Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சசிகலாவை வேறு சிறைக்கு மாற்ற முடிவு? - உள்துறை அதிகாரிகள் அறிக்கையால் பரபரப்பு

Featured Replies

சசிகலாவை வேறு சிறைக்கு மாற்ற முடிவு? - உள்துறை அதிகாரிகள் அறிக்கையால் பரபரப்பு

 

 
அதிமுக (அம்மா) பொதுச்செயலாளர் சசிகலா | படம்: பிடிஐ.
அதிமுக (அம்மா) பொதுச்செயலாளர் சசிகலா | படம்: பிடிஐ.
 
 

பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதிமுக (அம்மா) பொதுச்செயலாளர் சசிகலாவை வேறு சிறைக்கு மாற்றுவது தொடர்பாக கர்நாடக அரசின் உள்துறை அதிகாரிகள் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர். இது தொடர்பாக முதல்வர் சித்தராமையாவுக்கு அறிக்கை அளிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சொத்துக்குவிப்பு மேல்முறை யீட்டு வழக்கில் தண்டிக்கப்பட்ட சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் கடந்த பிப்ரவரி 15-ம் தேதி பெங்களூருவில் உள்ள‌ பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். சிறையில் அடைக்கப்பட்டதில் இருந்து அதிகளவில் பார்வையாளர்களை சந்திப்பது, சிறப்பு வசதிகளை பெறுவது, எம்பி, எம்எல்ஏக்களை சந்திப்பது என ச‌சிகலா தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறார்.

“சிறை அதிகாரிகளுக்கு சசிகலா ரூ. 2 கோடி லஞ்சம் கொடுத்து, சிறையில் சிறப்பு சலுகைகளை அனுபவித்து வருகிறார்” என்று டிஐஜி ரூபா டி.மவுட்கில் கூறினார். டிஜிபி சத்தியநாராயண ராவ் ரூபாவின் புகாரை மறுத்தபோதும், சிறை முறைக்கேடு தொடர்பாக அடுத்தடுத்து வெளியான தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி யது.

இதனால் கர்நாடகாவில் உள்ள எதிர்க்கட்சிகள் அரசுக்கு எதிராகவும், உள்துறையை கண்காணிக்கும் முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராகவும் போர்க்கொடி தூக்கின. இதையடுத்து சித்தராமையா, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார் தலைமையில் உயர்நிலை விசாரணைக்குழுவை அமைத்தார்.

சித்தராமையா அதிர்ச்சி

சசிகலா லஞ்ச கொடுத்த விவகாரத்தில் சிறை அதிகாரிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலால், கைதிகளுக்கு இடையே இரு குழுக்கள் உருவானது. டிஐஜி ரூபாவுக்கு எதிராக திரண்ட ரவுடி குழு, மற்றொரு குழுவை தாக்க திட்டமிட்டது. சிறையில் இரு குழுக்களிடையே மோதல் ஏற்படும் சூழ‌லில் 50-க்கும் மேற்பட்ட கைதிகள் பெல்லாரி, குல்பர்கா உள்ளிட்ட சிறைகளுக்கு அதிரடியாக மாற்றப்பட்டனர்.

சில கைதிகள் சிறையில் சொகுசு வாழ்க்கை வாழும் சசிகலா, அப்துல் கரீம் தெல்கி, பிரபல தாதாக்கள் உள்ளிட்ட பணக்கார கைதிகளுக்கு எதிராக முழக்கம் எழுப்பினர். எல்லோருக்கும் ஒரே மாதிரியான வசதிகளை வழங்க வேண்டும் எனவும் தர்ணாவில் ஈடுபட்டனர். இதேபோல சிறைக்கு வெளியே உள்ள கைதிகளின் குடும்பத்தார் சசிகலா உள்ளிட்டோருக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர்.

இதனால் கர்நாடக அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டதால் முதல்கட்டமாக, சிக்கலில் சிக்கிய சிறை அதிகாரிகள் டிஜிபி சத்தியநாராயண ராவ், டிஐஜி ரூபா, கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர் ஒரே நாளில் இடமாற்றம் செய்யப்பட்டனர். ரூபா இடமாற்றம் செய்யப்பட்டதை எதிர்த்து பாஜக மாநில தலைவர் எடியூரப்பா, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் முறையிட்டுள்ளதால் சித்தராமையா அதிர்ச்சி அடைந்துள்ளார்.

அதிகாரிகள் ஆலோசனை

கர்நாடகாவில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் சிறை முறைகேடுகள் வெளியானதால் அரசுக்கு கடும் அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணமான அதிகாரிகளை முதல்கட்டமாக சித்தராமையா இடமாற்றம் செய்துள்ளார். அடுத்ததாக கர்நாடக அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்திவரும் கைதிகளையும் வேறு சிறைகளுக்கு இடமாற்றம் செய்ய திட்டமிட்டுள்ளார்.

