Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தீபவம்ஸ, மஹாவம்ஸ ஆய்வுகள் - தொடர்

Featured Replies

தொடர்1

தீபவம்ஸ, மஹாவம்ஸ ஆய்வுகள் -- 1

சிலப்பதிகாரம் காப்பியமும், தீபவம்ஸ, மஹாவம்ஸ நூல்களும்

“தமிழில் ஐம்பெரும் காப்பியங்கள் உண்டு என்று பெருமிதப்;படுகின்றோம். இவற்றைத் தமிழ்த்தாயின்; அணிகலன்கள் என்று கொள்கின்றோம். இவற்றுள் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள்; எனப் போற்;றப்படுகின்றன. சிலப்பதிகாரம் தலைசிறந்த காப்பியமாக, இலக்கியமாக அறிஞர்;களின் நெஞ்சை அள்ளுகின்றது. அது உலக மொழிகள் சிலவற்றில் மொழிபெயர்;க்கப்;பட்டுள்ளது@ உலக இலக்கியமாக ஏற்கப்பட்டுள்ளது. சிலப்பதிகாரம் பற்றி நடைபெற்ற மாநாடுகள் பல@ எழுந்த ஆய்வு நூல்கள், கட்டுரைகள் மிகப்பல.”

இவை, “ஈழத்துப் பண்டிதமணி” என்ற நூலினை அண்மைக்; காலத்தில் (2002 மே) எழுதியிருந்த பேராசிரியர் சு. சுசீந்திரராஜா அவர்கள், “பண்டிதமணியின் காப்பியக் காழ்ப்பு” என்ற கட்டுரையின் ஆரம்பத்தில் (பக்கம் - 114) கூறியிருந்தவையாகும்.

சிலப்பதிகாரம் காப்பியத்தையும், அதனை இயற்றியவர் எனக் கூறப்படும் இளங்கோவடிகளையும், பெரும்பான்மையான அறிஞர்களும், ஆராய்வாளர்களும், பேராசிரியர்களும், தமிழ் அரசியல்வாதிகளும் போற்றியுள்ளனர், இன்றும் போற்று கின்றனர். ஆனால், அவற்றைத் தூற்றுவார்களும் உளர். பெரியார் இராமசாமி அவர்கள், சிலப்பதிகாரம் பற்றிப் பின்;வருமாறு கூறியுள்ளார் (திருக்குறளும் பெரியாரும் - 1983):

“ சிலப்பதிகாரத்தைக் கூடப் புழுகுவார்கள். சுப்பிமணிய பாரதி என்ற பார்;ப்பனர் கூட ‘சிலப்பதிகாரம் என்ற மணி ஆரம் படைத்த தமிழ் நாடு’ என்று புகழ்ந்துள்ளார் என்று சொல்லுவார்கள். அதில் அறிவுக்கருத்துக்கள் என்ன இருக்கின்றன? அதில் மூடநம்பிக்கை வேதப் பார்பானுக்கு வேண்டிய எல்லாம் அதிகமிருக்கிறது. அதனால்தான் பார்ப்;பன பாரதி அதை மணி ஆரம் என்றார்.”

ஆனால், 1945ஆம் ஆண்டு செப்ரெம்பர்;; மாதம் 20ஆம் திகதி, அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பாரதிதாசனின் உருவப்படத்தைத் திறந்து வைத்துப் பேசிய பொழுது, அறிஞர் அண்ணா துரையவர்கள், சிலப்பதிகாரத்தையும்,

இளங்கோவடிகளையும், புகழ்;ந்து பேசியிருந்தார். அவரது இப்பேச்சானது “ஏ தாழ்ந்த தமிழகமே!” என்ற தலைப்பில் சிறுநூலாக வெளியிடப்பட்டிருந்தது. அதில்; அறிஞர் அண்ணா துரையவர்கள் சிலப்பதிகாரம் காப்பியத்திற்கும், அதனாசிரியன் எனக் கூறப் படும் இளங்கோவிற்கும் எவ்வளவு முக்கியத்துவத்தைக்கொடுத்தி

Edited by Prashanna

  • கருத்துக்கள உறவுகள்

பிரசானா இக் கட்டுரை தமிழ் சொசைட்டி இணையத்தில் படித்த ஞாபகம் அது உங்கள் சொந்த படைப்பா??????

இப்படி பெரிசா யாழ்களத்தில் எழுதினா யாழ்களத்தில் ஒருத்தரும் கண்டு கொள்ள மாட்டினம்,ஒரு பஞ்டயலக்கா விசயத்தை விடுங்கோ எல்லாரும் பார்ப்பீனம்.........இந்த தமிழ் சொசைட்டி இணையம் இப்போது தொடர்ந்து வருவதில்லை அதற்கு என்ன காரணம்.உங்களுக்கு தெறிந்தால் அறிய தரவும்.தொடர்ந்து இப்படியான இணைப்புகளை தரவும்.........

  • தொடங்கியவர்

பிரசானா இக் கட்டுரை தமிழ் சொசைட்டி இணையத்தில் படித்த ஞாபகம் அது உங்கள் சொந்த படைப்பா??????

இப்படி பெரிசா யாழ்களத்தில் எழுதினா யாழ்களத்தில் ஒருத்தரும் கண்டு கொள்ள மாட்டினம்,ஒரு பஞ்டயலக்கா விசயத்தை விடுங்கோ எல்லாரும் பார்ப்பீனம்.........இந்த தமிழ் சொசைட்டி இணையம் இப்போது தொடர்ந்து வருவதில்லை அதற்கு என்ன காரணம்.உங்களுக்கு தெறிந்தால் அறிய தரவும்.தொடர்ந்து இப்படியான இணைப்புகளை தரவும்.........

இது தமிழ்றீசேசில் இருந்து எடுத்தேன், இதைப்போல் 60 பக்கங்கள் உள்ளன

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.