Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வேலையில்லா பட்டதாரி

Featured Replies

வேலையில்லா பட்டதாரி

 

வேலை­யின்மை என்­பது தொழில்  இன்மை என்­பது மட்டும் அல்ல...  மன விருப்பம் இன்றி பிடிக்­காத தொழிலை சிலுவை போல சுமப்­பதும் மன­த­ளவில் வேலை­யின்மை  போன்றதே.. இத்தனை வருடங்கள் லயத்து பிரச்­சினை பற்றி பேசி­யது போதும் இனி சமூக மாற்றத்தை உருவாக்க சிறந்த தொழில் வாய்ப்பை பெற உதவுங்கள் மலையகத்தில் மாற்றம்  தானாகவே உருவாகும்....

 

வேலை­யில்லா பட்­ட­தாரி இது தனு­ஷோட படம் கிடை­யாது. எங்­க­ளோட வாழ்க்கை. தேயி­லைக்கு இரத்­தத்தை பாய்ச்சி தேநீ­ருக்கு நிறத்தை கொடுத்த ஒரு சமூ­கத்தின் இன்­றைய படித்த தலை­மு­றையின் ஒரு குரல் என் பேனாவின் வழி­யாக இங்கு ஒலிக்­கி­றது..

இயற்­கை­யோட இயைந்த வாழ்வு சங்க காலம் என்­பார்கள். உண்­மையில் மலை­ய­கத்தை விட இயற்கை சார்ந்த ஒரு அழ­கான வாழ்க்கை இந்த பூமியில் இல்லை என்­பது அதனை தவ­ற­விட்­ட­வர்­க­ளினால் மட்­டுமே உண­ர­மு­டியும்... மலை­க­ளுக்கு நடு­வி­லான பசுமை நிறைந்த அந்த வாழ்க்­கையின் அர்த்தம் தெரி­யாத ஆறு­வ­ய­சுல அப்பா கைபி­டித்து தாத்தா கைபி­டித்து ஆரம்­ப­மான கல்விப்பயணம்... கன­வுகள் காணத்­தெ­ரி­யாத வய­சுல நிலா நிலா ஓடி வா பாட்டு படிச்­சிட்டு... கொலை கொலையா முந்­தி­ரிக்கா விளை­யா­டிய காலத்­துல யாராச்சும் உன் இலட்­சியம் என்­னன்னு கேட்டா நான் டொக்­ட­ரா­கனும் லோய­ரா­கனும் என்று கூறி­ய­வர்­களில் எத்­தனை பேர் அந்த மலை­களை தாண்டி வந்து நம் இலட்­சி­யத்தை தொட்­டி­ருக்­கிறோம் என்று தெரி­யாது.

ஆனால் மலை­ய­கத்­தி­லி­ருந்து ஒருவன் படித்து பட்­ட­தா­ரி­யா­வது என்­பது இல­கு­வான செயல் கிடை­யாது... அதுவும் ஒரு தோட்டத்தொழி­லா­ளியின் பிள்ளை பட்­ட­தா­ரி­யா­வது என்­பது மிகப்பெரிய விடயம் தான்.. தோட்­டப்­புற பாட­சா­லையில் ஆரம்ப கல்­வியை கற்கும் போது எமக்கு வைத்­தி­ய­ருக்கு என்ன துறையை தேர்­வு­செய்ய வேண்டும். கணக்­கி­ய­லா­ள­னாக என்ன துறையை தேர்வு செய்ய வேண்டும் என்ற அறிவு கூட இருக்க வாய்­ப்பில்லை.. அதற்கு பின்­ன­ரான சிறு பரா­யத்தில் எப்போ ஸ்கூல் முடியும் வீட்­டுக்கு போகனும்.. நண்­பர்­க­ளோட இணைந்து விளை­யா­டனும்.. விறகு காட்­டுக்கு போகனும்.. அம்மா எப்போ மலை­யி­லி­ருந்து வேலை முடிந்து வீட்டு வரு­வாங்க.. இப்­ப­டிதான் மனசு இருக்கும்.. பதினென் பருவம் ஆரம்­பிக்கும் போது இது வாழ்க்கை... இப்போ நாம போடு­கிற அடித்­த­ளம்தான் நம்ம வாழ்க்­கையை தீர்­மா­னிக்கும் என்று சொல்­லித்­தர எத்­தனை பேருக்கு குருமார் கிடைத்­தி­ருப்பர் என்று தெரி­யாது... அத­னால்தான் 9 ஆம் ஆண்டு படிக்கும் போது வரும் பருவ காத­லி­லேயே பலர் தமது வாழ்க்­கையை தொலைத்து கல்­வியை இடை­விட்டு இன்று நகர்ப்புற ஆடை­தொ­ழிற்­சா­லை­களில் பணி­பு­ரி­கின்­றனர்.. இன்னும் சில­ருக்கு வறு­மையே கல்­வியை இடை­நி­றுத்த வைக்­கி­றது... அதெல்லாம் மீறி படிக்கும் போது, பாட­சாலை கட்­ட­ணங்­களை விட மேல­திக வகுப்­பு­க­ளுக்கு அதிகம் செலவு செய்ய வேண்டியுள்­ளது... இன்னும் மலை­ய­கத்தின் பல இடங்­களில் ஒரு ரயிலை விட்­டாலோ பஸ்ஸை விட்­டாலோ அதற்­காக பல­ம­ணி­நேரம் காத்­துக்­கி­டக்க வேண்டும்... போக்குவரத்து வச­திகள் இன்றி ஆறு­களை தாண்­டியும் தேயிலை காடு­களை கால் கடுக்க நடந்தும் பய­ணிக்­கின்ற நிலை இன்றும் உள்­ளது... இப்­படி ஆயி­ர­மா­யிரம் பிரச்­சினைகள்.. இதெல்லாம் தாண்டி ஒருவர் படிச்சு மேலே வரு­கின்­றமை என்­பது ரொம்ப பெரிய விஷயம்..

