Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாற்றுத் தலைமைக்கான வாய்ப்புகளைத் தோற்கடிப்பது யார்?

Featured Replies

மாற்றுத் தலைமைக்கான வாய்ப்புகளைத் தோற்கடிப்பது யார்?
 

கோடைக் காலத்தில் எப்போதாவது ஒருநாள் சில மணித்துளிகள் பெய்யும் சிறுமழையை நம்பி, விவசாயம் செய்ய முடியுமா? அதுவும், வரட்சியின் உச்சத்தில் நிலம் வெடித்து வெம்மையை கக்கிக் கொண்டிருக்கின்ற தருணத்தில், சிறுமழையை நம்பி விவசாயத்துக்கான பெரும் ஏற்பாடுகளைச் செய்யும் தொழிலாளியை மற்றவர்கள் எப்படிப் பார்ப்பார்கள்?  

 அந்த மழையின் ஈரம், நிலத்தில் அரையடி இறக்கும் முன்னரே, நிலத்தின் வெம்மையினால் கானலாக மாறி, காணாமற்போய்விடும். இப்படியான நிலையை எந்தவொரு மனிதனும் உணர்ந்து வைத்திருப்பான். அதுவும், வடக்கு- கிழக்கில் அந்த மண்ணோடும் அதன் வாசத்தோடும் வாழும் மக்களிடம், சிறுமழையை மாரி மழைபோல கருத வேண்டும் என்று கோருவதும், அதற்குண்டான காட்சிகளை வடிவமைப்பதும் எவ்வகையான புத்திஜீவித்தனம்?  

இப்படியான காட்சியொன்றையே கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தமிழ்த் தேசிய அரசியல் பரப்பு, தொடர்ச்சியாகப் பிரதிபலித்து வருகின்றது; மக்களை நோக்கி முன்வைக்கின்றது. இது உண்மையிலேயே பொறுப்புணர்வுள்ள நிலையா? சமூகத்தின் மீதான சதியில்லையா?  

வடக்கு- கிழக்கு என்கிற நிலம், முப்பது ஆண்டுகளாக இடைவிடாது ஓடிய பெரு நதியொன்றைக் கண்டு, அதன் அக-புறத் தாக்கங்களோடு இருந்து வருகின்றது. அப்படிப்பட்ட நிலையில், அந்த நதியின் ஓட்டம் நின்றுவிட்டது என்பதற்காக, சில மணித்துளிகள் பெய்யும் சிறுமழையை பெரு நதி போல காட்டிக் கொள்வதற்குப் பெயர் என்ன?   
இந்தக் கேள்விகள், தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள், செயற்பாட்டாளர்கள், கல்வியாளர்கள், ஊடகங்கள், அரசியல் பத்தியாளர்கள் என்கிற அனைத்துத் தரப்புகளையும் நோக்கியது. குறிப்பாக, பட்டறிவுகளுக்கு அப்பால் நின்று புத்திஜீவித்தனம் பேசும் தரப்புகள் மீதானது.  

“...மாற்றுத் தலைமை காலத்தின் கட்டாயம். தற்போதைய சூழலில் சரியான பாதையில் பயணிப்பதற்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தயங்குவாரானால், இன்னொரு தலைமையையோ அல்லது கூட்டுத் தலைமையையோ உருவாக்குவதற்குப் பின்நிற்க மாட்டோம்...” என்று கடந்த வாரம் மட்டக்களப்பில் ஊடகவியலாளர்கள் மத்தியில் பேசும் போது ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்திருக்கின்றார்.  

image_296a6d361f.jpg

மாற்றுத் தலைமையை ஏற்பதற்கு முன்வருவீர்களாக? என்கிற கேள்விக்கு, 
“...மாற்றுத் தலைமை தொடர்பில் முடிவு எடுப்பதற்கு ஒன்றுமில்லை. முக்கியமான காலகட்டத்தில் இருக்கின்றோம். எமது அரசியல் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். இந்த இடத்தில் எமது தனிப்பட்ட குரோதங்கள் மற்றும் முரண்பாடுகளை முன்வைத்துப் பிரிவுகளை ஏற்படுத்துவது எமக்கு நல்லதல்ல. இங்கு எந்தவிதப் பிரிவினைக்கும் இடமில்லை...” என்று விக்னேஸ்வரன் பதிலளித்து, சில நாள்களுக்குள்ளேயே சுரேஷ் பிரேமச்சந்திரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருக்கின்றார்.  

