Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Iraq and Washington

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[ஈராக்கும் வொஸிங்டனும்

கடந்த புதன்கிழமை பிரிடிஸ் தனது இராணுவத்தை கொஞ்சம் கொஞ்சமாக திருப்பி அழைக்க போவதாக அறிவித்துள்ள நிலையில். வாஸிங்டன் சற்று குழப்பமடைந்திருப்பது யாவரும் அறிந்ததே. இருப்பினும் அமெரிக்க மக்களை குளப்பமடையாமல் வைத்திருக்க சில ஆரோக்கியமற்ற செய்திகளையும் ஒரு நன்மைபயக்கக் கூடிய செய்திகளாக பரப்ப வேண்டிய சூழ்நிலை ஒன்றை காண கூடியதாக இருக்கின்றது. அதாவது ஈராக்கில் போர் தொடங்கியதற்கான இலக்கை பிரிட்டிஸ் படைகள் அடைந்துவி;ட்டது போலும் இங்கே இனி வரும் நாட்களில் தங்களால் பயிற்சி வழங்கபட்ட ஈராக்கிய படைகள் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்பது போன்ற தோற்ற செய்திகளே அவை. இருப்பினும் இந்த செய்தியே ஜோர்ஜ் புஸ் அவர்களுக்கு இன்னொரு முட்டுகட்டையாகவும் அமைந்துவிட்டதுதான் வேடிக்கையான விடயம். அதாவது கடந்த சில வாரங்களுக்க முன்புதான் ஜனாதிபதி புஸ் அவர்கள் ஈராக்கிற்கு மேலும் 21500 அமெரிக்க படைகளை அனுப்ப போவதாக அறிவித்துள்ளார் அதற்கு நாடு தளுவிய ரீதியில் பலத்த எதிர்புக் கிளம்பி இருந்தது. நாளுக்கு நாள் அங்கே அனாவசியமாக தமது படையினர் பலியாவதாகவும் அவர்களை உடனடியாகவே திருப்பி அழைக்க வேண்டுமெனவும் மக்கள் வலியுறுத்தி கொண்டிருந்த நிலையில் ஜனாதிபதி புஸ்ஸின் அந்த அறிவிப்பு நாட்டு மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. அது மட்டுமல்லாது சென்ற வாரம்தான் அதிக வாக்குகளுடன் கவுசில் இருக்கும் புஸ்சின் எதிர்கட்சியான ஜனநாயக கட்சி ஜனாதிபதி புஸ்ஸின் படைகளை அனுப்பும் செயலுக்கு எதிராக வக்களித்திருந்தது. எதிர்கட்சியினரான குடியரசுகட்சியினர் இந்த வாக்களிப்பை ‘இது அல்கெய்;தா தீவிரவாதிகளின் செயற்பாட்டுக்கான செய்தியாகவே தாம் பார்ப்பதாக’ மறுப்பு தெரிவித்து பதில் கூறியுள்ளனர். எது எப்படி இருப்பினும் ஈராக்கில் தோல்வியை நேரடியாக ஒத்துக்கொள்ளாவிடினும் மறைமுகமாக தோற்றுப்போய் இருப்பதாகவே தெரிகின்றது. ஈராக் மீது போர் தொடங்கிய நாடகளில் இராசாயன ஆயுதங்களை சதாம் உகெசைன் வைத்திருப்பதாகவும் தம்மிடம் போதிய ஆதாரமிருப்பதாகவும் வாஸிங்டன் கூறிவந்தது யாபரும் அறிந்ததே. இருப்பினும் இதுவரையில் எதும் அங்கே கிடைக்காதது மட்டுமல்ல ஜனாதிபதி புஸ் கூட தான் கூறியது பொய்யென்றும் அதற்கு மன்னிப்பும் கோரியுள்ளார். ஆக ஈராக் மீதான போர் என்ன சும்மா பொழுதுபோக்கிற்காக தொடங்கபட்டதா? போர் தொடங்கிய நாட்களில் உற்ற நண்பன் போல் உதவிக்கு சென்ற பிரிட்டிஸ் படைகள் ஏன் திரும்புவது எனும் முடிவை ஜனாதிபதி புஸ்ஸிற்கு மிகவும் நெருக்கடியான நேரத்தில் அறிவித்துள்ளன? எல்லாமே எண்ணை!

