Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வட மாகாண கல்வி அமைச்சர் குருகுலராசா பதவி விலகினார் – நெருக்கடி தணிகிறது

Featured Replies

Gurukularaja

 

வடக்கு மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராசா இன்று மாலை பதவியில் இருந்து விலகும் கடிதத்தை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் கையளித்துள்ளார்.

இன்று மாலை 5.30 மணியளவில் முதலமைச்சரை அவரது இல்லத்தில் சந்தித்த கல்வி அமைச்சர் குருகுலராசா, பதவி விலகல் கடிதத்தை நேரில் கையளித்தார்.

கடந்த 14ஆம் திகதி இடம்பெற்ற வடக்கு மாகாண சபை அமர்வில் உரையாற்றி முதலமைச்சர் விக்னேஸ்வரன், விசாரணைக்குழுவினால் குற்றம்சாட்டப்பட்ட கல்வி அமைச்சர் குருகுலராசாவையும், விவசாய அமைச்சர் ஐங்கரநேசனையும் தாமகவே முன்வந்து தமது பதவிகளைத் தியாகம் செய்யுமாறு கோரியிருந்தார்.

இதற்கமைய, விவசாய அமைச்சர்  ஐங்கரநேசன் ஏற்கனவே தமது பதவியை விட்டு விலகியிருந்தார். எனினும், கல்வி அமைச்சர் குருகுலராசா தமது பதவி விலகல் கடிதத்தை கையளிக்கவில்லை.

முதலமைச்சருக்கு எதிரான நகர்வுகளை கைவிட தமிழ் அரசுக் கட்சியினர் முடிவு செய்துள்ள நிலையில் இன்று அவர் தமது பதவி விலகல் கடிதத்தை கையளித்துள்ளார்.

அந்தக் கடிதத்தில், தமக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளதுடன், இதுகுறித்து மேல் விசாரணைகளை நடத்தி, குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்க தமக்கு வாய்ப்பளிக்குமாறும் குருகுலராசா கோரியுள்ளார்.

http://www.puthinappalakai.net/2017/06/20/news/24066

  • தொடங்கியவர்

தான் உடனடியாக பதவி விலகுவதாக கூறி அனைவரையும் ஏமாற்றிய குருகுலராஜா இறுதியில் பதவி விளக்கியுள்ளார்.

கபட நாடகமாடிய பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் சதித்திட்டங்கள் தோல்வியடைந்த நிலையில் குருகுலராஜாவுக்கு வேறு மார்க்கங்கள் இருக்கவில்லை!

  • தொடங்கியவர்

இராஜினாமா செய்தார் கல்வி அமைச்சர்

வடமாகாண கல்வி அமைச்சர் குருகுலராசா தனது இராஜினாமா கடிதத்தை முதலமைச்சரிடம் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று மாலை 5.30 மணியளவில் முதலமைச்சரின் வாசஸ்தலத்தில் வைத்து தனது இராஜினாமா கடிதத்தை அவர் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஊழல் மற்றும் மோசடி குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியிருந்த வடமாகாண கல்வி அமைச்சரை தாமாக முன்வந்து பதவி விலகுமாறு முதலமைச்சர் அண்மையில் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/21081

  • தொடங்கியவர்

இராஜினாமா செய்தார் குருகுலராஜா
 

வடமாகாணக் கல்வி அமைச்சர் குருகுலராசா, தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதுடன் இராஜினாமா கடிதத்தை, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரினிடம் கையளித்துள்ளார்.

முதலமைச்சரின் வாசஸ்தலத்தில் வைத்து, இராஜினாமா செய்தார் குருகுலராஜா இன்று மாலை 5.30 மணியளவில், தனது இராஜினாமா கடிதத்தை, அவர் கையளித்துள்ளார்.

ஊழல் மற்றும் மோசடி குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியிருந்த வடமாகாண கல்வி அமைச்சரை தாமாக முன்வந்து பதவி விலகுமாறு, முதலமைச்சர் அண்மையில் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது. வடமாகாண கல்வி அமைச்சர் குருகுலராசா, முதலமைச்சருக்கு கையளித்துள்ள இராஜினாமா கடிதத்தில் மேலும் கூறியுள்ளதாவது,

“கடந்த 2016.06.14 இல் நடைபெற்ற வடக்கு மாகாண சபை அமர்வில், தங்களால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவின் அறிக்கையில், குற்றம் சுமத்தப்பட்ட என்னையும் கௌரவ விவசாய அமைச்சராக பதவி வகித்த ஐங்கரநேசன் அமைச்சரையும்,  தாமாகவே பதிவியிலிருந்து விளகுமாறு கோரியிருந்தீர்கள்.

