Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

4 அமைச்சர்களையும் கூண்டோடு துரத்தினால் முதல்வர் விக்கியினது பதவிக்கும் ஆபத்து

Featured Replies

4 அமைச்சர்களையும் கூண்டோடு துரத்தினால் முதல்வர் விக்கியினது பதவிக்கும் ஆபத்து

 
4 அமைச்சர்களையும் கூண்டோடு துரத்தினால் முதல்வர் விக்கியினது பதவிக்கும் ஆபத்து
 

 

 

வடக்கு மாகாண சபை­யின் நான்கு அமைச்­சர்­க­ளை­யும் பதவி நீக்க முற்­பட்­டால், அது முத­ல­மைச்­ச­ரின் பத­விக்கு ஆபத்­தாக அமை­யும் எனத் தெரி­ய­வ­ரு­கி­றது.

அமைச்­ச­ர­வையை மாற்­று­வ­தாக இருந்­தால் முத­ல­மைச்­சர் உட்­பட 5 அமைச்­சர்­க­ளை­யும் மாற்­று­வது குறித்­துப் பங்கா­ளிக் கட்­சி­க­ளும் தீவி­ர­மா­கப் பரி­சீ­லிக்­கப்­ப­டும் என்று தமிழ் அர­சுக் கட்சி எச்­ச­ரித்­துள்­ளது.

“நான்கு அமைச்­சர்­க­ளை­யும் முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் நீக்க முற்­பட்­டால், ஒட்­டு­மொத்­த­மாக 5 பேரை­யும் நீக்­கி­விட்டு புதிய அமைச்­ச­ர­வையை நிய­மிக்க வேண்­டும் என்று எங்­க­ளி­டம் பல தரப்­பும் கோரிக்கை – அழுத்­தங்­களை முன்­வைத்­துள்­ளன. நான்கு அமைச்­சர்­க­ளை­யும் மாற்­றும் முடிவை அவர் எடுத்­தால், அந்­தக் கோரிக்­கை­கள் கட்­டா­யம் பரி­சீ­லிக்­கப்­ப­டும்”­என்று இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யின் தலை­வ­ரும், நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மாவை.சேனா­தி­ராசா காட்­ட­மா­கத் தெரி­வித்­தார்.

வடக்கு அமைச்­சர்­கள் விவ­கா­ரம் தொடர்­பில் ‘உத­யன் பத்­தி­ரி­கைக்கு’ நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் மாவை.சேனா­தி­ராசா மேலும் கூறி­ய­தா­வது,

விசா­ர­ணைக் குழு அறிக்கை அடிப்­ப­டை­யில் முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் நட­வ­டிக்கை எடுக்­கட்­டும் என்றே நாம் ஒதுங்­கி­யி­ருந்­தோம். அந்த விசா­ர­ணைக் குழு அவ­ரால் அமைக்­கப்­பட்­டது. அது அவ­ருக்கு பரிந்­து­ரை­களை முன்­வைத்­தது. அதன் பிர­கா­ரம் முடிவு எடுக்க வேண்­டி­ய­வர் அவர்­தான். அத­னால்­தான் நானோ, கட்­சித் தலை­வர் இரா.சம்­பந்­தனோ இந்த விட­யங்­க­ளில் தலை­யி­டு­வ­தில்லை என்று வில­கி­யி­ருந்­தோம்.

நாம் ஒதுங்­கி­யி­ருப்­பது தவறு எனப் பல­ரும் எம்மை விமர்­சிக்­கின்­ற­னர். இதே­வேளை, அமைச்­சர்­கள் நான்கு பேரை­யும் நீக்­கி­விட்டு தனக்கு வேண்­டி­ய­வர்­களை நிய­மிக்க முத­ல­மைச்­சர் முயல்­வ­தா­க­வும் எமக்­குப் பல­ரும் முறைப்­பா­டு­கள் தெரி­வித்­துள்­ள­னர். நான்கு அமைச்­சர்­க­ளை­யும் முத­ல­மைச்­சர் மாற்­றம் செய்­வ­தா­னால் அவ­ரும் பதவி விலக வேண்­டும்.

புதிய அமைச்­ச­ர­வை­யைக் கட்சி நிய­ம­னம் செய்ய வேண்­டும் என்று பல­ரும் எமக்கு கோரிக்கை விடுக்­கின்­ற­னர். முத­ல­மைச்­சர் நாளை (இன்று) என்ன செய்­யப் போகின்­றார் என்­ப­தைப் பார்த்­துக் கொண்­டி­ருக்­கின்­றோம். அவர் 4 அமைச்­சர்­க­ளை­யும் மாற்­றி­னால், எமக்கு விடுத்த கோரிக்கை பரி­சீ­லிக்­கப்­ப­டும்.
முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன், அமைச்­சர்­கள் விவ­கா­ரத்தை சபைக்­குள் முடித்­தி­ருக்க வேண்­டும்.

