Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

`தீர்வுத் திட்டத்தை முன்வைக்க ஜனாதிபதிக்கு விருப்பமில்லை'

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

`தீர்வுத் திட்டத்தை முன்வைக்க ஜனாதிபதிக்கு விருப்பமில்லை'

[23 - February - 2007] [Font Size - A - A - A]

* ஐ. தே.க.வுடனான புரிந்துணர்வு உடன்படிக்கையை அவர் முறித்ததற்கான காரணத்தைக் கூறுகிறார் ரணில்

-ஏ.ரஜீவன்-

அரசாங்கத்திடம் இனப்பிரச்சினை தீர்விற்கான யோசனைகள் எதுவுமில்லை என குற்றம் சாட்டியிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் மார்ச் மாதம் 15 ஆம் திகதிக்குள் அரசாங்கம் யோசனைகளை முன்வைக்க வேண்டும் என காலக்கெடு விதித்துள்ளார்.

கொழும்பில் வர்த்தக சமூகத்தின் மத்தியில் உரையாற்றுகையில் இதனை தெரிவித்த அவர் தீர்வுத் திட்டமொன்றை முன்வைப்பதற்கான விருப்பம் இல்லாததாலேயே ஜனாதிபதி ஐக்கிய தேசியக் கட்சியுடனான உடன்படிக்கையை முறித்ததாக குற்றம் சாட்டினார்.

எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்ததாவது;

அரசாங்கமே சமாதான முயற்சிகள் குறித்து தீர்மானமில்லாமல் இருக்கின்ற நிலையில் சமாதான பேச்சுவார்த்தைகளுக்கு ஆதரவாக குரல் கொடுப்பது என்பது வர்த்தக சமூகத்திற்கு கடினமான விடயம்.

சமாதானத்திற்கும் பொருளாதார அபிவிருத்திக்கும் இடையில் எவ்வாறு சமநிலை காண்பது.

யுத்தம் புரியும் தன்மை மாறியுள்ளது. முன்னர் தேசங்கள் மரபு வழி யுத்தத்தில் ஈடுபட்டன. மரபு வழி இராணுவமும், கடற்படையும் போருக்கு பயன்படுத்தப்பட்டன.

எனினும், இந்த போர் முறை தற்போது மாற்றமடைந்துள்ளது. மரபு வழி சாராத யுத்தமொன்றை நாங்கள் எதிர்கொள்கின்றோம். இது இரு தேசங்களுக்கு இடையில் இடம்பெறுவதில்லை. அரசாங்கம் அநீதி இழைத்துள்ளதாக குற்றம் சாட்டும் அமைப்பொன்றுடன் இந்த மோதல் இடம்பெறுகின்றது. கடந்த காலங்களில் இது ஒரு நாட்டிற்குள்ளேயோ அல்லது பிராந்தியத்திலேயோ இடம்பெற்றது.

எனினும், செப்டெம்பர் 11 இற்கு பின்னர் ஒரு அமைப்பொன்று இதனை மாற்றியுள்ளது. தற்போது தேசங்களின் எல்லைக்குள் யுத்தம் இடம்பெறுவதில்லை.

புலம்பெயர்ந்து வாழ்பவர்களின் நிதியுதவியுடன் இந்த யுத்தம் முன்னெடுக்கப்படுகின்றது. யுத்தம் என்பது அரசியலாக மாறியுள்ளது. அரசியல் ரீதியாக விடயங்களுக்கு தீர்வு காண முயலாதபோது யுத்தம் மூழ்கின்றது.

இவ்வாறான மோதல்களுக்கான காரணமாக அரசியல் அமைந்துள்ளது. அடக்கு முறையும், பாரபட்சமும் இதனை ஊக்குவிக்கின்றன. இலங்கையின் இன நெருக்கடி தமிழ் மக்களின் மொழியுரிமை மறுக்கப்பட்டதிலிருந்தே ஆரம்பமானது. நிரந்தர சமாதானம் என்பது பேச்சுவார்த்தைகள் மூலமே சாத்தியம்.

இதனை உணர வேண்டும் . நேபாளத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை பாருங்கள். நிலப்பிரபுத்துவத்திற்கும் முடியாட்சிக்கும் முடிவு காணப்படவேண்டும் என்பது குறித்து மாவோ அமைப்பினரும் ஏனைய அரசியல் கட்சிகளும் இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளன.

அசேயில் கடல்கோளுக்கு பின்னர் காணப்பட்ட சூழ்நிலையை பயன்படுத்தி தீர்வு காணப்பட்டுள்ளது.

1952 இல் சமஷ்டி கோரிக்கைக்கு ஆதரவான தந்தை செல்வாவை காங்கேசன்துறை மக்கள் தோற்கடித்தனர். 1956 இற்கு பின்னர் இந்த நிலை எதிர்மானதாக மாற்றமடைந்தது.

இது அரசியல் விவகாரம். அரசியல் தீர்வை காணுங்கள். இராணுவ ரீதியில் தீர்வு சாத்தியமல்ல.

