Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேசிய இனங்களின் உரிமைப்போர்:இரட்டை வேடம் போடுகிறார் மஹிந்தர்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தேசிய இனங்களின் உரிமைப்போர்:

இரட்டை வேடம் போடுகிறார் மஹிந்தர்!

எண்பதுகளின் பிற்பகுதியிலும் தொண்ணூறுகளின் ஆரம்பத்திலும் தென்னிலங்கையில் அரச அடக்கு முறையினால் அப்பாவி மக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டபோது அதற்கு எதிராகத் துணிந்து குரல் கொடுத்தவர் அன்றைய நாடாளுமன்ற உறுப்பினரும் இன்றைய ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ. இதனால் மனித உரிமை வாதியாகத் தெற்கில் பெரிதும் மதிக்கப்பட்டவர். ஆனால் இன்று அவரது முழு அதிகாரத்தின் கீழ் அமைந்த அரசில்தான் அரச பயங்கரவாதம் மிக மோசமான மனித உரிமை மீறல்களில் ஈடுபடுகின்றது.

தாம் எதிர்க்கட்சித் தரப்பில் இருந்த போதுஇ உலகளாவிய ரீதியில் அடக்கப்பட்ட மக்களுக்காக ஒடுக்கப்பட்ட இனங்களுக்காக குரல் எழுப்பவும் மஹிந்தர் தவறவில்லை. குறிப்பாக விடுதலைக்காகப் போராடும் பலஸ்தீன மக்களுக்காக தமது முழு ஆதரவை வழங்குபவர் போல காட்டிக் கொண்டார் அவர். பலஸ்தீன இலங்கை நட்புறவுச் சங்கத்தின் தலைவராகக் கூட இருந்தவர்.

இப்போது கூடஇ தமது பிரதான அமைச்சராக இருந்த மங்கள சமரவீரவுடன் முரண்பட்டுஇ அமைச் சரவையிலிருந்து சமரவீரவைத் தூக்கியெறிந்தபோதும்இ அவர் மீது ஜனாதிபதி மஹிந்தர் தரப்பினர் சுட்டிக்காட்டிய முக்கிய குற்றச்சாட்டுகளில் ஒன்று பாலஸ்தீனம் பற்றியதே. பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் ஆக்கிரமிப்புத் தரப்புப் புரிந்துவரும் அத்துமீறல் நடவடிக்கைகளையும்இ அடாவடித் தாக்குதல்களையும் கண்டித்து பிரேரணை ஒன்று ஐ.நா. சபைக்கு வந்தது. அந்தப் பிரேரணை மீதான வாக்கெடுப்பின்போது ஐ.நாவுக்கான இலங்கைப் பிரதிநிதி சபையில் இருக்கவில்லை. அந்தப் பிரேரணைக்கு ஆதரவு தெரிவித்துப் பல நாடுகளும் வாக்களிப் பதை அமெரிக்கா விரும்பவில்லை என்று கூறப்படுகின்றது. அச்சமயம் இலங்கையின் வெளிவிவ கார அமைச்சராக இருந்த மங்கள சமரவீரஇ அமெரிக்காவின் அழுத்தத்திற்குப் பணிந்து ஐ.நாவுக்கான இலங்கைத் தூதரை வாக்கெடுப்புச் சமயம் சபையில் இருக்காமல் செய்துவிட்டார் என்றும்இ அதன் மூலம் பலஸ்தீன மக்களுக்கு அவர் துரோகம் இழைத்ததோடுஇ அதுவரை அந்த மக்களுக்காகக் குரல் எழுப்பிவந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நற்பெயரையும் இந்த நடவடிக்கையின் மூலம் மங்கள சமரவீர கெடுத்துவிட்டார் என்றும் மஹிந்தர் தரப்பில் குற்றம் சுமத்தப்படுகின்றது.

ஆனால்இ இலங்கையில் தேசிய விடுதலைக் காகப் போராடும் ஈழத்தமிழர்களை அரச பயங்கரவாதம் மூலம் ஆயுத முனையில் அடக்கிஇ ஒடுக்க முயலும் ஜனாதிபதி மஹிந்தர்இ சர்வதேச ரீதியில் தேசிய விடுதலைக்காகப் போராடும் பாலஸ் தீனம் போன்றவற்றின் போராளிகளுக்காகக் குரல் எழுப்புபவர் போலத் தம்மைக் காட்டிக்கொள்வது "சுத்தப் பம்மாத்து' என்று சுட்டிக்காட்டுகின்றார்இ கொழும்புஇ ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் அரசியல்இ விஞ்ஞான ஆய்வுப்பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் டெரன்ஸ் புரசிங்க.

அவர் குறிப்பிடும் சில விடயங்கள் இங்கு நோக்கற்பாலவை.