இயன்றவரை எனது இராஜினாமாக் கடிதத்தை தங்களுக்கு வழங்க முடியாததையிட்டு மனம் வருந்துகின்றேன். அதேவேளை, என்மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் யாவும் திட்டமிட்டு செய்யப்பட்டவை என்பதுடன், அதற்கு, என்னை எவ்விதத்திலும் பொறுப்பாக்க முடியாது என்பதை உறுதியாக நம்புகின்றேன்.

'இதுவரை எனது இராஜினாமாக் கடிதத்தை  தங்களுக்கு வழங்க முடியாததையிட்டு, மனம் வருந்துகிறேன். அதேவேளை, என் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் யாவும் திட்டமிட்டு செய்யப்பட்டவை என்பதுடன், அதற்கு என்னை எவ்விதத்திலும்  பொறுப்பாக முடியாது என்பதை உறுதியாக நம்புகிறேன்.

என்னை, மாகாண சபை உறுப்பினராக தெரிவு செய்த மக்களுக்கும் அமைச்சராக தெரிவு செய்த தங்களுக்கும் நான் ஒருபோதும் துரோகம் செய்ய விரும்பவில்லை.  என்மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் குற்றமற்றவை என, நான் நிரூபிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருக்க வேண்டும். எனது தன்னிலை விளக்கத்தினூடாக நான் குற்றமற்றவர் என்பதை, நன்றாகவே ஆதாரங்களுடன் விளக்கியுள்ளேன். தாங்கள் என்னுடைய இந்த தன்னிலை விளக்கம்  படித்திருக்கலாம் அல்லது மேலெழுந்தவாரியாக அதனை பார்வையிட்டிருக்கலாம். தன்னிலை விளக்கம் பத்திரிக்கைகளுக்கு வழங்கப்பட்டதன் பின்னர், பலரது கவனம் அவ் விளக்கத்தினால் ஈர்க்கப்பட்டு என் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் குற்றங்களல்ல என்பதை எனக்கு தொலைப்பேசி மூலம் தெரிவித்திருந்தனர்.

நான் இராஜினாமா கடிதத்தை சமர்ப்பிப்பதனால் என்மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் யாவற்றையும் ஏற்றுக்கொண்டது போல் ஆகிவிடும் என்கின்ற குற்ற உணர்வுடன், அமைச்சர் பதவியை துறக்கும் துர்ப்பாக்கிய நிலைக்கு  ஆளாகியுள்ளேன்

தாங்கள் சட்டரீதியான சுயாதீனமாக ஏற்றுக்கொள்ளக் கூடிய மேன்முறையீட்டுக்குழு ஒன்றை நியமிப்பதற்காக வாக்குறுதி அளித்துள்ளீர்கள்.  இதனடிப்படையிலேனும் எனது தன்னிலை விளக்கத்தினூடாக எனது குற்றத்தை கழுவி, எனது மாசின்மையை  எனக்கு ஆணை வழங்கிய மக்களுக்கு தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

சமரச முயற்சியினூடாக, தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் தளம்பல் நிலை ஒரு முடிவுக்கு கொண்டுவரப்பட்டிருக்கும் இந்த வேளையில், எனது கட்சியின் எதிர்கால நலனுக்காக சமரசத்தை ஏற்றுக்கொள்கிறோம் என்கிற முறையிலும் இன்றிலிருந்து வடக்கு மாகாண சபையின் கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை  மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் பதவியிலிருந்து விலகிக்கொள்கிறேன் என்பதை, தங்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று, அக்கடித்ததில் குறிப்பிட்டுள்ளார்.

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/இராஜினாமா-செய்தார்-குருகுலராஜா/150-199047

  • தொடங்கியவர்
8 hours ago, போல் said:

எனது கட்சியின் எதிர்கால நலனுக்காக சமரசத்தை ஏற்றுக்கொள்கிறோம்

வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுடன் இணைந்து பாடசாலை மாணவியரை பாலியல் துஷ்ப்பிரயோகத்துக்கு உட்படுத்திய உங்கள் நண்பர்களை பாதுகாத்த விடயத்தில் அதிகார துஷ்பிரயோக விடயத்தில் எந்த சமரசமும் கிடையாது!

தமிழரசுக் கட்சி ஊழல் முதலைகளின், பாடசாலை மாணவியரை பாலியல் துஷ்ப்பிரயோகத்துக்கு உட்படுத்துபவர்களுக்கு துணை போகிறவர்களின், தமிழின விரோதிகளின் கட்சி என்று தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.