Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அடுத்த அரச தலைவர் தேர்தலிலும் மைத்திரியே சுதந்திரக் கட்சியின் வேட்பாளர்

Featured Replies

அடுத்த அரச தலைவர் தேர்தலிலும் மைத்திரியே சுதந்திரக் கட்சியின் வேட்பாளர்

 

இந்த நாட்­டில் ஆட்சி புரிந்த அத்­தனை அரச தலை­வர்­க­ளுக்­கும் முன்­னு­தா­ர­ண­மாக எமது தற்­போ­தைய அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன திகழ்­கின்­றார்.

தனது அதி­கா­ரத்­தையே குறைக்க வேண்­டும் என விரும்­பு­கி­ற­வர் அவர். அடுத்த அரச தலை­வர் தேர்­த­லி­லும் சுதந்­தி­ரக் கட்­சி­யின் வேட்­பா­ள­ரா­கப் போட்­டி­யி­டப் பொருத்­த­மா­ன­வர் அவரே’’ என்­கி­றார் ஐ.ம.சு. முன்­ன­ணி­ யின் பொதுச் செய­லா­ளர் – அமைச்சர் மகிந்த அம­ர­வீர.

எதிர்வரும் ஓகஸ்ட் அல்­லது ஒக்­டோ­பர் மாத­ம­ள­வில் மைத்­திரி அணி­யில் இருந்து மகிந்த அணிக்கு 18பேர் செல்­ல­வுள்­ள­னர் என்று கூறப்­ப­டு­வது உண்­மையா?

பதில்: மகிந்த தரப்­பி­னர் பொய் க­ளைக் கூறி மக்­க­ளைக் குழப்­பு­கின்­ற­னர். இதை நம்ப வேண்­டாம் என்று நாம் மக்­க­ளி­டம் கோரு­கின்­றோம். வௌி யேற வேண்டிய நிலைமை வந்­தால் 18பேர் அல்ல, 40பேர் செல்­வோம். ஆனால் மகிந்த அணி­யில் இணை­ய­மாட்­டோம்.தனித்தே இயங்­கு­வோம்.அரசு பிழை­யான பாதை­யில் சென்­றால், இது நடக்­கும்.ஆனால் தற்­போது அப்­ப­டி­யா­ன­தொரு நிலைமை இல்லை.

எனவே கட்­சி­யை­விட்­டுச் சென்று கட்­சி­யைப் பல­வீ­னப்­ப­டுத்த வேண்­டிய தேவை எமக்கு இல்லை.மகிந்தகூட கட்­சி­யைப் பல­வீ­னப்­ப­டுத்த ஒரு­போ­தும் விரும்­ப­மாட் டார்.

ஆனால் மகிந்த அணி­யின் இளம் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு புதிய கட்சி ஒன்றை உரு­வாக்க வேண்­டிய தேவை உள்ளது. தேசிய அரசு கலைக்­கப்­பட வேண்­டும் என்ற கருத்து மகிந்த அணி­யால் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

ஆனால் இந்த தேசிய அர­சால்­தான் எம்­மால் பன்­னாட்­டுச் சமூ­கத்தை வெற்­றி­கொள்ள முடிந்­துள்­ளது. பன்­னாட்­டுச் சமூ­கத்­து­டன் மகிந்த நல்­லு­ற­வைப் பேணா­த­தால் ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகை இல்­லா­மல் போனது.

ஆனால் இப் போது மீண்­டும் ஜீஎஸ்பி பிளஸ் சலுகை கிடைத்­துள்­ளது. அதை­விட மின்­சா­ரக் கதிரை அபா­யம் மகிந்­த­வுக்கு முழு­மை­யாக நீங்­கி­விட்­டது.வெள்ள இடரின்போது பல நாடு­கள் எமக்கு உத­வின.