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவுகளை எடுக்கும் தலைமைக்கும் விக்னேஸ்வரனுக்கும் இடையில் இருப்பது கொள்கை ரீதியான முரண்பாடுகள் என்று தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், அவரே, தனிப்பட்ட குரோதங்களுக்காக பிளவுபட முடியாது என்கிற தோரணையில் கருத்து வெளியிட்டிருக்கின்றார்.   

கடந்த பொதுத் தேர்தல் காலத்திலிருந்து கூட்டமைப்பின் நிலைப்பாடுகளுக்கு அப்பால் நின்று இயங்கி வரும் விக்னேஸ்வரன், ஒரு கட்டம் வரையில் கொள்கை ரீதியான முரண்பாடு என்பது மாதிரியாகத்தான் காட்டிக் கொண்டு வந்தார். 

அப்படித்தான், அவரை முன்னிறுத்தி காட்சிகளுக்கான திரைக்கதையை எழுதியவர்களும் நம்பினார்கள். அல்லது நம்புவதுபோல நடித்தார்கள். இன்றைக்கு அவர்களையே விக்னேஸ்வரன் நட்டாற்றில் விட்டிருக்கின்றார். அவர்களோ கதறிக் கொண்டிருக்கின்றார்கள்.  

தமிழ் மக்கள் பேரவை உருவாகிய காலத்தில், பேரவை தொடர்பில் சிறியளவிலான நம்பிக்கை மக்களிடம் இருந்தது. ஆக்கபூர்வமான செயற்பாடுகளுக்கான உந்துதல்களைப் பேரவை, அரசியல் ரீதியான அழுத்தங்களினூடு வழங்கும் என்றும் நம்பினார்கள்.   

ஆனால், இன்று பேரவை வந்து சேர்ந்திருக்கின்ற இடம் இது? அதனால், இரண்டு ‘எழுக தமிழ்’ நிகழ்வுகள், தீர்வுத் திட்ட யோசனை வரைபு, ஒரு பண்பாட்டு விழா தவிர்ந்து ஆற்றிய கருமங்கள் என்ன? உண்மையிலேயே பேரவைக்குள் இருக்கின்றவர்கள் அதன் செயற்பாடுகளுக்காக ஒரு நாளில் சில நிமிடங்களையாவது ஒதுக்குகின்றார்களா? என்றெல்லாம் கேள்விகள் எழுகின்றன.  

குறிப்பாக, பேரவைக்குள் இருக்கும் அரசியல் கட்சிகளைத் தவிர்ந்த புத்திஜீவிகள், செயற்பாட்டாளர்கள் தரப்பு, பேரவையின் முன்னோக்கிய பயணத்துக்காக ஒருநாளைக்கு 10 நிமிடங்களைக்கூட ஒதுக்குவதற்குத் தயாராக இல்லை என்று அந்த அமைப்புக்குள் இருக்கின்ற முக்கியஸ்தர் ஒருவர் குற்றம்சாட்டுகின்றார்.  

