Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அதிர்ச்சி வைத்தியம் அளித்த எமர்சன்

Featured Replies

அதிர்ச்சி வைத்தியம் அளித்த எமர்சன்

 

இலங்கை வந்த ஐ.நா. விசேட நிபுணர் பென் எமர்சனின் அறிக்கை நாட்டில் பாரியதொரு சலசலப்பை ஏற்படுத்திவிட்டது என்றே கூறலாம். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி வழங்கல் செயற்பாட்டில் அலட்சியப் போக்கையும் இழுத்தடிக்கும் விதமான அணுகுமுறையையும் முன்னெடுத்து வந்த அரசாங்கம் சற்று ஆடிப்போய்விட்டது என்றே கூறலாம். சர்வதேசம் விழிப்புடன் தான் இருக்கின்றது என்பதை எமர்சனின் அறிக்கை ஊடாக புரிந்துகொண்ட அரசாங்கம் சற்று விழித்துக்கொண்டது என்றே கூறலாம்

அதிர்ச்சி மற்றும் ஆச்­ச­ரியம் கலந்த ஒரு அறி­விப்பை கடந்­த­வாரம் இலங்­கைக்கு விஜயம் செய்­தி­ருந்த ஐக்­கிய நாடு­களின் விசேட அறிக்­கை­யாளர் பென் எமர்சன் வெளி­யிட்­டி­ருந்தார். இதனால் அர­சாங்கம் சற்று ஆடிப்­போ­ன­துடன் சர்­வ­தே­சத்தில் என்ன நடந்­து­கொண்­டி­ருக்­கின்­றது என்­பதை ஆராய தயா­ரா­கி­விட்­டது. கடந்த 2015 ஆம் ஆண்­டி­லி­ருந்து இலங்­கைக்கு வரு­கின்ற அனைத்து ஐக்­கிய நாடு­களின் பிர­தி­நி­தி­களும் அர­சாங்­கத்தின் அனைத்து செயற்­பா­டு­க­ளையும் ஒரு­வ­கையில் பாராட்­டியே வந்த நிலையில் கடந்த வாரம் இலங்கை வந்த விசேட நிபுணர் பென் எமர்சன் அர­சாங்­கத்தின் செயற்­பா­டுகள் தொடர்பில் கடும் விமர்­ச­னத்தை முன்­வைத்­தமை அனை­வ­ருக்கும் ஆச்­ச­ரி­யத்தை ஏற்­ப­டுத்­தி­யது.

அதா­வது அர­சாங்­கத்தின் ஒரு சில செயற்­பா­டு­களை வர­வேற்­றி­ருந்த ஐ.நா. விசேட நிபுணர் எமர்சன் நல்­லி­ணக்க செயற்­பா­டு­களும் பொறுப்­புக்­கூறல் வேலைத்­திட்­டங்­களும் ஒரு இடத்தில் நிறுத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ள­தாக குற்­றம்­சாட்­டி­யி­ருந்தார். இலங்கை அர­சாங்­கத்தின் அழைப்பின் பேரில் ஐந்­துநாள் விஜ­ய­மாக இலங்கை வந்­தி­ருந்த பயங்­க­ர­வாத நட­வ­டிக்­கை­யின்­போது மனித உரிமை பாதிக்­கப்­ப­டு­வது தொடர்­பாக ஆராயும் ஐக்­கிய நாடு­களின் விசேட நிபுணர் பென் எமர்சன் பல்­வேறு தரப்­பி­ன­ரையும் சந்­தித்­தி­ருந்­த­துடன் நாட்டின் பல்­வேறு இடங்­க­ளுக்கும் விஜயம் செய்­தி­ருந்தார்.

