Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அமைச்சர்களுக்கு ஆலோசனை கூறுகின்றேன்

Featured Replies

அமைச்சர்களுக்கு ஆலோசனை கூறுகின்றேன்

 
அமைச்சர்களுக்கு ஆலோசனை கூறுகின்றேன்
 

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நேற்று அனுப்பிய கடிதத்துக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இன்று பதில் வழங்கியுள்ளார்.

இரா.சம்பந்தன் அனுப்பிய கடிதம் வருமாறு,

கௌரவ நீதியரசர் சீ.வி.விக்னேஸ்வரன் அவர்கள்,
முதலமைச்சர் – வடக்கு மாகாணம்.

அன்புக்குரிய விக்னேஸ்,

தங்களது 17.06.2017 திகதியிடப்பட்ட கடிதத்திற்கு நன்றி.

எமக்கு முன்னால் உள்ள பிரச்சினையை மட்டுமே நான் கையாளுவேன். வுpசாரணைக் குழுவினால் குற்றவாளிகளாகக் காணப்படாத இரண்டு அமைச்சர்களுக்கும் எதிரான தண்டனைச் செயற்பாடு நியாயப்படுத்தக் கூடியதா என்பதே அது. இரண்டு அமைச்சர்களுக்கும் எதிராக, அவர்கள் குற்றவாளிகளாகக் காணப்படாதபோதிலும் நீங்கள் மேற்கொண்ட தண்டனை நடவடிக்கையே தற்போதைய குழப்பங்கள் எழக் காரணமாகியுள்ளது.

உங்களைச் சந்தித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூன்று கட்சித் தலைவர்களினதும் ஆலோசனைக்கு அமைவாக, ஏதேனும் விசாரணையின்போது இரண்டு அமைச்சர்களினதும் நடத்தை தொடர்பாக நான் ஓர் உத்தரவாதத்தைத் தந்தால், குறித்த அமைச்சர்கள் இருவர் தொடர்பான திருத்த நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்ற எனது கருத்தை, கட்சித் தலைவர்களும் ஆதரிப்பார்கள் என்ற ஆலோசனையைக் கூறியுள்ளீர்கள்.

விசாரணை தொடர்பாக இரண்டு அமைச்சர்களினதும் நடத்தையையிட்டு நான் உத்தரவாதமளிக்க வேண்டுமென்று எவ்வாறு ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதை என்னால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. அத்தகைய உத்தரவாதமொன்றை நிச்சயமாக நான் தரப்போவதில்லை. நான் ஏற்கெனவே தெரிவித்திருந்தபடி இயற்கை நீதிக் கோட்பாடுகளுக்கு மாறான தங்களுடைய நடவடிக்கையின் தொடர்ச்சியாக மாகாண சபையில் ஏற்பட்டுள்ள குழப்பநிலைமையைச் சீர்செய்வதற்காகவே நான் எனது ஒத்துழைப்பை நல்க முயற்சிக்கின்றேன். எனினும், ஒரு சட்டரீதியான, சுதந்திரமான விசாரணைக்குத் தடைகள் எதனையும் ஏற்படுத்தக்கூடாது என நான் குறித்த இரு அமைச்சர்களுக்கும் நிச்சயமாக ஆலோசனை கூறுவேன்.

இந்த விடயம் மேலும் தாமதப்படுத்தக் கூடியதென நான் கருதவில்லை. ஆதலால் தாங்கள் தாமதமின்றிச் செயற்பட வேண்டும்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் செயற்பாடுகளில் எனது செல்வாக்கைச் செலுத்த வேண்டிய தேவையுள்ளதாகத் தாங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தற்போதைய தலைவராக திரு.மாவை சேனாதிராஜா அவர்களும்,தற்போதைய செயலாளர் நாயகமாக
திரு.கே.துரைராஜசிங்கம் அவர்களும் உள்ளனர். இ.த.அ.கட்சியின் மத்திய செயற்குழு ஒழுங்காகக் கூடுகின்றது. நான் இ.த.அ.கட்சியின் ஒரு சிரேஷ;ட உறுப்பினர் என்பதோடு, ஒரு காலத்தில் அதன் தலைவராகவும் இருந்தேன். தந்தை செல்வநாயகம் அவர்கள் தலைமைதாங்கிய இலங்கைத் தமிழரசுக் கட்சியும், தமிழர் விடுதலைக் கூட்டணியுமே எப்பொழுதும் எனக்கு உரித்தான அரசியல் இயக்கங்களாகும்.

