Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசின் செயற்பாட்டுத் தாமதத்தால் அரசுக்கே ஆபத்து

Featured Replies

அரசின் செயற்பாட்டுத் தாமதத்தால் அரசுக்கே ஆபத்து

 
அரசின் செயற்பாட்டுத் தாமதத்தால் அரசுக்கே ஆபத்து
 

இன்­றைய நல்­லாட்சி அரசு பத­வி­யேற்ற ஆரம்ப கால­கட்­டத்­தில், தேர்­தல் வேளை­யில் நாட்டு மக்­க­ளுக்கு வழங்­கிய வாக்­கு­று­தி­க­ளுக்­க­மைய தனது செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்க முயன்­றதை அவ­தா­னிக்க முடிந்­தது. பொதுமக்கள் தமது எத்­த­கைய கருத்தை வெளிப்­ப­டுத்­த­வும், அச்­சம் எது­வு­மின்றி அர­சின் செயற்­பா­டு­களை விமர்­சிக்­கவும் வாய்ப்­புக்கிட்­டி­ய­தோடு அத்­த­கைய சுதந்­தி­ரம் தற்­போ­தும் தொடர்­கி­றது என்­பது முக்­கி­ யத்­து­வம் மிக்­க­தா­கும். அத்­த­கைய பின்­ன­ணி­யில் கருத்து வௌிப்படுத்தும் சுதந்­திர கலா­சா­ர­மொன்று நாட்­டில் உரு­வா­னது என்­ப­தை­யும் மறுப்­ப­தற்­கில்லை.
ஆனா­லும் ஆட்­சி­யைக் கைப்­பற்­று­முன்­னர் நாட்டு மக்­க­ளுக்கு வழங்­கிய வாக்­கு­று­தி­கள் பலவும் ஆட்­சி­யைப் பொறுப்­பேற்ற அர­சால் இது­வரை நிறைவேற்­றப்­ப­ட­வில்லை. அல்­லது காலம் தாழ்த்­தப்­ப­டு­வ­தா­க­வும் கொள்­ள­லாம். மாது­ளு­வேவ சோபித தேர­ரது, நியா­ய­மான சமூ­தா­யத்தை உரு­வாக்­கு­வ­தற்­கான, தேசிய வேலைத்­திட்­டத்­தின் மூலம் நிறை­வேற்று அரச தலை­வர் நடை­மு­றையை ஒழித்­தல், மற்­றும் தேர்­தல் நடை­மு­றை­யில் மாற்­றங்­களை ஏற்­ப­டுத்­தல் என்ற கொள்­கைத் திட்­டங்­கள் முன்­னி­லைப்­ப ­டுத்­தப்­பட்­டன. புதிய அர­ச தலை­வர் மற்­றும் தலைமை அமைச்­சரை நிய­மிப்­பது மட்­டுமே நாட்டு மக்­க­ளது விருப்­ப­மாக அமைந்­தி­ருக்­க­வில்ல. அவர்­கள் நிர்­வாக நடை­மு­றை­யில் ஒரு மாற்­றத்தை எதிர்­பார்த்­த­னர்.

