Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘தலைவர்களின் செயற்பாடுகளே இன விரிசலுக்கு வழிவகுத்தது’

Featured Replies

‘தலைவர்களின் செயற்பாடுகளே இன விரிசலுக்கு வழிவகுத்தது’
 

image_a8f026d4f2.jpg

சுதந்திரத்துக்குப் பின்னரான பெரும்பான்மையினச் சமூகத்தின் அரசியல் தலைமைகள் தமது இருப்புக்காக மேற்கொண்ட இன ரீதியான செயற்பாடுகளின் தொடர்ச்சியே இனங்களுக்கிடையிலான விரிசல்கள் தற்போது அதிகரித்து வருவதற்கு பிரதான காரணமென்று, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் கைத்தொழில் வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

வத்தளை, ஹுணுப்பிட்டிய சாஹிரா மகா வித்தியாலயத்தின் புதிய நுழைவாயிலை இன்று (13) திறந்து வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பாடசாலை அதிபர் எம்.எம். கலீல் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், மக்கள் காங்கிரஸின் மேல் மாகாண சபை உறுப்பினர் பாயிஸ், மேல்மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் ஜோர்ஜ் பெரேரா, மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தரான கலாநிதி. எஸ்.எஸ். இஸ்மாயில், களனி வலைய தமிழ்ப் பிரிவுப் பணிப்பாளர் பொஸ்தின் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அமைச்சர் இங்கு மேலும் உரையாற்றுகையில்,

“1956ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட “சிங்களம் மட்டும்” சட்டமே இந்த நாட்டில் இனரீதியான பிரச்சினைகளின் தோற்றுவாயானது. பெரும்பான்மையினத் தலைவர்கள் தேர்தல் வெற்றிக்காகவும், தாம் தலைமை வகித்த கட்சிகளை ஆட்சியிலே அமர்த்துவதற்காகவும் இனவாதத்தை உசுப்பி விட்டனர். இது நீறு பூத்த நெருப்பாக மாறி, இனங்களுக்கிடையே சந்தேகத்தையும் பிரச்சினைகளையும் ஏற்படுத்தியது. 

“தமிழ் மக்களுக்கு மொழி ரீதியான, தொழில்சார்ந்த கல்வி ரீதியான பாதிப்புக்கள் ஏற்பட்டதனால் தமிழ் இளைஞர்கள், தமது சமூகத்தின் எதிர்கால நலனைக் கருத்திற்கொண்டு, ஆயுதங்களைத் தூக்கத் தொடங்கினர்.

“ஆயுதத்தில் நம்பிக்கை வைத்து அதில் நாட்டங்கொண்ட தமிழ் இளைஞர்களை, ஜனநாயக வழிக்கு கொண்டு வருவதில் தமிழ்த் தலைமைகள் தயங்கின. அகிம்சை ரீதியில், ஜனநாயக வழியில் தமிழ்த் தலைவர்கள் போராடிய போதும் அவர்களின் மேடைப் பேச்சுக்களும், உணர்ச்சிகரமான உரைகளும், ஆயுத வழியில் நம்பிக்கை கொண்ட தமிழ் இளைஞர்களுக்கு, தமிழ்த் தலைவர்களின் பேச்சுக்கள் மறைமுகமான உந்து சக்தியாகவும் அந்தக் காலத்தில் இருந்தது என்பதை நாம் மறுப்பதற்கில்லை.

“30 வருட கால யுத்தம், இந்த நாட்டைக் குட்டிச்சுவராக்கியது. பல்வேறு அழிவுகளை நாங்கள் சந்தித்து இருக்கிறோம். யுத்தத்தின் இன்னுமொரு வெளிப்பாடாக வடமாகாணத்தில் வாழ்ந்த முஸ்லிம்கள் ஒட்டுமொத்தமாக வெளியேற்றப்பட்டனர். சுமார் 20 வருட கால அகதி வாழ்க்கையில் அவர்கள் அவலப்பட்டனர். இன்னும் அந்த அவலம் தொடரவே செய்கின்றது.