இது தொடர்பாக அறிக்கை அளிக்கும்படி சித்தராமையா கேட்டுக்கொண்டதன் பேரில், உள்துறை செயலர்கள் நேற்று சிறையில் ஆய்வு செய்தனர். சிறையில் குழுக்களை உருவாக்குவது, ரவுடிகளை பாது காவலர்களாக வைத்துக்கொள்வது, விதி முறையை மீறுவது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் சிக்கியவர்களின் பட்டியலை தயாரித்துள்ளனர்.

கடந்த ஒரு மாதத்தில் விதிமுறை மீறலில் ஈடுபட்ட கைதிகளை உடனடியாக வேறு சிறைக்கு மாற்றுவது தொடர்பாக முடிவெடுத்துள்ளனர். இதன்படி முதல்கட்டமாக 50-க்கும் மேற்பட்டோர் வேறு சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.இதே போல சிறையில் செல்வாக்கோடு வாழும் சசிகலா, தெல்கி உள்ளிட்டோரையும் வேறு சிறைக்கு மாற்றுவது தொடர்பாக ஆலோசித்தனர்.

சசிகலா பாதுகாப்புக்கு சிக்கல்

இதன்படி உள்துறை அதிகாரிகள் சித்தராமையாவுக்கு அறிக்கை ஒன்றை அளித்துள்ளனர். அதில், '' சிறையில் நிலவும் அசாதாரண சூழல் சசிகலாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது. ஏற்கெனவே கர்நாடகா தமிழகம் இடையே நல்ல சூழல் நிலவாத நிலையில், சசிகலாவுக்கு ஏதேனும் அசம்பாவிதம் நேர்ந்தால் நிலைமை மோசமாகும்.

இதேநிலையில் சசிகலா பெங்களூரு சிறையில் தொடர்ந்து விதிமுறை மீறலில் ஈடுபட்டு வருகிறார். இந்த இரு காரணங்களையும் பரிசீலித்து அவரை கர்நாடகாவில் உள்ள வேறு சிறைக்கு மாற்றுவது தொடர்பாக முடிவெடுக்கலாம். குறிப்பாக துமக்கூரு, மைசூரு ஆகிய இடங்களில் மகளிருக்காக தனியாக உள்ள சிறைகளை பரிசீலிக்கலாம். சசிகலாவை வேறு மாநில சிறைக்கு மாற்றுவதற்கு உச்ச நீதிமன்றத்தின் ஒப்புதல் தேவை என்பதால் வேறு மாநில சிறைக்கு மாற்ற முடியாது'' என குறிப்பிட்டுள்ளனர்.

உள்துறை அதிகாரிகளின் இந்த ரகசிய அறிக்கையை கொண்டு கர்நாடக முதல்வர் சித்தராமையா, சசிகலாவை வேறு சிறைக்கு மாற்றுவது தொடர்பாக விரைவில் முடிவெடுப்பார் என கூறப்படுகிறது.

http://tamil.thehindu.com/india/சசிகலாவை-வேறு-சிறைக்கு-மாற்ற-முடிவு-உள்துறை-அதிகாரிகள்-அறிக்கையால்-பரபரப்பு/article9773781.ece?homepage=true

  • தொடங்கியவர்
சிறை,சசி,சிறப்பு,வசதிகள்,ரத்து

பெங்களூரு: பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அ.தி.மு.க., சசிகலாவும், அவரது உறவினர் இளவரசியும், கைதிகளுக்கான சீருடையை அணியாமல் விதிமுறைகளை மீறி வழக்கமான உடைகளை அணிந்திருந்த வீடியோ காட்சிகள் வெளியானதால் கர்நாடகா காங்., அரசுக்கு தர்சங்கடமான நிலை உருவாகி உள்ளது.

 

சிறை,சசி,சிறப்பு,வசதிகள்,ரத்து


இதையடுத்து சிறையில் சசிகலாவுக்கு அனைத்து சிறப்பு வசதிகளும் ரத்து செய்யப்பட்டு வேறு அறைக்கு மாற்றப்பட்டுள்ளார். இதற்கிடையில் உண்மையை வெளிப்படுத்திய டி.ஐ.ஜி., ரூபா, இடமாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து கைதிகள் போராட்டம் நடத்தி வருவதால் சிறைக்குள் கலவரம் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இரண்டு கோடி ரூபாய் லஞ்சம்


சொத்து குவிப்பு வழக்கில் நான்காண்டு சிறைத் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அ.தி.மு.க., சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்க சிறைத்துறை டி.ஜி.பி.,யாக இருந்த சத்யநாராயண ராவ் இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக அந்த துறையில் டி.ஐ.ஜி.,யாக இருந்த ரூபா குற்றம் சாட்டியிருந்தார்.

