Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏசு ஜென்ம பூமி எப்படியிருக்கு இன்று?

Featured Replies

ஏசு ஜென்ம பூமி எப்படியிருக்கு இன்று?

ஐரோப்பா, அமெரிக்கா என்று பல பகுதிகளில் சிதறிக் கிடந்த யூதர்கள் தங்களுக்கென்று ஒரு தனி நாடு இல்லையே என்று ஏங்கினர். பைபிளின்படி பாலஸ்தீனம்தான் தங்களது தாயகம் என்று முடிவெடுத்து அவர்கள் பாலஸ்தீனத்தில் கொத்துக் கொத்தாக குடியேறத் தொடங்கினார்கள்.

இந்தியாவில் ராமஜென்ம பூமி பிரச்னை ஏற்கெனவே இரண்டு மத்திய அரசுகளை 'ஸ்வாகா' செய்தது போதாதென, இப்போது மூன்றாவது அரசின் ஸ்திரத்தன்மைக்கு வேட்டு வைத்துவிடுமோ என்ற சந்தேகத்தைக் கிளப்பி ஜவ்வல்லாடிக் கொண்டிருக்க ஏசு பிறந்த பூமி, அதுவும் அடுத்த மில்லெனியத்தின் முதல் ஆண்டில் எப்படியிருக்கிறது என ஒரு பார்வை.

மாட்டுக் கொட்டகையில் மேரி மாதாவுக்குப் பிறந்தார் ஏசுபிரான் என்பது நமக்குத் தெரிந்ததுதான். ஆனால் அந்த பெத்லஹெம் என்று சிறு நகரம் அன்றும், இன்றும் சந்தித்த/சந்தித்துக் கொண்டிருக்கும் போராட்டங்கள்தான் எத்தனை வித்தியாசமானவை.

இஸ்ரேலின் தலைநகரமான ஜெருசலேம் நகரிலிருந்து எட்டு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது பெத்லஹெம். ஏசுநாதர் பிறந்த காலத்தில் இஸ்ரேல் என்று ஒரு நாடே கிடையாது. பாலஸ்தீனம் என்று அழைக்கப்பட்ட அந்தப் பகுதியில் அப்போது ஆண்டு வந்த மன்னனின் பெயர் ஹெராட். ஏசுநாதர் பிறந்த ஒரு வருடத்தில் அவன் இறந்துவிட்டான். என்றாலும் யூத இனத்தை அசைத்துப் பார்க்கும் வகையில்-புதிய மதத்தை நிறுவ தேவன் பிறந்துவிட்டான் என்பதை அறிந்ததும், அந்த ஒரு வருடத்திற்குள் அவன் நிறைய பாவங்களைச் செய்தான்.

தேவதூதன் பிறந்த சரியான தேதி அந்த மன்னனுக்குத் தெரியவில்லை. (சொல்லப்போனால் நமக்கும் அந்தத் தேதி துல்லியமாகத் தெரியாது. மூன்றாம் நூற்றாண்டில்தான் ஏசுவின் பிறந்தநாளை டிசம்பர் 25 என்று குத்துமதிப்பாக கணக்கிட்டு அதை கிறிஸ்துமஸ் திருநாளாகக் கொண்டாடும் வழக்கம் அமலுக்கு வந்தது) இரண்டு வயதுக்குட்பட்ட அத்தனை ஆண் குழந்தைகளையும் கொல்ல ஆணையிட்டான் மன்னன். ஏசுபிரானின் தந்தை ஜோஸப்பின் கனவில் இதுகுறித்து தேவதை எச்சரிக்க, குழந்தையோடு அதன் பெற்றோர் எகிப்துக்குப் பறந்து மன்னன் ஹெராட் இறந்த பிறகுதான் மீண்டும் அந்தப் பகுதிக்குத் திரும்பினர்.

கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளில் பெத்லஹெம் ஒரு காட்டாறைப் போல பல சரித்திரச் சம்பவங்களை சந்தித்து வந்திருக்கிறது. ஹிப்ரு மொழியில் பெத்லஹெம் என்றால் ''உணவு இல்லம்'' (House of Bread)

மன்னன் தாவீது காலத்தில் இந்த நகரைச் சுற்றியும் சுவர் எழுப்பப்பட்டது. பிறகு யவனர்கள், ரோமானியர்கள், அரபு முஸ்லிம்கள் என்று வெவ்வேறு இனத்தவர்கள் இந்த நகரை ஆட்சி செய்துள்ளனர். முதலாம் சிலுவைப் போரில் இந்தப் பகுதி கிறிஸ்துவர் வசம் சென்றடைந்தது. ஆனால், காலப்போக்கில் மீண்டும் துருக்கிய முஸ்லிம்கள் வசம் மாட்டிக்கொண்டது.

முதலாம் உலகப் போரில் பிரிட்டன் இந்தப் பகுதியை அபகரித்துக் கொள்ள பின் 1950-ல் பெத்லஹெம்-ஜோர்டான் நாட்டின் ஒரு பகுதியானது.