சில விடயங்களில்
முன்னேற்றம் ஏற்படாது
இவற்­றில் ஒரு சில விட­யங்­க­ளில் முன்­னேற்­றம் ஏற்­பட்­ட­தென்­னமோ உண்­மை­தான், அர­ச­மைப்­புக்­கான 19 ஆவது திருத்­தத்­தின் மூலம் நிறை­வேற்று அரச தலை­வ­ருக்­கான அதி­கா­ரங்­கள் குறைக்­கப்­பட்­டமை இதற்­குப் பொருத்­த­மா­ன­தொரு உதா­ர­ண­மா­கும். நல்­லாட்சி அர­சின் இரண்­டரை ஆண்­டு­கள் கால நிர்­வா­கத்­தில் சுயா­தீன ஆணைக்­கு­ழுக்­கள் உரு­வாக்­கப்­பட்­டமை மற்­றும் தக­வல் அறி­யும் சட்­டம் நிறை­வேற்­றப்­பட்­டமை சிறப்பான செயற்­பா­டு­க­ளே­யா­யி­னும், நிறை­வேற்று அர­ச­த­லை­வர் பத­வியை ஒழித்­து­வி­டும் செயற்­பாட்­டில் சிறி­த­ள­வே­னும் முன்­னேற்­றம் ஏற்­ப­ட­வில்லை.
ஜன­நா­யக அடிப்­ப­டை­யில் அர­ச­மைப்­பில் மாற்­றம் ஏற்­ப­டுத்­து­தல் என்­பது இலே­சா­ன­தொரு விட­ய­மல்ல. இதற்­குப் பொது மக்­க­ளது அபிப்­பி­ரா­யம் பெற்­றுக் கொள்ள வேண்­டி­யது அவ­சி­ய­மா­கும். இது விட­யத்­தில் ஏதோ­வொரு வகை­யில் பொது­மக்­க­ளது அபிப்­பி­ரா­யம் பெறப்­பட்­டதாயினும் இவற்­றின் முடிவு தாம­திக்­கப்­பட்­டது. எனவே அத்­த­கைய செயற்­பா­டு­கள் விரை­வு­ப­டுத்­தப்­பட்­டாக வேண்­டும். இந்த ஆண்­டின் இறு­திக்­குள் அது முன்­னெ­டுக்­கப்­ப­ டா­விட்­டால், பொது மக்­கள் மத்­தி­யில் சந்­தே­கம் ஏற்­ப­டு­வ­தைத் தவிர்க்க இய­லாது. ஏனெ­னில் புதிய அர­ச­மைப்பை நிறை­வேற்­றிக் கொள்­வ­தில் பொது மக்­க­ளது ஆத­ர­வும் அவ­சி­ய­மா­கி­றது.

பொது வாக்கெடுப்பொன்று
அவசியம்
அந்த வகை­யில் பொது மக்­கள் மத்­தி­யில் பொது வாக்­கெ­டுப்­பொன்று நடத்­தப்­பட்­டாக வேண்­டும். அவ்­வேளை பொது மக்­கள் தமது ஏனைய பிரச்­சி­னை­க­ ளுக்­கும் இந்த மாற்­றத்­தின் மூலம் தீர்வு கிடைக்­குமா என அறிய ஆவல் கொள்­வர் .கால தாம­தங்­கள் பொதுமக்­கள் மத்­தி­யில் குழப்­பங்­க­ளுக்கு வழி சமைப்­பது வழ­மை­யா­னதே. பொது வாக்­கெ­டுப்பு விட­யத்­தி­லும் இத்­த­கைய குழப்­பம் மக்­கள் மத்­தி­யில் ஏற்­ப­டு­மா­னால் , அதி­கார மாற்­றத்­தால் எதிர்­பார்க்­கப்­பட்ட பயன் ஏற்­ப­டப் போவ­தில்லை எனவே இப்­போ­தா­வது அரசு இது விட­யத்­தில் கவ­னம் செலுத்தி எதிர்ப்­பார்க்­கப்­பட்ட மாற்­றத்தை எற்­ப­டுத்த வேண்­டி­யது அவ­சி­யம்.
நிறை­வேற்று அரச தலை­வர் நடை­மு­றையை ஒழிக்­கு­மாறு மகிந்­த­வி­டம் கூட முன்­னர் கோரப்­பட்­டது. பின்­னர் ஐ.தே.கட்­சி­யும் சுதந்­தி­ரக்­கட்­சி­யின் மைத்­தி­ரி­பால தரப்­பும் அதனை நிறை­வேற்­று­வ­தாக வாக்­கு­றுதி வழங்­கி­யி­ருந்­தன. மைத்­தி­ரி­பா­ல­வின் நிலைப்­பாட்­டுக்கு எதி­ரான கருத்­துக்­கொண்ட அமைச்­சர்­க­ளும் அர­சில் இருக்­கின்­ற­னர். அவர்­கள் நிறை­வேற்று அரச தலை­வர் நடை­மு­றையை ஒழுப்­பதை எதிர்க்­கின்­ற­னர். அவர்­க­ளது எண்­ணத்­துக்கு இயைந்து மைத்­தி­ரி­பால செயற்­பட்­டால் அது அவ­ரது அர­சி­யல் நற்­பெ­ய­ருக்­குப் பாதிப்பை ஏற்­ப­டுத்­தும். எனவே இது விட­யத்­தில் தாம் நாட்டு மக்­க­ளுக்கு வழங்­கிய வாக்­கு­று­தியை நிறை­வேற்­றியே ஆவேன் என அரச தலை­வர் நாட்டு மக்­க­ளுக்கு நம்­பிக்கை ஊட்­ட­வேண்­டும். மைத்­தி­ரி­பால அதில் உறு­தி­யாக இருப்­பி­னும், அவர் சுதந்­தி­ரக்­கட்­சி­யின் மத்­திய செயற்­கு­ழு­வின் முடி­வுக்­க­மை­ யவே செயற்­பட்­டாக வேண்­டு­மென அவ­ருக்கு எதி­ரான அந்த அமைச்­சர்­கள் கூறி வரு­கின்­ற­னர்.