வடக்கு மாகாணத்துக்கான முதலமைச்சர் வேட்பாளராகத் தங்களைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்து அதனைத் தங்களுக்குத் தெரிவித்தவேளையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எல்லாத் தலைவர்களின் முன்பாகவும் திரு.மாவை சேனாதிராஜாவிடம் நீங்கள் கூறினீர்கள், வடமாகாண சபையின் நிர்வாகத்தை நடாத்திச் செல்வதில் அவரது வழிகாட்டலும் அரசியல் ஆலோசனைகளும் உங்களுக்குத் தேவைப்படும் என்பதாக. இது அவ்வாறே நிறைவேற்றப்பட்டதா என்பதைச் சிலவேளை நீங்கள் உங்களையே கேட்டுக் கொள்ளலாம். திரு.மாவை சேனாதிராஜா அவர்கள் எமது மக்களுக்காகவும் கட்சிக்காகவும் பல தியாகங்களைச் செய்த, அதிக துயரங்களை அனுபவித்த ஒரு தலைவராவார். இத்தகைய பெறுமதிவாய்ந்தவர்கள் ஓரங்கட்டப்படக் கூடாது.

எவ்வாறாயினும், இ.த.அ.கட்சியின் செயற்பாடுகளில் எனது சாதகமான செல்வாக்கைப் பிரயோகிக்க முயலுவேன் என்ற உத்தரவாதத்தை உங்களுக்குத் தருகின்றேன்.

தங்களால் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ள திருத்த நடவடிக்கைகள் தாமதியாது எடுக்கப்பட வேண்டும்.
உண்மையுள்ள,

இரா.சம்பந்தன்
தலைவர்,

http://uthayandaily.com/story/7221.html

  • தொடங்கியவர்

“அன்புக்குரிய விக்னேஸ், திருத்த நடவடிக்கைகளை தாமதியாது எடுங்கள்” இப்படிக்கு உண்மையுள்ள சம்பந்தன்:-

Wigneswaran-with-Sambanthan.jpg

18.06.2017

கௌரவ நீதியரசர் சீ.வி.விக்னேஸ்வரன் அவர்கள்,
முதலமைச்சர் – வடக்கு மாகாணம்.

அன்புக்குரிய விக்னேஸ்,

தங்களது 17.06.2017 திகதியிடப்பட்ட கடிதத்திற்கு நன்றி.

எமக்கு முன்னால் உள்ள பிரச்சினையை மட்டுமே நான் கையாளுவேன். வுpசாரணைக் குழுவினால் குற்றவாளிகளாகக் காணப்படாத இரண்டு அமைச்சர்களுக்கும் எதிரான தண்டனைச் செயற்பாடு நியாயப்படுத்தக் கூடியதா என்பதே அது. இரண்டு அமைச்சர்களுக்கும் எதிராக, அவர்கள் குற்றவாளிகளாகக் காணப்படாதபோதிலும் நீங்கள் மேற்கொண்ட தண்டனை நடவடிக்கையே தற்போதைய குழப்பங்கள் எழக் காரணமாகியுள்ளது.

உங்களைச் சந்தித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூன்று கட்சித் தலைவர்களினதும் ஆலோசனைக்கு அமைவாக, ஏதேனும் விசாரணையின்போது இரண்டு அமைச்சர்களினதும் நடத்தை தொடர்பாக நான் ஓர் உத்தரவாதத்தைத் தந்தால், குறித்த அமைச்சர்கள் இருவர் தொடர்பான திருத்த நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்ற எனது கருத்தை, கட்சித் தலைவர்களும் ஆதரிப்பார்கள் என்ற ஆலோசனையைக் கூறியுள்ளீர்கள்.

விசாரணை தொடர்பாக இரண்டு அமைச்சர்களினதும் நடத்தையையிட்டு நான் உத்தரவாதமளிக்க வேண்டுமென்று எவ்வாறு ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதை என்னால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. அத்தகைய உத்தரவாதமொன்றை நிச்சயமாக நான் தரப்போவதில்லை. நான் ஏற்கெனவே தெரிவித்திருந்தபடி இயற்கை நீதிக் கோட்பாடுகளுக்கு மாறான தங்களுடைய நடவடிக்கையின் தொடர்ச்சியாக மாகாண சபையில் ஏற்பட்டுள்ள குழப்பநிலைமையைச் சீர்செய்வதற்காகவே நான் எனது ஒத்துழைப்பை நல்க முயற்சிக்கின்றேன். எனினும், ஒரு சட்டரீதியான, சுதந்திரமான விசாரணைக்குத் தடைகள் எதனையும் ஏற்படுத்தக்கூடாது என நான் குறித்த இரு அமைச்சர்களுக்கும் நிச்சயமாக ஆலோசனை கூறுவேன்.