எப்­ப­டியோ கஷ்­டப்­பட்டு சாதா­ரண தரம் பாஸ் பண்­ணிட்டா அடுத்து உயர்­தரம்.... இங்­குதான் நம்ம வாழ்க்­கையின் வெற்­றி­தோல்வி மாறு­கி­றது... மருத்­து­வ­ரா­கனும் பொறி­யி­ய­லா­ள­ரா­கனும் என்ற கன­வோட படிக்­கிற மாண­வர்­க­ளுக்கு அந்த கல்­வியை போதிக்க தகு­தி­யான ஆசி­ரி­யர்கள் மலை­ய­கத்தை பொறுத்­த­வரை மிக குறைவு.

1983 களுக்கு முன்னர் மலை­ய­கத்தை பொறுத்தவரை வடக்கு, கிழக்கு பகு­தியை சேர்ந்த பட்­ட­தாரி ஆசி­­ரி­யர்­களே அதி­க­ளவில் உள்­வாங்­கப்­பட்டு கற்­பித்தல் நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டனர். இதனால் வள­மான கல்வி சமூகம் ஒன்று உரு­வாக வித்­திட்­டப்­பட்­டி­ருந்­தது. எனினும் துர­திர்ஷ்­ட­வ­ச­மாக இடம்­பெற்ற 1983 ஜூலை கல­வ­ரத்­துக்கு பின்னர் மலை­யக கல்வி நாசம் செய்­யப்­பட்டு விட்­டது என்று கூறி­னாலும் மிகை­யில்லை. பாட­சா­லைகள் எரித்து சாம்­ப­லாக்­கப்­பட்­டன. ஆசி­ரி­யர்கள் கொல்­லப்­பட்­டனர். வளங்கள் சூறை­யா­டப்­பட்­டன. பின்னர் இனப்­பி­ரச்­சினை தீவிரம் அடைந்­ததும் வடக்கு, கிழக்­கி­லி­ருந்து மலை­ய­கத்துக்கு வந்து கல்வி கற்­பிக்க ஆசி­ரி­யர்கள் விரும்­ப­வில்லை. இதனால் மலை­ய­கத்தில் பாரிய அளவில் ஆசி­ரி­யர் பற்­றாக்­குறை நில­வி­யது... இதற்கு தீர்வு முன்னாள் ஜனாதிபதி பிரே­ம­தாச காலத்தில் கிடைத்­தது. அவர் மலை­யக பகு­தியில் படித்த திற­மை­யான இளை­ஞர்­க­ளுக்கு ஆசி­ரியர் நிய­மனம் வழங்­கினார். இதற்கு பின்னர் ஆசி­ரியர் நிய­மனம் என்­பது தகு­தி அடிப்­படை என்­பதை விட வேலை­யில்லா பிரச்­சி­னைக்­கான ஒரு தீர்­வா­கவே மலை­ய­கத்தில் மாறி­யது. சில பாடங்­களில் தேர்ச்­சி­பெற்ற ஆசி­ரி­யர்கள் என்­பது இன்று வரை மலை­ய­கத்தில் ஒரு சில விரல் விட்டு எண்ணக் கூடிய பாட­சா­லை­க­ளி­லேயே உள்­ளனர்... அது போன்ற பாட­சா­லை­களில் எல்லா மாண­வர்­க­ளையும் இணைப்­பது என்­பது எளி­தல்ல.. ஏனெனில் குறிப்­பிட்ட தூரத்தில் வசிக்கும் மாண­வர்கள் அப்­ப­கு­தியில் உயர்­தர பாட­சாலை ஒன்று இருக்கும் பட்­சத்தில் வேறு பாட­சா­லையில் இணை­ய­மு­டி­யாது... எனவே மேல­திக வகுப்பு என்­பது தவிர்க்க முடி­யா­த­தா­கின்­றது.. ஆனால் பலர் வெறும் பணத்­திற்­காக மட்­டுமே மேல­திக வகுப்­பு­களை நடத்­து­கின்­றனர் என்­பது துர­திர்ஷ்டம்... இருப்­பினும் தேர்ச்சி பெற்­றவர் இல்­லாமல் இல்லை..எத்­தனை பிரச்­சி­னைகள் வந்­தாலும் இவை­ய­னைத்­தையும் தாண்டி கல்வி கற்று இரவு பக­லாக தூக்­கத்தை தொலைத்து பல்­க­லைக்­க­ழகம் எனும் இடத்­திற்கு ஒருவன் வரும் போது எத்­தனை எத்­தனை கன­வுகள் இருக்கும்....

