Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கத்தாருடனான ராஜாங்க உறவைத் துண்டிப்பதாக சவுதி அரேபியா, பஹ்ரைன், எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் அறிவிப்பு

Featured Replies

கத்தாரின் சேக் தமீம் பின் ஹமத் அல் தானி.
கத்தாரின் சேக் தமீம் பின் ஹமத் அல் தானி.
 

இஸ்லாமியக் குழுக்களுக்கு ஆதரவு தெரிவிப்பதால் கத்தாருடனான தங்கள் ராஜாங்க உறவுகளைத் துண்டித்துக் கொள்வதாக சவுதி அரேபியா, பஹ்ரைன், எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 4 அரபு நாடுகளும் அறிவித்துள்ளன.

வளைகுடா நாடான கத்தார் இஸ்லாமியக் குழுக்களுக்கு ஆதரவளித்து தீவிரவாதத்தை வளர்ப்பதாகக் கூறி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவை தெரிவித்துள்ளன.

ஏமனில் நடந்துவரும் போரில் இருந்து கத்தார் படைகள் விடுவிக்கப்படும் என்று சவுதி அரேபியா அறிவித்துள்ளது.

ஆகாய, கடல் வழிப் பயணங்கள் என்னவாகும்?

அனைத்து நாடுகளும் கத்தாருடனான ஆகாய மற்றும் கடல் வழி மார்க்கப் பயணத்தை நிறுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த முடிவு கத்தார் ஏர்வேய்ஸ் நிறுவனத்தை எந்த அளவுக்கு பாதிக்கும் என்று தெரியவில்லை.

அரபு நாடுகளின் முடிவு குறித்துக் கருத்துச் சொல்ல கத்தார் அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.

பஹ்ரைன் விளக்கம்

இதுபற்றி விளக்கமளித்துள்ள பஹ்ரைன், ''ஆயுதம் தாங்கிய தீவிரவாதிகளின் செயல்பாடுகளுக்கு ஆதரவளித்தும், நிதியுதவி செய்தும் கத்தார் தீவிரவாதத்தை வளர்த்து வருகிறது. பஹ்ரைனில் குழப்பத்தை ஏற்படுத்தவும், நாசவேலைகளை மேற்கொள்ளவும் ஈரானியக் குழுக்களுக்கு கத்தார் நிதியுதவி அளிக்கிறது'' என்று குற்றம் சாட்டியுள்ளது.

எடிஹாட் ஏர்லைன்ஸ் சேவை ரத்து:

இதற்கிடையில் அபுதாபி அரசின் எடிஹாட் விமான நிறுவனம் கத்தார் நாட்டுக்கான சேவையைத் துண்டித்துள்ளது. செவ்வாய்க்கிழமை காலை முதல் அபுதாபியில் இருந்து கத்தார் தலைநகர் தோஹாவுக்குச் செல்லும் அனைத்து விமான சேவைகளும் நிறுத்தப்படும் என அபுதாபி அரசு அறிவித்துள்ளது.

 

http://tamil.thehindu.com/world/கத்தாருடனான-ராஜாங்க-உறவைத்-துண்டிப்பதாக-சவுதி-அரேபியா-பஹ்ரைன்-எகிப்து-ஐக்கிய-அரபு-அமீரகம்-அறிவிப்பு/article9720182.ece?homepage=true

  • தொடங்கியவர்

அரபு நாடுகள் - கத்தார் பிளவால் எண்ணெய், சமையல் எரிவாயு விலை உயருமா?

படம்: ஏஎஃப்பி
படம்: ஏஎஃப்பி
 

அரபு நாடுகளுக்கும், கத்தாருக்கும் இடையிலான உறவு துண்டிப்பால் எண்ணெய் விலை உயரக்கூடும். இது எல்என்ஜி கேஸ் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது.

'இஸ்லாமியக் குழுக்களுக்கு ஆதரவு தெரிவித்து, தீவிரவாதத்தை வளர்க்கிறது' என்று கூறி கத்தாருடனான தங்கள் ராஜாங்க உறவைத் துண்டித்துக் கொள்வதாக சவுதி அரேபியா, பஹ்ரைன், எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 4 அரபு நாடுகளும் அறிவித்துள்ளன.

இதுகுறித்து செய்தி வெளியிட்டுள்ள சவுதி, ''அரபு நாடுகளின் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த கத்தார் தீவிரவாதத்தை ஊக்குவித்து வருகிறது. அந்நாடு ஐஎஸ்ஐஎஸ், அல்-கொய்தா இயக்கங்களுக்கு உதவுகிறது'' என்று கூறியுள்ளது.

கச்சா எண்ணெய் விலை உயரும்

இந்த நிலைப்பாட்டால் உடனடியாக எண்ணெய் ஏற்றுமதி உடனடியாகப் பாதிக்காவிட்டாலும், வருங்காலத்தில் விலை 1 சதவீதம் அதிகரித்து, ஒரு பேரலின் விலை 50 டாலர்களாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகள் சங்க உறுப்பினர் நாடுகளான சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் கத்தார் ஆகியவை சமீபத்தில் கச்சா எண்ணெய் உற்பத்திக் குறைப்பை நீக்க முடிவெடுத்தன. இதன்மூலம் சந்தையை இறுக்கி, விலையை அதிகப்படுத்தவும் அவை திட்டமிட்டிருந்தன.