துரதிர்ஷ்ட வசமாக யாருக்கும் என்ன செய்வதென்பது தெரியவில்லை. வியட்நாமில் அமெரிக்காவிற்கு எதிரி யாரென்பது தெரிந்திருந்தது.

ஈராக்கில் அவ்வாறான நிலையில்லை. ஷியாக்கள் ஷுன்னிகள் இருவரையும் எதிரியாக பார்க்க வேண்டியுள்ளது. உங்களிடம் அரசியல் நிகழ்ச்சி நிரல் இல்லாவிட்டால் உங்களால் வெற்றி பெற முடியாது. இதன் காரணமாகவே அரசியல் தீர்வை நான் வலியுறுத்துகிறேன்.

மரபு வழியற்ற யுத்தத்தினால் நாடு எதனை அனுபவிக்க போகின்றது? இவ்வகை யுத்தத்தில் ஈடுபடுபவர்கள் சகல வழிகளிலும எதிரியை பலவீனப்படுத்தவே பார்ப்பார்கள்.

10, 15 வருடங்களுக்கு இவ்வாறாக மோதல் இடம்பெற்றால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துவிடும்.

அல்ஜீரியாவில் பிரான்ஸ் தொடர்ச்சியாக சில வெற்றிகளை பெற்றது. எனினும், அதனால் பொருளாதார ரீதியாக தாக்குப் பிடிக்க முடியவில்லை. அதனால் அது விட்டுக் கொடுத்தது.

நாடு பொருளாதார ரீதியாக பலவீனப்படுத்தப்பட்டால் மக்கள் பாதிக்கப்படுவார்கள்.

1980 களிலிருந்து மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 1.1 வீதம் வீணடிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் பொருளாதார இலக்குகள் மீது மேற்கொண்ட தாக்குதல் மோசமான விளைவுகளை ஏற்படுத்தியது. இதனால் நாங்கள் பேசுவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டோம். விடுதலைப் புலிகளுடன் உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட வேளை நான் பொருளாதாரத்திலேயே கவனம் செலுத்தினேன். இரண்டு வருட காலப்பகுதியில் சாதகமான விளைவுகளை சந்தித்தோம். வட கிழக்கில் பொருளாதார வளர்ச்சியேற்பட்டது. நாட்டின் அந்தப் பகுதியை பொருளாதாரத்திற்குள் உள்வாங்க வேண்டியது அவசியம். நீண்ட கால அடிப்படையில் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

நிதியுதவி சரியாக கிடைத்தால் மாத்திரம் பொருளாதார வளர்ச்சி சாத்தியம். கடல்கோள் காரணமாக பெருமளவு நிதி கிடைத்தத்தற்கு நன்றி சொல்ல வேண்டும். பணவீக்கம் அதிகமாக இருந்தால் மக்கள் முதலீடு செய்ய முன்வராவிட்டால் உங்கள் பொருளாதாரத்தால் எதனையும் செய்ய முடியாது. சமாதான முயற்சிகளை மேற்கொள்ளும் உங்களுக்கு பொருளாதாரமும் அவசியம். பொருளாதாரத்தின் பலாபலன்கள் மக்களுக்கு செல்ல வேண்டும். அரசாங்கம் தீர்வுத் திட்டமொன்றை முன்வைப்பதற்கு உதவுவதற்கு முயன்றேன். விடுதலைப் புலிகளுடன் பேச வேண்டும். இதே நோக்கத்திற்காக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவுடன் லியாம் பொக்ஸ் உடன்படிக்கையை செய்தேன். எனினும், அவர் ஜெயசிக்குறுவை ஆரம்பித்தார்.

ஜனாதிபதி சந்திரிகாவின் பதவிக் காலம் முடிவடைந்த போது அரசாங்கத்திற்கு என்ன செய்ய வேண்டும் என்பது தெரியாமலுள்ளது. சமாதான முயற்சிகள் குறித்து ஆராய்வதற்கான அழைப்பு எங்களுக்கு விடுக்கப்பட்டது. நான் அதற்கு தயார் என அறிவித்தேன். பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதில் எமக்கு மாற்றுக் கருத்து இல்லை. எனினும், நீண்ட கால தீர்வு சமாதான பேச்சுவார்த்தைகள் மூலம் மாத்திரமே சாத்தியம். இதன் பின்னர் நாங்கள் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழுவின் கூட்டத்தில் கலந்து கொள்ள தீர்மானித்தோம். இதற்கு பிரதிநிதிகளையும் நியமித்தோம்.

சர்வதேச சமூகத்திடம் அரசாங்கம் அனைத்து கட்சி பிரதிநிதிகள் குழுவின் மூலம் தீர்வுத்திட்டத்தை முன்வைக்கப்போவதாக தெரிவித்து வந்தது. அரசாங்கம் ஐக்கிய தேசியக் கட்சி தங்களை கைவிட்டு விடும் என அச்சத்தை வெளியிட்டு வந்தது. அமெரிக்காவும் இந்தியாவும் இது குறித்து என்னிடம் கேட்டன, தென்னாபிரிக்காவும் கேட்டது. நான் அவர்களிடம் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்குவேன் என தெரிவித்தேன்.ஜே.வி.பி.யுடன் இணைந்து செயற்படுங்கள் இறுதிவரை அவர்களை அழைத்துச் செல்லுங்கள் என அரசாங்கத்திடம் தெரிவித்தேன்.