 பிர­தமர், ஜனா­தி­ப­தியின் செய­லாளர், பாது­காப்பு செய­லாளர், வெளி­வி­வ­கார அமைச்சர், நீதி அமைச்சர் , சட்டம் ஒழுங்கு அமைச்சர், சிறைச்­சா­லைகள் மறு­சீ­ர­மைப்பு புனர்­வாழ்வு, மீள்­கு­டி­யேற்றம் மற்றும், இந்­து­ச­மய அலு­வல்கள் அமைச்சர் ஆகி­யோரை சந்­தித்துப் ஐ.நா. நிபுணர் பேச்சு நடத்­தி­யி­ருந்தார். அத்­துடன் முப்­ப­டை­களின் பிர­தானி, இரா­ணுவம், கடற்­படை, விமா­னப்­படைத் தள­ப­திகள் தேசிய புல­னாய்வு சேவையின் அதி­காரி, தேசிய பொலிஸ் ஆணைக்­கு­ழுவின் தலைவர், பொலிஸ்மா அதிபர், விசேட அதி­ர­டிப்­ப­டையின் பிர­தம அதி­காரி, குற்­றப்­பு­ல­னாய்வுத் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர், பயங்­க­ர­வாத விசா­ரணைப் பிரிவின் தலைமை அதி­காரி, புனர்­வாழ்வு ஆணை­யாளர் நாயகம் மற்றும் நீதி அமைச்சர் ஆகி­யோ­ரையும் அவர் சந்­தித்­தி­ருந்தார்.

சட்­டமா அதிபர், பிர­தம நீதி­ய­ரசர் கொழும்பு அநு­ரா­த­புரம், வவு­னியா, மேல் நீதி­மன்­றங்­களின் நீதி­ப­திகள், ஆகி­யோ­ரையும் சந்­தித்து பேச்­சு­ந­டத்­திய ஐ.நா . பிர­தி­நிதி புதிய மகஸீன் சிறைச்­சாலை மற்றும் அநு­ரா­த­புரம் சிறைச்­சா­லைகளுக்கும் விஜயம் செய்­தி­ருந்தார். அங்கு தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்­த­வர்­களை சந்­தித்து அவர்­களின் நிலைமை குறித்தும் அறிந்­து­கொண்டார். அது­மட்­டு­மின்றி சட்­டத்­த­ர­ணிகள், பாதிக்­கப்­பட்ட குடும்­பங்கள், ஆகி­யோ­ரையும் சந்­தித்­த­துடன் இறு­தி­யாக தேசிய மனித உரிமைகள் ஆணை­யாளர் ஒரு­வ­ரையும் சிவில் சமூக பிர­தி­நி­தி­க­ளையும் எமர்சன் சந்­தித்துப் பேச்­சு­வார்த்தை நடத்­தினார்.

ஐ.நா. விசேட நிபுணர் எமர்சன் முன்­னெ­டுத்த நீதி அமைச்சர் விஜ­ய­தாச ராஜ­ப­க் ஷ வு­ட­னான சந்­திப்­பின்­போது இரு­வ­ருக்­கு­மி­டையில் மிகவும் சூடான வாதப்­பி­ர­தி­வா­தங்கள் இடம்­பெற்­ற­தா­கவும் தெரி­விக்­கப்­பட்­டது. எவ்­வா­றெ­னினும் தனது விஜ­யத்தின் இறு­தியில் ஊட­கங்­க­ளுக்கு கருத்து வெளி­யிட்ட பென் எமர்சன் கடு­மை­யான விமர்­ச­னங்­களை முன்­வைத்­தி­ருந்தார்.

இலங்கை அர­சாங்கம் யுத்­தத்தால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி வழங்கும் செயற்­பாட்டில் எவ்­வி­த­மான முன்­னேற்­றத்­தையும் வெளிப்­ப­டுத்­தாமல் இருக்­கின்­றது. முன்­னேற்றம் தாம­த­ம­டைந்­துள்­ளது என்­ப­துடன் அவை கள­ரீ­தி­யாக நிறுத்­தப்­பட்­டு­விட்­டன என்றே கூற­வேண்டும். தற்­போ­தைய கள­நி­லை­மையை பார்க்­கும்­போது அர­சாங்கம் குறிப்­பிட்ட கால வரைய­றைக்குள் நீதியை நிலை­நாட்டும் என­எ­திர்­பார்ப்­பது கடி­ன­மாக உள்­ளது. இந்த விட­யத்தில் சர்­வ­தேச சமூகத்­தின்­பொ­று­மைக்கும் எல்லை இருக்­கின்­றது என்று கூறி­யதன் ஊடாக அதி­ரடி அதிர்ச்சி வைத்­தியம் ஒன்றை அர­சாங்­கத்­திற்கு வழங்­கி­யி­ருந்தார்.

