Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அழிந்த வீடுகளுக்கு 25 இலட்சம் ரூபா : இறந்தவருக்காக ஒரு இலட்சம் - ஜனாதிபதி

Featured Replies

அழிந்த வீடுகளுக்கு 25 இலட்சம் ரூபா : இறந்­த­வ­ருக்­காக ஒரு இலட்சம் - ஜனா­தி­பதி

 

 

(ஆர்.யசி)

கடந்­த­வாரம் ஏற்­பட்ட வெள்ள மற்றும் மண்­ச­ரிவு  அனர்த்­தத்தில் சிக்­குண்டு இறந்தஒவ்­வொரு நப­ருக்­கு­மான நஷ்­ட­ஈ­டாக ஒரு இலட்சம் ரூபாவை வழங்­கவும் முற்­றாக பாதிக்­கப்­பட்ட வீடு­க­ளுக்கு  தலா 25 இலட் சம் என்ற அடிப்­ப­டையில் வழங்­கவும் ஜனா­தி­பதி தீர்­மா­னித்­துள்ளார். மண்­ச­ரிவு பாதிப்பில் இருக்கும் நபர்­க­ளுக்கு மாற்று  இடங்­களை வழங்கி குறித்த பகு­தி­களை அர­சாங்­கத்தின் கீழ் கொண்­டு­வ­ரு­மாறும் ஜனா­தி­பதி வலி­யு­றுத்­தி­யுள்ளார். பாதிக்­கப்­பட்ட பகு­தி­களை எச்­ச­ரிக்கை வல­ய­மாக பிர­க­ட­னப்­ப­டுத்த வேண்டாம் எனவும் ஜனா­தி­பதி வலி­யு­றுத்­தி­யுள்ளார். 

my3.jpg

வௌ்ள அனர்த்தம் மற்றும் மண்­ச­ரிவு அபாயம் தொடர்பில் கலந்­து­ரை­யாடும் நோக்கில்   ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நேற்று அர­சாங்­கத்தின் சகல அமைச்­சர்­களை  நேற்று சந்­தித்­தி­ருந்தார். இந்த சந்­திப்பின் போது அனர்த்­தத்தில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்­காக சேவை­களை செய்யும் வகையில் பல்­வேறு தீர்­மா­னங்கள் எடுக்­கப்­பட்­டுள்­ளன. இந்த சந்­திப்பில் அனைத்து அமைச்­சர்கள், பிரதி அமைச்­சர்கள் இரா­ஜாங்க அமைச்­சர்கள்  உள்­ளிட்­ட­வர்கள் கலந்­து­கொண்­டுள்­ளனர். 

மேலும் சகல மாவட்­டங்­களின் பிர­தேச செய­ல­கங்­க­ளுக்கும் தன்­னிச்­சை­யாக தீர்­மா­னங்­களை மேற்­கொண்டு அதற்­க­மைய மக்­க­ளுக்கு தேவை­யான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள அதி­காரம் வழங்­கப்­பட்­டுள்­ளது. பிர­தேச சபை­க­ளுக்­கான  அதி­கா­ரங்கள் மற்றும் தேவை­களை  அர­சாங்கம் வழங்கும் என ஜனா­தி­பதி தெரி­வித்­துள்ளார். 

நேற்று ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் தலை­மை­ய­கத்தில் நடை­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பில் காந்­து­கொண்டு கருத்து தெரி­வித்த  அரச தொழில் முயற்­சிகள் இரா­ஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபே­வர்­தன   ஜனா­தி­பதி  தலை­மையில் நடந்த கூட்­டத்தில் எடுக்­கப்­பட்ட தீர்­மா­னங்­களை அறி­வித்தார். 

அவர் அங்கு மேலும் குறிப்­பி­டு­கையில் 

 அத்­துடன் அனர்த்­தத்தில் ஏற்­பட்ட சேதங்­களை கணக்­கெ­டுக்கும் வகையில் குறித்த மாவட்­டங்­க­ளுக்கு  அரச அதி­கா­ரி­களை ஜனா­தி­பதி நிய­மித்­துள்ளார். இவர்கள் மூல­மாக பொருள் சேதங்கள், சொத்து விப­ரங்கள் முழு­மை­யாக கணக்­கெ­டுக்­கப்­படும் என தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. நட்­ட­ஈ­டுகள் அனைத்தும் கவ­னத்தில் கொண்டு சரி­யான வகையில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்­கான நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளன. மேலும் முழு­மை­யாக பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு 25 இலட்சம் ரூபாய் நட்­ட­ஈடும், பகு­தி­ய­ளவில் பாதிக்­கப்­பட்ட வீடுகள் தொடர்பில் சேதத்­திற்கு அமைய நிதி வழங்­கப்­படும் எனவும் ஜனா­தி­பதி தீர்­மா­னித்­துள்ளார். 

