Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மன்னார், கரிசல் முஸ்லிம் கிறிஸ்த்தவ முரண்பாடுகள். என்ன நடக்கின்றது.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மன்னார் இலங்கைத்தீவின் நுழைவாயில் என்று அழைக்கப்படுவது வழமை; இலங்கைக்கு வருகை தந்த சிங்களவர்களும், தமிழர்களும், அராபியர்களும் ஒல்லாந்தர், போர்த்துகீசர், ஆங்கிலேயர் எனப் பலரும் மன்னார் மார்க்கமாகவே இலங்கைக்குள் நுழைந்திருக்கின்றார்கள் என்பது வரலாறு.

மாந்தை என்றும் குறித்த பிரதேசம் அழைக்கப்படுகின்றது. மன்னார் தீவுப்பிரதேச நிலப்பரப்பில் எருக்கலம்பிட்டி தாராபுரம், புதுக்குடியிருப்பு, கரிசல், தலைமன்னார் போன்ற பிரதேசங்களில் முஸ்லிம்கள் செறிவாக வாழ்கின்றார்கள். இவ்வாறான ஒரு பிரதேசமே கரிசல் என்றும் வழங்கப்படுகின்றது, இங்கு பெரிய கரிசல், சின்னக் கரிசல் என்று இரண்டு கிராமங்கள் இருக்கின்றன, இங்கு கிஸிற்த்தவ மக்களும் முஸ்லிம் மக்களும் மிகவும் அந்நியோன்யமாக பல நூற்றாண்டு காலங்களுக்கு முன்பிருந்தே வாழ்ந்து வருகின்றார்கள். கரிசல் முஸ்லிம் கிராமத்தின் வரலாறானது ஒல்லாந்தர் காலத்திற்கு முந்தியது.

இவ்வாறான பிரதேசமொன்றில் முஸ்லிம் மையவாடிக் காணியொன்றினை மையப்படுத்தி அண்மைக்காலமாக கிறிஸ்த்தவ சமூகத்தவர்களுக்கும் முஸ்லிம் சமூகத்தவர்களுக்கும் இடையில் முரண்பாடுகள் தோன்றியிருக்கின்றன. பெரிய கரிசல் என்னும் கிராமம் முழுமையாக முஸ்லிம்களை உள்ளடக்கிய கிராமமாகும். சின்னக் கரிசல் கிறிஸ்த்தவ மக்களைக் கொண்ட கிராமமாகும்.

பெரிய கரிசல்;சின்னக் கரிசல் கிராமங்களின் மத்தியில் கிறிஸ்த்தவத் தேவாலயம் ஒன்று அமையப்பெற்றுள்ளது. குறித்த தேவாலயம் முழுமையாக முஸ்லிம்கள் குடியிருக்கின்ற பிரதேசத்திலேயே அமைந்திருக்கின்றது. தேவலயம் அமையப்பெற்றுள்ள காணியிலிருந்து 100 மீட்டர்கள் தொலைவில் பிரிதொரு நிலப்பிரதேசத்தில் முஸ்லிம் மக்களின் மையவாடி அமைந்திருக்கின்றது.

குறித்த மையவாடியில் பல நூறு முஸ்லிம் மக்களின் ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன, இப்போது கிறிஸ்த்த மக்களால் கோரப்படுகின்ற காணியிலும் 30-50 வரையான ஜனாஸாக்கள் அடக்கப்பட்டிருப்பதாக ஊர் மக்கள் தெரிவிக்கின்றார்கள்; குறித்த மையவாடியின் பின்புறமாக கிறிஸ்த்தவ மக்களின் சேமக்காலை அமைந்திருக்கின்றது.

முஸ்லிம் மக்களின் மையவாடிக் காணியின் ஒரு ஒதுக்குப்புறமாக முன்னைய காலத்தில் வயது முதிர்ந்த ஒரு மூதாட்டி ஒரு சிறு குடிசை அமைத்து அதிலே மாதா சிலுவையை நிலைநிறுத்தி அதற்கு “கப்பலேந்திமாதா கோயில்” என்று பெயர் வைத்து வழிபாடுகளை மேற்கொண்டு வந்தார், இதற்கு முஸ்லிம் மக்கள் எவ்விதமான எதிர்ப்பையும் அக்காலத்தில் முன்வைக்கவில்லை, குறித்த மாதா கோவிலுக்குப் பின்பக்கமாகவே கிறிஸ்த்தவர்களின் அடக்கஸ்த்தலங்களும் காணப்பட்டன.