அத்­துடன் இலங்கை அர­சாங்கம் குறிப்­பிட்ட காலப் பகு­திக்குள் பாதிக்­கப்­பட்­டோ­ருக்கு நீதியை நிலை­நாட்­டா­விடின் பல்­வேறு நட­வ­டிக்­கைகள் இடம்­பெ­றலாம். ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் சலு­கை­க­ளை­ இ­லங்கை இழக்­கலாம். ஐ.நா. மனித உரி­மை­பே­ர­வையில் உள்ள இந்த விவ­காரம் ஐ.நா. பாது­காப்பு சபைக்கு செல்­லலாம். இவ்­வாறு பல நிலை­மைகள் ஏற்­ப­ட­லாம்­என்றும் ஐ.நா. விசேட நிபுணர் பென் எமர்சன் எச்­ச­ரிக்கை விடுத்தார். அது­மட்­டு­மின்றி அர­சியல் கைதிகள் பல்­வேறு சித்­தி­ர­வ­தை­க­ளுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும் எனவே அவர்கள் அனை­வரும் உட­ன­டி­யாக விடு­விக்­கப்­ப­ட­வேண்டும் அல்­லது சட்ட நட­வ­டிக்­கை­க­ளுக்கு உட்­ப­டுத்­தப்­ப­ட­வேண்டும் என்றும் எமர்சன் வலி­யு­றுத்­தி­யுள்ளார்.

உண்­மையில் கூறு­வ­தென்றால் இவ்­வா­றான­தொரு கடும் விமர்­சனம் கலந்த அதிர்ச்சி வைத்­தி­யத்தை அர­சாங்கம் ஒரு­போதும் எதிர்­பார்த்­தி­ருக்­காது. வழ­மை­போன்று இலங்கை வரு­கின்ற ஐ.நா. பிர­தி­நி­திகள் இலங்­கையின் முன்­னேற்­ற­க­ர­மான செயற்­பா­டு­களை பாராட்­டு­வ­துடன் மேலும் முன்­னேற்­றத்தை ஏற்­ப­டுத்­துங்கள் என்றும் கூறி­விட்டு செல்­வார்கள். அவர்­களைப் போன்று பென் எமர்­சனும் இலங்கை அர­சாங்­கத்தின் முன்­னேற்­ற­க­ர­மான செயற்­பா­டு­களை பாராட்­டி­விட்டு மேலும் முன்­னேற்­றங்­களை ஏற்­ப­டுத்­து­மாறு கூறி­விட்டு செல்வார் என எதிர்­பார்க்­கப்­பட்­டது. ஆனால் நடந்­தது என்­னவோ வேறு­வி­த­மாக அமைந்­து­விட்­டது.

  பென் எமர்­சனின் கடு­மை­யான விமர்­ச­னங்­களை எதிர்­பார்க்­காத அர­சாங்கம் அவர் மீது கடும் விமர்­ச­னங்­களை முன்­வைத்­தது. குறிப்­பாக அமைச்சர் விஜ­ய­தாச ராஜ­பக் ஷ ஐ.நா. பிர­தி­நி­தியை கடு­மை­யாக சாடி­யி­ருந்தார். எனினும் அமைச்­ச­ரவை பேச்­சாளர் ராஜித சேனா­ரட்ன அந்த முரண்­பாட்டை சமா­ளிக்­கும்­வ­கையில் கருத்து வெளி­யிட்­டி­ருந்தார். ஐ.நா. வுடன் மோதிக்­கொண்­டி­ருக்க முடி­யாது என்றும் நிலை­மை­களை சமா­ளித்து செல்­வதே முக்­கி­ய­மா­னது என்றும் ராஜித சேனா­ரட்ன வலி­யு­றுத்­தி­யி­ருந்தார்.