தேசிய அர­சால்­தான் இது சாத்­தி­யப்­பட்­டது.தேசிய அரசு முழு பன்­னாட்­டுச் சமூ­கத்­தை­யும் வளைத்­துப் போட்­டுள்­ளது. பன்­னா­டு­க­ளது உத­வி­கள், உற­வு­கள் இல்­லா­மல் எம்­மால் தனித்­துப் பய­ணிக்க முடி­யாது.

தேசிய அரசு தொடர்ந்து நீடித்­தால் தங்­க­ளால் மீண்­டும் ஆட்­சிக்கு வர­மு­டி­யாது என்­பதை உணர்ந்­த­வர்­களே தேசிய அரசை எதிர்க்­கின்­ற­னர்

மைத்­தி­ரியை நாங்­களே அரச தலை­வ­ராக்­கி­னோம் என்று கூறிக்­கொண்டு ஐக்­கிய தேசி யக் கட்­சி­யி­னர் தான்­தோன்­றித்­த­ன­மா­கச் செயற்­ப­டு­வ­தால்­தான், தாம் அரசை விட்டு வில­கத் தீர்­மா­னித் துள்­ளோம் என்று சுதந்­தி­ரக் கட்­சி­யின் ஒரு தரப்­பி­னர் கூறு­கின்­றார்­களே?

ப:மைத்­தி­ரியைத் தாங்­களே அரச தலை­வ­ராக்­கி­னோம் என்று ஐக்­கிய தேசியக் கட்­சி­யி­னர் தொடர்ச்­சி­யா­கக் கூறி வரு­கின்­ற­னர்.அப்­ப­டி­யான அதீத பலம் இருந்­தி­ருந்­தால் ஏன் ஐ.தே. கட்­சி­யின் சார்­பில் அரச தலைவர் வேட்­பா­ள­ரை’­­
நி­றுத்­த­வில்லை?ஏன் மைத்­தி­ரி­யைத் தெரிவு செய்­தார்­கள்?

மைத்­திரி அரச தலை­வ­ராக இருப்­ப­தால்­தான் இன்று ஐக்­கிய தேசியக் கட்­சி­யால் ஆட்­சி­யில் அமர முடிந்­துள்­ளது. அப்­படி இல்­லா­விட்­டால் ஆட்சி அதி­கா­ரம் என்­பதை ஐக்­கிய தேசியக் கட்­சி­யால் நினைத்­துக் கூ­டப் பார்த்திருக்க முடியாது.

நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில் ஐக்­கிய தேசிய கட்­சிக்கு 82 ஆச­னங்­கள்­தான் கிடைத்­தன.அந்­தக் கட்­சி­யு­டன் இணைந்து போட்­டி­யிட்ட ஏனைய கட்­சி­க­ளது ஆச­னங்­க­ளை­யும் சேர்த்து 106 ஆச­னங்­கள் உள்­ளன.இந்த எண்­ணிக்­கை­யைக் கொண்டு அவர்­க­ளால் ஆட்சி அமைக்க முடி­யாது.

ஆனால் சவால் விடுக்­கப்­ப­டு­ மா­னால், அரச தலை­வர் இன்றே தனித்து ஆட்சி அமைத் துக் காட்­டு­வார். அவ­ருக்கு இது பெரிய விட­யம் அல்ல.ஆனால்,அவர் அப்­ப­டிச் செய்­வ­தற்கு விரும்­ப­வில்லை.

அவ­ருக்கு கட்­சி­யின் முன்­னேற்­றத்­தை­வி­ட­வும் நாட்­டின் முன்­னேற்­றம்­மீ­து­தான் அக்­கறை அதி­கம். அத­னால்தான் ஐக்­கிய தேசியக் கட்­சி­யி­னர் பேசு­கின்ற மோச­மான வார்த்­தை­களை எல்­லாம் அரச அதிபர் சகித்­துக்­கொண்டு இருக்­கின்­றார்.இருந்­தும்,தீர்­மா­னம் எடுக்க வேண்­டிய தரு­ணத்­தில் துணிந்து தீர்­மா­னம் எடுக்­கின்­றார்.

