Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சீனா: நோபல் பரிசு பெற்ற மனித உரிமை ஆர்வலர் லியு சியாபோ மரணம்

Featured Replies

சீனா: நோபல் பரிசு பெற்ற மனித உரிமை ஆர்வலர் லியு சியாபோ மரணம்

சீனாவில் நடைபெற்று வரும் ஜனநாயக படுகொலையை தோலுரித்து காட்டியதற்காக நோபல் பரிசு பெற்ற மனித உரிமை ஆர்வலர் லியு சியாபோ புற்றுநோய் முற்றிய நிலையில் இன்று மரணம் அடைந்தார்.

 
சீனா: நோபல் பரிசு பெற்ற மனித உரிமை ஆர்வலர் லியு சியாபோ மரணம்
 
பீஜிங்:

சீனாவில் ஜனநாயகம் தொடர்பான ‘சார்ட்டெர் 8’ என்ற நூலை கடந்த 2009-ஆம் ஆண்டு வெளியிட்ட காரணத்துக்காக அந்நாட்டின் பிரபல எழுத்தாளரான லியு சியாபோ (61), என்பவருக்கு சீன அரசு 11 வருட சிறைத் தண்டனை விதித்தது.

கடந்த 2010-ம் ஆண்டு அவருக்கு சமாதானத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இதனால் சீனாவுக்கும் நோபல் பரிசை அளித்துவரும் நார்வே நாட்டுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து முரண்பாடு சமீபத்தில்தான் சீரடைந்தது.

இதற்கிடையே, ஈரல் புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற வேண்டிய அவசியம் ஏற்பட்டதால் லியு சியாபோ பரோலில் விடுவிக்கப்பட்டார். ஆனால், வெளிநாட்டில் இருந்து சிறப்பு நிபுணர்களை வரவழைத்து அவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை சீன அரசு நிராகரித்து விட்டது.

ஷென்யாங் நகரிலுள்ள சீன மருத்துவப் பல்கலைக்கழக மருத்துவமனையில் ஈரல் புற்றுநோய் முற்றிய கட்டத்தில் கடந்த மே மாதம் அனுமதிக்கப்பட்டிருந்த லியு சியாபோவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரது ஈரலில் இருந்த புற்றுக்கட்டி உடைந்து இரத்தக்கசிவு ஏற்பட்டதால் லியு சியாபோ கவலைக்கிடமான நிலையில் இருந்தார்.

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த லியு சியாபோ, இன்று சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவரது மரணத்துக்கு முக்கிய தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/07/13195515/1096208/chinese-nobel-laureate-liu-xiaobo-dies-at-61.vpf

  • தொடங்கியவர்

லியு: மக்களின் கதாநாயகன், சீன அரசுக்கு `வில்லன்'

 

மனித உரிமை போராளியாக இருந்து வியாழக்கிழமை காலமான லியு ஷியாவ்போ, மக்களால் கதாநாயகனாக பார்க்கப்பட்ட நிலையில் சீன அரசு வில்லனாக பார்த்தது.

லியு ஷியாவ்போபடத்தின் காப்புரிமைREUTERS Image captionலியு ஷியாவ்போ

2010 ஆம் ஆண்டு சமாதானத்திற்கான நோபல் பரிசு பெற்ற அரசியல் ஆர்வலரான லியு ஷியாவ்போ, சீனாவில் மனித உரிமைகளுக்கான போராட்டத்தின் "முதன்மையான அடையாளமாக" பார்க்கப்படுகிறார்.

இருப்பினும், "அரசு அதிகாரத்தைத் அழிக்க விரும்பும்" குற்றவியல் நோக்கம் கொண்டவர் லியு ஷியாவ்போ, என சீன அதிகாரிகள் கூறுகின்றனர். போராட்டங்களுக்காக பலமுறை லியு மீண்டும் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியரான 61 வயதான லியு ஷியாவ்போ, கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். மருத்துவ பரோலில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மீதான கடுமையான அரசியல் கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களுக்காக பரவலாக அறியப்பட்ட லியு, சீனா, ஜனநாயகமாகவும், சுதந்திரமாகவும் இருக்கவேண்டும் என்று தொடர்ந்து பிரசாரம் செய்துவந்தார்.

1989 இல் தியனன்மென் சதுக்கத்தில் நடைபெற்ற ஜனநாயகத்திற்கு ஆதரவான சார்பு போராட்டத்தில் அவர் முக்கிய பங்கேற்பாளர்களில் ஒருவராக இருந்தார்.

வடகிழக்கு சீனாவின் இளம் பல்கலைக் கழக பேராசிரியரான வயதான லியு ஷியாவ்போ, நியூயார்க்கில் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் கெளரவ பேராசிரியராக பணிபுரிந்தார். மாணவர் போராட்டங்களில் பங்கு பெறுவதற்காக அவர் பெய்ஜிங்கிற்கு விமானத்தில் வந்தார். ஆர்ப்பாட்டங்களைத் நசுக்க, படைகளுக்கு அதிகாரிகள் கட்டளையிட்டபோது, போரட்டம் ரத்தக்களறியில் முடிந்தது.

போராட்டத்தில் இருந்து சமாதான முறையில் வெளியேறுவதற்காக படைகளுடன் பேச்சுவார்த்தைகளை வெற்றிகரமாக மேற்கொண்ட லியுவும், வேறு சிலரும் நூற்றுக்கணக்கானவர்களை காப்பாற்றியதற்காக பாராட்டப்பட்டார்கள்.

லியுவுக்கு ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கிடைத்தபோதிலும், அவர் சீனாவில் வசிப்பதையே விரும்பி தேர்ந்தெடுத்து திரும்பி வந்துவிட்டார். அரசாங்க ஒடுக்குமுறையால் பிறகு கைது செய்யப்பட்ட அவர், 1991 இல் விடுதலை செய்யப்பட்டார்.