தமிழ்த் தேசிய அரசியலின் நல்மாற்றங்கள் தொடர்பில் ஆர்வத்தோடு இருப்பது நல்ல விடயம். ஆனால், அதைச் செயற்பாட்டுத் தளத்துக்கு நகர்த்தாது, அதற்காக சில நிமிடங்களைக்கூட ஒதுக்கத் தயாராக இல்லாதவர்களினால், உண்மையில் மாற்றம் நிகழுமா? அப்படியானால், அரசியல்வாதிகளின் தேர்தல் கால பேச்சுகளுக்கும் இவர்களின் நடத்தைக்கும் இடையிலான வித்தியாசம் என்ன? இரண்டுமே உணர்ச்சி ஊட்டல்களுடனான சில ஆதாயங்களுக்கானது மட்டுந்தானா?  

image_4aee484e85.jpg

தமிழ்த் தேசிய அரசியல், கடந்த இரண்டரை ஆண்டுகளாகக் கிடைத்துள்ள சிறு (ஜனநாயக) வெளியை வீணாக்கிக் கொண்டிருக்கின்றது; காலம் கடத்துகின்றது; போலிகள் மீது நம்பிக்கையைக் கட்டமைத்து மக்களை நட்டாற்றில் தள்ள நினைத்திருக்கின்றது. இது, தொடர்பில் சாதாரண மக்களின் கேள்விகளுக்கு, புத்தஜீவிகளும் செயற்பாட்டாளர்களும் அரசியல் பத்தியாளர்களும் பதிலளிக்கத் தயாராக இருக்கின்றார்களா என்றால், பதில் இல்லை.  

புளோட் அமைப்பில் 1980 களில் இயங்கிய முன்னாள் போராளி ஒருவருடன், தமிழ் மக்கள் பேரவை உருவாக்கப்பட்ட காலத்தில் உரையாடும் வாய்ப்புக் கிடைத்தது. அப்போது அவர் கூறினார்.  

“...உண்மையிலேயே ஆயுதப் போராட்ட இயக்கங்களிலேயே படித்த இளைஞர்கள் அதிகம் இருந்தது புளொட்டில்தான். தமிழீழம் கிடைத்தால், அதை எப்படிக் கல்வி, பண்பாடு மற்றும் பொருளாதார ரீதியில் கட்டமைத்து முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும் என்பது பற்றியெல்லாம் தெளிவான உரையாடல்கள் நடத்தப்பட்டு, திட்டங்கள் எழுதப்பட்டிருந்தன. ஆனால், புளொட்டின் பிரச்சினை என்னவென்றால், திட்டங்களைத் தீட்டுவதோடு விடயங்களை அப்படியே விட்டுவிடுவார்கள்.

 ஆனால், விடுதலைப் புலிகள் அப்படியல்ல. அவர்கள் திட்டங்களை நிதானமாகவும் தெளிவாகவும் தீட்டுவார்கள். அத்தோடு, அதைச் சரியாக நடைமுறைப்படுத்துவார்கள். அதுதான், அவர்களின் வெற்றியாக இருந்தது.

அதுவே, மக்களை அவர்கள் பின்னால் போகவும் வைத்தது. புலிகளின் ‘தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு நிறுவனம்’ என்பதெல்லாம் அடிப்படையில் புளொட் உருவாக்கி வைத்திருந்த திட்டங்களில் இருந்த ஒன்றுதான். இப்படி நிறைய உதாரணங்களைச் சொல்லலாம்.

ஆனால், நாங்கள் படித்தவர்களாக நடந்து கொள்வதில் கவனம் செலுத்தினோம். பெடியள் (புலிகள்), செயற்படுத்திக் காட்டினார்கள். பேரவையைப் பார்க்கும் போதும், எனக்கு அப்படித்தான் தோன்றுகின்றது. அதிகம் வாய்ச்சவடால்களுக்கு இடமிருக்கும். வேறு ஒன்றும் நிகழாது...” என்றார்.  

பேரவை உருவாக்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. இன்றைக்கு பேரவையின் இயங்குநிலை என்பது ஏதாவது ஒரு விடயம் நிகழும் போது, பிரதிபலிப்பதாக மட்டும் மாறிவிட்டது. தமிழரசுக் கட்சிக்கும் விக்னேஸ்வரனுக்கும் இடையிலான முரண்பாட்டின் போதும், பேரவை அதிகபட்சம் நிகழ்த்திக் காட்டிய ஹர்த்தாலும் அதன் சார்பிலானதுதான்.   