 தேயிலை காடு­களில் உள்ள அட்­டை­க­ளுக்கு தனது உதி­ரத்தை உண­வாக்­கியும்.. தேனீக்­க­டி­க­ளுக்கு தன் தேகத்தை இலக்­கா­கியும் துயர வாழ்வு வாழும் ஒரு தாயின் கைப்­பி­டித்து வளர்ந்­த­வ­னுக்கு பல்­க­லைக்­க­ழ­கத்­துக்கு நுழையும் போது அந்த பல்­க­லைக்­க­ழக கட்­ட­டமே பிர­மிப்பு ஊட்­டு­வ­தா­கத்தான் இருக்கும். அதுவும் கிராமப் புறத்தை தாண்டி நகர்­ப்புறத்­துக்கு நுழையும் அந்த வாழ்க்­கையில் எத்­தனை கன­வுகள் சிற­க­டிக்கும்... நானும் கார் வாங்­கனும்... நானும் நக­ரத்­துல வீடு வாங்­கனும் இப்­படி ஆயிரம் கனவு இருக்கும்.. இதெல்லாம் வார்த்­தை­யால சொல்ல முடி­யாது.. பல்­க­லைக்­க­ழகம் கல்­வியை தொடரும் போது வறுமை பலரை வாட்­டு­வது இயல்பே.. புலமைப்பரி­சில்கள் கிடைத்­தாலும் அம்மா வீட்­டுல இருந்து அனுப்­புற காசுக்­காக காத்­தி­ருக்­கனும்... பல்­க­லைக்­க­ழக கல்­வி­யிலும் பிர­தேச வாதம்...இன­வாதம்.. செல்­வாக்கு இப்­படி பல விட­யங்கள் தலை­காட்டும் இதெல்லாம் தாண்டி.. கஷ்­டப்­பட்டு அங்­கேயும் இரவு பக­லாக படிச்சு ஒரு பட்­டத்த வாங்­கிற கஷ்டம்.. அதன் பின் வரு­கின்ற ஆனந்தம்... அம்மா அப்பா நம்ப உற­வுகள் இதனால் அடை­கின்ற மகிழ்ச்சி இதெல்லாம் வெறும் வார்த்­தை­களால் சொல்ல முடி­யாது..