இந்த விடயம் மேலும் தாமதப்படுத்தக் கூடியதென நான் கருதவில்லை. ஆதலால் தாங்கள் தாமதமின்றிச் செயற்பட வேண்டும்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் செயற்பாடுகளில் எனது செல்வாக்கைச் செலுத்த வேண்டிய தேவையுள்ளதாகத் தாங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தற்போதைய தலைவராக திரு.மாவை சேனாதிராஜா அவர்களும், தற்போதைய செயலாளர் நாயகமாக

திரு.கே.துரைராஜசிங்கம் அவர்களும் உள்ளனர். இ.த.அ.கட்சியின் மத்திய செயற்குழு ஒழுங்காகக் கூடுகின்றது. நான் இ.த.அ.கட்சியின் ஒரு சிரேஸ்ட உறுப்பினர் என்பதோடு, ஒரு காலத்தில் அதன் தலைவராகவும் இருந்தேன். தந்தை செல்வநாயகம் அவர்கள் தலைமைதாங்கிய இலங்கைத் தமிழரசுக் கட்சியும், தமிழர் விடுதலைக் கூட்டணியுமே எப்பொழுதும் எனக்கு உரித்தான அரசியல் இயக்கங்களாகும்.

வடக்கு மாகாணத்துக்கான முதலமைச்சர் வேட்பாளராகத் தங்களைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்து அதனைத் தங்களுக்குத் தெரிவித்தவேளையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எல்லாத் தலைவர்களின் முன்பாகவும் திரு.மாவை சேனாதிராஜாவிடம் நீங்கள் கூறினீர்கள், வடமாகாண சபையின் நிர்வாகத்தை நடாத்திச் செல்வதில் அவரது வழிகாட்டலும் அரசியல் ஆலோசனைகளும் உங்களுக்குத் தேவைப்படும் என்பதாக. இது அவ்வாறே நிறைவேற்றப்பட்டதா என்பதைச் சிலவேளை நீங்கள் உங்களையே கேட்டுக் கொள்ளலாம். திரு.மாவை சேனாதிராஜா அவர்கள் எமது மக்களுக்காகவும் கட்சிக்காகவும் பல தியாகங்களைச் செய்த, அதிக துயரங்களை அனுபவித்த ஒரு தலைவராவார். இத்தகைய பெறுமதிவாய்ந்தவர்கள் ஓரங்கட்டப்படக் கூடாது.

எவ்வாறாயினும், இ.த.அ.கட்சியின் செயற்பாடுகளில் எனது சாதகமான செல்வாக்கைப் பிரயோகிக்க முயலுவேன் என்ற உத்தரவாதத்தை உங்களுக்குத் தருகின்றேன்.

தங்களால் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ள திருத்த நடவடிக்கைகள் தாமதியாது எடுக்கப்பட வேண்டும்.

உண்மையுள்ள,

இரா.சம்பந்தன்
தலைவர்,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

http://globaltamilnews.net/archives/30224

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு அமைச்சர்களுக்கும் எதிராக, அவர்கள் குற்றவாளிகளாகக் காணப்படாதபோதிலும் நீங்கள் மேற்கொண்ட தண்டனை நடவடிக்கையே தற்போதைய குழப்பங்கள் எழக் காரணமாகியுள்ளது.

