Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆவா குழுவைச் சேர்ந்த இருவர் இந்தியாவில் கைது

Featured Replies

ஆவா குழுவைச் சேர்ந்த இருவர் இந்தியாவில் கைது

18698274_135849676965188_395659020828585

இலங்கையை சேர்ந்த மூன்று தமிழ் இளைஞர்கள் தமிழ் நாட்டின் திருச்சி பகுதியில் கியூ பிரிவு பொலிசாரினால் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

கைது செய்யபட்டவர்களில் தேவா மற்றும் பிரகாஸ் என்பவர்கள் யாழ்.மாவட்டத்தை சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படும் அதேவேளை  மூன்றாவது நபரான டானியல் என்பவர் குறித்து மேலதிக தகவல்கள் வெளியிடப்படவில்லை.

குறித்த மூன்று நபர்களும் தமிழ்நாட்டினுள் உரிய ஆவணங்கள் இல்லாமல் சட்டவிரோதமான முறையில் உள்நுழைந்து திருச்சி பகுதியில் நடமாடிய வேளையில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

அவ்வாறு நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட நபர்களில் தேவா மற்றும் பிரகாஸ் என்பவர்கள் யாழில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனவும், அவர்கள் இருவரும் யாழில் இயங்கும் சட்டவிரோத கும்பலான ஆவா குழுவின் முக்கிய நபர்கள் எனவும் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

மூன்றாவது நபர் இவர்களை இந்தியாவுக்கு சட்டவிரோதமான முறையில் அழைத்து சென்ற நபராக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

1677-0-0fb9252e872e709414c7d331178e2756.

 

https://globaltamilnews.net/archives/28663

  • தொடங்கியவர்
யாழ். வாள்வெட்டு சூத்திரதாரிகள் இந்தியாவில் கைது
 

-எஸ்.நிதர்ஷன்

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கொலை, வாள்வெட்டு மற்றும் சமூகவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்த சந்தேகநபர் இருவர், படகு மூலம் இந்தியாவுக்கு தப்பிச் சென்ற நிலையில், திருச்சியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரும், தமிழக காவல்துறையினரால் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
எனினும், வாள்வெட்டுக் குழுவின் பிரதான சூத்திரதாரி கைது செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணத்தில் கடந்த காலங்களில் நடைபெற்ற கொலை மற்றும் பல்வேறு வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் என, பொலிஸாரினால் சன்னா, தேவா, பிரகாஷ் என்ற 3 பேர் அடையளப்படுத்தப்பட்டிருந்தனர்.

இவ்வாறு அடையாளப்படுத்தப்பட்டவர்களின் புகைப்படங்கள் மற்றும் ஏனை விவரங்கள் அடங்கிய துண்டுப்பிரசுரங்களை விநியோகித்த பொலிஸார், அவர்கள் தொடர்பான தகவல்களை தருமாறும் வெளிப்படையாக கோரிக்கை விடுத்திருந்தனர்.

மேலும்,  பல்வேறு பொலிஸ் குழுக்களை அமைத்தும், புலனாய்வு ரீதியான நடவடிக்கைகள் மேற்கொண்டும் குறித்த நபர்கள் கைது செய்வதற்கு பல்வேறு இரகசிய நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த போதும், அவர்களை பொலிஸாரினால் கைது செய்ய முடியவில்லை.

இந்நிலையில், பொலிஸாரிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்த இவர்களில் பிரதானமாக தேடப்பட்டுவந்த சன்னா தவிர்ந்த  தேவா, பிரகாஷ் ஆகியோர் படகு மூலம் இந்தியாவுக்கு தப்பிச் சென்றுள்ளனர்.