அதே நேரத்தில் அரசியல் நெருக்கடிகள் எப்படி பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகள் சங்கத்தின் கொள்கை உருவாக்கத்தைப் பாதிக்கும் என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை. உலகத்தின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் ஏற்றுமதியாளரான சவுதி அரேபியாதான் பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகள் சங்கத்தின் நடைமுறைத் தலைவராக இருக்கிறது.

எல்என்ஜி கேஸ் மீதான தாக்கம்

கத்தார் மீதான தடை காரணமாக எல்என்ஜி ஏற்றுமதியில் பாதிப்பு இருக்குமா என்று உடனடியாகக் கருத்துக் கூற முடியாது என வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.

எல்என்ஜி கேஸ் ஏற்றுமதியில் உலகளாவிய அளவில் கத்தார் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. அங்கிருந்துதான் எகிப்து தன் மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்துகொள்கிறது. ஜனவரி 2016-ல் இருந்து ஒவ்வொரு மாதமும் 8,57,000 கியூபிக் மீட்டர்கள் எல்என்ஜி கேஸ் கத்தாரில் இருந்து எகிப்துக்குச் செல்கிறது.

அதேபோல கத்தாரில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்துக்கு ஜனவரி 2016-ல் இருந்து ஒவ்வொரு மாதமும் 1,90,000 கியூபிக் மீட்டர்கள் எல்என்ஜி கேஸ் செல்கிறது.

அதேபோல குவைத்துக்கும் 2016-ல் இருந்து ஒவ்வொரு மாதமும் 2,83,000 கியூபிக் மீட்டர்கள் எல்என்ஜி கேஸ் கத்தாரில் இருந்துதான் செல்கிறது.

ஆசிய நாடுகளுக்கு பாதிப்பில்லை

அதே நேரத்தில் அரசியல் மாறுபாடுகள் காரணமாக எல்என்ஜி கேஸ் இறக்குமதியில் ஆசிய நாடுகள் பாதிக்கப்படாது என்று கூறப்படுகிறது.

இதுகுறித்துப் பேசிய இந்திய எல்என்ஜி இறக்குமதி நிதிய தலைவர் ஆர்.கே.கார்க், ''கத்தார், அரபு நாடுகள் இடையேயான பிரச்சினை நம்மை பாதிக்காது. நாம் கடல் வழியாக நேரடியாகக் கத்தாரிடம் இருந்தே எல்என்ஜி கேஸைப் பெறுகிறோம்'' என்றார்.

கத்தாரிடமிருந்து எல்என்ஜி கேஸ் இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 2-வது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

 

http://tamil.thehindu.com/world/அரபு-நாடுகள்-கத்தார்-பிளவால்-எண்ணெய்-சமையல்-எரிவாயு-விலை-உயருமா/article9720374.ece?homepage=true

  • கருத்துக்கள உறவுகள்

அடிபணியுமா கத்தார்..? அடுத்த 48 மணிநேரங்களும் மிக முக்கியமானவை, மக்களை வெளியேறவும் உத்தரவு

கத்தாருடனான தூதரக உறவுகளை முறித்துக் கொண்டதன் எதிரொலியாக அந்த நாட்டுடனான விமான சேவையை அமீரகத்தின் எதிஹாட் ஏர்வேஸ் நிறுவனம் நிறுத்தியுள்ளது. தீவிரவாதத்துக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி கத்தார் நாட்டுடன் ஆன தூதரக உறவை துண்டிப்பதாக பக்ரைன், எகிப்து, சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு குடியரசு ஆகிய 4 நாடுகள் தெரிவித்துள்ளன.

அடுத்த 48 மணிநேரத்திற்குள் கத்தார் உடனான அனைத்து தூதரக உறவுகளையும் முறித்துக் கொள்ள இருப்பதாக குறித்த 4 நாடுகளும் அறிவித்துள்ளன. இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள பஹ்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சகம் கத்தார் தலைநகர் தோகாவில் இருந்து 48 மணிநேரத்தில் தங்களின் தூதரக அதிகாரிகள் திரும்பப்பெறப்படுவார்கள் என தெரிவித்துள்ளது. அதேபோல் பஹ்ரைனில் உள்ள கத்தார் மக்களும் 2 வாரத்துக்குள் வெளியேற வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