இதைத் தண்டனையென்று ஏன் எண்ணவேண்டும். இது விசாரணைக்குழு வழங்கிய அறிக்கையின் அடிப்படையில் முதலமைச்சர் எடுத்த ஒரு திருத்த நடவடிக்கை. குற்றம் நிகழ்வதுபற்றி ஊர்ஜிதப்படுத்தப்பட்ட தகவல் கிடைத்தவுடன் முதலில் செய்யவேண்டிய நடவடிக்கை குற்றம் தொடர்ந்து செய்யப்படுவதை நிறுத்துவது. அதன் பின்னர்தான் குற்றவாளிகளை இனங்கண்டு தண்டிப்பது. இப்போது முதல் கட்டத்தில்தான் மாகாணசபையின் நடவடிக்கைகள் உள்ளன.
அடுத்து கணக்காய்வு செய்து குற்றங்களை நிருபிக்கலாம் என்ற வாதம் ஓரளவுக்கு சரியெனினும் அது அடுத்த கட்டத்ததில்தான் வரும். இது போக கணக்காய்வின் மூலம் இலஞ்சஊழல் உட்பட சில பணமோசடிகளை நிரூபிக்க முடியாது.  உதாரணமாக பண மோசடிகுற்றஞ்சாட்டப்பட்டவர் ஏற்கனவே கணக்குவைக்கப்பட்டுள்ள பணத்தை திருடும் சந்தர்ப்பம் மிகமிக குறைவு. மாறாக பணப்பட்டுவாடாக்களை கணக்குவைக்காமல் விடுவதும் பின்னர் பணத்தை வேறு வழிகளுக்கு திருப்பி அல்லது தனது பினாமிகளின் வழியாக பட்டுவாடா செய்து பணம் கையாடுவதும் மிகச்சாதாரணமாக நிகழக்கூடிய பணமேசடிகள். இவற்றைக்கண்டுபிடிக்க அவகாசம் தேவை.

Edited by vanangaamudi

  • தொடங்கியவர்

உத்­த­ர­வாதம் தரமாட்டேன் : விக்­கி­னேஸ்­வ­ர­னுக்­கான பதில் கடி­தத்தில் திட்­ட­வட்­ட­மாக அறி­வித்தார் சம்­பந்தன்

02-e54cd778fc52b95895c45fa81bc96d4288cb0677.jpg

 

(ஆர்.ராம்)

விசா­ரணை தொடர்­பாக இரண்டு அமைச்­சர்­க­ளி­னதும் நடத்தை குறித்து நான் உத்­த­ர­வா­த­ம­ளிக்க வேண்­டு­மென்று எவ்­வாறு உங்­க­ளுக்கு ஆலோ­சனை தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது என்­பதை என்னால் விளங்கிக் கொள்ள

முடி­ய­வில்லை. அத்­த­கைய உத்­த­ர வா­த­மொன்றை நிச்­ச­ய­மாக நான் தரப்போ­வ­தில்லை என எதிர்க்­கட்­சித்­த­லை­வரும் தமிழ்த்தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் திட்­ட­வட்­ட­மாக வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வ­ர­னுக்கு அறி­வித்­துள்ளார். 

இயற்கை நீதிக் கோட்­பா­டு­க­ளுக்கு மாறான தங்­க­ளு­டைய நட­வ­டிக்­கையின் தொடர்ச்­சி­யாக மாகாண சபையில் ஏற்­பட்­டுள்ள குழப்­ப ­நி­லைமையைச் சீர்­செய்­வ­தற்­கா­கவே நான் எனது ஒத்­து­ழைப்பை நல்க முயற்­சிக்­கின்றேன் எனக் குறிப்­பிட்­டுள்ள சம்­பந்தன்

 ஒரு சட்­ட­ரீ­தி­யான, சுதந்­தி­ர­மான விசா­ர­ணைக்குத் தடைகள் எத­னையும் ஏற்­ப­டுத்­தக்­கூ­டாது என நான் குறித்த இரு அமைச்­சர்­க­ளுக்கும் நிச்­ச­ய­மாக ஆலோ­சனை கூறுவேன் எனவும் குறிப்­பிட்­டுள்ளார்.

நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை எதிர்க்­கட்­சித்­த­லை­வரும், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான சம்­பந்தன் வடக்கு முத­ல­மைச்சர் விக்­கி­னேஸ்­வ­ர­னுக்கு அனுப்­பி­யுள்ள கடி­தத்­தி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி்­விக்­கப்­பட்­டுள்­ளது.

ஏற்­க­னவே வட­மா­காண சபையில் எழுந்­துள்ள நெருக்­கடி நிலை­மை­களை அடுத்து நேற்று முன்­தினம் காலையில் வடக்கு முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னெஸ்­வ­ர­னுக்கு எதிர்க்­கட்­சித்­த­லை­வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வரும் சம்­பந்தன் கடி­த­மொன்றை அனுப்­பி­யி­ருந்தார்.