ஆனால் பட்­ட­தா­ரி­யான பிறகும் தகு­திக்கு ஏற்ப பிடித்­த­மான வேலை­யில்­லாமல் கஷ்­டப்­ப­டுற நிலைமை...இது நம்ம எதி­ரிக்கு கூட வரக்­கூ­டாது... மலை­ய­கத்­துல பிரச்­சி­னைனு 100 வரு­ஷத்­துக்கு மேல் எதை எதையோ பேசிட்­டாங்க.... ஆனால்.. இப்போ... படிச்­சுட்டு நமக்கு பிடிச்­ச­மா­தி­ரி­யான வேலை வாய்ப்­புகள் இல்­லாமல் நாம் படு­கின்ற மன உளைச்சல் யாருக்கும் புரி­யாது... இத பற்றி பேசவோ யோசிக்­கவோ யாரும் இல்லை... மலை­ய­கத்தில் குறிப்­பாக கலை பட்­ட­தாரி இளை­ஞர்­க­ளுக்கு கிடைக்­கின்ற ஒரே வாய்ப்பு ஆசி­ரியர் நிய­மனம் மட்­டுமே... எப்­போ­தா­வது உள்­ளூ­ராட்சி மன்­றங்­களில் வேலை­வாய்ப்பு அதுவும் ஆளணி தட்­டுப்­பாட்டு ஏற்­படும் போது கிடைக்கும்.. ஆனால் எல்லா பட்­ட­தா­ரி­க­ளையும் அதற்குள் உள்­வாங்க முடி­யாது... பொது­வாக பட்­ட­தா­ரி­க­ளுக்கு கிடைக்­கின்ற வேலை­வா­ய்ப்பு என்­பது ஆசி­ரியர் நிய­மனம் மட்­டுமே.. ஆசி­ரியர் நிய­மனம் என்­பது தவ­றில்லை... அந்த தொழிலை விரும்பி ஏற்றால் மட்­டுமே அது பூரண பலனை வழங்கும்... ஆனால்.. இங்கு வேலை­யில்லை.. என்­ப­தற்­காக அந்த தொழிலை தேர்ந்­தெ­டுத்­த­வர்­களே அதிகம்... ஒரு ஆசி­ரி­யரால் மட்­டுமே ஒரு மருத்­து­வனை ஒரு சட்­டத்­த­ர­ணியை ஏன் இந்த நாட்டின் நல்ல தலை­வனை உரு­வாக்க முடியும்... ஆனால், அந்த தொழிலை தகு­தி­யுள்ள ஒருவன் அர்ப்­ப­ணிப்­புடன் செய்யும் பட்­சத்­தி­லேயே அது பூரண பலனை வழங்கும்... அண்­மையில் மலை­ய­கத்தில் பட்­ட­தாரி ஆசி­ரியர் நிய­மனம் வழங்­கப்­பட்­டுள்­ளது... அதுவும் 10 வரு­டங்­க­ளுக்கு ஒரு ஆசி­ரியர் குறித்த கஷ்ட பிர­தே­சத்­தி­லேயே பணி­யாற்ற வேண்டும்... இட­மாற்றம் கோர­மு­டி­யாது... ஆரம்­ப­ப்பி­ரிவு பாட­சா­லை­க­ளுக்கு பட்­ட­தாரி ஆசி­ரி­யர்கள்.. உண்­மையில் அதனை எத்­தனை பேர் மன மகிழ்­சி­யுடன் ஏற்­றனர் என்­பது கேள்விக் குறியே.. பட்­ட­தாரி ஆசி­ரி­யர்கள் ஆரம்ப பிரி­வுக்கு கல்வி கற்­பிப்­பது தவ­றல்ல.. ஆனால் அவர்­க­ளது கல்வி வளம் வீண­டிக்­கப்­ப­டு­கின்­றது. என்­பது புரிந்து கொள்­ளப்­ப­டாமல் உள்­ளது... சில வரு­டங்­க­ளுக்கு முன்னர் மலை­ய­கத்தில் பெரி­ய­ளவில் தகுதி எதுவும் பார்க்­காமல் ஆசி­ரியர் நிய­மனம் வழங்­கப்­பட்­டது. அப்­போது அதற்கு பர­வ­லாக எதிர்ப்பு தெரி­விக்­கப்­பட்­ட­போ­திலும்... அதனை யாரும் கண்­டு­கொள்­ள­வில்லை.. இன்று அந்த நிய­மனம் பெற்­ற­வர்­களில் பலர் உயர்­தர ஆசி­ரி­யர்­க­ளாக உள்ள நிலையில் ஒரு புவி­யியல் பட்­ட­தா­ரி­யையும் விஞ்­ஞான பட்­ட­தா­ரி­யையும் ஆரம்ப பாட­சாலை ஆசி­ரி­ய­ராக்­கு­வது எந்­த­ளவு கல்வி வளம் வீண­டிக்­கப்­ப­டு­கின்­றது என்­பதை உண­ர­வைக்­கி­றது... மலை­யக பட்­ட­தா­ரி­களில் பலர் ஒரு அரச நிறு­வனம் அல்­லது குறிப்­பிட்­ட­ளவு சம்­ப­ளத்­துடன் ஒரு மகிழ்ச்­சி­யான தொழில் என்­ப­தனை மட்­டுமே எதிர்­பார்க்­கின்­றனர்.. ஆனால் இயல்பில் இதனை பெற்­றுக்­கொள்ள முடி­யாதுள்­ளது... தொழில் வளம் என்­பது அங்கு மிக குறை­வாக உள்­ளது.. சாதா­ர­ண­மாக படித்­த­வர்­களும் ஆசி­ரி­யர் நிய­மனம் பெற்­று­வி­டு­கின்­றனர். ஆசி­ரி­ய­ராக வேண்டும் என்று ஆசி­ரியர் கல்வி கல்­லூ­ரி­களில் படித்து வரு­கின்ற ஒருவர் மகிழ்ச்­சி­யுடன் கற்­பிக்கும் அள­வுக்கு மனம் விரும்­பாமல் ஆசி­ரியர் தொழிலை வெறும் தொழி­லுக்கு பெறு­கின்ற ஒரு­வரால் மகிழ்ச்­சி­யாக செய்ய முடி­யாது. நான்கு, ஐந்து வரு­டங்கள் பல்­க­லைக்­க­ழ­கத்தில் கல்வி கற்று வெளியேறும் போது அதற்­கான தொழில் வாய்ப்பு இங்கு இல்லை. வேலை­வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற ஒரே நோக்­கத்­துக்­காக அவர்­க­ளுக்கும் ஆசி­ரியர் நிய­ம­னத்தை வழங்­கு­கின்­றனர். ஏன் படிச்சோம் ஏன் பல்­க­லைக்­க­ழகம் சென்றோம் என்று பல­ருக்கு இதனால் தோன்­று­கி­றது. என்ன படித்­தாலும் ஆசி­ரியர் தானே. இதற்கு எதற்கு பல்­க­லைக்­க­ழகம் என்று எண்­ணா­த­வர்கள் குறைவு.. வேலை­யில்லா பட்­ட­தாரி திரைப்­ப­டத்தில் கூட இறு­தியில் தனுஷ் தனக்கு பிடித்த தொழிலை வெற்­றி­க­ர­மாக பணி­யாற்­றுவார்..ஆனால்... நாம்... பொரு­ளா­தாரம்.. இறு­திக்­கால நன்மை என்­ப­தற்­காக விரும்­பியோ விருப்பம் இல்­லா­மலோ தொழிலை தேர்வு செய்­கிறோம்.