ஆப்கானிஸ்தானில் ஈட்டிய பாரிய வெற்றியே புஸ்ஸிற்கு ஈராக்கிற்குள்ளும் காலைவிட ஆசையை துண்டியது. ஆப்கானிஸ்தானில் எல்லாமே புஸ் எதிர்பார்த்தது போல சாதகமாகவே முடிந்தது. அதாவது தமக்கு சாதகமான நம்பிக்கையான அரசொன்றை அமைப்பது அதன் பின்பு அதை சுற்றியுள்ள நாடுகளின் பொருளாதாரங்களைளும் சேர்த்து அள்ளுவது. அதைவிட பெரிய திட்மொன்றை பலகாலமாகவே அமெரிக்கா தீட்டி வந்தது இது தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கட்டுபாட்டில் வைத்திருந்த போதே கிளின்டன் ஜனாதிபதியாக இருந்த நாட்களில் தலிபான்களை வாஸிங்டனுக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தது. அதாவது ஆப்கானிஸ்தானின் அயல்நாடான உசெபெகிஸ்தானில் இருந்து ஆப்கானிஸ்தானுடாக கடல் வரைக்கும் குழாய் அமைத்து அதன் முலம் உசெபெகிஸ்தான் எண்ணையை கப்பல்களில் ஏற்றுவது. அதனால் பல கோடி அமெரிக்க டாலர்களை சேமிக்கலாமென்பதுதான் அத் திட்டம். பழம் நழுவி பாலில் விழுந்தது போல் 2001-09-11 ல் அல்கெய்தா அமெரிக்கா மீது தொடுத்த தாக்குதல் ஏற்கனவே எண்ணை வியாபாரத்தில் பல போடி டாலர்களை கண்ட ஜோர்ஜ்புஸ்ஸிற்கு சாதகமானது. அல்கெய்த்தாவுடன் சேர்த்து அடைக்கலம் கொடுத்த தலிபான்களையும் சேர்த்து விரட்டிவிட்டு தனக்கு நம்பிக்கையானவர்களின் வரிசையில் தனது சொந் நிறுவனத்திலேயே வேலைபார்த்த கமீட் கர்ஸாவை நாட்டின் அதிபாரகாவும் ஆக்கிவிட்டதனால் எண்ணை வியாபாரம் ஓகோ என ஓடியது. இதைத்தான் ஈராக்கிலும் செய்ய நினைத்தார் ஜோர்ஜ் புஸ் அவர்கள். சதாமை துக்கிவிட்டு எண்ணை கிணறுகளிற்கு சொந்தமானவர்களையும் தீவிரவாதியென போட்டு தள்ளிவிட்டு தனக்கு சாதகமானவர்களை எண்ணை கிணறுகளுக்கு உரிமையாளராய் ஆக்கிவிட்டு வியாபாரத்தை தொடங்கலாமென்றுதான் நினைத்தார். கூடி சென்ற பிரிட்டிஸ் படைகளும் எரிகின்ற வீட்டில் புடுங்கியது லாபமென எண்ணி தமக்கும் கொஞ்ச எண்ணை கிடைக்குமென எண்ணியே சென்றது ஆனால் கடந்த வருடங்களை திரும்மி பார்த்தால் அடிக்கடி ஜோர்ஜ் புஸ் அவர்கள் ஜனநாயகம் பற்றி பேசியது நினைவுக்கு வரலாம். அது ஏதோ எல்லாம் கண்ணியத்துடனும் ஜனநாயகத்துடனும் நடப்பது போன்ற கண்கட்டி வித்தையொன்று கூடிசென்ற நாடுகளுக்கு காட்டப்ட்ட நேரம் தான் அது. ஈராக்கில் ஆப்கானிஸ்தானில் எதிபார்த்தது நடந்தது போல் நடக்கவில்லை. மாறாக தனக்கு சாதகமானவர்களான ஸியாத் இனத்தவர்களை ஆட்சியில் இருத்தபோக சிறுபாண்மை இனத்தவரான சண்ணி இனத்தவர் போரில் குதித்தனர். நிலமை அமெரிக்க உளவாளிகளுக்கு சாதகமெனிலும் ஜோர்ஜ் புஸ்ஸின் தனிப்பட்ட எண்ணை வியாபரத்திற்கு ஆப்பு வைத்தது. நாளுக்கு நாள் தற்கொலை குண்டு தாக்குதல்கள் கடைகளுக்கு அத்திய அவசிய பொருட்களை வாங்க செல்வதென்றாலே சாக துணிந்தவர்கள்தான் போகலாம் எனும் நிலமை. இது இப்படியெனில் பெரும்பாண்மை ஸியாத் இனத்தவரும் அமெரிக்க படைகளின் வருகையே காரணம் என போர் கொடி துக்கியமை நிலமையை இன்னும் மோசமாக்கியது. முடிந்த அளவில் சின்ன் என்பிஸி போன்ற உலக தரத்திலான செய்தி நிறுவனங்களின் உதவியோடு ஈராக்கியர்கள் சுதந்திரமாக இருக்கிறார்கள் என்று படப்பிடிப்பு நடாத்தி செய்திகளை காட்டினாலும். குண்டு ஒலியின் அதிர்வுகளை நிறுத்த முடியாமல் போய்விட்டது. கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் அமெரிக்கபடைகளுக்கு சொந்தமான 5 உலங்குவானுர்திகள் சுட்டுவீழ்த்தப்பட்டன முடிந்த அளவில் இயந்திர கோளாறு என்றுதான் சொன்னாலும் எண்ணிக்கை கூடியதால் பென்ரகானே உத்தியோகபூர்வமாக கடைசியாக வீழ்ந்தது சுட்டு வீழ்த்தப்பட்டது என்று அறிவித்தது. ஆகவே எண்ணை வியாபாரம் செய்ய போனது உலக அளவில் முஸ்லிம்களையும் அமெரிக்காவிற்கு எதிரானவர்களாக்கிவிட்டுள்ளத

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.