களுக்கு கடன் இருந்தது.

அதை அடைக்க திட்டமிட்டு, கோடநாடு எஸ்டேட்டை விற்க முயன்றோம்.

இந்த தகவல் அறிந்து, சசிகலா மற்றும் ராமசாமி உடையார் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், எங்களை அணுகினர். அவர்கள் சொன்ன சில நிபந்தனைகள், எங்களுக்கு ஒத்துவரவில்லை.அதனால், எஸ்டேட்டை விற்க முடியாது என்று கூறிவிட்டோம்.
 

வேறு வழியின்றி விற்க முன்வந்தோம்.



அதன் பின், இரண்டு தனியார் நிறுவன உரிமையாளர்கள், 9.60 கோடிக்கு இந்த எஸ்டேட்டை எங்களிடம் கேட்டனர். நாங்கள் விற்கத் தயாரானபோது, இவர்கள் புகுந்து, எஸ்டேட்டை வாங்க விடாமல், அவர்களை தடுத்து விட்டனர். அ.தி.மு.க., ஆட்சியில் இருந்ததால், பலரும் பின்வாங்கி விட்டனர்.
அதையடுத்து, சென்னையைச் சேர்ந்த ராமசாமி உடையார் மூலம் பேச்சு நடந்தது. அதில், சில அரசு உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர். எஸ்டேட்டிற்கு, நான், 9.50 கோடி ரூபாய் விலை கூறினேன்; பின், 7.50 கோடி ரூபாய் தருவதாகக் கூறியதுடன், வங்கிக் கடனை அடைப்பதாகவும் உறுதி அளித்தனர். அதை நம்பி எங்கள் எஸ்டேட்டை, வேறு வழியின்றி விற்க முன்வந்தோம்.

 

அரசுபறிமுதல் செய்ய வாய்ப்பு



கோடநாடு எஸ்டேட், உடையார் குடும்பத்தினருக்கு கைமாறியது. மிகக் குறுகிய காலத்தில், 7.60 கோடி ரூபாய்க்கு, சசிகலா

 

குடும்பத்தினருக்கு கைமாற்றப்பட்டதாக பின் தெரிந்தது. ஆனால், அவர்கள் வாக்களித்தப்படி எதையும் செய்யவில்.ைல இந்த மனவேதனையில், நாங்கள் எங்கள் குடும்பத்தினருடன், கூர்க் சென்று, 'செட்டில்' ஆகிவிட்டோம். என் தந்தை கிரேக் ஜோன்ஸ், 2008ல், 87 வயதில், மரணமடைந்தார். அந்த நேரங்களில், ஜெ., ஆட்சி தமிழகத்தில் நடந்ததால், எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை.
ஜெ., மரணமடைந்து விட்டார்; சசிகலா, ஜெயிலில் இருக்கிறார். இந்த எஸ்டேட்டை அரசு பறிமுதல் செய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எங்களை மிரட்டி, இந்த சொத்து வாங்கப்பட்டதால், அதை மீண்டும் மீட்க முடியுமா என்பது குறித்து, சென்னை மற்றும் பெங்களூரில் உள்ள சட்ட நிபுணர்களுடன் நாங்கள் ஆலோசித்து வருகிறோம்.

இதற்காக, எங்களுக்கு மிரட்டல் ஏதும் வந்தால், கர்நாடகா மற்றும் தமிழக போலீசாரிடம் முறைப்படி பாதுகாப்பு கோருவோம். எங்களை மிரட்டி, துன்புறுத்தி வாங்கிய சொத்தை மீண்டும் மீட்க, நான் இறுதி வரை போராடுவேன்.
இவ்வாறு பீட்டர் கிரேக் ஜோன்ஸ் கூறினார். - நமது நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1780606

  • கருத்துக்கள உறவுகள்

பீட்டர்....சசி கலாவுக்கே....நிலாக் காட்டுவார் போல கிடக்கே!:unsure:

  • 5 months later...
  • தொடங்கியவர்

"மிரட்டி வாங்கிய கொடநாடு எஸ்டேட்டை சட்ட ரீதியாக மீட்பேன்!" - களமிறங்கிய முன்னாள் உரிமையாளர்

 
 
The Nilgiris: 

கொடநாடு எஸ்டேட்டை, சசிகலா குடும்பம் மிரட்டி வாங்கியதாகவும், அதை மீட்க சட்ட ரீதியாகப் போராடுவேன் என்றும், அதன் முன்னாள் உரிமையாளர் பீட்டர் கிரேக் ஜோன் கூறியுள்ளார்.