""உலக சரித்திரத்தைப் பின்னோக்கிப் பார்த்தால்இ பல்வேறு காலகட்டங்களில் தேசிய விடுதலைப் போராட்டங்களை முன்னெடுத்த சுதந்திரப் போராட்ட அமைப்புகளில் வன்முறை வடிவிலான ஆயுதக் கலாசாரம் ஒரு முக்கிய கருவியாகப் பயன்படுத்தப்பட்டதை நாம் காணலாம். அத்தகைய வழியை நாடுவது இயற்கையானது. தவிர்க்கமுடியாதது. தீவிரவாதம்இ ஆக சிறுபான்மை யினரால் மட்டும் பின்பற்றப்படுவது என அர்த்தம் கொள்வதும் தவறானது. பாதிப்புற்ற சமூகங்கள் மத்தியில் தலைதூக்கும் பிரச்சினைகளைத் தீர்த்துவைக்க அரச நிர்வாகம் தவறும் பட்சத்தில்இ அதற்கு எதிராக வன்முறை வெடிக்கின்றது என்பதை எவரும் மறுக்கமுடியாது. அத்தகையை வன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்காக அரசுத் தரப்புகளால் கட்டவிழ்த்துவிடப்படும் அராஜகங்களும் வன்முறைகளாகவே கருதப்படவேண்டும். அவற்றையும் நியாயப்படுத்திவிட முடியாது.

""உலகின் பல்வேறு நாடுகளில் தலைதூக்கிய பெரும்பாலான தேசிய விடுதலைப் போராட்டங்கள் இறுதியில் ஆயுதம் ஏந்திய போராட்டங்களாகவே மாற்றமடைந்தன. வியட்நாம் தேசியப் போராட்டம்இ சீனப் புரட்சிஇ அயர்லாந்துப் பிரச்சினை போன்றவை இதற்கு நல்ல உதாரணங்களாகும்.

""பலஸ்தீன விடுதலைப் போரட்டமும் இதுவரை பல ஆயிரம் உயிர்களைக் காவுகொண்டுள் ளது. ஆனால்இ அந்த விடுதலைப் போராட்ட அமைப்புக்குச் சார்பாகக் குரல் கொடுத்துவரும் தென்னிலங்கை அரசுக்கு விடுதலைப் புலிகளின் போராட்டம் வேப்பம் காயாகக் கசக்கின்றது. புலிகளும் பாலஸ்தீனர்களும் தமது விடுதலைப் போரட் டங்களைத் தத்தமது தேசியங்களின் பெயராலேயே அதன் விடுதலைக்காகவே தாங்கள் முன்னெடுக்கின்றார்கள் என்று கூறுகின்றனர். அந்தத் தேசியத் தனத்திற்கு எதிராகச் செயற்படும் தரப்புகள் அந்தத் தேசியம் பற்றிய நிலைப்பாட்டை ஏற்காத தரப்புகள் அந்த விடுதலைப் போராட்ட அமைப்பு களுக்கு எதிரான தரப்புகளே. அந்த வகையில் தமது இலட்சியத்திற்கு எதிராக இருக்கும் களைகளை அகற்றிவிடுவது அந்தப் போராட்ட அமைப்புகளின் போராட்ட தர்மமாகவும்இ நியாயமாகவும் அமைகின்றது. அத்தகைய போராட்ட அமைப்புகளின் சுபாவமும் அதுவேயாகும்'' என்று சுட்டிக்காட்டு கின்றார் விரிவுரையாளர் புரசிங்க.

ஒரே இலட்சியத்திற்காகஇ ஒரே இலக்குக்காகஇ ஒரே மார்க்கத்தில் போராடிவருகின்றனர் பலஸ்தீனியர்களும் ஈழத்தமிழர்களும். பலஸ்தீனியர் விடயத்தில் அவர்களுக்கு ஆதரவானவர்களாகத் தம்மை உலகுக்குக் காட்டி நடிப்பவர்கள்இ மறுபுறத்தில் ஈழத் தமிழர்களுக்கு எதிரிகளாக நடந்துகொள்வதும் ஈழத்தமிழரின் போராட்டத்தை அரசு பயங்கரவாதம் மூலம் நசுக்குவதில் மும்முரமாக நிற்பதும் அவர்களின் முழு இரட்டைவேடத்தை அம்பலப்படுத்துகின்றன.

இவ்விடயத்தில் "ஒரு கண்ணில் வெண்ணெய்; மறுகண்ணில் சுண்ணாம்பு' என்பதுபோல செயற்படுகின்றார் ஜனாதிபதி மஹிந்தர். அது இன்று உலகுக்கு முழு அளவில் அம்பலமாகிவருகின்றது.

http://www.uthayan.com/editor.html

Edited by கறுப்பி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.