Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

11 தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்ட விடயம்: முன்னாள் கடற்படை பேச்சாளருக்கு சிக்கல்

Featured Replies

11 தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்ட விடயம்: முன்னாள் கடற்படை பேச்சாளருக்கு சிக்கல்

 

11 தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்ட விடயம்: முன்னாள் கடற்படை பேச்சாளருக்கு சிக்கல்

 
 
2008ம் ஆண்டு 11 தமிழர்கள் கடத்திச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட விவகாரம் தொடர்பில், சந்தேகநபராக, முன்னாள் கடற்படைப் பேச்சாளர் ஒருவர் பெயரிடப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இது குறித்த விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும், இந்த வழக்கில் சந்தேகநபராக பெயரிடப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜராகாது தவித்து வரும், கடற்படையின் லுத்தினல் கமாண்டர் பிரசாத் ஹெட்டியாராச்சியை கைதுசெய்யுமாறு, கோட்டை நீதவான் லங்கா ஜெயரத்ன உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதேபோல், குறித்த சம்பவம் தொடர்பில், குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், கடற்படையின் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் ஐவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களது விளக்கமறியலையும் எதிர்வரும் 19ம் திகதி வரை தொடர்ந்தும் நீடிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

http://tamil.adaderana.lk/news.php?nid=93267

  • தொடங்கியவர்

வெள்ளவத்தையில் 5 இளைஞர் காணாமல் போன சம்பவத்துடன் தொடர்புடைய கடற்படை முன்னாள் பேச்சாளர் கைது

Captain-DKP-Dassanayaka.jpg
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

வெள்ளவத்தையில் ஐந்து தமிழ் இளைஞர்கள் காணாமல் போன சம்பவத்துடன் தொடர்புடைய கடற்படையின் முன்னாள் பேச்சாளர் ஒருவர் கைது செய்யப்பட உள்ளார். கடற்படையின் முன்னாள் பேச்சாளராக கடமையாற்றிய கப்டன் டி.கே.பீ. தசநாயக்கவே இவ்வாறு கைது செய்யப்பட உள்ளார்.

வெள்ளவத்தையில் ஐந்து தமிழ் இளைஞர்கள் காணாமல் போன சம்பவம் உள்ளிட்ட 11 பேர் காணாமல் போன சம்பவங்ங்கள் தொடர்பில் கப்டன் தசநாயக்க மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான விசாரணைகளுக்காக குற்ற விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறு தசநாயக்கவிற்கு நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டிருந்ததாகவும், தசநாயக்க விசாரணைப் பிரிவில் பிரசன்னமாகவில்லை எனவும் குற்ற விசாரணைப் பிரிவினர் கொழும்பு கோட்டே நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

வெள்ளவத்தை ஐந்து இளைஞர்கள் காணாமல் போன சம்பவம் தொடர்பில் நேற்று கொழும்பு கோட்டே நீதவான் நீதிமன்றில் நீதவான் லங்கா ஜயரட்ன முன்னிலையில் விசாரணை நடத்தப்பட்டது.

இந்த கடத்தல் சம்பவங்கள் தொடர்பில் ஏற்கனவே கடற்படைப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த ஆறு உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் விசாரணைகளின் போது கடற்படையின் முன்னாள் பேச்சாளருக்கு தொடர்பு இருக்கக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதனால் அவரை கைது செய்ய உள்ளதாக குற்ற விசாரணைப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை சட்ட மா அதிபரின் ஆலோசனை இன்றி குற்ற விசாரணைப் பிரிவினர் சந்தேகத்தின் பேரில் தமது கட்சிக்காரரை கைது செய்வது சட்டவிரோதமானது என தசநாயக்கவின் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

சட்ட மா அதிபர் திணைக்களத்துடன் கலந்தாலோசித்ததகாவும் விசாரணைகளின் மூலம் சம்பவத்துடன் தொடர்பு உண்டு என சந்தேகிக்கப்படும் நபரை கைது செய்வதில் சிக்கல்கள் கிடையாது எனவும் குற்ற விசாரணைப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட உள்ள கடற்படையின் முன்னாள் பேச்சாளர் தசாநாயக்க தற்போது வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

http://globaltamilnews.net/archives/32576

  • தொடங்கியவர்

கடற்படை முன்னாள் பேச்சாளர் தஸநாயக்க கைது செய்யப்படவுள்ள பிரதான சந்தேக நபர்

01-11c636e714071a7da5ea3018f145b438bea1395b.jpg

 