இது இவ்­வா­றி­ருக்க பென் எமர்­சனின் அறிக்­கையில் தவ­றான தக­வல்கள் இருப்­ப­தாக சுட்­டிக்­காட்­டிய வெளி­வி­வ­கார அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க அது­தொ­டர்பில் சில தினங்­க­ளுக்கு முன்னர் இலங்கை வந்­தி­ருந்த ஐக்­கி­ய­நா­டுகள் சபையின் அர­சி­யல்­துறை உதவி செய­லாளர் ஜெப்ரி பெல்ட்­ம­னிடம் தமது விமர்­ச­னங்­களை முன்­வைத்­தி­ருந்தார். அந்த விமர்­ச­னங்­களை ஐ.நா.வின் அர­சியல் பிர­தி­நிதி ஏற்­றுக்­கொண்­ட­தா­கவும் அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க அறி­வித்­தி­ருந்தார்.

இவ்­வாறு இலங்கை வந்த பென் எமர்­சனின் அறிக்கை நாட்டில் பாரி­ய­தொரு சல­ச­லப்பை ஏற்­ப­டுத்­தி­விட்­டது என்றே கூறலாம். யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்­கான நீதி­வ­ழங்கல் செயற்­பாட்டில் அலட்­சியப் போக்­கையும் இழுத்­த­டிக்கும் வித­மான அணு­கு­மு­றை­யையும் முன்­னெ­டுத்து வந்த அர­சாங்கம் சற்று ஆடிப்­போய்­விட்­டது என்றே கூறலாம். சர்­வ­தேசம் விழிப்­புடன் தான் இருக்­கின்­றது என்­பதை எமர்­சனின் அறிக்கை ஊடாக புரிந்­து­கொண்ட அர­சாங்கம் சற்று விழித்­துக்­கொண்­டது என்றே கூறலாம். காரணம் ஒரு­வ­ரு­ட­கா­ல­மாக கிடப்பில் போடப்­பட்ட காணா­மல்­போனோர் தொடர்­பாக ஆராயும் அலு­வ­லகம் குறித்த சட்­டத்தில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கைச்­சாத்­திட்­டுள்­ள­துடன் அதனை வர்த்­த­மா­னியில் வெளி­யி­டு­வ­தற்­கான ஏற்­பா­டு­களை மேற்­கொண்­டுள்ளார்.

அது­மட்­டு­மின்றி பல்­வேறு தரப்­பி­ன­ரது விமர்­ச­னங்­க­ளுக்கும் பர­ப­ரப்­புக்கும் ஐ.நா. பிர­தி­நிதி பென் எமர்­சனின் அறிக்கை உட்­பட்­டுள்­ளது என்­பதும் இங்கு விசேட அம்­ச­மாக பார்க்­கப்­ப­டு­கின்­றது. இந்த இடத்தில் அர­சாங்­க­மா­னது பென் எமர்சன் மீது விமர்­ச­னங்­களை முன்­வைப்­பதை விடுத்து அவர் முன்­வைத்­துள்ள விட­யங்­களை ஆராய்ந்து பார்ப்­பதே இங்கு மிகவும் முக்­கி­ய­மாக காணப்­ப­டு­கின்­றது.

2009 ஆம் ஆண்டு யுத்தம் முடி­வ­டைந்­ததன் பின்னர் யுத்­தத்­திற்கு பின்­ன­ரான நாட்டின் நிலை­மையில் முன்­னேற்றம் ஏற்­ப­டுத்­தப்­படும் என எதிர்­பார்க்­கப்­பட்ட போதிலும் 2015 ஆம் ஆண்டு வரை ஏமாற்­றமே தங்­கி­யி­ருந்­தது. அர­சி­யல்­தீர்வு விவ­காரம், காணா­மல்­போனோர் விடயம், காணிகள் மீள் வழங்­கப்­ப­டாமை, பாதிக்­கப்­பட்­டோரின் வாழ்­வா­தாரம் மேம்­ப­டுத்­தப்­ப­டாமை, நட்­ட­ஈடு வழங்­கப்­ப­டாமை, அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கலில் தாம­தங்கள் , என்­ப­வை கார­ண­மாக பாதிக்­கப்­பட்ட மக்­களைப் பொறுத்­த­வ­ரையில் ஏமாற்றம் மட்­டுமே மிஞ்­சி­யி­ருந்­தது.