நீங்­கள்­கூட அந்­தக் குழு­வு­டன் சேர்ந்து கொண்டு மைத்­திரி பக்­கம் ஒரு காலும், மகிந்த பக்­கம் ஒரு காலும் வைத்­துள்­ளீர்­கள் எனக் கூறப்­ப­டு­ வது உண்­மையா?

ப:ஒரு­போ­தும் இல்லை.மைத்­திரி-, மகிந்த தரப்­புக்­களை ஒன்­றி­ணைப்­ப­தற்­காக நான் கடு­மை­யாக உழைப்­ப­தால் அவ்­வாறு சொல்­லப்­ப­ட­லாம்.

சுதந்­தி­ரக் கட்சி 2020இல் தனித்து ஆட்சி அமைக்க வேண்­டும் என்­பதே எனது இலக்கு. இந்த ஆட்சி அமைப்­புக்கு நான் மகிந்­த­வின் உத­வியை க் கோரு­கி­றேன்.

நீங்­கள் இணக்­கப்­பாடு பற்­றிப் பேசி­னா­லும், ஆட்சி அமைத்­தி­ருக்­கும் இரண்டு கட்­சி­க­ளுக்­கி­டை­யில் நடை­மு­றை­யில் இணக்­கப்­பாடு இருப்­ப­தா­கத் தெரி­ய­வில்­லையே?

ப:இணக்­கப்­பாட்டு அர­சி­யல் என்­ப­தற்­காக அந்­தந்­தக் கட்­சி­க­ளின் கருத்­துச் சுதந் தி­ரத்தை விட்­டுக்­கொ­டுக்க வேண்­டும் என்று அர்த்­த­மில்லை.எவ­ரும் எதை­யும் பேச­லாம் என்ற உரி­மையை அரச தலைவர் வழங்­கி­யுள்­ளார்.

நாடா­ளு­மன்­றம்,அமைச்­ச­ர­வைக்கு உள்­ளே­யும் வெளி­யே­யும் அமைச்­சர்­கள்,நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் சுதந்­தி­ர­மா­கப் பேச­லாம்,அவர்­க­ளின் கருத்தை அச்­ச­மின்றி முன்­வைக்­க­லாம்.அது­தான் இங்கு நடக்­கின்­றது.

அப்­ப­டி­யென்­றால் தேசிய அரசு இப்­ப­டியே நிலைத்­தி­ருக்­குமா?

ப:நிச்­ச­ய­மாக.இந்­தத் தேசிய அரசு கார­ண­மா­கவே எம்­மால் பன்­னாட்­டுச் சமூ­கத்தை வெற்­றி­கொள்ள முடிந் துள்­ளது.ஜீஎஸ்பி பிளஸ் சலுகை உள்­ளிட்ட பல நன்­மை­களை நாம் அடைந்து வரு­வ­தற்­குக் கார­ணம் இந்­தத் தேசிய அர­சு­தான்.

அண்­மை­யில் ஏற்­பட்ட வெள்ள இடரின் போது உலக நாடு­கள் எமக்கு அதிக உத­வி­களை வழங்­கி­ய­மைக்­குக் கார­ணம் தேசிய அர­சு­தான்.ஆகவே நாட்­டுக்கு அவ­சி­ய­மாக இருக்­கின்ற இந்­தத் தேசிய அரசு தொட­ரும்.

அரசு என்­ன­தான் உத்­த­ர­வா­தங்­களை வழங்­கி­னா­லும் பௌத்த மதத்­துக்கு இருக்­கின்ற முதன்மை ஸ்தானம் நீக்­கப்­ப ­டும் என்ற அச்­சம் மக்­கள் மத்­தி­யில் தொடர்ந்து இரு­க்கின்­றதே?