(எம்.எப்.எம்.பஸீர்)

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வைத்து 2008 ஆம் ஆண்டு 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்ட சம்பவத்துடன் கடற்படை சிறப்பு புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளரும் முன்னாள் ஊடகப் பேச்சாளருமான கெப்டன் டி.கே.பி. தஸநாயக்கவுக்கு நெருங்கிய தொடர்பிருக்கின்றது. அதனால் இந்த விவகாரத்தில் அவர் கைது செய்யப்பட வேண்டிய முக்கிய சந்தேக நபர் ஆவார்.

அவர் அறிந்தே இந்த கடத்தல்கள் உள்ளிட்ட சட்ட விரோத செயல்கள் இடம்பெற்றுள்ளன. அவரைக் கைது செய்ய நாம் முனைந்து, விசாரணைக்காக அழைத்த போது சுகயீனம் எனக் கூறி வெலிசறை கடற்படை வைத்தியசாலையில் சேர்ந்துள்ளார். எவ்வாறாயினும் அவரைக் கைது செய்து மன்றில் முன்னிலைப் படுத்துவோம் என்று குற்றப் புலனாய்வுப் பிரிவு நேற்று கோட்டை நீதிவானுக்கு சிறப்பு அறிக்கை ஊடாக அறிவித்தது.

கொழும்பு மற்றும் அதனை அண்­டிய புற நகர் பகு­தி­களில் இருந்து வெள்ளை வேனில் கடத்திச் செல்­லப்­பட்ட 5 மாணவர்கள் உள்­ளிட்ட 11 பேரின் கடத்தல் விவ­காரம் தொடர்­பி­லான வழக்கு கோட்டை நீதிவான் லங்கா ஜய­ரத்ன முன்­னி­லையில் நேற்று மீள விசாரணைக்கு வந்த போதே இந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டது.

அத்துடன் இந்த வழக்கில் மற்றொரு பிரதான சந்தேக நபரான தற்போது நாட்டில் இருந்து சட்ட விரோதமாக தப்பிச் சென்றுள்ளதாக சந்தேகிக்கப்படும் கடற்படை லெப்டினன் கொமாண்டர் பிரசாத் ஹெட்டி ஆராச்சியை கைது செய்ய திறந்த பிடியாணையும் நேற்று பிறப்பிக்கப்பட்டது.கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வைத்து 2008 ஆம் ஆண்டு 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்டதாக சந்தேகிக்கப்படும் வெள்ளை வேன் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பில் அரச இரசாயன பகுப்பாய்வுகளை முன்னெடுக்கவும் நேற்று கோட்டை நீதிமன்றம் அனுமதியளித்தது.

முன்னாள் கடற்­படை தள­பதி வசந்த கரண்­ணா­கொட தனது பாதுகாப்பு உத்­தி­யோ­கத்­த­ராக இருந்த லெப்­டினன்ட் கொமாண்டர் சம்பத் முன­சிங்­க­வுக்கு எதி­ராக கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவில் செய்த முறைப்­பாட்­டுக்கு அமை­வாக குற்றப் புல­னாய்வுப் பிரிவு முன்­னெ­டுத்த மேல­திக விசா­ர­ணை­க­ளி­லேயே இந்த கடத்தல் விவ­காரம் அம்­ப­லத்­துக்கு வந்­திருந்தது.

முன்னாள் பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்­க­கோனின் உத்­தர­வுக்கு அமை­வாக குற்றப் புல­னாய்வுப் பிரி­வுக்கு பொறுப்­பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரவி சென­வி­ரட்­னவின் ஆலோ­ச­னைக்கு அமைய புல­னாய்வுப் பிரிவின் பணிப்­பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் நாக­ஹ­முல்­லவின் வழி­காட்­டலின் கீழ் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சானி அபேசேகரவின் நேரடி கட்டுப்பாட்டில் புல­னாய்வு பிரிவின் கூட்டுக் கொள்ளை தொடர்­பி­லான விசா­ரணைப் பிரிவின் பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் நிஸாந்த டீ சில்வா தலை­மையில் முன்­னெ­டுக்­கப்­படும் இரு­வேறு விசா­ர­ணை­களில் இந்த பிர­தான கடத்­தல்கள் தொடர்பில் தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தன.