விசாரணைகளின் பின்னர் அவர்களை இலங்கை அரசாங்கத்திடம் ஒப்படைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் இந்திய தூதரகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/யாழ்--வாள்வெட்டு-சூத்திரதாரிகள்-இந்தியாவில்-கைது/71-197843

  • தொடங்கியவர்

யாழ்ப்பாணத்தில் தேடப்பட்டுவரும் தேவா பிரகாஸ் திருச்சியில் சிக்கினர்

வெளிநாட்டுக்குத் தப்பிக்கவிருந்தநிலையில் இந்தியக் கியூப் பிரிவுப் பொலிஸாரால் கைது

 
 
யாழ்ப்பாணத்தில் தேடப்பட்டுவரும் தேவா பிரகாஸ் திருச்சியில் சிக்கினர்
 

யாழ்ப்­பா­ணத்­தில் வாள்­வெட்­டுக் கும்­பலை இயக்கி வரு­ப­வர்­கள் என்­றும், பலரை வெட்­டிச் சரித்­தார்­கள் என்ற குற்­றச்­சாட்­டி­லும் பொலி­ஸா­ரால் நீண்­ட­கா­ல­மா­கத் தேடப்­பட்டு வந்த தேவா, பிர­காஸ் ஆகிய இரு­வர் தமி­ழ­கம் திருச்­சி­யில் வைத்து இந்­திய கியூப் பிரி­வுப் பொலி­ஸா­ரால் கைது செய்­யப்­பட்­ட­னர்.

அவர்­கள் இரு­வ­ரும் உரிய ஆவ­ணங்­க­ளின்றி தமி­ழ­கத்­தில் தங்­கி­யி­ருந்­த­னர் என்ற குற்­றச்­சாட்­டி­லேயே கியூ பிரி­வுப் பொலி­ஸா­ரால் கைது செய்­யப்­பட்­ட­னர். அவர்­களை தமி­ழ­கத்­துக்கு அழைத்து வந்­தார் என்ற குற்­றச்­சாட்­டில் டானி­யல் என்ப­வ­ரும் கைது செய்­யப்­பட்­டுள்­ளார்.

“கும்­ப­லின் தலை­வர் எனத் தெரி­விக்­கப்­ப­டும் பிர­சன்னா (சன்னா) என்­ப­வர் வெளி­நாட்­டுக்­குத் தப்­பிச் சென்­றுள்­ளார். ஏனை­ய­வர்­கள் இலங்­கை­யில் ஏதோ ஒரு இடத்­தில் தலை­ம­றை­வாகி உள்­ளார்­கள்” என்று அண்­மை­யில் பொலி­ஸார் தெரி­வித்­தி­ருந்­த­னர்.

கைது செய்­யப்­பட்ட­ இரு­வ­ரும், தாம் இலங்­கை­யில் “இன்­பம் துன்­பம்” என்ற குழு­வில் அங்­கத்­த­வர்­க­ளாக இருப்­ப­தாக­ இந்­தி­யப் பொலி­ஸா­ரி­டம் தெரி­வித்­துள்­ள­னர். எனி­னும் அவர்­கள் இரு­வ­ரும் ஆவாக் குழு­வைச் சேர்ந்­த­வர்­கள்­தான் என்று இலங்­கைப் பொலி­ஸார் உறு­தி­யா­கத் தெரி­விக்­கின்­ற­னர்.

வெளி­நாடு ஒன்­றுக்கு தப்­பிக்­கும் நோக்­கி­லேயே அவர்­கள் இரு­வ­ரும் திருச்­சி­யில் தங்­கி­யி­ருந்­த­னர் என்று தெரி­வித்த இந்­தி­யப் பொலி­ஸார், இரு­வ­ரி­ட­மும் விசா­ர­ணை­கள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தா­க­வும் குறிப்­பிட்­ட­னர்.

இதே­வேளை, தேவா, பிர­காஸ் ஆகி­யோர் கைது செய்­யப்­பட்­ட­தை­ய­டுத்து இலங்­கை­யி­லி­ருக்­கும் அவர்­க­ளது கும்­ப­லைச் சேர்ந்­தோர் சமூ­க­வ­லைத் தளங்­க­ளில் பல்­வேறு கருத்­துக்­க­ளைப் பதிவு செய்து வரு­கின்­ற­னர். சிலர் தமது முக­நூல் பக்­கங்­க­ளின் படங்­களை கறுப்­பாக மாற்­றி­யுள்­ள­னர்.

http://uthayandaily.com/story/4953.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.