2009 ஆம் ஆண்­டி­லி­ருந்து 2015 ஆம் ஆண்டு வரை­யான காலப்­ப­கு­தியில் யுத்­தத்தால் பாதிக்­கப்­பட்ட மக்­களின் காயங்­களை ஆற்­று­வ­தற்­காக எந்­த­வி­த­மான நட­வ­டிக்­கை­களும் எடுக்­கப்­ப­ட­வில்லை என்­பதே உண்­மை­யாகும். அக்­கா­லப்­ப­கு­தியில் பௌதிக ரீதி­யான அபி­வி­ருத்­திகள் முன்­னெ­டுக்­கப்­பட்­ட­னவே தவிர பாதிக்­கப்­பட்ட மக்­களின் மனங்­களை வெல்­வ­தற்கு உரிய முறையில் நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வில்லை. இந்த சூழ­லி­லேயே 2015 ஆம் ஆண்டு ஜன­வரி 8 ஆம் திகதி நாட்டில் பாரிய எதிர்­பார்ப்­புக்­க­ளுடன் ஆட்­சி­மாற்றம் ஏற்­பட்­டது.

பாதிக்­கப்­பட்ட மக்கள் பாரிய நம்­பிக்­கை­யுடன் அந்த அர­சாங்­கத்தை உரு­வாக்­கு­வ­தற்கு பங்­க­ளிப்பு செய்­தனர். இதன் ஊடாக ஏற்­றுக்­கொள்­ளத்­தக்க ஒரு அர­சியல் தீர்வு முன்­வைக்­கப்­படும் என்றும் காணா­மல்­போனோர் விவ­கா­ரத்­திற்கு தீர்­வு­கா­ணப்­படும் என்றும் மக்­க­ளி­ட­மி­ருந்து அப­க­ரிக்­கப்­பட்ட காணிகள் மீள் வழங்­கப்­ப­டு­மென்றும் மக்கள் எதிர்­பார்த்­தனர். பொறுப்­புக்­கூறல் ஊடாக பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி நிலை­நாட்­டப்­ப­டு­மெ­னவும் தமது எதிர்­காலம் கட்­டி­யெ­ழுப்­பப்­ப­டு­மெ­னவும் மக்கள் எதிர்­பார்த்­தனர்.

அவ்­வா­றான நம்­பிக்­கையை விதைத்தே ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான அர­சாங்கம் ஆட்­சி­பீடம் ஏறி­யது. இதே கார­ணங்­களை அடிப்­ப­டை­யாகக் கொண்டே சர்­வ­தேச சமூ­கமும் இலங்கை அர­சாங்­கத்­திற்கு அழுத்தம் பிர­யோ­கிப்­ப­தற்கு பதி­லாக ஒத்­து­ழைப்பு வழங்க ஆரம்­பித்­தது. அந்­த­வ­கையில் 2015 ஆம் ஆண்டு ஐ.நா. மனித உரிமை பேர­வையில் இலங்கை தொடர்­பான பிரே­ரணை நிறை­வேற்­றப்­பட்­டது. அதற்கு இலங்கை அர­சாங்­கமும் இணை அனு­ச­ரணை வழங்­கி­யி­ருந்­தது. அத்­துடன் 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை இந்தப் பிரே­ரணை அமு­லாக்­கத்தில் உருப்­ப­டி­யான நட­வ­டிக்­கைகள் எதுவும் இடம்­பெ­றா­ததால் 2017 ஆம் ஆண்டு மீண்டும் இரண்டு வரு­ட­கால அவ­காசம் இலங்­கைக்கு வழங்­கப்­பட்­டது.

