Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஈரான் நாடாளுமன்றத்தில் துப்பாக்கிச் சூடு: பலர் காயம்

Featured Replies

 
Iran_3172567f.jpg
 
 
 

ஈரான் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்த மர்ம நபர் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதில் பலர் காயமடைந்தனர்.

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் அந்நாட்டு நாடாளுமன்றம் அமைந்துள்ளது. இந்நிலையில் இன்று (புதன்கிழமை) காலை நாடாளுமன்றத்துக்குள் நுழைந்த மர்ம நபர் அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது.

மேலும், அந்த நபர் நாடாளுமன்றத்துக்குள் சிலரை பிணைக் கைதிகளாகப் பிடித்துவைத்திருப்பதாகவும்ஒரு சில ஊடகங்களில் தாக்குதலில் ஒன்றுக்கும் மேற்பட்ட மர்ம நபர்கள் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக அந்நாட்டின் செய்தி நிறுவனங்களான பார்ஸ், மெஹர் ஆகியவை முதற்கட்ட தகவலை வெளியிட்டுள்ளன. "ஈரான் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் அங்கிருந்த பாதுகாவலர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் ஒரு வீரரின் காலில் குண்டு பாய்ந்தது. தாக்குதலில் ஈடுபட்ட அந்த நபர் அவ்விடத்திலிருந்து தப்பி ஓடினார்" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

நினைவிடத்திலும் தாக்குதல்:

ஈரான் புரட்சியாளர் ருஹொல்லா கோமினியின் நினைவிடத்திலும் ஆயுதம் ஏந்திய நபர் தாக்குதலில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் பொதுமக்கள் பலர் காயமடைந்ததாக முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://tamil.thehindu.com/world/ஈரான்-நாடாளுமன்றத்தில்-துப்பாக்கிச்-சூடு-பலர்-காயம்/article9721913.ece?homepage=true

 

ஈரான் நாடாளுமன்றத்தில் தாக்குதல் ; 7 பேர் பலி
 

image_2e5d4c3175.jpgஈரானின் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியிலும் ஈரானின் புரட்சிகரத் தலைவர் றுஹோல்லா கோமெய்னியின் ஸியாரத்திலும் (நினைவிடம்) மேற்கொள்ளப்பட்ட, ஒருங்கிணைக்கப்பட்ட தாக்குதல்களின் விளைவாக, குறைந்தது 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்றக் கட்டடத் தொகுதிக்குள், 3 ஆயுததாரிகள் உள்நுழைய முயன்றனர். அதன்போது, அத்தொகுதியின் பாதுகாப்புப் பணிக்காகக் காணப்பட்ட அதிகாரி ஒருவர் உட்பட இருவர் கொல்லப்பட்டனர்.

ஸியாரத்தில், தற்கொலைக் குண்டுதாரியொருவர், தன்னைத்தானே வெடிக்க வைத்தார். அதேபோல், இன்னுமொருவர், ஆறு கைக்குண்டுகளுடன், அப்பகுதியில் வைத்துக் கைது செய்யப்பட்டார்.

இந்தத் தாக்குதலே, தாமே மேற்கொண்டதாக, ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழு, உரிமை கோரியுள்ளது. சிரியாவிலும் ஈராக்கிலும், அக்குழுவுக்கெதிரான போரில், முக்கிய பங்காளராக, ஈரான் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/ஈரான்-நாடாளுமன்றத்தில்-தாக்குதல்-7-பேர்-பலி/50-198157

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.