ப:ஒற்றை ஆட்சி மற்­றும் பௌத்த மதம் தொடர்­பில்­தான் இப்­போது மக்­க­ளுக்கு அச்­சம் ஏற்­பட்­டுள்­ளது.எதிர்க் கட்சி மேற்­கொண்ட பொய்ப் பரப்புரை களே இந்த அச்­சத்­துக்­குக் கார­ணம்.ஆனால் இந்த இரண்­டி­லும் கைவைக்க­ மாட்­டோம் என்று நாம் மீண்­டும் மீண்­டும் உறுதி வழங்­கு­கின்­றோம்.

கோத்தாவை மிக விரை­வில் கைது செய்­வ­தற்கு உங்­கள் அரசு திட்­ட­மிட்­டுள்­ளது என்று கோத்தாவே கூறி­யமை பற்றி?

ப:இந்­தச் செய்­தியை நானும் அறிந்­தேன்.கோத்தாவைத் தொடர்­பு­கொண்டு விசா­ரித்­தேன்.ராஜ­பக்ச குடும்­பத்­துக்­குக் கிடைத்த தக­வ­லின் அடிப்­ப­டை­யில்­தான் இதை அவர் கூறி­னார் என்று என்­னி­டம் சொன்­னார்.அது பிழை­யான தக­வல் என்­றும், அது குறித்து ஆழ­மாக ஆராய்ந்து பார்க்­கு­மா­றும் கூறி­னேன்.

தனிப்­பட்­ட­மு­றை­யில் நான் கோத்த பாயவை மதிக்­கின்­றேன்.கோள் சொல் ப­வர்­க­ளால்­தான் இந்த நிலைமை ஏற்­ப­டு­கி­றது.கோள் கேட்­பதை நிறுத்­தி­னால் பல பிரச்­சி­னை­க­ளுக்கு முற்­றுப்­புள்ளி வைக்க முடி­யும்.

நீங்­கள் மகிந்­த­வின் குடும்­பத் துக்கு உதவி இருக்­கி­றீர்­களா?

ப:மகிந்த ஆட்சி கவிழ்ந்­த­தும் மைத்­தி­ரி­யைச் சந்­தித்து மகிந்­த­வுக்­கும் அவ­ரது குடும்­பத்­துக்­கும் தொல்­லை­கள் கொடுக்­கக்­கூ­டாது என்று கோரி­னேன்.

மகிந்­த­வின் குடும்­பம் குற்­றங் கள் செய்­தி­ருந்­தா­லும், அவர்­க­ளுக்கு மன்­னிப்பு வழங்க வேண் டும் என்­றும் கூறி­னீர்­களா? அப்படிக் கூறியிருந்தால் அது நியாயமானதா?

ப:இது எனது தனிப்­பட்ட நிலைப்­பாடு.சிலர் அதற்­காக என்னை ஏசுகின்­ற­னர்.அதைப்­பற்றி எனக்­குக் கவலை இல்லை.எனது நிலைப்­பாடு சரி என்­பதே எனது வாதம்.

உள்­ளூ­ராட்சிச் சபைகளுக்கான தேர்­தல் எப்­போது நடத்­தப்­ப­டும்?

ப:உள்­ளூ­ராட்சிச் சபைத் தேர்­தலை இனி­யும் ஒத்­திப்­போ­டாது மிக விரை­வில் நடத்­து­வ­தற்கே நாம் முயற்சி செய்­கின்­றோம்.இது தொடர்­பி­லான அமைச்­ச­ர­வை­யின் இறுதி அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது.

அது நாடா­ளு­மன்­றத்­துக்­குக் கொண்டு செல்­லப்­பட்டு, சட்­ட­மாக்­கப்­பட்ட பின்­னர் விரைந்து தேர்­த­லுக்­குச் செல்­வோம். தேர்­த­லுக்­குச் செல்­வ­தற்கு நாம் பயப்­ப­ட­வில்லை.உட­ன­டி­யா­கத் தேர்­தல் நடத்­தப்­பட வேண்­டும் என்­பதே எமது நிலைப்­பா­டா­கும்.