மற்றப்படி, பேரவை ஏற்படுத்தி வளர்ந்து வந்த, விக்னேஸ்வரன் மீதான பிம்பம் எவ்வகையானது? தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையே புலிகளுக்குப் பின்னரான குறைநிரப்பு தரப்பாக மக்கள் கருதிக் கொண்டிருக்கின்ற நிலையில், ஆளுமையான- செயற்பாட்டுத்திறனுள்ள ஒரு தலைமையையோ அல்லது கூட்டுத் தலைமையோ உருவாக்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்வதைத் தவிர்த்து, தனிமனிதர்கள் மீது பிம்பங்களை உருவாக்குவதால் என்ன பயன்?  

யாழ்ப்பாணத்தில், கடந்த ஒன்பதாம் திகதி மன்னார் பொது அமைப்புகளின் ஒன்றியம் நடத்திய ‘தடுமாறா மக்களுக்கு தலைமை தாங்குவது யார்?’ என்கிற தலைப்பிலான அரசியல் கருத்தாடல் நிகழ்வின் போதும், மாற்றுத் தலைமையை ஏற்பது தொடர்பில் விக்னேஸ்வரன் தொடர்ச்சியாக காட்டிவரும் பின்னடிப்பு தொடர்பில் பலரும் விமர்சனங்களை முன்வைத்தார்கள். 

வழக்கமாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் முடிவுகள், தலைமையின் போக்கு உள்ளிட்டவை தொடர்பிலேயே அதிகளவு விமர்சிக்கப்பட்ட அந்தக் கருத்தாடல் தளத்தில், விக்னேஸ்வரனின் முன்னுக்குப் பின் முரணான கருத்துகள், மற்றும் பின்னடிப்புத் தொடர்பிலும் பேசப்பட்டது.  

வடக்கு மாகாண சபை உறுப்பினர் தாமோதரம்பிள்ளை லிங்கநாதன், அரசியல் கட்சிகளின் தலைவர்களைப் பார்த்துக் கேட்டார், “ஏன் விக்னேஸ்வரனைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கின்றீர்கள்? மாற்றுத் தலைமையாக உங்களால் வர முடியாதா” என்று? 

இன்னும் சில அரசியல் ஆய்வாளர்களோ, மாற்றுத் தலைமையை உருவாக்கி நாடாளுமன்றத்தில் ஆசனங்களைப் கைப்பற்றுவதோடு விடயங்கள் முடிந்துவிட்டதா என்று கேள்வி எழுப்பினார்கள்? உண்மையில், அந்தக் கேள்வி இன்று எழுந்தது அல்ல.   

தமிழ் மக்களிடம் தொடர்ச்சியாக இருக்கின்ற ஒன்று. அதற்குத் தெளிவான பதிலையும் அதற்கான செயற்பாட்டு வடிவத்தையும் காட்டியிருந்தால், மக்கள் எப்போதோ அந்தப் பக்கம் வந்திருப்பார்கள். அப்படியேதும் நிகழவில்லை என்பதுதானே இங்கு பிரச்சினை. 

கிடைக்கின்ற எல்லாச் சந்தர்ப்பங்களையும் யாரைச் சுற்றியாவது பிம்பம் வரையவும், யாரையாவது ‘பப்பாசி’ மரத்தில் ஏற்றுவதற்கும் செலவளித்துவிட்டு இப்போது அழுது புரள்வதாலும் வெறுமையாக உணர்வதாலும் என்ன பயன்? முதலில் இந்த நிலையிலிருந்து மாற்றம் நிகழ வேண்டும். அப்போதுதான் மாற்றுத் தலைமைக்கான உருப்பாடியான சிந்தனைகள் உருவாகும்.