ஜெருசலேம் நகரம் யூதர்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் ஆகிய மூவருக்குமே மிகவும் முக்கியமான ஒரு நகரம்.

ஐரோப்பா, அமெரிக்கா என்று பல பகுதிகளில் சிதறிக் கிடந்த யூதர்கள் தங்களுக்கென்று ஒரு தனி நாடு இல்லையே என்று ஏங்கினர். பைபிளின்படி பாலஸ்தீனம்தான் தங்களது தாயகம் என்று முடிவெடுத்து அவர்கள் பாலஸ்தீனத்தில் கொத்துக் கொத்தாக குடியேறத் தொடங்கினார்கள்.

பைபிள் உருவான காலத்தில் ஜெருசலேமும் அதனருகில் உள்ள பெத்லஹெமும் யூதர்களின் பிடியில் இருந்தன என்றாலும், நவீன காலகட்டத்தில் அங்கு பெரும்பான்மையாக இருந்தவர்கள் முஸ்லீம்கள்தான்.

''இது எங்கள் நாடு'' என்று யூதர்களும், முஸ்லிம்களும் பாலஸ்தீனத்தின் ''மேற்குக் கரை'' பகுதியை அறிவிக்க, கடும் கருத்து வேறுபாடு தொடங்கியது. பிறகு ஐ.நா. சபையின் ஆலோசனையின்படி பாலஸ்தீனம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. அந்த இரண்டில் ஒன்றாக, யூதர்களின் தனி நாடாகப் பிறந்ததுதான் இஸ்ரேல்.

இஸ்ரேலைச் சுற்றியுள்ள அத்தனையும் அரபு நாடுகள். என்றாலும் இந்த எதிர்ப்பை இஸ்ரேல் தாக்குப் பிடிக்கிறது என்றால் அதற்குக் காரணம் அமெரிக்காவின் பக்க பலம்தான். நடுவே மேற்குக் கரை, காஸா, கிழக்கு ஜெருசலேம் போன்ற பகுதிகளையும் பாலஸ்தீனத்திடமிருந்து பறித்துக்கொண்டது இஸ்ரேல்.

யாசர் அராபத் தலைமையில் பாலஸ்தீனிய விடுதலை இயக்கம் உருவானது. உலக நாடுகளின் ஆதரவு அதற்குப் பெருகவே சமாதான உடன்படிக்கையில் கையெழுத்திட வேண்டிய கட்டாயம் இஸ்ரேலுக்கு ஏற்பட்டது. இதன்படி மேற்குக் கரைப் பகுதி பாலஸ்தீனியர்களுக்கு அளிக்கப்பட பெத்லஹெம் பகுதி மீண்டும் கைமாறியது.

முஸ்லிம்கள் தங்கள் தனிப் பெரும் சொத்தாகக் கருதுவது ஜெருசலேத்திலுள்ள ஹாம் அல் ஷரீப் என்ற புனிதத் தலத்தை. ஆனால் இதை 'டெம்பிள் மவுண்ட்' என்று அழைத்து அதைத் தங்கள் புனித இடமென்று சாதிக்கிறார்கள் யூதர்கள். மூன்று மாதங்களுக்கு முன் ஏரியல் ஷாரன் என்ற தலைவர் இஸ்ரேல் பிரதமர் பாரக்கின் அனுமதியுடன் ராணுவத்தினர் சூழ அந்த இடத்துக்கு விஜயம் செய்ய, கொஞ்சம் அணைந்திருந்த வன்மத்தீ, மீண்டும் பற்றிக்கொண்டது. (காரணம் பாலஸ்தீனிய முஸ்லீம்களை வேரோடு களைய வேண்டும் என்று கருதி செயல்பட்டவர் அவர்)

இதற்கிடையில் இஸ்ரேல் பிரதமர் பாரக் ஒரு புதிய அமைதித் திட்டத்தை அறிவித்தார். பிரச்னைக்குரிய பகுதிகளில் படிப்படியாக அமைதியை ஏற்படுத்துவதுதான் அந்தப் புதியத் திட்டம். இதைப் பாலஸ்தீனிய அதிகாரிகள் நிராகரித்து விட்டனர். யாசர் அராபத்தின் நண்பர் மற்றும் அதிகாரியான நபீல் அபு நாங்கள் சர்வதேச நாடுகளின் உத்தரவாதத்துடன் இறுதி ஒப்பந்தத்தை ஏற்படுத்தத்தான் விரும்புகிறோம். இதுபோன்ற இடைக்கால ஒப்பந்தத்தை ஏற்கப் போவதில்லை'' என்று கூறியிருக்கிறார்.

இந்நிலையில் மேற்குக் கரையில் வசித்து வந்த யூத இனத்தைச் சேர்ந்த ஐந்து பேரை இஸ்ரேல் கமாண்டோ படையினர் சுட்டுக்கொன்றனர். ரம்ஜான் மாதம் தொடங்கியதை அடுத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக பாலஸ்தீன அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ஏசுநாதர் அவதரித்த பிரதேசத்தில் இன்று குண்டுமழை. பற்றி எரிந்து கொண்டிருக்கிறது பாலஸ்தீனம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.