எமது அபி­வி­ருத்திச் செயற்­பா­டு­க­ளு­டன் இந்த நாட்டு மக்­கள் ஒத்­துப் போகின்­ற­னர்.மீண்­டும் எமக்கு வெற்றி வாய்ப்பை வழங்­கு­வ­தற்கே அவர்­கள் விரும்­பு­கின்­ற­னர்.நாம் பெரும் அபி­வி­ருத்­தித் திட்­டங்­களை மேற்­கொண்டு வரு­வது மக்­க­ளுக்­குத் தெரி­யும்.

தொடங்­கப்­பட்­டுள்ள எமது அபி­வி­ருத்­திப் பணி­கள் பூர்த்­தி­யாக வேண்­டு­மென்­றால் நாமே தொடர்ந்து அதி­கா­ரத்­தில் இருக்க வேண்­டும்.

அடுத்த அரச தலை­வர் தேர்­த­லில் சுதந்­தி­ரக் கட்சி சார்­பில் வேட்­பா­ள­ரா­கக் கள­மி­றங்­கப் போகி­ற­வர் யார்?

ப:மீண்­டும் மைத்­தி­ரி­தான் போட்­டி­யிட வேண்­டு­மென்று நாங்­கள் விரும்­பு­கி­றோம்.அவர்­தான் பொருத்­த­மா­ன­வர்.

இந்த நாட்­டில் ஆட்சி புரிந்த அத்­தனை அரச தலை­வர்­க­ளுக்­கும் முன்­னு­தா­ர­ண­மாக எமது தற்­போ­தைய அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன திகழ்­கின்­றார்.தனது அதி­கா­ரத்­தையே குறைக்க வேண்­டும் என்று அவர் விரும்­பு­கின்றார்.

அவர் தனித்து முடி­வெ­டுப்­ப­வர் அல்ல.இர­வில் முடி­வெ­டுத்து காலை­யில் அறி­விப்­ப­வர் அல்ல.அவர் எடுக்­கும் முடி­வுக்கு அனை­வ­ரும் கட்­டுப்­பட்டே ஆக வேண்­டும் என்று விரும்­பு­ப­வ­ரும் அல்ல.

இது­வரை நிறை­வேற்று அதி­கா­ரம்­கொண்ட அரச தலை­வர் பத­வியை வகித்த அனை­வ­ரும் தத்­த­மது நலன்­களை அடிப்­ப­டை­யா­கக் கொண்டே முடி­வெ­டுத்­த­ னர்.மைத்­திரி ஒரு­போ­தும் அப்­ப­டிச் செயற்­பட்­ட­தில்லை.

தலைமை அமைச்­சர் தலை­மை­யி­லான நாடா­ளு­மன்­றத்­துக்கு அதி­கா­ரத்­தைக் கொடுக்க வேண்­டும் என்ற நிலைப்­பாட்­டில் அவர் இருப்­ப­தால் அவர் அரச செயற்­பா­டு­க­ளில் மூக்கை நுளைப்­ப­தில்லை.

இதன் கார­ண­மாக எமது கட்சி முன்­கூட்­டியே தீர்­மா­னம் ஒன்றை எடுத்­துள்­ளது. அரச தலை­வர் தேர்­தல் 2020இல் இடம்­பெற்­றால், சுதந்­தி­ரக் கட்­சி­யின் வேட்­பா­ளர் மைத்­திரி என்­ப­து­தான் அந்­தத் தீர்­மா­னம். அரச தலை­வ­ரும், கட்­சி­யின் முடி­வுக்­குக் கட்­டுப்­பட்டே ஆக வேண்­டும்.அவர் போட்­டி­யி­டு­வார் என்று நாங்­கள் உறு­தி­யாக நம்­பு­கி­றோம் – என்­றார்.

http://newuthayan.com/story/12675.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.