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/மாற்றுத்-தலைமைக்கான-வாய்ப்புகளைத்-தோற்கடிப்பது-யார்/91-200925

  • தொடங்கியவர்

மாற்றுத் தலைமைக் கோரிக்கை மாயவலை போன்றதே

 

மாற்­றுத் தலைமை தொடர்­பா­கக் கருத்து வெளி­யிட்ட ஈ.பி.ஆர். எல்.எப் இன் தலை­வ­ரும், முன்­னாள் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான சுரேஸ் பிரே­மச்­சந்­தி­ரன் இப்­போதும் கூட்­ட­மைப்­பில் தான் உள்­ளாரா? என்ற சந்­தே­கம் எழுகின்றது.

ஏனென்­றால் ஒரு தலை­மையை ஏற்­றுக் கொண்டு அதன்­கீழ் செயற்­ப­டு­கின்ற ஒரு­வர் மாற்­றுத் தலைமை தொடர்­பா­கப் பேசு­வது விசித்­தி­ர­ மான ஒன்று. சி.வி.விக்­னேஸ்­வ­ரன் மறுத்­தால் இன்­னொரு மாற்­றுத் தலைமை உரு­வாக்­கப்­ப­டும் என்று சுரேஸ் பிரே­மச் சந்­தி­ரன் கூறி­ யுள்­ளமை இங்கு கவ­னிக்­கத்தக்­கது.

மாற்­றுத் தலை­மையை வலி­யு­றுத்­தும் ஈ.பி.ஆர்.எல்.எப்.

இவ­ரது தலை­மை­யி­லான ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சி இன்­ன­மும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பில் அங்­கம் வகிப்­ப­தா­கத்தான் கூறப்­ப­டு­கின்­றது.

ஆனால் அந்­தக் கட்­சி­யின் தலை­மை­யும், ஏனைய முக்­கி­யஸ்­தர் க­ளும் கூட்டமைப்பின் தலைமைக்கு எதி­ரான கருத்­துக்­களை வெளி­யி­டு­வ­தையே காண முடி­கின்­றது.

அண்­மை­யில் அந்­தக் கட்­சி­யைச் சேர்ந்த வன்னி மாவட்ட நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சிவ­சக்தி ஆனந்­தன் கூட்­ட­மைப்­பின் தலைமை சர்­வா­தி­கா­ரப் போக்­கில் செயற்­ப­டுகி றது என­þÅ கடு­மை­யா­கச் சாடி­யி­ருந்­தார்.

இதற்கு கூட்­ட­மைப்பின் தரப்­பி­லி­ருந்து பதி­லும் வழங்­கப்­பட்­டி­ருந்­தது. ஆனால் பங்­கா­ளிக் கட்­சி­யொன்று கூட்­ட­மைப்­பின் தலை மையை விமர்சிப்பது கூட்­ட­மைப் புத் தத்­து­வத்­துக்கே நேர்­மு­ர­ணா­னது.

தலை­மை­யைப் பிடிக்­காது விட்­டால் கூட்டமைப்பிலிருந்து ஒதுங்கி விடு­வதே நாக­ரி­க­மா­னது. ஒரு தலை­மை­யின் கீழ் இருந்து கொண்டு அந்தத் தலைமையை விமர்சிப்பது நாக­ரீ­க­மா­ன­தல்ல.

இதே­வேளை, தற்­போது கூட்­ட­மைப் பையே வடக்­குக் கிழக்­கில் வாழ்­கின்ற தமி­ழர்­கள் தமது தலை­மை­யாக ஏற்­றுக் கொண்­டி­ருக்­கின்­ற­னர். தேர்­தல்­க­ளில் அதற்கே வாக்­க­ளித்து வெற்­றி­பெ­றச் செய்­துள்­ள­னர். சம்­பந்­த­னின் தலை­மையை ஏற்று அர­சி­ய­லுக்­குள் நுழைந்­த­ வர்­தான் தற்­போ­தைய வடக்கு முத­ல­மைச்­சர்.