1990களுக்குப் பின்னர் குறித்த கோவில் ஒரு சிறு கோவிலாக நிரந்தரக் கட்டிடமாக வடிவமைக்கப்பட்டுள்ளது, இதற்கும் முஸ்லிம் மக்கள் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை.

1990முஸ்லிம் மக்களின் பலவந்த வெளியேற்றத்தைத் தொடர்ந்து குறித்த பிரதேசத்தில் விடுதலைப் புலிகளினால் முஸ்லிம் மக்களின் காணிகள் கையகப்படுத்தப்பட்டன; ஒரு சில கிறிஸ்த்தவக் குடும்பங்களும் குடியேற்றப்பட்டன. 2009களின் பின்னர் முஸ்லிம் மக்களின் சீரான மீள்குடியேற்றம் இடம்பெறத்தொடங்கியபோது இவ்வாறு காணிகள் கையக்கப்படுத்தப்பட்டிருப்பது குறித்து அறியப்பட்டாலும், முஸ்லிம் மக்கள் இதுவிடயத்தில் விட்டுக்கொடுப்புடனேயே செயற்பட்டார்கள்.

2012ம் ஆண்டு பெரிய கரிசல் கிராமத்தைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் வாலிபன், சின்னக்கரிசல் கிராமத்தின் முக்கய செல்வாக்குள்ள கிறிஸ்த்தவக் குடும்பமொன்றின் யுவதியொருவரை குடும்பத்தினரின் விருப்பத்திற்கு மாற்றமாக திருமணம் முடித்துக்கொண்டார், இதனை இரண்டு கிராமங்களின் நல்லிணக்கம் பாதிக்கப்பட்ட ஒரு முக்கிய தருணமாகக் கொள்கின்றார்கள். அன்றுமுதல் சிறு சிறு முறுகல்கள் இரண்டு சமூகத்திற்கு மத்தியிலும் தோன்ற ஆரம்பித்தன, இவ்வாறான சந்தர்ப்பத்தில் முஸ்லிம் மையவாடிக்கான வேலி அமைக்கும் பணியினை பெரிய கரிசல் முஸ்லிம் மக்கள் தொடங்கினார்கள். இதற்கு கிறிஸ்த்தவ மக்கள் ஆட்சேபனை தெரிவித்தார்கள், கப்பலேந்தி மாதா கோவிலுக்கு உரித்தான காணியை முஸ்லிம்கள் அபகரிக்கின்றார்கள் என்ற கதையும் பரப்பட்டது.

முஸ்லிம்களால் அமைக்கப்பட்ட வேலியும் கிறிஸ்த்தவ மதகுரு தலைமையில் வந்த குழுவினரால் பிடுங்கிச் சேதப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து குறித்த மையவாடிக் காணி விவகாரம் தொடர்பில் நீதிமன்றில் வழக்குத் தொடுக்கப்பட்டது.

பெரிய கரிசல் கிராம மக்கள் பள்ளிவாயல் நிர்வாகத்தினூடாக குறித்த மையவாடிக் காணிக்கான உரித்து குறித்து தம்பக்க நியாயங்களை நீதினறில் முன்வைத்தார்கள். அவை முழுமையாக நீதிமன்றினால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றே கருதவேண்டியுள்ளது. தொடர்ந்து 5வருடங்களாக இடம்பெற்ற வழக்கு விசாரணைகளின் பின்னர் கடந்த 2017 மார்ச் மாதத்தின் இறுதிப்பகுதியில் குறித்த காணி தேவலயத்திற்கு உரித்தானது என்ற தீர்ப்பு நீதிமன்றினால் வழங்கப்பட்டது. 2017 ஜூலை மாத முதல்வாரத்தில் மன்னார் நீதிமன்ற அதிகாரிகள் குறித்த தீர்ப்பின் பிரகாரம் கிறிஸ்த்தவ தேவாலயத்திற்கான காணியின் எல்லைகளை அடையாளப்படுத்தினார்கள்,