விசாரணை துவங்குவதற்கு முன் சத்யநாராயண ராவ், விடுப்பில் அனுப்பப்பட்டார். சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ண குமாரின் பதவி பறிக்கப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். ரூபாவை போக்குவரத்து மற்றும்

சாலை பாதுகாப்பு கமிஷனராக கர்நாடகா மாநில அரசு இடமாற்றம் செய்தது.

சில கைதிகள் திடீர் தர்ணா


இப்பிரச்னையில் பரப்பன அக்ரஹாரா சிறை கைதிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ரூபாவின் இட மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து 200க்கும் அதிகமான கைதிகள் நேற்று காலை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்னும் சில கைதிகள் கிருஷ்ணகுமாருக்கு ஆதரவாககோஷம் எழுப்பி பிரச்னை செய்ய முற்பட்டனர்.
சம்பவ இடத்துக்கு வந்த தற்காலிக சிறை கண்காணிப்பாளர் அனிதா கைதிகளை சமாதானப் படுத்தி சிற்றுண்டி சாப்பிட வைத்தார். அப்போது கிருஷ்ண குமார் இடத்துக்கு அனிதாவை நியமித்ததை கண்டித்து சில கைதிகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கைதிகளிடம் பிளவு ஏற்பட்டுள்ளதால் சிறைக்குள் கலவரம் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கைதிகளின் போராட்டத்தாலும் சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டுள்ள வீடியோ காட்சிகள் வெளியானதாலும் சசிகலா மற்றும் அவரது உறவினர் இளவரசிக்கு வழங்கப்பட்ட சலுகைகள் அனைத்தையும், சிறைத்துறை நிர்வாகம் ரத்து செய்துள்ளது. அவர்களை சிறையின் வேறொரு அறைக்கு மாற்றம் செய்ததாகவும் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் கர்நாடகா 'டிவி' சேனல்களில் நேற்றும் வீடியோ காட்சிகள் வெளியாகின. அதில் சிறை கைதிகள் அணியும் சீருடையை சசிகலா அணியாமல் நைட்டியும், சுரிதாரும் அணிந்திருக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது.
சசிகலா கையில் பை இருப்பது போன்ற காட்சியும் வெளியானது. இதனால் கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்., அரசுக்கு தர்மசங்கடமான நிலையும் எதிர்க்கட்சிகள் மத்தியில் கடும் எதிர்ப்பும் ஏற்பட்டுள்ளது.

 

 

வெளி உணவுக்கு தடை


பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வந்ததால் சிறையின் மூத்த அதிகாரிகள் உடனடியாக மாற்றப்பட்டனர். இதையடுத்து சிறைத்துறை, டி.ஐ.ஜி.,யாக போலீஸ் தலைமை அலுவலகத்தில் டி.ஐ.ஜி.,யாக இருந்த எச்.எஸ்.ரேவண்ணா நியமிக்கப் பட்டுள்ளார்.

சிறைத்துறை கண்காணிப்பாளர் பொறுப்பை அனிதா தற்காலிகமாக கவனித்து வந்தார். அவருக்கு எதிராக கைதிகள் போராட்டம் நடத்தி வந்ததால் மறு உத்தரவு வரும் வரை அந்த பொறுப்பை ரேவண்ணா கூடுதலாக கவனிப்பார் என அறிவிக்கப்ட்டுள்ளது.
கடந்த 16ம் தேதி பரப்பன அக்ரஹாரா சிறை கைதிகள் 32 பேர் அடித்து துன்புறுத்தப்பட்டு மாநிலத்தின் பல சிறைகளுக்கு மாற்றப்பட்டது குறித்து, டில்லியிலுள்ள தேசிய மனித உரிமை ஆணையம் நான்கு வாரங்களுக்குள் விளக்கமளிக்கும்படி கர்நாடக சிறைத்துறைக்கு நேற்று நோட்டீஸ் அனுப்பியது.
சிறையில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு வெளி உணவு கொண்டு வருவது நிறுத்தப்பட்டுள்ளது.
 

புதிய பொறுப்பில் ரூபா


போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு கமிஷனராக நியமிக்கப்பட்ட டி.ஐ.ஜி., ரூபா, பெங்களூருவில் உள்ள, மாநில டி.ஜி.பி., அலுவலகத்துக்கு நேற்று வந்து பொறுப்பேற்றார்.
அவர் கூறுகையில், ''அரசின் இடமாற்றத்தை பின்பற்றுவது, ஒரு போலீஸ் அதிகாரியின் கடமை,'' என்றார்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1814892

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.