கொழும்பு, கொட்­டாஞ்­சேனை, தெஹி­வளை, வத்­தளை மற்றும் கட்­டு­நா­யக்க உள்­ளிட்ட பல பிர­தே­சங்­களில் பல்­வேறு உத்­தி­களை கையாண்டு இந்த கடத்­தல்கள் அரங்­கேற்­றப்­பட்­டுள்­ளன. குறிப்­பாக தெஹி­வ­ளையில் 2008.09.17 அன்று பெர்­னாண்டோ மாவத்­தையில் உள்ள அலி ஹாஜியார் அன்வர் என்­ப­வ­ரது வீட்டில் வைத்து அவரும் ரஜீவ நாக­நாதன், பிரதீப் விஸ்­வ­நாதன், தில­கேஸ்­வரன் ராம­லிங்கம், மொஹம்மட் திலான், மொஹம்மட் சாஜித் ஆகிய ஐந்து மாண­வர்­களும் கடத்­தப்­பட்­டி­ருந்­தனர். இத­னை­விட கொட்­டாஞ்­சே­னையைச் சேர்ந்த கஸ்­தூரி ஆராச்­சி­லாகே ஜோன் ரீட், அரிப்பு பிர­தே­சத்தைச் சேர்ந்த அமலன் லியோன் மற்றும் ரொஷான் லியோன், கொட்­டாஞ்­சே­னையை சேர்ந்த அன்­டனி கஸ்­தூரி ஆராச்சி, திரு­கோ­ண­ம­லையை சேர்ந்த தியாக­ராஜா கஜன் உள்­ளிட்­டோரும் கடத்­தப்­பட்­டி­ருந்­தனர்.

 இவ்வாறு கடத்தப்பட்ட அனைவரும் திருகோணமலை கடற்படை தளத்தில் உள்ள இரகசிய வதை முகாமான கன்சைட் எனும் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தமையை குற்றப் புலனாய்வாளர்கள் கண்டுபிடித்தனர். இந்த விடயம் சர்வதேச அளவில் அவதானிப்புக்கு உள்ளாகியுள்ள நிலையில், சிறப்பு புலனாய்வுப் பிரிவின் பொறுப்பாளராக கடமையாற்றியிருந்த லெப்டினன் கொமாண்டர் சம்பத் முனசிங்க, கன்சைட் நிலத்தடி இரகசிய வதை முகாமின் பொறுப்பாளராக அப்போது இருந்த லெப்டினன் கொமாண்டர் தரத்தினை உடைய தற்போது கொமாண்டர் ராக பதவி உயர்த்தப்பட்டுள்ள சுமித் ரணசிங்க, கடற்படை சிப்பாய் லக்ஷ்மன் உதயகுமார, நளின் பிரசன்ன விக்ரமசூரிய, தம்மிக தர்மதாஸ , கித்சிரி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் சம்பத் முனசிங்க பிணையில் உள்ள நிலையில் ஏனையோர் தொடர்ந்து விளக்கமறியலில் இருந்து வருகின்றனர்.

 நேற்றைய விசாரணைகள் ஆரம்பமான போது சந்தேக நபர்கள் மன்றில் ஆஜர்செய்யப்பட்டிருந்த நிலையில் சிறப்பு மேலதிக அறிக்கையுடன் குற்றப் புலனாய்வுப் பிரிவின் சனூக ,கொள்ளை தொடர்பிலான விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி சிறப்பு விசாரணை அதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வா, உப பொலிஸ் பரிசோதகர் சுனில் சரணபால , உப பொலிஸ் பரிசோதகர் சம்பத் ஆகியோர் மன்றில் ஆஜராகியிருந்தனர்.

