Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மங்களவை மீண்டும் அரசாங்கத்தில் இணைத்துக் கொள்ளும் சாத்தியம்?

Featured Replies

பதவி நீக்கப்பட்ட அமைச்சர்களில் ஒருவரான மங்கள சமரவீர மிக விரைவில் மீண்டும் அமைச்சுப் பதவியில் இணைந்து கொள்ளும் சாத்தியமிருப்பதாக அரசியல் வட்டாரங்கள் நம்பிக்கை வெளியிட்டன.

கடந்த இரு தினங்களாக அலரிமாளிகையில் நடைபெற்ற உத்தியோகப்பற்றற்ற கலந்துரையாடல்களின் போது இந்த விடயம் குறித்து ஆராயப்பட்டுள்ளது.

இதேவேளை, ஸ்ரீபதி சூரியாராச்சி மீதே அரச உயர்மட்டம் அதிகளவு விசனமுற்றிருப்பதாகவும் அறிய வருகிறது.

தொடர்ந்தும் ஜனாதிபதி மீது குற்றச்சாட்டுகளை சுமத்திவரும் ஸ்ரீபதியை சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து நீக்கிவிடும் சாத்தியமிருப்பதாகவும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

ஜனாதிபதியைப் போலவே அவரின் சகோதரர்களும் ஸ்ரீபதி மீது மிகுந்த ஆத்திரம் கொண்டிருப்பதாகவும் தங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவையென வெள்ளிக்கிழமை இரவு அலரிமாளிகையில் தன்னை சந்தித்துள்ள அமைச்சர்களிடமும் ஜனாதிபதியின் ஆலோசகர் பஷில் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இன்னும் சில தினங்கள் மங்கள சமரவீர மௌனம் காப்பாராயின் அவருக்கான பாதுகாப்பை மீண்டும் வழங்கவும் அதன் பின்னர் அவரிடமிருந்து பறிக்கப்பட்ட அமைச்சுப் பதவி மீண்டும் வழங்கும் சாத்தியமிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

எனினும், ஜனாதிபதியின் சீன விஜயத்தினையடுத்தே இது பற்றிய இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படுமெனவும் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மங்கள சமரவீர ஆற்றிய சேவைகளை ஜனாதிபதி கவனத்தில் கொண்டுள்ளதாகவும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்களிலிருந்து அறிய வருகிறது.

http://www.thinakkural.com/news/2007/2/25/...s_page22116.htm

மக்கள் விருப்பத்தை மீறி அரசில் இணையப்போவதில்லை என்கிறார் மங்கள

மக்களின் விருப்பத்தை மீறி மீண்டும் அரசாங்கத்தில் இணைந்து அமைச்சராக போவதில்லையென முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

மாத்தறையில் நேற்று சனிக்கிழமை மாலை நடைபெற்றுள்ள கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர அரசியலில் ஈடுபட்டு 18 வருடங்கள் நிறைவடைவதையிட்டே இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்களும் கலந்து கொண்டுள்ளனர்.

கூட்டம் ஆரம்பமாவதற்கு முன்னர் பதவி நீக்கப்பட்ட அமைச்சர்கள் இருவரும் கூட்டம் நடைபெற்றுள்ள மைதானத்திற்கு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டுள்ளனர். முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியுள்ளதாவது;

இராணுவம் மீறும் மனித உரிமைகள் குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்றேன். எனினும் சம்பந்தப்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இது நாட்டுக்கு பெரும் அபகீர்த்தியாகும்.

நாட்டுக்கும், மாத்தறை மாவட்ட மக்களுக்கும் சேவையாற்றவே நான் அரசியலுக்கு வந்துள்ளேன்.

மக்களின் விருப்பமின்றி ஒருபோதுமே அரசியலில் நீடிக்கப்போவதில்லை.

அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, மீண்டும் அமைச்சர் பதவியை பொறுப்பேற்றுக் கொண்டுள்ள அமைச்சர் அநுர பண்டார நாயக்கா போன்று நாம் செயற்படப்போவதில்லை.

பொதுமக்கள் அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சுப் பதவிகளைப்பெற வேண்டாமென்றே கூறுகின்றனர். இந்நிலையில் மக்களின் விருப்பத்தை மீறி மீண்டும் ஒருபோதுமே அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொள்ளப் போவதில்லை.