முன்னரெல்லாம் மகிந்தவின்
முடிவே முடிந்த முடிவு
முன்­ன­ரெல்­லாம் சுதந்­தி­ரக் கட்­சி­யின் மத்­திய செயற்­கு­ழு­வின் முடிவை மகிந்த கணக்­கில் எடுக்­காது மகிந்­த­வின் முடி­வையே அந்­தச் செயற்­குழு ஏற்­றுச் செயற்­பட்­டது. எது எவ்­வா­றா­யி­னும் நிறை­வேற்று அரச தலை­வர் பத­வியை ஒழித்து விடு­வ­தாக மைத்­தி­ரி­பால நாட்டு மக்­க­ளுக்கு உறு­தி­வ­ழங்­கி­யுள்­ளதை மறக்­கவோ, மறுக்­கவோ இய­லாது. அதனை எவ­ரா­லும் புறந்­தள்­ளி­ விட இய­லா­தென்­ப­தால் குறித்த அந்த செயற்­பாடு தீவி­ர­மாக முன்­னெ­டுக்­கப்­பட்­டாக வேண்­டி­யுள்­ளது. அர­சின் எந்­தச் செயற்­பாட்­டை­யும் சரி எதிர்த்து விமர்­சிக்­கும் கூட்டு எதி­ர­ணித் தரப்­புக்கு உரிய பதி­ல­ளிக்­க­வல்ல வலு­வான கட்­ட­மைப்­பொன்றை அரசு கொண்­டி­ருக்­க­வில்லை. அர­சின் புதிய அர­ச­மைப்பை அறி­மு­கப்­ப­டுத்­தும் யோசனை குறித்த கூட்டு எதி­ர­ணி­யின் விமர்­ச­னங்­க ­ளுக்­குப் பதில் வழங்க அரசு நட­வ­டிக்கை மேற்­கொண்­ட­தாக இல்லை.
போர் கார­ண­மாக இனங்­கள் மத்­தி­யி­லான நல்­லி­ணக்­கம் அற்­றுப்­போய் இனங்­கள் மத்­தி­யில் சந்­தே­கம் விரிவு கண்­டுள்­ளது. அதனை வாய்ப்­பா­கக் கருதி கூட்டு எதி­ர­ணி­யின் சில நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் அர­சின் காலை­வா­ரி­விட முயன்று வரு­கின்­ற­னர். இருந்­த­போ­தி­லும் நாட்­டின் இனங்­க­ளி­டையே நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­த­வும், அதி­கா­ரங்­க­ளைப் பகிர்ந்து கொள்­ள­வும் அரசு அக்­கறை காட்­டிச் செயற்­பட்டு வரு­கி­றது. அதி­கா­ரப் பகிர்வு தொடர்­பாக இது­வரை உறு­தி­யான முடி­வு­கள் எது­வும் எட்­டப்­ப­டாத போதி­லும் , அது குறித்து பொய்­யான பரப்­பு­ரை­களை மேற்­கொண்டு சிங்­கள மக்­கள் மத்­தி­யில் குழப்­பத்­தை­ யும் சந்­தே­கத்­தை­யும் தூண்­டி­விட சில தரப்­பி­னர்­கள் திட்­ட­மிட்­டுச் செயற்­பட்டு வரு­கின்­ற­னர். புதிய அர­ச­மைப்­புச் சட்ட மூலத்­தில், பௌத்த மதத்­துக்கு ஏற்­க­னவே வழங்­கப்­பட்­டுள்ள முன்­னு­ரிமை எந்த விதத்­தி­லும் குறைக்­கப்­ப­ட­வில்லை என அரசு கூறி வரும் நிலை­யில், அதனை வைத்து சிங்­கள மக்­க­ளுக்கு தவ­றான கருத்தை வழங்க கூட்டு எதி­ர­ணி­யி­னர் முயன்று வரு­கின்­ற­னர். அதனை அரசு நாட்டு மக்­க­ளுக்­குத் தெளி­வு­ப­டுத்த முனை­வ­தா­கத் தோன்­ற­வில்லை.