அந்­த­ள­விற்கு புதிய அர­சாங்­கத்தின் மீது சர்­வ­தேச சமூகம் நம்பிக்கை வைத்­தது. ஒரு சில முன்­னேற்­றங்கள் ஏற்­ப­டுத்­தப்­பட்­டன என்­பதை ஏற்­றுக்­கொண்டே ஆக­வேண்டும். எனினும் பிர­தான பிரச்­சி­னைகள் அனைத்தும் இன்னும் தேங்­கிக்­கி­டக்­கின்­றன. இது­வரை அர­சியல் தீர்வு காணப்­ப­ட­வில்லை. அதற்­கான முயற்­சிகள் இழுத்­த­டிக்­கப்­பட்­டுக்­கொண்­டி­ருக்­கின்­றன. காணா­மல்­போனோர் விவ­கா­ரத்­திற்கு தீர்­வு­கா­ணப்­ப­ட­வில்லை. காணிகள் முழு­மை­யாக மீள்­வ­ழங்­கப்­ப­ட­வில்லை. பொறுப்­புக்­கூறல் பொறி­முறை முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை. நட்­ட­ஈடு வழங்கும் அலு­வ­லகம் உரு­வாக்­கப்­ப­ட­வில்லை. இவ்­வாறு மிகவும் பல­வீ­ன­மான முறை­யி­லேயே 2015 ஆம் ஆண்டு ஐ.நா. பிரே­ர­ணையின் அமு­லாக்கம் காணப்­ப­டு­கின்­றது.

இவ்­வா­றான சூழலில் அர­சாங்­கத்தின் மீது பாரிய நம்­பிக்கை வைத்­தி­ருந்த மக்கள் மீண்டும் நம்­பிக்கை இழக்க ஆரம்­பித்­தனர். காணாமல் போனோரின் உற­வுகள் மற்றும் காணி­களை இழந்த மக்கள் பொறுமை இழந்து வீதி­களில் இறங்க ஆரம்­பித்­தனர். சர்­வ­தேச சமூ­கமும் குறிப்­பி­டத்­தக்­க­வ­கையில் அதி­ருப்தி அடைய ஆரம்­பித்­தது. இவற்றின் எதி­ரொ­லி­யா­கவே ஐ.நா. விசேட நிபுணர் எமர்­சனின் அதிர்ச்சி வைத்­தியம் கலந்த அறிக்கை முன்­வைக்­கப்­பட்­டி­ருந்­தது.

எனவே அர­சாங்கம் ஐ.நா. பிர­தி­நி­தியின் அறிக்­கையை விமர்­சித்­துக்­கொண்­டி­ருப்­பதை விடுத்து மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வு­காண முன்வரவேண்டும். காணாமல்போனோருக்கு என்ன நடந்தது என்ற உண்மையை கண்டறியவேண்டும். தற்போது காணாமல்போனோர் தொடர்பான அலுவலகம் உருவாக்கப்படுவதற்கான சட்ட அங்கீகாரம் கிடைத்துள்ள நிலையில் இந்த செயற்பாட்டை விரைவாக முன்னெடுத்து தேவையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.

அபகரிக்கப்பட்ட பொதுமக்களின் காணிகள் விடுவிக்கப்படவேண்டும். அரசியல் தீர்வு விரைவாக காணப்படவேண்டும். பொறுப்புக்கூறல் பொறிமுறை ஊடாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும். நட்டஈடுவழங்கும் அலுவலகம் அவசரமாக நிறுவப்படவேண்டும். பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களின் வாழ்வாதாரம் கட்டியெழுப்பப்படவேண்டும். அரசியல் கைதிகள் தொடர்பில் தீர்க்கமான தீர்மானம் அவசியமாகின்றது. இவற்றையே அரசாங்கம் உடனடியாக செய்யவேண்டியுள்ளது.

அதனைவிடுத்து சர்வதேசத்தை விமர்சித்துக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. அரசாங்கம் இந்த செயற்பாடுகளை அர்ப்பணிப்புடன் செய்யும் என்று சர்வதேசத்திற்கு வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. அந்த வாக்குறுதிகளுக்கு அமைய செயற்படவேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும். அவற்றை உரியமுறையில் முன்னெடுக்காவிடின் ஐ.நா.வும் சர்வதேசமும் விமர்சிப்பதை தவிர்க்க முடியாது. எனவே இவற்றின் ஆழமான தன்மையைப் புரிந்துகொண்டு செயற்படவேண்டும். பாதிக்கப்பட்ட மக்கள் நீதிக்காக நீண்டகாலம் தவிப்புடன் காத்துக்கொண்டிருக்கின்றனர் என்பதை அரசாங்கம் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது.

ரொபட் அன்­டனி

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-07-22#page-3

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.