Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராணுவத்தினர் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டால் தொப்பிகல பகுதியின் மீது பதில் தாக்குதல்கள் நடத்தப்படும் இராணுவ பேச்சாளர்

Featured Replies

இராணுவத்தினர் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டால் தொப்பிகல பகுதியின் மீது பதில் தாக்குதல்கள் நடத்தப்படும் இராணுவ பேச்சாளர்

தொப்பிகல பகுதியிலிருந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு கடந்த சில தினங்களாக பொதுமக்கள் எவரும் வருகை தரவில்லை. எனினும் புலிகள் இராணுவ நிலைகள் மீது தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டால் தொப்பிகல மீது பதில் தாக்குதல்கள் நடத்தப்படும் என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் எஸ்.ஏ.பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.

பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், தொப்பிகல பகுதிகளிலிருந்து அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதிக்கு 2900 பேர் வருகை தந்துள்ளனர்.

கடந்த சில தினங்களாக அந்த பகுதியிலிருந்து பொதுமக்கள் எவரும் வருகை தரவில்லை என்பதனால் பொதுமக்களை புலிகள் தடுத்து வைத்திருக்கக்கூடும். அத்துடன் புலிகள் அப்பகுதிகளிலி ருந்து இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதியை நோக்கி தாக்குதல் நடத்துகின்றனர். அந்த தாக்குதல் தொடர்ந்தால் தொப்பிகல பகுதி யின் மீது பதில் தாக்குதல்கள் நடத்தப்படும்.

கிழக்கு மாகாணத்தில் இராணுவத்தினர் கைப்பற்றிய பகுதிகளில் சிவில் நிர்வாகத்தினை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. வாகரை பகுதியிலுள்ள பதின்மூன்று கிராமசேவகர் பிரிவுகளினுள் ஒன்பது பிரிவுகளில் இன்னும் இரண்டு வாரங்களுக்குள் மக்கள் ள்குடியேற்றப்படுவார்கள். ஏனைய பகுதிகளில் கண்ணிவெடிகளை அகற்றும் பணிகள் தொடர்கின்றன. அத்தோடு, ஏ15 வீதி புனரமைக்கப்பட்டு வாகரைக்கு மின்சாரவசதி பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள் ளன. கடந்த ஆகஸ்ட் மாதம் 11ஆம் திகதி மூடப்பட்ட யாழ்ப்பாண பல்கலைக்கழகம் பெப்ரவரி 19ஆம் திகதி மீண் டும் திறக்கப்பட்டது. ஆனால் அங்கு ஹர்த்தால் இடம் பெறு வதாக புலிகளுக்கு சார்பான ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன. ஆனால் பல் கலைக்கழகத்திற்கு 60 சதவீதமானவர்கள் வருகை தந்துள்ளனர்.

பல்கலைக்கழக மாணவர்களை பலியெடுத்து பல்கலைக்கழகத்தை மீண்டும் மூடுவதற்கு புலிகள் முயற்சி செய்கின்றனர். அத்தோடு, யாழ். சென். மேரிஸ் தேவால யத்தில் இருந்து ஆயுதம் மற்றும் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

அந்த தேவாலயத்தைச் சேர்ந்தவர்களின் உதவியின்றி இந்த வெடிபொருட்களை அங்கு மறைத்து வைத்திருக்கமுடியாது. பொதுமக்கள் வழங்கிய தகவல்களையடுத்தே இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டன. சில ஆயுதங்கள் ஆலயத்திலு ள்ள அறையில் வைத்து பூட்டப்பட்டிருந்தன.

http://www.tamilwin.com/article.php?artiId...;token=dispNews

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவர்காள் என்னஅறிக்கைவிடுவபது நாங்கள் விடுகின்றோம் இவர்களுக்கு முன்னேறிய பகுதிகளிள் இருந்து பின்வாங்க வேன்டும் அல்லது போனாள் எங்களுடைய புலிவிரர்கள் எங்கெல்லாம் தாக்கியழிப்பார்கள் எனறு இருந்து பாருங்கள்

மரம் செடி கொடுகழுக்கு தானே தமிழீழ வழங்களை அழிக்க ஏன் இவ்வளவு ஆசையோ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மரம் செடி கொடுகழுக்கு தானே தமிழீழ வழங்களை அழிக்க ஏன் இவ்வளவு ஆசையோ

சூடு கண்ட பூனை அடுப்பங்கரை நாடாது..

ஆனால் பட்டபின்னும் திருந்தாத ஜென்மங்களை நினைக்க அழுவதோ, சிரிப்பதோ தெரியலை..

ஐயோ.. ஐயோ.. இத யாரு கிட்ட சொல்லி அழ.. சாகப்போறம் எண்டு அடம்பிடிக்கிறாங்களப்பா..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.