கொடநாடு எஸ்டேட்

 

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமாக, நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே கொடநாடு எஸ்டேட் உள்ளது. இதன் அருகிலேயே சசிகலாவுக்குச் சொந்தமான கர்சன் எஸ்டேட்டும் உள்ளது. ஜெயலலிதா இருந்தபோதே, கொடநாடு எஸ்டேட் குறித்து பல்வேறு சர்ச்சைகள் வெடித்தன. குறிப்பாக, இங்கிலாந்தைச் சேர்ந்த கிரேக் ஜோன் என்பவருக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட்டை, சசிகலா குடும்பம் மிரட்டி வாங்கியதாக கூறப்பட்டு வந்தது.

இதனிடையே, சொத்துக் குவிப்பு வழக்கில், ஜெயலலிதாவின் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும் பட்டியலில் கொடநாடு எஸ்டேட் இடம்பெறவில்லை என்று கூறப்பட்டது. இதையடுத்து, கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பே கொடநாடு எஸ்டேட்டை மீட்க சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பேன் என்று அதன் முன்னாள் உரிமையாளர் பீட்டர் கிரேக் ஜோன் (கிரேக் ஜோனின் மகன்) தெரிவித்திருந்தார். இந்நிலையில், சசிகலா மற்றும் அவர்கள் சம்பந்தப்பட்ட இடங்களில் நடத்தப்பட்ட ரெய்டில், கொடநாடு எஸ்டேட்டும் தப்பவில்லை.

இதுகுறித்து கூடலூரில் செய்தியாளர்களிடம் பேசிய பீட்டர் கிரேக் ஜோன், "கடந்த 1975-ம் ஆண்டு 33 லட்சம் ரூபாய்க்கு கொடநாடு எஸ்டேட்டை வாங்கினோம். இதையடுத்து, அதில் 50 ஏக்கரை, சில காரணங்களால் விற்றோம். ஆனாலும், 900 ஏக்கர் எஸ்டேட் கைவசம் இருந்தது. ஆனால், கடன் காரணமாக எஸ்டேட்டை விற்க முடிவு செய்தோம். இதையறிந்து, சசிகலா மற்றும் ராமசாமி உடையார் குடும்பத்தினர் எங்களை அணுகினர். ஆனால், எஸ்டேட்டை அவர்களுக்கு விற்க மனமில்லை என்று கூறினோம். இருந்தபோதும், எஸ்டேட்டை கொடுக்க வேண்டும் என்று அவர்கள் எங்களுக்கு மிரட்டல் விடுத்தனர். இதுதொடர்பாக போலீஸிலும் புகார் செய்தேன். ஆனால், நடவடிக்கை இல்லை.

பீட்டர் கிரேக் ஜே◌ான்

 

ஒருகட்டத்தில், சசிகலா தரப்பினர் அரசு அதிகாரிகளுடன் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதைத்தொடர்ந்து எஸ்டேட்டை 9 கோடியே 50 லட்சத்துக்கு விற்பதாக தெரிவித்தோம். அதற்கு அவர்கள், 7 கோடியே 50 லட்சம் கொடுப்பதாகவும், மேலும், வங்கிக் கடனை அடைப்பதாகவும் கூறினர். இதன்காரணமாக எஸ்டேட்டை அவர்களிடம் விற்றோம். ஆனால், அவர்கள் சொன்னதில் பாதிப் பணத்தை மட்டுமே வழங்கினர். வங்கிக் கடனையும் அடைக்கவில்லை. பின்னர், நான் என் குடும்பத்துடன் கர்நாடக மாநிலம், கூர்க் பகுதிக்கு குடியேறிவிட்டேன். கடந்த 2008-ம் ஆண்டு எனது தந்தை இறந்துவிட்டார். இதையடுத்து, எஸ்டேட் தொடர்பாக, ஜெயலலிதாவைப் பார்க்க முயற்சி செய்தோம். ஆனால், பார்க்க முடியவில்லை. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, எங்களுக்கு சாதகமான சூழல் நிலவுகிறது. தற்போது, வருமானவரித்துறையினரும் ரெய்டு நடத்திவருகின்றனர். இதை எங்களுக்கு சாதகமாக்கி, சட்ட ரீதியாக கொடநாடு எஸ்டேட்டை மீட்கப் போராடுவேன்" என்றார்.

https://www.vikatan.com/news/tamilnadu/107728-kodanad-estates-former-owner-interview.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.