கடந்த தவணை விசாரணைகளின் போது கடற்படை முன்னாள் பேச்சாளர் டி.கே.பி. தசநாயக்க , வெளி நாடு செல்ல கடவுச் சீட்டை விடுவிக்க கோரப்பட்டது. இதன் போது தசநாயக்க இந்த விசாரணைகளுக்கு அவசியமானவரா?, சாட்சியாளரா?, சந்தேக நபரா? என்பதை மன்றுக்கு நேற்றைய தினம் அறிவிக்க குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி நேற்று மன்றுக்கு வருகை தந்த பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வா, டி.கே.பி. தஸநாயக்க முக்கிய சந்தேக நபர் என்றும் அவரைக் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கூறினார்.

' இந்த 11 பேரும் கடத்திச் செல்லப்பட்டமை, தடுத்து வைக்கப்பட்டமை உள்ளிட்ட செயற்பாடுகள் தசநாயக்கவின் கீழ் செயற்பட்ட உளவுப் பிரிவு அதிகாரிகளாலேயே முன்னெடுக்கப்பட்டது. குறிப்பாக தசநாயக்கவின் கீழ் கொழும்பில் ஹெட்டி ஆராச்சியும், திருமலையில் ரணசிங்கவும் மன்னாரில் தயானந்தவும் பொறுப்பாக செயற்பட்டுள்ளனர். இதன் போது ரணசிங்கவின் கீழ் இருந்த மகேஷ் குமார எனும் அதிகாரி அரிப்பு பகுதியைச் சேர்ந்த ரொஷான் லியோன், அமலன் லியோன் தொடர்பில் ரணசிங்கவுக்கு சில விடயங்களை தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து தசநாயக்கவின் கீழ் அவ்விருவர் தொடர்பிலும் தனித்தனியாக கோவைகள் பராமரிக்கப்பட்டுள்ளன. இந் நிலையில் அவ்விருவரையும் கடத்திய ஹெட்டி ஆராச்சி அந்த கோவைகளை மகேஷ் குமாரவிடம் கோரிய போதும் தஸநாயக்கவை தவிர அந்த கோவைகளை யாரிடமும் கொடுக்க முடியாது என அவர் கூறியுள்ளார். அதன் பின்னர் ஹெட்டி ஆராச்சி இவ்வாறு கடத்தி வந்த விடயத்தை தஸநாயக்கவுக்கு சம்பத் முனசிங்க தெரியப்படுத்தியுள்ள நிலையில், தனக்கு அது தெரியும் எனவும் அது தொடர்பில் ஹெட்டி ஆராச்சி பார்த்துக்கொள்வார் எனவும் தசநாயக்க கூறியுள்ளார்.

எனவே கடத்தல்கள் தசநாயக்கவின் நேரடி கட்டுப்பாட்டிலேயெ இடம்பெற்றுள்ளன என்றார்.

இதனைவிட 2008/2009 ஆம் ஆண்டுகளில் இத்தகைய கடத்தல்கள் தொடர்பில் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் , மாணவர் கடத்தலின் பிரதான சந்தேக நபர்களான தற்போது கைதாகியுள்ள லெப்டினன்ட் கொமாண்டர் சுமித் ரணசிங்க, கைது செய்யப்பட தேடப்பட்டு வரும் லெப்டினன் கொமாண்டர் ஹெட்டி ஆராச்சி ஆகியோரின் கீழ் பயன்படுத்தப்பட்ட 54 - 9438 எனும் வெள்ளை வேனே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

தற்போது சி.ஐ.டி.யினரால் கைப்பற்றப்பட்டுள்ள வெள்ளை வேன் ஆனது வாடகை அடிப்படையில் அப்போது ஹெட்டி ஆராச்சியின் குழுவினரால் பெறப்பட்டுள்ளதாகவும், கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ள 11 பேரில் உள்ளடங்கும் வத்தளையில் வைத்து வேனுடன் கடத்தப்பட்ட கொட்டாஞ்சேனைப் பகுதியைச் சேர்ந்த ஜோன் ரீட் என்பவரின் வேனின் எஞ்ஜின் பின்னர் குறித்த வெள்ளை வேனுக்கு பொறுத்தப்பட்டுள்ளதாக சந்தேகிப்பதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவு சுட்டிக்காட்டியதுடன் அதனை உறுதி செய்ய இரசாயன பகுப்பாய்வுக்கு வேனை உட்படுத்த அனுமதி கோரியது.