சம்­பந்­தன் ஆத­ரவு தராது விட்­டி­ருந்­தால் சி.வி.விக்­னேஸ் வ­ரன் முத­ல­மைச்­ச­ரின் கதி­ரை­யில் அமர்ந்­தி­ருக்க முடி­யாது. சம்­ப­ந­தன் கேட்டுக் கொண்டதால்தான் மக்­கள் விக்­னேஸ்­வ­ரனுக்கு வாக்­க­ளித்து அவரை ஏற்­றுக் கொண்­ட­னர். ஆனால் சிலர் அவரை மாற்­றுத் தலை­வ­ராக உரு­வாக்­கு­வ­தற்கு முயற்சி செய்­கின்­ற­னர்.

மாற்­றுத் தலைமை குறித்த முத­ல­மைச்­ச­ரது நிலைப்­பாடு
இதே­வேளை, முத­ல­மைச்­சர் விக்­னேஸ்­வ­ரன் மிக அண்­மை­யில் தனது நிலைப்­பாட்டை உறு­தி­யா­கத் தெரி­வித்­து­விட்­டார்.

மாற்­றுத் தலைமை என்ற பேச்­சுக்கே இட­மில்லை. கூட்­ட­மைப்­பின் ஒற்­று­மையை நான் ஒரு­போ­துமே குழப்­ப­மாட்­டேன். கூட்­ட­மைப்­பின் தலை­வர் சம்­பந்­தன் மற்­றும் மாவை சேனா­தி­ராசா மீது முழு நம்­பிக்­கை­யு­டன் உள்­ளேன் என்று தம்­மைச் சந்­தித்த மூத்த அர­சி­யல் ஆய்­வா­ளர்­க­ளி­டம் அவர் மனம் தி­றந்து கூறி­யுள் ளார்.

இதனைப் பார்க்கும்போது மாற்றுத் தலைமை என்­கின்ற மாய வலைக் குள் அவ­ரைச் சிக்க வைப்­ப­தற்­குச் சிலர் முயற்­சிக்கின்றனர். எனவே எம்­மால் ஊகிக்க முடி­கின்­றது. ஆனால் வடக்கு முத­ல­மைச்­ச­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னம் ஆளு­ந­ரி­டம் சமர்ப்­பிக்­கப்­பட்ட போது, இதே சி.வி.விக்­னேஸ்­வ­ரன் நடந்து கொண்டவிதம் தற்­போது அவர் கூறி­ய­தற்கு நேர்விரோ­த­ மா­கக் காணப்­பட்­டது.

மக்­கள் பலமே எனது பலம், இனி­மேல் நான் எவ­ருக்­குமே அஞ்­ச­மாட்­டேன் என்­றெல்­லாம் அவர் வார்த்­தை­க­ளால் ஜாலம் புரிந்­தார். அன்று அவர் நினைத்­தி­ ருந்­தால் எத்­த­னையோ பிரச்­சி­னை­ கள் இடம்­பெ­றா­மல் தடுத்­தி­ருக்க முடி­யும். ஆனால் கண்­கெட்­ட­தன் பின்­னர் சூரிய நமஸ்­கா­ரம் என்ற விதத்தில் அவரது தற்போதைய நிலைப்பாடு அமைந்துள்ளது.

கூட்­ட­மைப்­புக்கு எதி­ரான சக்­தி­யொன்று இங்கு உரு­வாகி வரு­வதை எவ­ருமே மறுக்க முடி­யாது. கூட்­ட­மைப்பை ஒழித்­து­விட்டு அதன் இடத்­தில் அமர்ந்து அர­சி­யல் இலா­பம் ஈட்­டிக் கொள்­வதே அந்­தச் சக்­தி­யின் முக்கிய நோக்­க­மா­கும்.
இதற்கு வடக்கு முத­ல­மைச்­சரை ஒரு கரு­வி­யா­கப் பயன்­ப­டுத்­து­வ­தற்கு அந்­தத் தரப்­பி­னர் முனை­கின்­ற­னர்.