ஷியாவ்போபடத்தின் காப்புரிமைEPA

சிறையில் இருந்து வெளியே வந்த லியு ஷியாவ்போ, தியனன்மென் போராட்டத்தில் பங்கேற்று சிறையில் அடைக்கப்பட்டவர்களை விடுவிப்பதற்காக பிரசாரம் செய்தார். அதற்காக, மீண்டும் கைது செய்யப்பட்டு, தொழிலாளர் முகாமில் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்தார்.

அதிகாரத்தினரால் குறிவைக்கப்பட்டவராக லியு ஷியாவ்போ இருந்தபோதிலும், 1996இல் சிறையில் இருந்தபோது, லியு ஜியா என்ற கலைஞரை திருமணம் செய்துக்க்கொண்டார்.

பல்கலைக்கழத்தில் வேலை செய்வதை தடுத்த சீன அரசு, அவருடைய புத்தகங்களை சீனாவில் தடை செய்தபோதிலும், லியு தனது போராட்டங்களை தொடர்ந்தார்.

2008இல், லியுவும், அறிவுஜீவிகள் கொண்ட குழுவினரும் சேர்ந்து சாசனம் 08 என்ற அறிக்கையை உருவாக்கினார்கள்.

சீனாவில் ஒரு புதிய அரசியலமைப்பு மற்றும் சட்டமன்ற ஜனநாயகம் உள்ளிட்ட பல தொடர்ச்சியான ஜனநாயக சீர்திருத்தங்கள் பற்றி இந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நவீனமயமாக்கும் அணுகுமுறையை "பேரழிவு" என்றும் இந்த சாசனம் குறிப்பிடுகிறது.

அதுவரை சற்றேனும் பொறுமை காத்துவந்த சீன அரசு இதனால் அதிக சீற்றம் அடைந்தது. ஆன்லைனில் இந்த அறிக்கை வெளிவருவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக காவல்துறையினர் லியுவின் வீட்டில் சோதனை மேற்கொண்டு அவரை கொண்டு சென்றனர்.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு முன்பு ஒரு வருடம் வரை தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த லியுவுக்கு, 2009 கிறிஸ்துமஸ் தினத்தன்று 11 ஆண்டு கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்ட்து.

நோபல் பரிசு சர்ச்சை

அதற்கு அடுத்த அண்டு லியு ஷியாவ்போவுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. நோபல் பரிசு குழுவினர், நீண்டகாலமாக அகிம்சை முறையில் போராட்டம் நடத்தியதற்காக அவரை பாராட்டினார்கள்.

நோபல் பரிசு அறிவிப்பினால் சீற்றமடைந்த சீனா, பரிசு வழங்கும் நிகழ்ச்சிக்கு செல்ல லியுவுக்கு அனுமதி மறுத்துவிட்டது, நோபல் பரிசு பெற்றவரின் நாற்காலி காலியாக இருந்ததையே ஊடகங்கள் படமெடுத்தன.

நோபால் பரிசு வழங்கப்பட்ட சில நாட்களிலேயே, லியு ஷியாவ்போவின் மனைவு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு, அவரது குடும்பம் மற்றும் ஆதரவாளர்களிடம் இருந்து தனிமைப்படுத்தப்பட்டார். அவரது நடவடிக்கைகளை முடக்கியதற்கான காரணத்தை சீன அதிகாரிகள் ஒருபோதும் சொன்னதே கிடையாது.

லியு தொடந்து சிறைவைக்கப்படுவதை எதிர்த்து 2016இல் ஹாங்காங்கில் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் Image captionலியு தொடந்து சிறைவைக்கப்படுவதை எதிர்த்து 2016இல் ஹாங்காங்கில் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்

அவரின் சிறைதண்டனை முடிவடைய மூன்று ஆண்டுகள் மீதமிருந்த நிலையில், 2017, மே மாதம் 23 ஆம் தேதி, லியுவுக்கு கல்லீரல் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. வடகிழக்கு நகரான ஷென்யாங்கில் மருத்துவமனை ஒன்றில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

தொடர்ந்து சிறைவாசம் அனுபவித்தாலும், லியு, ஜனநாயக சீனா உருவாகும் என்று நம்பிக்கையுடன் இருந்தார்.

"சீனாவின் அரசியல் முன்னேற்றம் நிறுத்தப்படாது என்று நான் உறுதியாக நம்புகிறேன், நேர்மறை எண்ணங்களுடன் எதிர்காலத்தில் சுதந்திர சீனா மலர்வதற்காக நம்பிக்கையுடன் காத்துக் கொண்டிருக்கிறேன்" என்று 2009 ஆம் ஆண்டு விசாரணைக்குப் பின்னர் வெளியிட்ட அறிக்கையில் லியு ஷியாவ்போ தெரிவித்திருந்தார்.

"சுதந்திரத்திற்கான மனிதர்களின் தேடலை முடிவுக்கு கொண்டுவருவதற்கு எந்த சக்தியாலும் முடியாது, இறுதியில் சீனா சட்டத்தால் ஆளப்படும் ஒரு தேசமாக மாறும், அங்கு மனித உரிமைகள் மேலோங்கி நிற்கும்" என்பதே அவரது கருத்தாக இருந்தது.

http://www.bbc.com/tamil/global-40599973

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, நவீனன் said:

நோபல் பரிசு பெற்ற மனித உரிமை ஆர்வலர் லியு சியாபோ மரணம்

அரசியல் விளையாட்டுக்காக கொடுத்த நோபல்பரிசு.
நோர்வேயா கொக்கா..<_<

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.