“சமாதானம் ஏற்பட்ட பின்னர், முஸ்லிம்கள் தமது சொந்த பிரதேசத்தில் குடியேற முயற்சித்து வருகின்றனர். சம்பந்தன், மாவை மற்றும் சுமந்திரன் போன்ற தமிழ்த் தலைவர்கள் முஸ்லிம்களை மீளக்குடியேறுமாறு கூறுகின்றனர்.

“எனினும், அதே கட்சியைச் சார்ந்த வேறு சில மக்கள் பிரதிநிதிகள் குடியேறவிடாது  தடுக்கின்றனர். மீள்குடியேறும் உரிமையையும் அங்கிகரிக்க மறுக்கின்றனர். இதுதான் இன்றைய நிலை. இதுமட்டுமன்றி, தமிழ்த் தாய்மார்கள் தமது உறவுகளைப் பறிகொடுத்துவிட்டு வீதிகளிலே கண்ணீருடன் நிற்பது  அன்றாடக் காட்சிகளாக மாறிவிட்டது.

“யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. அழிவுக்குட்பட்ட பிரதேசங்களை மீளக்கட்டியெழுப்ப வேண்டும். காணிப்பிரச்சினை, வீட்டுப் பிரச்சினை, தொழில் இல்லாத பிரச்சினை இன்னோரன்ன பிரச்சினைகளை மூன்று சமூகமும் எதிர்நோக்கி வருகின்றது.

“அதுமட்டுமன்றி, அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு பல மாவட்டங்களைப்  பாதித்தது. மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக சிதைவடைந்துள்ளது. இந்தப் பிரதேசங்களை மீளக்கட்டியெழுப்பி மக்களுக்கு விமோசனம் கிடைக்க வழிவகுக்க வேண்டியது அரசின் பொறுப்பே.

“ஆனால், இத்தனை பிரச்சினைகள் நமக்கு இருக்கும் போது அவற்றுக்கு  முன்னுரிமை வழங்காது, தேர்தல் முறை மாற்றத்தைக் கொண்டுவர  இரண்டு கட்சிகளும் வரிந்து கட்டிக்கொண்டு இருக்கின்றனர். காலத்தையும், நேரத்தையும் வீணடிக்கின்றனர்.  இந்த முயற்சியானது, சிறுபான்மை மக்களின் குரலை நசுக்குவதற்கான சதியாகவே நாம் பார்க்கவேண்டியுள்ளது.

“பேரினவாதிகள் முஸ்லிம்கள் மீதும் இஸ்லாத்தின் மீதும் குர்ஆனின் மீதும் இல்லாத பொல்லாத அபாண்டங்களை பரப்புகின்றனர். புனித குர்ஆனின் வசனங்களுக்கு பிழையான வியாக்கியானங்களை வழங்கி வருகின்றனர்.  ஊடகங்களைப் பயன்படுத்தி மிகவும் கச்சிதமாக இந்த செயற்பாடுகளை மேற்கொள்கின்றனர்.

“கம்பஹா மாவட்டப் பிரதேசங்களுக்கு சகோதரர் பாயிஸ் எந்தவிதமான எதிர்பார்ப்புகளும் இன்றி சேவையாற்றி வருவது எனக்கு மகிழ்ச்சி தருகின்றது. அவர் இந்த மாவட்டத்தின் பிரதிநிதியாக இல்லாத போதும் இங்குள்ள மக்களுக்கு உதவி அளித்து வருவது அவரது சேவை மனப்பான்மையையும் மக்கள் மீது கொண்டுள்ள அன்பையும் காட்டுகின்றது.

“பெற்றோர்களின் பங்களிப்புடன் இந்தப் பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள நுழைவாயில், அவர்கள் தமது மாணவர்களின் கல்வியில் கொண்டுள்ள அக்கறையையே காட்டுகின்றது.   உண்மையில் அவர்களை நாம் பாராட்டவேண்டும்” என்றார்.

image_1ce784e37a.jpgimage_ddd7a014f5.jpg

  •  

http://www.tamilmirror.lk/மேல்-மாகாணம்/தலைவர்களின்-செயற்பாடுகளே-இன-விரிசலுக்கு-வழிவகுத்தது/95-200556

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.