  வெல்லம்பிட்டியில் உள்ள கராஜ் ஒன்றில், லெப்டினன் கொமாண்டர் ஹெட்டி ஆராச்சியினால் இவ்வாறு எஞ்ஜின் மாற்றப்பட்டுள்ளதாக தகவல் உள்ளதாகவும் அது தொடர்பில் சிறப்பு விசாரணைகள் தொடர்வதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கூறப்பட்டது.

இதனைவிட இந்த கடத்தல்களுடன் நேரடி தொடர்புபட்ட பிரதான சந்தேக நபரான லெப்டினன் கொமாணடர் ஹெட்டி ஆராச்சியைக் கைது செய்ய திறந்த பிடியாணை குற்றவியல் சட்டத்தின் 63 (1) அ, ஆ அத்தியாயங்களின் பிரகாரம் சாட்சியம் அளித்து குற்றப் புலனாய்வுப் பிரிவின் சிறப்பு விசாரணை அதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வாவினால் கோரப்பட்டது.

கடந்த 2017.03.01, 2017.03.21 ஆம் திகதிகளில் அவரை குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராக கோரிய போதும் அவர் விசாரணைக்கு வரவில்லை எனவும் 31.03.2017 முதல் அவர் கடற்படை உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்தும் காணாமல் போயுள்ளதாகவும் அவரைக் கைது செய்ய இரு முறை முயன்றும் அவர் வெல்லம்பிட்டியில் உள்ள அவரது வீட்டில் இருக்கவில்லை எனவும் நிசாந்த சில்வவா நீதிவானுக்கு சாட்சியமளித்தார். அத்துடன் ஹெட்டி ஆராச்சி சட்ட விரோதமாக கடல் மார்க்கமாக வெளி நாட்டுக்கு தப்பிச் சென்றுள்ளதாக தகவல் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

 இதனையடுத்து தண்டனை சட்டக் கோவையின் 140,296,332,337,355,378,383,384 ஆகிய அத்தியாயங்களின் கீழும் துப்பாக்கிகள் கட்டளை சட்டத்தின் 44 ஆ பிரிவின் கீழும் குற்றச்சாட்டு உள்ள நிலையில் திறந்த பிடியாணை பிறப்பிப்பதாக நீதிவான் லங்க அபயரத்ன அறிவித்தார்.

இதனையடுத்து கடற்படை முன்னாள் ஊடகப் பேச்சாளர் டி.கே.பி. தசநாயக்கவுக்கு வெளி நாடு செல்ல அனுமதியளிக்க வேண்டும் எனவும், அவர் தற்போது வரைக்கும் சந்தேக நபர் இல்லை எனவும் சட்ட ரீதியான வாதங்களை முன்வைத்து அவரது சார்பில் ஆஜரான சட்டத்தரணி அனில் சில்வா கோரினார்.

 எனினும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் சிறப்பு விசாரணை அதிகாரி நிசாந்த சில்வா அதனை நிராகரித்தார். அவர் கைது செய்யப்பட வேண்டிய சந்தேக நபர் எனவும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதனையடுத்து நீதிவான் சந்தேக நபர்களின் விளக்கமறியலை எதிர்வரும் 19 ஆம் திகதிவரை நீடித்தார்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-07-12#page-1

  • தொடங்கியவர்

முன்னாள் கடற்படை ஊடகப் பேச்சாளர் கைது

 

முன்னாள் கடற்படை ஊடகப் பேச்சாளர் கைது

July 12, 2017  07:38 pm

 
 
முன்னாள் கடற்படை ஊடகப் பேச்சாளர் டீ.கே.பி. தசநாயக்க குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.

008ம் ஆண்டு 11 தமிழர்கள் கடத்திச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட விவகாரம் தொடர்பில், சந்தேகநபராக, முன்னாள் கடற்படைப் பேச்சாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளதுடன், சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள ஏனைய 03 பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

http://tamil.adaderana.lk/news.php?nid=93296

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.