அமைச்­சர்­க­ளான ப.சத்­தி­ய­லிங்கம், பா.டெனிஸ்­வரன் ஆகியோர் மீது விசா­ரணை தொடரும் அது­வ­ரையில் அவர்­க­ளுக்கு கட்­டாய விடுப்பு வழங்­கப்­படும் என்ற தீர்ப்பு அறி­விப்பை திருத்­த­வதன் மூலம் இந்த நெருக்­கடி நிலை­மைகள் சீராகும் எனக் கூறப்­பட்­டி­ருந்­தது. ஏனினும் நேற்று முன்­தினம் மாலையில் முத­ல­மைச்சர் இல்­லத்தில் கூட்­ட­மைப்பின் பங்­கா­ளிக்­கட்­சி­க­ளான ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட், ரெலோ ஆகிய கட்­சி­களின் தலை­வர்கள் மற்றும் சில மாகாண சபை உறுப்­பி­னர்கள் முத­ல­மைச்சர் விக்­கி­னேஸ்­வ­ரனைச் சந்­தித்து கலந்­து­ரை­யா­டி­யி­ருந்­தனர்.

அத­னை­ய­டுத்து சம்­பந்­தனின் கடி­தத்­திற்கு பதில்­க­டி­த­மொன்றை நேற்று முன்­தினம் இரவு 9 மணி­ய­ளிவில் முத­ல­மைச்சர் அனுப்பி வைத்­தி­ருந்தார். அதில் இரு அமைச்­சர்கள் விசா­ர­ணை­களில் தலை­யீடு செய்­ய­மாட்­டார்கள் என்ற உத்­த­ர­வாதம் அளிக்­கப்­படும் என்றால் குறித்த இரு அமைச்­சர்­களும் கையெ­ழுத்­தூ­டாக தனக்கு உத்­த­ர­வாதம் அளிக்க வேண்டும் என்ற நிபந்­த­னையை மீளப்­ப­ரி­சீ­லப்­ப­தற்கு தயா­ர­க­வுள்ளேன் என்ற தொனிப்­பட விட­யங்­களை குறிப்­பிட்­டி­ருந்தார்.

இத­னை­ய­டுத்தே நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை எதிர்க்­கட்­சித்­த­லை­வரும், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான சம்­பந்தன் அதற்குப் பதில் கடி­த­மொன்றை விக்­கி­னேஸ்­வ­ர­னுக்கு அனுப்­பி­யி­ருந்தார்.

அதில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

எமக்கு முன்னால் உள்ள பிரச்­சி­னையை மட்­டுமே நான் கையா­ளுவேன். விசா­ரணைக் குழு­வினால் குற்­ற­வா­ளி­க­ளாகக் காணப்­ப­டாத இரண்டு அமைச்­சர்­க­ளுக்கும் எதி­ரான தண்­டனைச் செயற்­பாடு நியா­யப்­ப­டுத்தக் கூடி­யதா என்­பதே அது­வாகும். இரண்டு அமைச்­சர்­க­ளுக்கும் எதி­ராக, அவர்கள் குற்­ற­வா­ளி­க­ளாகக் காணப்­ப­டா­த­போ­திலும் நீங்கள் மேற்­கொண்ட தண்­டனை நட­வ­டிக்­கையே தற்­போ­தைய குழப்­பங்கள் எழக் கார­ண­மா­கி­யுள்­ளது.

உங்­களைச் சந்­தித்த தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் மூன்று கட்சித் தலை­வர்­க­ளி­னதும் ஆலோ­ச­னைக்கு அமை­வாக, ஏதேனும் விசா­ர­ணை­யின்­போது இரண்டு அமைச்­சர்­க­ளி­னதும் நடத்தை தொடர்­பாக நான் ஓர் உத்­த­ர­வா­தத்தைத் தந்தால், குறித்த அமைச்­சர்கள் இருவர் தொடர்­பான திருத்த நட­வ­டிக்­கையை எடுக்க வேண்டும் என்ற எனது கருத்தை, கட்சித் தலை­வர்­களும் ஆத­ரிப்­பார்கள் என்ற ஆலோ­ச­னையைக் கூறி­யுள்­ளீர்கள்.