கத்தார் உடனான விமானம் மற்றும் கடல்வழி போக்குவரத்தையும் படிப்படியாக நிறுத்த உள்ளதாகவும் பஹ்ரைன் தெரிவித்துள்ளது. மேலும் கத்தார் அரசு, செய்தி ஊடக ஊடுருவல், ஆயத பயங்கரவாத நடவடிக்கை, பஹ்ரைனில் நாசவேலையை செய்திடவும், குழப்பத்தை ஏற்படுத்தவும் ஈரானிய குரூப்புகளுக்கு நியுதவி செய்வதாகவும் பஹ்ரைன் குற்றம்சாட்டியுள்ளது. முக்கிய வளைகுடா நாடான ஐக்கிய அரபு அமீரக நாடுகள் கத்தாருடனான தொடர்பை துண்டித்ததை தொடர்ந்து இந்த முடிவை எடுத்துள்ளதாக எதிஹாட் நிறுவனம் தெரிவித்துள்ளது. தோஹாவுக்கு நாள்தோறும் 4 முறை விமான சேவை அளிக்கப்பட்டு வருகிறது. துபாய் எமிரேட்ஸ் உட்பட மற்ற மூன்று வளைகுடா நாடுகளை சேர்ந்த விமான நிறுவனங்களும் தங்களின் சேவையை நிறுத்துவதாக அறிவிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனால் கத்தார் நாட்டு மக்கள் திரும்புவதில் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

முழுமையாக படிக்க... http://www.akuranatoday.com/news/?p=141599 .


சவுதி அரேபியா உள்ளிட்ட மூன்று அரபு நாடுகளின் தீர்மானம் குறித்து கட்டார் கவலை வெளியிட்டது .. June 5, 2017 கட்டார் நாட்டுடனான இராஜதந்திர உறவுகளை துண்டிப்பதுடன், எல்லைகளை மூடிவிடவும் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன் ஆகிய  வளைகுடா நாடுகள் மேற்கொண்ட தீர்மானம் தொடர்பில் கட்டார் அரசு தனது அதிர்ச்சியையும், கவலையையும் தெரிவித்துள்ளது.

இது தொடர்ப்பில் கட்டார் வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், மேற்படி தீர்மானம் எந்த வகையிலும் நியாயப் படுத்த முடியாத அடிப்படைகள் அற்ற குற்றச்சாட்டுக்களின் பேரில் எடுக்கப்பட்டது எனவும்,  அண்மைக் காலமாக கட்டார் அரசுக்கு எதிராக மேற்கொள்ளப் படுகின்ற முரண்பாடுகளை தூண்டுகின்ற ஊடக பிரச்சாரங்களின் பின்னணியில் சதித்திட்டங்கள் இருப்பது தெளிவாகின்றது  எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலில் முக்கிய உறுப்பினராக இருக்கும் கட்டார், அதன் உடன்படிக்கைக்கு அமைய, ஏனைய நாடுகளின் இறையாண்மையை மதிக்கும் அதேவேளை, அவற்றின் உள் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ந்து வருவதோடு, பயங்கரவாதம் மற்றும் தீவிரவாததிற்கு எதிரான போராட்டத்தில் முழுமையாக தனது பங்களிப்பை செய்து வருகிறது எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேற்படி ஊடக பிரச்சாரங்கள் பிராந்தியத்தில் விசேடமாக வளைகுடா நாடுகளில் பொதுசன அபிப்பிராயத்தில் தாக்கம் ஏற்படுத்துவதில் தோல்வி கண்டதன் பின்னணியிலேயே இந்த நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
 வளைகுடாவில் ஒரு சகோதர நாட்டுக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு நியாமான மற்றும் சட்ட பூர்வமான காரணங்கள் இல்லாமையினாலேயே இவ்வாறான புனையப்பட்ட பிரச்சாரங்கள் மேற்கொள்ளப் பட்டுள்ளமை தெளிவாகின்றது. எகிப்து அரசின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த அதிரடி நடவடிக்கைகள் கட்டார் மீது மேலாதிக்கத்தை திணிக்கின்ற  அதன் இறையாண்மையை மீறுகின்ற செயற்பாடாகும் எனவும் கட்டார் அரசு குற்றம் சுமத்தி உள்ளது.
 கட்டார் உடனான உறவுகளை துண்டிப்பதற்காக வலிந்து கூறப்பட்டுள்ள இந்த குற்றச் சாட்டுக்கள், அந்நாட்டுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ள சதியின் பின் புலத்திலேயே கடந்த கால புனையப்பட்ட ஊடக பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளமையினை ஊர்ஜிதப் படுத்துகின்றன.
 இந்த தீர்மானம் கட்டார் தேசத்தவர்களதும் அங்கு தங்கி இருப்பவர்களதும் இயல்பு வாழ்க்கையிலோ கட்டார் தேசத்தின் பொருளாதாரத்திலோ எத்தகைய பாதிப்புக்களையும்  ஏற்படுத்துவதனை கட்டார் அரசாங்கம் ஒரு போதும் அனுமதிக்க மாட்டாது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. வளைகுடா நாடுகளும், மக்களும் எதிர்கொண்டுள்ள பிரதான சவால்களை கவனத்திற் கொள்ளாது மூன்று நாடுகளும் மேற்படி தீர்மானங்களை மேற்கொண்டிருகின்றமை குறித்து கட்டார் வெளிவிவகார அமைச்சு மேலும் தனது கவலையை தெரிவித்துள்ளது.

photo_424774-1496682402.jpg

 


முழுமையாக படிக்க... http://www.akuranatoday.com/news/?p=141615 .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.