அதிகாரப் பகிர்வு தொடர்பான
முக்கிய கட்டத்தில் நாம்
அதி­கா­ரப் பகிர்வு தொடர்­பாக முக்­கிய கட்­டத்தை நாம் அடைந்­தி­ருக்­கி­றோம். முழு நாடுமே ஏற்­றுக் கொள்­ளத்­தக்க வகை­யி­லான தீர்­வொன்றே அவ­சி­ய­மென எதிர்க்­கட்­சித்­த­லை­வர் சம்­பந்­தன் தெரி­வித்­துள்­ளார். இது தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்பு முன்­னர் கொண்­டி­ருந்த நிலைப்­பாட்­டுக்கு பெரு­ம­ள­வில் மாறு­பட்ட ஒன்­றா­கும். புதிய அர­ச­மைப்பு வரை­வும் பெரு­ம­ள­வில் இத்­த­கைய நிலைப்­பாட்டை நெருங்­கிய ஒன்­றா­கவே காணப்­ப­டு­கி­றது. அந்த வகை­யில் தற்­போ­தைய நிலைப்­பாட்­டைச் சாத­க­மா­ன­தொன்­றா­கப் பயன்­ப­டுத்­திக் கொள்ள வேண்­டி­யது அவ­சி­ய­மா­கும். தமி­ழர் தரப்­புக்­குச் சம்­பந்­த­னின் தலை­மைத்­து­வம் அமைந்­தி­ருக்­கும்வரை புதிய அர­ச­மைப்பை உரு­வாக்கும் முயற்­சி­யைக் குறுக்­கீ­டின்றி முன்­னெ­டுக்க இய­லும். சம்­பந்­த­னது தலை­மைத்­து­வம் இல்­லாது போகும் நிலை­யில் நிலைமை எவ்­வாறு அமை­யும் என இப்போது கணிப்­பிட இய­லாது. தமி­ழர் தரப்­பி­லும் கடும் கோட்­பாட்­டுத் தரப்­பி­னர்கள் இருப்­பதே இதற்­குக் கார­ணம். ஆத­லால் புதிய அர­ச­மைப்­புக் குறித்த செயற்­பா­டு­கள் முடிந்­த­வரை துரி­தப்­ப­டுத்­தப்­ப­டல் வேண்­டும்.
இனங்­க­ளுக்­கி­டை­யே­யான நல்­லி­ணக்­கத்தை உரு­வாக்­கு­த­லும் முக்­கி­யத்­து­வம் வாய்ந்­த­தொன்­றா­கி­றது. முஸ்­லீம் இனத்­த­வர்­க­ளக்கு எதி­ரான செயற்­பா­டு­கள் 2012 ஆம் ஆண்­ட­ள­வில் தீவி­ரம் கண்­டன. பொது­ப­ல­சேனா, ராவ­ண­ப­லய போன்ற அமைப்­புக்­கள் மீது இது விட­யத்­தில் குற்­றம் சாட்­டப்­ப­டு­கி­றது. இத்­த­கைய முஸ்­லீம் விரோ­தப் போக்­குக் குறித்து மகிந்த அரசு அக்­கறை காட்­டிச் செயற்­ப­ட­வில்லை. மாறாக இத்­த­கைய போக்கை வளர்ப்­ப­தற்கு மகிந்த அரசு தூண்­டு­தல் கொடுத்து வந்­த­தா­க­வும் நம்­பப்­பட்­டது. இத­னா­லேயே நாட்­டின் முஸ்­லிம் இனத்­த­வர்­கள் அரச தலை­வர் தேர்­த­லில் மைத்­தி­ரி­பா­ல­வுக்கு ஆத­ர­வ­ளித்­த­னர். மேற்­கு­றிப்­பிட்ட இன­வா­தத் தரப்­புக்­க­ளது செயற்­பா­டு­கள் கார­ண­மா­கவே தாம் முஸ்­லீம்­க­ளது ஆத­ரவை இழக்க நேர்ந்­த­தென்­பதை மகிந்த காலந்­தாழ்த்தி உணர்ந்து கொண்­டார். நல்­லாட்சி அரசு பதவி ஏற்ற பின்­னர் இந்த நிலை­மை­யில் குறிப்­பி­டத்­தக்க மாற்­றம் ஏற்­பட்­ட­போ­தி­லும், அண்­மைக்­கா­ல­மாக குறித்த, இன­வா­தத் தரப்­புக்­கள் மீண்­டும் முஸ்­லீம் மக்­க­ளுக்­கெ­தி­ரான நிலைப்­பாட்டை தீவி­ர­மாக்­கி­யுள்­ளதை காண­மு­டி­கி­றது.