அவரை மக்­கள் முன் நிறுத்­தித் தாம் பயன்­பெ­று­வ­தற்கு நினைக்­கின்ற இவர்­க­ளது கப­ட­நோக்­கத்தை வடக்கு முத­ல­மைச்­சர்­கள் புரிந்து கொள்­ளா­தது ஆச்­ச­ரி­ய­மான விட­ய­மல்ல. ஆனால் மக்­கள்தான் குழம்­பிப் போய் விட்­ட­னர். இப்­போது அவர்­க­ளுக்­குத் தெளிவு பிறந்­தி­ ருக்­கும்.

மக்­கள் சேவை­யால் மக்­க­ளது ஆத­ரவு பெற்­ற­வர்­களே
தலை­வர்­கள்

மாற்­றுத் தலைமை என்­பது உரு­வாக்­கப் படக்­கூ­டி­ய­தல்ல. அது தானா­கவே உரு­வா­க வேண்டிய ஒன்று. தியா­கத்­தா­லும் தன்­ன­ல­மற்ற மக்­கள் சேவை­யா­லும் மக்­கள் மனங்­க­ளில் இடம்­பி­டித்து தலை­வர்­க­ளாக உயர்ந்­த­வர்­கள்தான் உண்­மை­யான தலை­வர்­கள்.

இவர்­க­ளின் பின்­னால் அணிவகுத்­துச் செல்­வ­தற்கு மக்­கள் எப்­போ­தும் தயா­ராக இருப்­பார்­கள். இதை­வி­டுத்து தமது சந்­தர்ப்­பத்­துக்­குத் தகுந்­த­வாறு மாற்­றுத் தலைமை, புதிய அர­சி­யல் சக்தி என்­றெல்­லாம் கூறிக் கொண்டு புலம்­பித் திரி­ப­வர்­க­ ளால் எதை­யுமே சாதித்­து­விட முடி­யாது.

குறிப்­பா­கக் கூட்­ட­மைப்­புக்­குள் இருந்து கொண்டு மாற்­றுத் தலைமை தொடர்­பா­கக் கூறு­ப­வர்­கள் முத­லில் கூட்­ட­மைப்­பு­ட­னான உற­வைத் துண்­டித்து விடு­வதே நேர்­மை­யான செய­லா­கும்.

இந்த நிலை­யில் வடக்கு முத­ல­மைச்­சர் தமது பிடி­வா­தப் போக்­கைக் கைவிட்டு தாம் சார்ந்­துள்ள கூட்­ட­மைப்­பின் வழி­காட்­டல்­க­ளுக்கு அமை­வாக நடந்து கொள்ள வேண்­டும். கூட்டமைப்பை உடைக்கத் தம்­மை­யொரு கரு­வி­யா­கப் பயன்­ப­டுத்­து­வ­தற்­குச் சிலர் முனை­கின்­ற­னர் என்ற உண்­மையை அவர் புரிந்து கொள்ள வேண்டும்.

போரி­னால் மோச­மா­கப் பாதிக்­கப்­பட்ட மக்­கள் தமது பிர­ச­சி­னை­கள் தீர்க்­கப்­ப­டு­வ­தையே எதிர்­பார்த்­துக் களைத்து நிற்­கின்­ற­னர். சிலர் அவர்­க­ளைக் குழப்­பு­வ­தையே வேலை­யாகக் கொண்டு செயற்­பட்டு வரு­கின்­ற­னர்.

மாற்­றுத் தலைமை என்ற மாயை­யை அவர்கள் காட்டி வரு­கின்­ற­னர். ஆனால் இதெல்­லாம் அதிக காலம் நீடிக்­கப் போவ­தில்லை. மழைக் குமி­ழி­கள் போன்று விரை­வி­லேயே மறைந்து போய்­வி­டும்.

http://uthayandaily.com/story/12473.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.