அடையாளப்படுத்தப்பட்ட எல்லைகளில் வேலிகளை அமைக்கும் பணிகளை தேவாலய நிர்வாகமும், கிறிஸ்த்தவ மக்களும் முன்னெடுத்தார்கள். இது முஸ்லிம் மக்களுக்கு மிகுந்த மனவேதனையினை ஏற்படுத்தியது, தமது பெற்றோர்கள், மூதாதையர்கள் அடங்கியிருக்கின்ற ஒரு நிலப்பிரதேசம் தேவலாயக் காணியாக எல்லையிடபப்டுவதை இவர்களால் பொறுத்துக்கொண்டு பார்த்துக்கொண்டிருக்க முடியவில்லை. இங்குதான் கலவர சூழ்நிலை உருவாகியது. முஸ்லிம் மக்கள் நீதிமன்ற உத்தரவிற்கு அமைய நடப்பட்ட வேலிகளைத் தகர்த்தெறிந்தார்கள். இரண்டு சமூகங்களுக்குமிடையே பாரிய அசம்பாவிதங்கள் இடம்பெறும் சூழ்நிலை உருவாகியது. ஞாயிற்றுக்கிழமை ஊரின் மறுபுறத்தில் அமைந்திருந்த கிறிஸ்த்தவ தேவாலயத்தில் வழிபாடுகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் கற்கள் வீசப்பட்டதாக ஒரு குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகின்றது. இவ்வாறான முரண்பாடுகள் நிறைந்த சூழ்நிலைகளின் போது பொலிஸார் தமது கடமைகளை சரிவரச் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகின்றது.

எது எவ்வாறாயினும் குறித்த காணி விவகாரம் நீதிமன்றத் தீர்ப்போடு தொடர்புபட்ட விடயம் என்பதை எம்மவர்கள் கருத்தில் இருத்துவது அவசியமாகும், தீர்ப்பு வழங்கப்பட்டு சுமார் மூன்று மாத  கால அவகாசம் காணப்பட்டிருக்கின்றது அவ்விடைவெளியில் குறித்த தீர்ப்பினை ஆட்சேபித்து மேன்முறையீடு செய்யக்கூடிய வாய்ப்பையும் எம்மவர்கள் தவறவிட்டிருக்கின்றார்கள், அதேபோன்று நீதிமன்ற அலுவலர்களால் எல்லைகள் அடையாளமிடப்பட்ட சந்தர்ப்பத்தில் ஊர் மக்கள் முழுமையாகத் திரண்டு தமது ஆட்சேபனைகளை முன்வைத்திருக்க முடியும், அல்லது பொலிஸாரின் கவனத்திற்குக் கொண்டு சென்றிருக்க முடியும், அதனையும் எம்மவர்கள் தவற விட்டிருக்கின்றார்கள் அடுத்து எல்லை வேலிகள் அமைக்கப்பட்டதன் பின்னர் அதனை உடைக்கின்ற நடவடிக்கை சட்ட ரீதியாக நோக்குமிடத்து குற்றமாகவே கருதப்படுகின்றது, அதுவிடயத்தில் எமது சமூக மற்றும் அரசியல் தலைவர்கள் பொறுப்போடு செயற்பட்டிருக்க முடியும், அதேபோன்றுதான் கடந்த ஞாயிற்றுக்கிழமை (9/7/2017) அன்றைய தினம் கிறிஸ்த்தவ தேவாலயத்தின் மீது கல்விச்சு நடாத்தப்பட்டது என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கின்றது,

இவை அனைத்துமே சமூக ரீதியாக நோக்குமிடத்து பலவீனங்களாக அல்லது குறைபாடுகளாகவே காணப்படுகின்றன. என்றாலும் முஸ்லிம் மையாவாடி என்று வருகின்றபோது அது முஸ்லிம் மக்களால் மதிக்கப்படுகின்றன, ஒவ்வொரு முஸ்லிம் குடும்பத்தினதும் உறவுகளைச் சுமந்து நிற்கின்ற புனிதப் பிரதேசமாகவே நோக்கப்படும். அதற்கு ஏதேனும் பாதிப்பு வருகின்றபோது முஸ்லிம்களின் பொறுமையும் நிதானமும் எல்லை மீறவே செய்யும்.

இவ்வாறான சூழ்நிலையிலேயே வடக்கு முஸ்லிம் சிவில் சமூகப் பிரதிநிதிகளுக்கும். மன்னார் மறை மாவட்ட ஆயர் அவர்களுக்குமிடையிலான சந்திப்பு கடந்த (11-7-2017) அன்று மன்னாரில் இடம்பெற்றிருக்கின்றது, இது ஒரு ஆரோக்கியமான முன்னகர்வாகும், இதனை மேலும் ஒழுங்கமைத்து இரண்டு சமூகத் தலைவர்களையும் ஒருங்கிணைத்து மேற்படி விடயத்தைத் தீர்ப்பதற்கு முஸ்லிம் சமூகம் முன்வரவேண்டும் என்பதுவே எம் எல்லோரதும் எதிர்பார்ப்பாகும்.


தொகுப்பு: அபூ அப்துல்லாஹ் –
1500010685_692_%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D.jpg1500010685_129_%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D.jpg1500010685_939_%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D.jpg1500010685_89_%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.