புதிது புதிதாக
இனவாதக் குழுக்கள்
தற்­போ­தைய அர­சின் மென்­போக்கை வாய்ப்­பா­கக் கொண்டு குறித்த இன­வா­தத் தரப்­புக்­க­ளு­டன் மேலும் சில இன­வ­தத்­த­ரப்­புக்­கள் உரு­வா­கி­யுள்­ளன. இனக்­கு­ழு­ம­மொன்­றுக்­குப் பிரச்­சினை ஏதா­வது இருக்­கு­மா­னால், அது குறித்து அர­சு­டன் தொடர்­பா­டல் மேற்­கொண்டு, பேச்­சுக்­கள் மூலம் பிரச்­சி­னைக்­குத் தீர்வு பெற்­றுக் கொள்­வதே ஜன­நா­யக நடை­முறை. ஆனால் வீதி­யில் இறங்கி மற்­றொரு இனத்­த­வர்­களை நிந்­தித்து, மதத் தலை­வர்­க­ளைக் கேலி­செய்­வதை ஒரு­போ­தும் ஏற்­றுக்­கொள்ள இய­லாது. இத்­த­கைய போக்கு இன நல்­லி­ணக்க முயற்­சிக்­குப் பாத­க­மா­ன­தொன்று.
அந்த வகை­யில் அண்­மைக்­கா­ல­மாக முஸ்­லீம் மக்­கள் மத்­தி­யில் நில­வும் குழப்­பத்­தை­யும் அச்­சத்­தை­யும் போக்க அரசு நட­வ­டிக்க மேற்­கொள்­ளல் அவ­சி­ய­மா­கும். அர­சின் அச­மந்­த­மும் தாம­தப் போக்­கும் புதுப்­பு­துப் பிரச்­சி­னை­கள் உரு­வாக வழி­வ­குக்­கும். அது எதிர்­கா­லத்து அர­சின் இருப்­புக்­கும் பாத­கம் ஏற்­ப­டுத்­த­வல்­லது. எனவே இவற்­றுக்கெல்­லாம் விரை­வான நட­வ­டிக்கை அவ­சி­ய­மா­கும்.
எனவே நிறை­வேற்று அரச தலை­வர் நடை­மு­றையை மாற்­றி­ய­மைத்து, புதிய அர­ச­மைப்­பொன்றை உரு­வாக்­கு­வது தொடர்­பாக பொது வாக்­கெ­டுப்­பொன்றை நடத்தி மக்­கள் ஆணை­யைப் பெற்­றுக் கொள்ள அரசு விரைந்து செயற்­பட்­டாக வேண்­டும். இதில் தாம­ தமோ, தயக்­கமோ இருத்­த­லா­காது.
உண்­மை­யில் இன்று சில அமைப்­புக்­கள் இது­வரை இல்­லாத பிரச்­சி­ னையை அல்­லது பிரச்­சி­னை­க­ளைப் புதி­தாக உரு­வாக்க முயல்­கின்­றன. இது இன­வாத அர­சி­யல் செயற்­பாட்­டின் விளை­வா­கும். இத­னால் கடை­சி­யில் நாட்­டின் ஸ்திரத்­தன்மை கேள்­விக் குறி­யா­கி­வி­டும் இருப்பு நலிவு நிலை­க­காண நேரி­டும்.
அந்த வகை­யில் இன்று அர­சுக்கு எதி­ரான பல தரப்­புக்­க­ளும் அர­சின் காலை­வா­ரி­வி­டவே முனை­கின்­றன. அதே­வேளை அர­சின் செயற்­பா­டு­க­ளில் நில­வும் தாம­தம் கூட்டு எதி­ர­ணி­யின் முயற்­சி­க­ளுக்கு எழுச்­சியை ஏற்­ப­டுத்­தக் கார­ண­மா­கின்­றது என்­பது கவலை தரு­மொன்று.

 

சிங்­கள மூலம் – வழக்­க­றி­ஞர் ஜாவிட் யூசுப்
தமி­ழில் – வீ .எஸ் .ரீ

http://uthayandaily.com/story/7203.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.