ஜனாதிபதி எவ்வித அமைச்சரவை பதவிகளையும் கொடுக்கப்போவதில்லை என்றால் எங்களில் பலரும் தாங்கள் அமைச்சு பொறுப்புகளை ஏற்கப் போவதில்லை என்றனர்.சொக்ஷி முன்வைத்த யோசனைகளை எதிர்த்து பீரிஸ் வெளிநடப்பு செய்தார். பேராசிரியர் திஸ்ஸ விதாரணவிற்கு முழுமையான ஆதரவை வழங்கினோம். நான் தென்னாபிரிக்காவிற்கு இனநெருக்கடிகள் தொடர்பாக ஆராயச் சென்றேன். இலங்கைக்கு நான் திரும்பிய வேளை ஜனாதிபதி அமைச்சரவை பொறுப்புக்களை வழங்க தீர்மானித்துள்ளதாக அறிந்தேன். ஜனாதிபதி புரிந்துணர்வு உடன்படிக்கை மூலம் அதற்கான உரிமையுள்ளதாக குறிப்பிட்டார். நான் இல்லை என்றேன். நீங்கள் இதனை செய்தால் நாடு பலவீனப்படும். விடுதலைப் புலிகளுக்கு இது சாதகமாக அமையும் எனக் குறிப்பிட்டேன்.

பொன்னான வாய்ப்பு தவறவிடப்படுவதையும் நான் சுட்டிக்காட்டினேன்.பின்னர் நேபாளிற்கும் இந்தியாவிற்கும் சென்று விட்டு திரும்பினேன். இந்தக் காலப்பகுதியில் எமது உறுப்பினர்கள் அமைச்சர்களாக பதவியேற்றிருந்தனர். ஜனாதிபதி உடன்படிக்கைக்கு மாற்றாக நடந்து கொள்கிறார் என்பதை சொல்வதற்கான சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. அரசாங்கம் சர்வதேச சமூகத்தையும் மக்களையும் ஏமாற்ற முயல்கின்றது. மனித உரிமை மீறல்கள் அதிகரித்துள்ளன.முன்னர் இதற்கு தீர்வு கண்டிருந்தோம்.எனினும், தற்போது நாங்கள் சர்வதேச சமூகத்தின் மத்தியில் மிக மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.

வடக்கில் மாத்திரமல்ல தென்பகுதியிலும் அப்பாவிகள் கடத்தப்படுகின்றனர். பல இலட்சம் ரூபாகள் பெறப்படுகின்றன. ரவி கருணாநாயக்காவின் தொகுதியில் ஒருவர் தடுத்து வைக்கப்பட்டிருந்த வேளை தாக்கப்பட்டதில் இறந்து போனார். யார் கடத்துகிறார்கள் என்பது யாருக்கும் தெரியாது. இவ்வாறு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள் தடுப்புக் காவல் உத்தரவில் வைக்கப்படுவதில்லை. ஊடகவியலாளர்களுக்கு என்ன நடைபெறுகின்றது. இன்று நாட்டில் நடப்பவற்றை சுதந்திரமாக எழுதக்கூடிய நிலையில் ஊடகங்கள் இல்லை. தொழிற்சங்கவாதிகள் மிரட்டப்படுகின்றன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அழையுங்கள் எனக் கேட்டேன். ஏனெனில், அவர்களுக்கே விடுதலைப் புலிகளின் உணர்வுகள் தெரியும்.பிரதான கட்சிகளிடையேயான உடன்படிக்கை முறிந்தது குறித்து அவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.பாராளுமன்றம் என்பது அவர்களுக்கு மாத்திரமல்ல, எதிர்க்கட்சிக்கும் அர்த்தமற்றதாகியுள்ளது.நாடு எங்கே செல்கின்றது என்பது தெரியாது.ஜனாதிபதிக்கு இனப்பிரச்சினைக்கான யோசனைகளை முன்வைப்பதில் ஆர்வமில்லை. இதன் காரணமாகவே அவர் எம்முடனான உடன்படிக்கையை முறித்தார். சகலரும் சமாதான யோசனைகள் குறித்து பேசுகின்றனர். ஜனாதிபதி பெப்ரவரி, மார்ச், ஏப்ரல் என சொல்லி வருகின்றார். எம்முடனான உடன்படிக்கையை முறிப்பதே அவருக்கான சிறந்த வழியாக அமைந்தது.

http://www.thinakkural.com/news/2007/2/23/...s_page21943.htm

பஞ்சாயத்து சபையை வெக்கமில்லாமல் தீர்வாக சொல்ல முடியுமே... அதைக்கூட தேரர்கள் எதிர்த்து விடுவார்க்கள் என்பதால் தேசத்துரோகி பட்டத்தையும் வாங்க யாருக்குத்தான் விருப்பம் இருக்கும்...?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.