விசா­ரணை தொடர்­பாக இரண்டு அமைச்­சர்­க­ளி­னதும் நடத்­தை­யை­யிட்டு நான் உத்­த­ர­வா­த­ம­ளிக்க வேண்­டு­மென்று எவ்­வாறு ஆலோ­சனை தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது என்­பதை என்னால் விளங்கிக் கொள்ள முடி­ய­வில்லை. அத்­த­கைய உத்­த­ர­வா­த­மொன்றை நிச்­ச­ய­மாக நான் தரப்­போ­வ­தில்லை. நான் ஏற்­கெ­னவே தெரி­வித்­தி­ருந்­த­படி இயற்கை நீதிக் கோட்­பா­டு­க­ளுக்கு மாறான தங்­க­ளு­டைய நட­வ­டிக்­கையின் தொடர்ச்­சி­யாக மாகாண சபையில் ஏற்­பட்­டுள்ள குழப்­ப­நி­லை­மையைச் சீர்­செய்­வ­தற்­கா­கவே நான் எனது ஒத்­து­ழைப்பை நல்க முயற்­சிக்­கின்றேன். எனினும், ஒரு சட்­ட­ரீ­தி­யான, சுதந்­தி­ர­மான விசா­ர­ணைக்குத் தடைகள் எத­னையும் ஏற்­ப­டுத்­தக்­கூ­டாது என நான் குறித்த இரு அமைச்­சர்­க­ளுக்கும் நிச்­ச­ய­மாக ஆலோ­சனை கூறுவேன்.

இந்த விடயம் மேலும் தாம­தப்­ப­டுத்தக் கூடி­ய­தென நான் கரு­த­வில்லை. ஆதலால் தாங்கள் தாம­த­மின்றிச் செயற்­பட வேண்டும். இலங்கைத் தமி­ழ­ரசுக் கட்­சியின் செயற்­பா­டு­களில் எனது செல்­வாக்கைச் செலுத்த வேண்­டிய தேவை­யுள்­ள­தாகத் தாங்கள் குறிப்­பிட்­டுள்­ளீர்கள். இலங்கைத் தமி­ழ­ரசுக் கட்­சியின் தற்­போ­தைய தலை­வ­ராக மாவை.சேனா­தி­ரா­ஜாவும் தற்­போ­தைய செய­லாளர் நாய­க­மாக கே.துரை­ரா­ஜ­சிங்­கமும் உள்­ளனர். இலங்கை தமி­ழ­ரசுக் கட்­சியின் மத்­திய செயற்­குழு ஒழுங்­காகக் கூடு­கின்­றது.

நான் இலங்கை தமி­ழ­ரசுக் கட்­சியின் ஒரு சிரேஷ்ட உறுப்­பினர் என்­ப­தோடு, ஒரு காலத்தில் அதன் தலை­வ­ரா­கவும் இருந்தேன். தந்தை செல்­வ­நா­யகம் தலை­மை­தாங்­கிய இலங்கைத் தமி­ழ­ரசுக் கட்­சியும், தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணி­யுமே எப்­பொ­ழுதும் எனக்கு உரித்­தான அர­சியல் இயக்­கங்­க­ளாகும்.

வட மாகா­ணத்­துக்­கான முத­ல­மைச்சர் வேட்­பா­ள­ராகத் தங்­களைத் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு தீர்­மா­னித்து அதனைத் தங்­க­ளுக்குத் தெரி­வித்­த­வே­ளையில், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் எல்லாத் தலை­வர்­களின் முன்­பா­கவும் மாவை சேனா­தி­ரா­ஜா­விடம் நீங்கள் ஒரு விடயத்தை கூறினீர்கள். வடமாகாண சபையின் நிர்வாகத்தை நடாத்திச் செல்வதில் அவரது வழிகாட்டலும் அரசியல் ஆலோசனைகளும் உங்களுக்குத் தேவைப்படும் என்பதாக நீங்கள் கூறினீர்கள்.

இது அவ்வாறே நிறைவேற்றப்பட்டதா என்பதைச் சிலவேளை நீங்கள் உங்களையே கேட்டுக் கொள்ளலாம். மாவை.சேனாதிராஜா எமது மக்களுக்காகவும் கட்சிக்காகவும் பல தியாகங்களைச் செய்த, அதிக துயரங்களை அனுபவித்த ஒரு தலைவராவார். இத்தகைய பெறுமதிவாய்ந்தவர்கள் ஓரங்கட்டப்படக் கூடாது.

எவ்வாறாயினும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் செயற்பாடுகளில் எனது சாதகமான செல்வாக்கைப் பிரயோகிக்க முயலுவேன் என்ற உத்தரவாதத்தை உங்களுக்குத் தருகின்றேன். தங்களால் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ள திருத்த நடவடிக்கைகள் தாமதியாது எடுக்கப்பட வேண்டும். 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-06-19#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.