 உண்­மை­யி­லேயே இன்­றைய அர­சாங்­கத்­துக்கு மலை­யக கல்­வியின் மீது உண்­மைத்­தன்­மை­யான அக்­க­றையும் அனு­தா­பமும் இருக்­கு­மாக இருந்தால் முதலில் அர­சாங்­கமும் அர­சி­யல்­வா­தி­களும் சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரி­களும் அவ­ர­வரின் நிகழ்ச்சி நிரல்­களில் இருந்து வெளிவந்து பொது­வான செயற்­றிட்டம் அல்­லது பொறி­முறை ஒன்றை உரு­வாக்க வேண்­டி­யது மிக மிக அவ­சி­ய­மா­கின்­றது. அது­மாத்­தி­ர­மன்றி மலை­யக பட்­ட­தா­ரி­களை ஆசி­ரியர் தொழி­லுக்குள் மட்டும் என்று ஒரு குறு­கிய வட்­டத்­துக்குள் முடக்கி விடாது வேறு தொழில் வாய்ப்­பு­களை ஏற்­ப­டுத்தி கொடுப்­பது பிரச்­சி­னைக்கு தீர்­வாக அமை­யலாம். .. வெளிநாட்டு முத­லீ­டு­களை பெற்­றா­வது வேறு தொழில் வாய்ப்­பு­களை மலை­ய­கத்தில் ஏற்­ப­டுத்த முடியும். அது மலை­யகம் சார்ந்­த­தாக இருக்க வேண்டும் என்று அர்த்­தப்­பட தேவை­யில்லை. மாறாக மலை­ய­கத்­துக்கு வெளியிலும் இதனை நடை­மு­றைப்­ப­டுத்த முடியும். தொழில் பேட்­டை­க­ளையும் தொழில் நிறு­வ­னங்­க­ளையும் உரு­வாக்­கு­வ­தற்கு எமது நாட்டில் வளங்கள் நிறைந்து காணப்­ப­டு­கின்­றன. ... இவற்றை முறை­யாக பாவித்து அல்­லது வரை­யறை செய்து தர­மான தொழில் வாய்ப்­பு­களை அமைத்­துக்­கொ­டுக்க முடியும் . இல்­லை­யெனில் வெளிநாட்­டி­லேனும் தொழில் வாய்ப்­பு­களை பெறக்கூடிய வகையில் எமது கல்வி முறையில் மாற்­றத்தை செய்து பாட­சாலை முடித்து பல்­க­லைக்­க­ழகம் நுழையும் போது தொழில் கல்­வியை பெற்­றுக்­கொள்­வ­தற்­கான வாய்ப்பை ஏற்­ப­டுத்தி கொடுக்­கலாம்...