அதற்கு விசா­ர­ணைக் குழு அமைத்து இன்று விட­யம் பகி­ரங்­க­மா­கி­யி­ருக்­கின்­றது. இத­னால் மாகாண சபைக்கு மாத்­தி­ர­மல்ல, கட்­சிக்­கும் அவப் பெயர்­தான். கட்­சி­யைத் தலை­கு­னி­யச் செய்­கின்ற செயற்­பாட்­டையே அவர் செய்­தி­ருக்­கின்­றார். விசா­ர­ணைக் குழு குற்­ற­மி­ழைத்­த­வர்­கள் என்று இரு­வரை அடை­யா­ளப்­ப­டுத்தி பரிந்­து­ரைத்­தி­ருக்­கின்­றது. அந்­தப் பரிந்­து­ரை­யைச் செயற்­ப­டுத்­து­வதா? இல்­லையா? என்­பது முத­ல­மைச்­ச­ரைப் பொறுத்த விட­யம். ஆனால் குற்­ற­மி­ழைத்­தோ­ரைப் பாது­காப்­ப­தற்­காக நிர­ப­ரா­தி­க­ளைத் தண்­டிக்­கக் கூடாது.

முத­ல­மைச்­சர் விக்­னேஸ்­வ­ரன், அமைச்­சர் பொ.ஐங்­க­ர­நே­ச­னைப் பாது­காக்­கும் வகை­யில் செயற்­பட்­ட­வர். அமைச்­சர் ப.சத்­தி­ய­லிங்­கத்தை சிக்க வைக்­கும் நோக்­கு­ட­னேயே விசா­ர­ணைக்­குழு அமைக்­கப்­பட்­டது. இப்­போது விசா­ர­ணைக் குழு மீது குற்­றம் சுமத்­தத் தொடங்­கி­யி­ருக்­கின்­ற­னர். ஆனால் வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன், விசா­ர­ணைக் குழு சரி­யா­கத்­தான் செயற்­பட்­டது என்று சொல்­லி­யி­ருக்­கின்­றார்.

முத­ல­மைச்­சர் விக்­னேஸ்­வ­ரன், நான்கு அமைச்­சர்­க­ளை­யும் மாற்­றம் செய்ய வேண்­டும் என்று கூறி­னால், ஒட்­டு­மொத்த அமைச்­ச­ர­வை­யை­யும் புதி­தாக நிய­மிக்க, நாம் கட்­சித் தலை­மை­யு­ட­னும், ஏனைய பங்­கா­ளிக் கட்­சி­க­ளு­ட­னும் பேசு­வோம் – என்­றார்.

http://uthayandaily.com/story/6544.html

  • தொடங்கியவர்

நான்கு அமைச்­சர்­களும் பதவி நீக்­கப்­ப­டு­வார்­களா?

p9-50eaac6b04f12446c8e2df3107cb7b2efefa8940.jpg

 

வடக்கு முத­ல­மைச்சர் விக்­கி­னேஸ்­வரன் ஆராய்வு; தமி­ழ­ர­சுக்­கட்சி கடும் எதிர்ப்பு
(எம். நியூட்டன்)

வட­மா­காண அமைச்­சர்கள் மீதான அதி­கார துஷ்­பி­ர­யோகம், ஊழல் குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்­பாக முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி னேஸ்­வ­ரனால் நிய­மிக்­கப்­பட்ட விசா­ர­ணைக்­கு­ழுவின் அறிக்கை தொடர்­பாக மாகாண சபை இன்று விவா­திக்­க­வுள்ள பர­ப­ரப்­பான நிலையில், 4 அமைச்­சர்­க­ளையும் பதவி நீக்கம் செய்து புதிய அமைச்சர்­களை முத­ல­மைச்சர் நிய­மிப்­ப­தற்கு திட்­ட­மிட்­டுள்­ள­தாக நம்­ப­ர­மான வட்­டா­ரங்­க­ளி­லி­ருந்து தெரி­ய­வந்­தி­ருக்­கின்­றது.  

 4 அமைச்­சர்­களும் பதவி நீக்­கப்­பட வேண்டும் என்­ப­தற்கு கூட்­ட­மைப்பின் பங்­காளிக் கட்­சிகள் மூன்றும் இணக்கம் தெரி­வித்­தி­ருக்­கின்­றன. தமி­ழ­ரசுக் கட்சி மட்டும் இதற்கு ஆத­ர­வ­ளிக்­க­வில்லை எனத் தெரி­ய­வ­ரு­கின்­றது. இதனால், இந்த விவ­கா­ரத்தில் தமி­ழ­ரசுக் கட்சி தனி­மைப்­ப­டுத்­தப்­பட்ட நிலையில் உள்­ளது.