 உயி­ரி­ழந்த ஒவ்­வொரு நபர்­க­ளுக்­கான நட்­ட­ஈ­டாக அந்­தந்த குடும்­பங்­க­ளுக்கு ஒரு இலட்சம் ரூபாய் வழங்­கவும் தீமா­னிக்­கப்­பட்­டுள்­ளது. வியா­பா­ரிகள், சிறு வியா­பா­ரிகள் ஆகிய அனை­வ­ருக்கும் அவர்­க­ளுக்­கான நஷ்­ட­ஈ­டு­களை  வழங்­கவும் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. சேதங்­க­ளுக்கு அமைய அவர்­க­ளுக்­கான நட்­ட­ஈடு வழங்­கவும் அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ளது. அதேபோல் இலகு தவணை அடிப்­ப­டையில் வங்கிக் கடன்­களை வழங்­கவும் அர­சாங்­கத்­தினால் ஏற்­பா­டுகள் செய்­து­கொ­டுக்­கப்­படும்  

 பாதிக்­கப்­பட்ட பகு­தி­களில் முப்­ப­டை­களின்  மீட்பு பணி­களை மேற்­கொள்ளும் வகையில் துரி­த­மாக அவர்­களை ஈடு­ப­டுத்த பாது­காப்பு அமைச்சு தீர்­மைத்­துள்­ளது.   அதற்­கான ஏற்­பா­டு­களை செய்­து­கொ­டுக்­கவும் தீர்­மானம் எடுக்­கப்­பட்­டுள்­ளது.  கிரா­மங்­களில் கிண­று­களில் உள்ள நீரை அகற்றும் நட­வ­டிக்­களை மேற்­கொள்ள அதற்­கான தொழி­நுட்ப மற்றும் மனித வளங்­களை நிய­மிக்­கவும் தொண்டு நிறு­வ­னங்­களின் மூல­மாக மக­ளுக்­கான உத­வி­களை மேற்­கொள்­ளவும் வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளது. நீர் நிலை­களில் குளோரின் இடும் நட­வ­டிக்­கை­களும் மேற்­கொள்ள தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. 

மக்­க­ளுக்­கான குடிநீர் தேவை­களை வழங்­கவும் சகல அதி­கா­ரி­க­ளுக்கும் வலி­யு­றுத்­திய    ஜனா­தி­பதி சிறு­வர்கள் மற்றும் பெண்­க­ளுக்­கான உட­னடி தேவைகள் மற்றும் மருத்­துவ வச­தி­களை எந்த நேரமும் வழங்கும் வகையில் அவ­சர வைத்­திய பிரி­வு­களை நிய­மிக்­கவும் வலி­யு­றுத்­தி­யுள்ளார்.  பாதிக்­கப்­பட்ட மாவட்­டங்­க­ளுக்­கான அமைச்­சர்கள் தத்­த­மது பிரி­வு­களில் செயற்­படும்  அதே நிலையில் பாதிக்­கப்­ப­டாத பகு­தி­களை சேர்த்த அமைச்­சர்­களும் பாதிக்­கப்­பட்ட பகு­தி­களில் ஒவ்­வொரு பிரி­வு­களை பொறுப்­பேற்று அடுத்த மூன்று மாத காலத்­துக்­கான சேவை­களை வழங்­கவும் ஜனா­தி­பதி வலி­யு­றுத்­தி­யுள்ளார். நேற்­றைய கூட்­டத்தில் அமைச்­சர்கள் பிர­தி­ய­மைச்­சர்கள் சேவை­யாற்றும் பகு­தி­களை தீர்­மா­னித்து உட­ன­டி­யாக அறிக்கை தயா­ரிக்­கு­மாறும் சக­ல­ருக்கும் ஜனா­தி­பதி வலி­யு­றுத்­தி­யுள்ளார். 

அத்­துடன் மண் சரி­வு­களில் பாதிக்­கப்­பட்­டுள்ள மக்­க­ளுக்­கான மாற்று இடங்­களை வழங்­கவும் அசாங்கம் தீர்­மா­னித்­துள்­ளது.  குறிப்­பாக இரத்­தி­ன­புரி பகு­தியில் மண்­ச­ரி­வு­களில் பாதிக்­கப்­பட்ட மக்­களை உட­ன­டி­யாக குறித்த இடத்தில் இருந்து வெளி­யேற்றி அந்த பகு­தி­களை அர­சாங்கம் தன­தாக்க வேண்டும் எனவும் உரிய மக்­க­ளுக்கு பாது­காப்­பான இடங்­களில் மாற்று வீடு­களை அமைத்து கொடுக்­கவும் வலி­யு­றுத்­தி­யுள்ளார்.   பாதிக்­கப்­பட்ட  மாண­வர்கள் அனை­வ­ருக்கும் புதி­யாத சீரு­டைகள், பாடப்­புத்­த­கங்கள், சப்­பாத்­துக்கள் மற்றும் ஏனைய தேவைகள் அனைத்­தையும் வழங்க  கல்வி அமைச்சு பொறுப்­பேற்க வேண்டும் எனவும் நிதி அமைச்சின் பூரண உத­வி­களை பெற்­றுக்­கொள்­ளு­மாறும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார். 

 அனர்த்தங்களுக்கு இலங்கை தொடர்ச்சியாக முகங்கொடுத்து வரும் நிலையில் எதிர்காலத்தில் ஏற்படும் அனர்த்தங்களில் இருந்து மக்களை முன்னாயத்தமாக செயற்படும் நடவடிக்கைகள் மற்றும் அனர்த்தங்களை சமாளிக்கும் வேலைத்திட்டங்கள் மற்றும் அழிவுகளில் இருந்து தப்பித்துக்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து விசேட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் ஜனாதிபதி  வலியுறுத்தியுள்ளார்.  இதுவரையிலான காலம் வரையில் பாதிப்புகளுக்கான மக்களுக்கான 126 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக தேவைகளுக்கான நிதியையும் ஒதுக்க ஜனாதிபதி  தயாராக உள்ளார் என்றார். 

http://www.virakesari.lk/article/20543

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.