 வேலை­யின்மை என்­பது தொழில் இன்மை என்­பது மட்டும்.. அல்ல... மன விருப்பம் இன்றி பிடிக்­காத தொழிலை சிலுவை போல சுமப்­பதும் மன­த­ளவில் வேலை­யின்மை போன்­றதே.. எனவே மாற்­றத்தை உரு­வாக்­குங்கள்.. லயத்து பிரச்­சினை பற்றி பேசி­யது போதும்.. இந்­தி­யா­வில இருந்து இந்த மண்­ணில் குடி­யேறி 150 வரு­டங்­க­ளா­கி­விட்­டன.. இன்னும் இதை பேசியே அங்கு கட்­சிகள் வாழ்­கின்­றன.... அடுத்த தலை­முறை வந்­து­விட்­டது.. மலை­யகம் முன்­னேற்றம் அடைய பிரச்­சி­னை­களில் இருந்து வெளியேற ஒரே வழி கல்வி கல்வி...கல்வி.. என்று சொன்­னார்கள்... ஆனால்.. இன்று ஏன் படித்தோம் என்ற எண்ணம் வந்­து­விட்­டது.. பல்­க­லைக்­க­ழக தேர்வு என்­பது ஒரு காலத்தில் பகல் கனவே.... ஆனால் இன்று சாத்­தி­ய­மா­னது... ஆனால் வேலை­யின்மை பின் தொடர்­வது வேத­னை­யா­ன­தொன்று.. மலை­ய­கத்தின் ஒவ்­வொரு பட்டதாரி மாணவரையும் குறிப்பாக கலை பட்டதாரிகளை இப்பிரச்சினை களையிழக்க வைத்துக்கொண்டிருக்கிறது... பச்சை போர்வைகளை போர்திக்கொண்ட மலையகத்தின் பசுமை அங்கு வாழும் மக்களின் வாழ்க்கையில் ஒட்டிக்கொள்ள மறுப்பது பரம்பரை நோயாகி கொண்டிருக்கிறது.. இனி பிரச்சினை பற்றி பேசாமல்.. தீர்வுகளை பெற்றுக்கொடுக்க முயற்சி செய்ய வேண்டும்.. தொழில் வாய்ப்புகளை மலையகத்தில் உருவாக்குங்கள்... நல்ல தொழில் கிடைத்தாலேயே வீடு, வாசல், வாகனம் என்று அனைத்தும் கிடைத்து விடும்... நாம் எதிர்பார்க்கின்ற வாழ்க்கை முறைமை மாற்றம் சாத்தியப்பட்டு விடும்.. ஒருவன் படித்து முன்னேறுவது அவனது சொந்த முயற்சியினால் மட்டுமே... அரசியல் உதவியோடு அல்ல. அப்படி முன்னேறுபவனுக்கு உதவி செய்யுங்கள்.. தொழில் ரீதியான உதவியை பெற்றுக்கொடுங்கள்.... உங்கள் கல்வி தகைமைகளை பாராது உங்களுக்கு வாக்களித்த பெற்றோர்களின் வாழ்வு வளமாக நீங்கள் வேறொன்றும்.. செய்யாதீர்கள்.. தொழில் பேட்டைகளை மலையகத்தில் உருவாக்கி தொழில் வாய்ப்புகளை அவர்களின் பிள்ளைகளுக்கு பெற்றுக்கொடுங்கள்... அதுவே மலையகத்தை மாற்றிவிடும்.. மலையக சமூகத்தை மேம்படுத்த வேண்டும் அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். என்பதே இக்கட்டுரையின் நோக்கம்.. 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-07-15#page-6

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.