 நான்கு அமைச்­சர்கள் மீது குற்­றச்­சாட்­டுகள் முன்­வைக்­கப்­பட்ட நிலையில், அவர்­களில் இரு­வரின் குற்­றச்­சாட்­டு­களை விசா­ரணைக் குழு உறு­திப்­ப­டுத்­தி­யி­ருந்­தது. ஏனைய இரு அமைச்­சர்கள் மீதான குற்­றச்­சாட்­டுகள் நிரூ­பிக்­கப்­ப­ட­வில்லை என்றும் கூறப்­பட்­டி­ருந்­தது. இந்த நிலையில், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பங்­காளிக் கட்­சி­க­ளான, ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட், ரெலோ என்­பன, அமைச்­சர்கள் நால்­வ­ரையும் நீக்­க­வேண்டும் என்று வலி­யு­றுத்­தி­யுள்­ளன.

 குற்­றச்­சாட்டு நிரூ­பிக்­கப்­பட்­ட­வர்கள் மாத்­தி­ர­மன்றி, ஏனைய அமைச்­சர்­க­ளையும், நீக்கி விட்டு புதி­ய­வர்­களை நிய­மிக்க வேண்டும் என்று பங்­காளிக் கட்­சிகள் வலி­யு­றுத்­தி­யுள்ள போதிலும், இலங்கை தமிழ் அரசுக் கட்சி இதற்கு எதி­ரான நிலைப்­பாட்­டையே கொண்­டுள்­ளது. ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட், ரெலோ ஆகி­ய­வற்றின் தலை­வர்­க­ளு­டனும் உறுப்­பி­னர்­க­ளு­டனும் முத­ல­மைச்சர் இது தொடர்­பாக பேசி­யுள்­ள­தாகத் தெரி­ய­வ­ரு­கின்­றது. 4 அமைச்­சர்­க­ளையும் பதவி நீக்க வேண்டும் என்றே அவர்கள் அதன்­போது வலி­யு­றுத்­தி­யி­ருந்­தார்கள்.

 இத­னை­விட, பொது அமைப்­புகள், சிவில் அமைப்­புக்­களின் பிர­தி­நி­தி­களும் 4 அமைச்­சர்­க­ளையும் பதவி நீக்­கி­விட்டு புதிய அமைச்­சர்­களை நிய­மிக்க வேண்டும் என முத­ல­மைச்­சரை வலி­யு­றுத்தி கடி­தங்­களை அனுப்­பி­வைத்­தி­ருப்­ப­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. அதே­வே­ளையில், அமைச்­ச­ரவை மாற்றம் தொடர்­பாக முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன், ஆளும்­கட்­சியின் அனைத்து மாகா­ண­சபை உறுப்­பி­னர்­க­ளி­னதும் கருத்­துக்­களைக் கேட்­ட­றிந்து வரு­கிறார்.

நான்கு அமைச்­சர்­க­ளுக்கு எதி­ரா­கவும் மாகா­ண­சபை உறுப்­பி­னர்கள் 16 பேர் ஏற்­க­னவே குற்­றச்­சாட்­டுக்­கைள முன்­வைத்­தி­ருந்­தனர். அவர்­க­ளு­டனும் முத­ல­மைச்சர் இந்த விவ­காரம் தொடர்பில் கலந்­து­ரை­யா­டி­யுள்­ள­தாக தெரி­கின்­றது.

 இன்று வடக்கு மாகா­ண­ச­பையில் நடக்­க­வுள்ள சிறப்பு அமர்வில், முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன் இது தொடர்­பான அறி­விப்பை வெளி­யி­டலாம் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. அதற்கு முன்­ன­தாக மாகாண சபையில் இது தொடர்பில் விவாதம் இடம்­பெறும் எனவும், அமைச்­சர்கள் பதி­ல­ளிக்க சந்­தர்ப்பம் வழங்­கப்­படும் எனவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது

இதே­வேளை விசா­ர­ணைக்­கு­ழு­வினால் குற்­றம்­சாட்­டப்­பட்ட இரண்டு அமைச்­சர்­களை முத­ல­மைச்சர் பதவி நீக்­கினால் பர­வா­யில்லை. குற்­றச்­சாட்டு நிரூ­பிக்­கப்­ப­டாத ஏனைய இரண்டு அமைச்­சர்­க­ளையும் பதவி நீக்­கு­வது அநீ­தி­யா­னது என்ற நிலைப்­பாட்டை தமி­ழ­ர­சுக்­கட்­சியின் தலைமை முத­ல­மைச்­ச­ரிடம் வலி­யு­றுத்­தி­யுள்­ள­தாக தெரி­கின்­றது.

இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரி­வித்த தமி­ழ­ர­சுக்­கட்­சியின் தலை­வரும் யாழ். மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மாவை சேனா­தி­ராஜா வட­மா­கா­ண­ச­பையில் நான்கு அமைச்­சர்­களை பத­வி­நீக்க முடி­யாது. அவ்­வா­றாயின் முத­ல­மைச்சர் உட்­பட ஐந்து அமைச்­சர்­க­ளை­யுமே மாற்­ற­வேண்டும். அவ்­வா­றான கோரிக்­கைகள் எமக்கு கிடைத்­த­வண்ணம் உள்­ளன. இது­தொ­டர்பில் நாம் ஆராய்ந்து வரு­கின்றோம் என்று தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

இது குறித்து அவர் மேலும் கருத்து தெரி­விக்­கையில்

வடக்கு மாகாண சபையின் எந்த ஒரு விட­யங்கள் தொடர்­பிலும் .முத­ல­மைச்சர் எம்­முடன் பேசி­யது கிடை­யாது. நாங்கள் தான் ஒரு சில விட­யங்­களை பேசி­யி­ருக்­கின்றோம். ஆனால் எந்த ஒரு விட­யத்­திலும் மாகாண சபை மத்­திய அரசின் வேலைத்­திட்­டங்கள் தொடர்பில் எம்­மிடம் பேசி­யது கிடை­யாது. மாகாண அமைச்­சர்கள் மீதான விசா­ரணை கூட எமக்கு அறி­விக்­கப்­ப­ட­வில்லை.

மாகாண சபை அமைச்­சர்கள் மீதான குற்றச் சாட்­டுக்கள் தொடர்பில் முத­ல­மைச்சர் விசா­ரணை குழுவை நிய­மித்­துள்ளார். இதற்கு மாகாண சபையும் எதிர்ப்பு தெரி­விக்­க­வில்லை. குழுவின் முன் சாட்­சியம் வழங்­கி­யுள்­ளார்கள். தற்­போது அறிக்கை வெளி­வந்­துள்­ளது.

அறிக்கை வெளி­வந்த பின்னர் குழுவை பற்­றியும் அதன் உறுப்­பி­னர்கள் தொடர்­பிலும் தற்­போது கதைப்­பது ஏற்­பு­டை­ய­தல்ல.

 அமைச்­சர்­கள்­மீ­தான குற்­றச்­சாட்டு அறிக்­கை­யா­னது ஊட­கங்­களில் வெளி­வந்­துள்­ளது. மாகாண சபையில் ஊழல்கள், அதி­கார துஷ்­பி­ர­யோ­கங்கள் நடை­பெற்றால் அதற்கு முத­ல­மைச்சர் பொறுப்­புக்­கூ­ற­வேண்டும்.

குற்றச் சாட்­டுக்கள் தொடர்பில் குற்றம் சாட்­டப்­பட்­ட­வர்கள் தாமா­கவே பதவி வில­க­வேண்டும். அல்­லது முத­ல­மைச்சர் பத­வி­வி­லக வேண்டும். இதற்கு அப்பால் அவர்கள் மீதான குற்றம் தொடர்பில் விசா­ரிக்­கப்­பட்டு அதற்­கான நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்டும்.

இரண்டு அமைச்­சர்கள் மீது குற்­றச்­சாட்டு சுமத்­தப்­பட்­டுள்ள நிலையில் முத­ல­மைச்சர் ௪ அமைச்­சர்­களை நீக்­க­வேண்டும் என நினைத்து மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளிடம் எத்­த­கைய நட­வ­டிக்கை எடுப்பது? ௪ பேரையும் மாற்றுவதா? என்று தொலைபேசி மூலமும் நேரிலும் கேட்டுள்ளார்.

இது முறையற்ற விடயம் ஆகும்.

மாகாண சபை முறைகேடுகள் தொடர்பாக எமக்கு கிடைக்கும் முறைப்பாடுகள், கோரிக்கைகள் இவை எல்லாவற்றுக்கும் முதலமைச்சரும் அமைச்சரவையும் தான் பொறுப்பு கூறவேண்டும். ௪ அமைச்சர்கள் மட்டும் மாற்றப்படக்கூடாது அவ்வாறு மாற்றுவதாயின் ஐந்து அமைச்சர்களையும் மாற்றவேண்டும். இத்தகைய கருத்தே எம்முன் வைக்கப்பட்டுள்ளது. இத்தககைய கருத்து தொடர்பில் எங்களுடைய கட்சித் தலைமையும் தமிழ்தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைமையுடன் பேச வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்றார்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-06-14#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.