சுதந்திரக் கட்சியை எவரும் தவறாக வழிநடத்த அனுமதிக்கப்போவதில்லை.

ஜனாதிபதி, பஷில் ராஜபக்‌ஷவின் ஆலோசனை சுதந்திரக் கட்சிக்கு அவசியமேயில்லை.

தவறான பாதைகளை தேர்ந்தெடுப்பதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

மாத்தறை மாவட்ட மக்களுக்கு தொடர்ந்து சேவையாற்ற உறுதி பூண்டுள்ளேன். மக்களுக்கான எனது சேவைகள் தொடரும் என்றார்.

இதேவேளை இப்பொதுக் கூட்டத்தில் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பதவி நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சருமான சிறிபதி சூரியாராச்சியும் கலந்து கொண்டு உரையாற்றியுள்ளார்.

அவர் தனதுரையில் தெரிவித்ததாவது,

நாம் ஏற்கனவே வெளியிட்ட கருத்துகளிலும், கொள்கையிலும் உறுதியாகவுள்ளோம், மிகவிரைவில் உண்மைகள் வெளிப்படும். மக்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்துகொண்டு தொடர்ந்து சேவையாற்ற உறுதி பூண்டுள்ளோம்.

http://www.thinakkural.com/news/2007/2/25/...s_page22115.htm

மங்கள, ஸ்ரீபதி நான்கு சுவருக்குள் கருத்துகளை தெரிவித்திருக்க வேண்டும் - ஜயரட்ண

அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட மங்கள சமரவீர, ஸ்ரீபதி சூரியாராச்சி ஆகியோர் நான்கு சுவருக்குள் தமது கருத்துகளை கூறியிருந்தால் தற்போதைய பிரச்சினை விஸ்வரூபம் பெற்றிருக்காதென தெரிவித்த அரசாங்கத்தின் மூத்த அமைச்சர் டீ.எம்.ஜயரட்ண அவர்களிருவரும் கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஆற்றிய பங்களிப்புகளை மறந்து விட முடியாதெனவும் கூறினார்.

இது குறித்து அவர் மேலும் தகவல் தருகையில்;

பாராளுமன்றத்தில் அண்மையில் பதவி நீக்கப்பட்ட அமைச்சர்கள் இருவரையும் சந்தித்து கலந்துரையாடினேன். அவர்கள் என்னிடம் பல விடயங்களை கூறினார்கள் அவர்களுக்கு நானும் அறிவுரைகள் வழங்கினேன்.

எனினும், அரசியலில் சில விடயங்களை நான்கு சுவருக்குள் மாத்திரமே கூற வேண்டும். அவற்றை பகிரங்கப்படுத்தக் கூடாது. ஜனநாயக நாட்டில் ஜனநாயக கட்சிகளிடையே கருத்து வேறுபாடுகள் சகஜம் தான். சிக்கல்களை தீர்க்க கடினமான வார்த்தைப் பிரயோகங்கள் உதவப் போவதில்லை. அறிக்கைகளும் உதவ மாட்டாது.

பதவி நீக்கப்பட்ட அமைச்சர்களுடன் கலந்துரையாடிய விடயங்கள் அவர்களின் எதிர்பார்ப்புகள் வேதனைகள் குறித்து ஜனாதிபதியிடம் விளக்கிக் கூற காத்திருக்கிறேன்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவிடம் இது குறித்து எடுத்துக் கூற வாய்ப்புகள் இருந்தபோதும் ஜனாதிபதிக்கருகில் பலர் இருந்தமையால் அதனை நான் கூறவில்லை. அவரை தனிமையில் சந்தித்து பதவி நீக்கப்பட்ட அமைச்சர்களுடன் கலந்துரையாடிய விடயங்கள் குறித்து உரையாடுவதையே விரும்புகிறேன்.

சுதந்திரக் கட்சியினதும் நாட்டினதும் எதிர்கால நலன்கருதி அரசியல் பேதங்களை மறந்து கடுமையாக உழைக்க வேண்டும். தவறுகளை திருத்திக் கொள்வது அரசியல்வாதிகளுக்கு அவசியமான பண்பாகும். மக்களுக்கு சேவையாற்றவே அரசியலுக்கு நாம் வந்துள்ளோம். நிபந்தனைகளை மக்களின் நலனுக்காகவே நாம் விதிக்க வேண்டுமென்றார்.

http://www.thinakkural.com/news/2007/2/25/...s_page22107.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.