Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

13 ஆவது திருத்தச்சட்டத்தில் இருந்து தீர்வு நோக்கி பயணிப்போம் – கர்தினால் பேராயர் மல்கம்

Featured Replies

13 ஆவது திருத்தச்சட்டத்தில் இருந்து தீர்வு நோக்கி பயணிப்போம் – கர்தினால் பேராயர் மல்கம்

malcolm-ranjith.jpg
இனப்பிரச்சினை தீர்வாக உருவாக்கப்பட்ட 13 ஆவது திருத்தச்சட்டத்தில் இருந்து நிரந்த அரசியல் தீர்வு நோக்கிச் செல்ல வேண்டும் என கத்தோலிக்க திருச்சபையின் கர்தினால் பேராயர் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். 1958ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தனிச் சிங்கள சட்டம் இன்று பல பிரச்சினைகளுக்கு காரணமாக அமைந்துவிட்டது என்றும் பேராயர் மல்கம் ரஞ்சித் குறிப்பிட்டார்.

இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் இடம்பெற்ற யாழ் சென் பற்றிக்ஸ் கல்லூரியின் பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றியபோது அவர் இவ்வாறு கூறினார்.

இல்லாததைப் பற்றி பேசுவதை விட இருக்கின்ற விடயம் ஒன்றில் ஆம்பித்து முன்நோக்கிச் செல்ல வேண்டும். சிலர் இல்லாததைப் பேசுகின்றனர். ஆகவே இருக்கின்ற 13 ஆவது திருத்தச்சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு தீர்வுக்கான வழியை தேட முடியும் என்று ஆயர் சுட்டிக்காட்டினார்.

1991ஆம் ஆண்டு யுத்தம் கடுமையாக இடம்பெற்றுக்கொண்டிருந்த காலத்தில் யாழ் மாவட்டம் கிள்நொச்சியுடன் துண்டிக்கப்பட்டிருந்த, முன்னாள் ஆயர் தியோகுப்ப்பிள்ளை ஆண்டகையின் பொன், வெள்ளி, பவழ விழாவில் கலந்துகொள்வதற்காக சேறும் சகதியும் நிறைந்த கொம்படிப் பாதையால் பல சிரமங்கள் மத்தியில் யாழ்ப்பாணத்திற்கு வந்ததாகவும் ஆயர் ஞாபகமூட்டினார்.

தமிழர்கள் தங்களை இரண்டாம் தர பிரஜைகளாக கருதும் நிலையை தனிச் சிங்களச் சட்டமே ஏற்படுத்தியது. ஆதனால்தான் யுத்தம் ஆரும்பமாகியது என்று கூறிய ஆயர் ஒற்றுமையை கட்டியெழுப்பக் கூடிய தீர்வை நோக்கி ஒன்றாக பயணிப்போம் என்று வலியுறுத்தினார்.

கத்தோலிக்க திருச்சபையின் பாடசாலைகள் மேலும் வளர்ச்சியடைய வேண்டும் என்று வலியுறுத்திய ஆயர் சென் பற்றிக் கல்லுரி கல்விமான்கள் பலரையும் சமூகப் பிரக்ஞையுடைய பலரையும் உருவாக்கியுள்ளது. இதையிட்டு  பெருமைப்படுவதாகவும் ஆயர் சொன்னார்.

https://globaltamilnews.net/archives/30761

  • தொடங்கியவர்

13 ஆவது திருத்தச்சட்டத்தில் இருந்து தீர்வை நோக்கி நாம் பயணிப்போம் : கர்தினால் மல்கம் ரஞ்சித் யாழில் தெரிவிப்பு

Published by Priyatharshan on 2017-06-24 09:56:59

 

இனப்­பி­ரச்­சினை தீர்­வாக உரு­வாக்­கப்­பட்ட 13ஆவது திருத்­தச்­சட்­டத்தில் இருந்து நிரந்த அர­சியல் தீர்வு நோக்கிச் செல்ல வேண்டும் என கத்­தோ­லிக்க திருச்­ச­பையின் கர்­தினால் பேராயர் மல்கம் ரஞ்சித் தெரி­வித்­துள்ளார். 

cardinal_malcolm_ranjith.jpg

1958ஆம் ஆண்டு உரு­வாக்­கப்­பட்ட தனிச் சிங்­களச் சட்டம் இன்று பல பிரச்­சி­னை­க­ளுக்கு கார­ண­மாக அமைந்­து­விட்­டது என்றும் பேராயர் மல்கம் ரஞ்சித் குறிப்­பிட்டார்.

யாழ்.சென்.பற்றிக்ஸ் கல்­லூ­ரியின் பரி­ச­ளிப்பு விழா நேற்று இடம்­பெற்­றது. இந்த நிகழ்வில் பிர­தம அதி­தி­யாகக் கலந்­து­கொண்டு உரை­யாற்­றி­ய­போதே அவர் இவ்­வாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் கூறு­கையில்;

இல்­லா­ததைப் பற்றி பேசு­வதை விட இருக்­கின்ற விடயம் ஒன்றில் ஆம்­பித்து முன்­நோக்கிச் செல்ல வேண்டும். சிலர் இல்­லா­ததைப் பேசு­கின்­றனர். ஆகவே இருக்­கின்ற 13 ஆவது திருத்­தச்­சட்­டத்தை அடிப்­ப­டை­யாகக் கொண்டு தீர்­வுக்­கான வழியை தேட முடியும் என்று ஆயர் சுட்­டிக்­காட்­டினார்.

1991ஆம் ஆண்டு யுத்தம் கடு­மை­யாக இடம்­பெற்­றுக்­கொண்­டி­ருந்த காலத்தில் யாழ்.மாவட்டம் கிளி­நொச்­சி­யுடன் துண்­டிக்­கப்­பட்­டி­ருந்த நிலையில், முன்னாள் ஆயர் தியோ­குப்­பிள்ளை ஆண்­ட­கையின் பொன், வெள்ளி, பவள விழாவில் கலந்­து­கொள்­வ­தற்­காக சேறும் சக­தியும் நிறைந்த கொம்­படிப் பாதையால் பல சிர­மங்களுக்கு மத்­தியில் யாழ்ப்­பா­ணத்­திற்கு வந்­த­தா­கவும் ஆயர் ஞாப­க­மூட்­டினார்.

தமி­ழர்கள் தங்­களை இரண்டாம் தர பிர­ஜை­க­ளாக கருதும் நிலையை தனிச் சிங்­களச் சட்­டமே ஏற்­ப­டுத்­தி­யது. அத­னால்தான் யுத்தம் ஆரம்­ப­மா­கி­யது என்று கூறிய ஆயர், ஒற்­று­மையை கட்­டி­யெ­ழுப்பக் கூடிய தீர்வை நோக்கி ஒன்­றாக பய­ணிப்போம் என்று வலி­யு­றுத்­தினார்.

கத்­தோ­லிக்க திருச்­ச­பையின் பாட­சா­லைகள் மேலும் வளர்ச்­சி­ய­டைய வேண்டும் என்று வலி­யு­றுத்­திய ஆயர் சென்.பற்றிக் கல்லூரி கல்விமான்கள் பலரையும் சமூகப் பிரக்ஞையுடைய பலரையும் உருவாக்கியுள்ளது. இதையிட்டு  பெருமைப்படுவதாகவும் தெரிவித் தார்.

http://www.virakesari.lk/article/21187

  • கருத்துக்கள உறவுகள்

ஆமேன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.