Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேச அழுத்தத்தை தமிழ் தலைமை பயன்படுத்துமா...?

Featured Replies

சர்­வ­தேச அழுத்­தத்தை தமிழ் தலைமை பயன்­ப­டுத்­துமா...?

 

இலங்கை தற்­பொ­ழுது இரா­ஜ­தந்­தி­ரி­களின் வரு­கையால் திக்­கு­முக்­காடிப் போயி­ருக்­கின்­றது. ஐ.நா. மனி­த­வு­ரிமை ஆணை­ய­கத்தின் விசேட அறிக்­கை­யாளர், ஐ.நா. அர­சியல் விவ­கா­ரங்­க­ளுக்­கான செய­லாளர், அவுஸ்தி­ரே­லிய நாட்டின் வெளி­யு­றவு அமைச்சர், சிங்­கப்பூர் வெளி­யு­றவு அமைச்சர் என்ற பட்­டி­யலில் சுவிஸ் நாட்டின் தூது­வரும் இணைந்­துள்ளார். நல்­லாட்சி அர­சாங்­கத்தை அல்­லது ரணில் –மைத்­திரி கூட்­ட­ர­சாங்­கத்தை உரு­வாக்­கு­வதில் இவர்­க­ளு­­டைய பங்­க­ளிப்பும் குறிப்­பி­டத்­தக்க வகையில் இருந்­த­தென்­பதை அனை­வரும் அறிவோம். ஆட்சி மாற்­றத்தின் பின்னர் 2015 மற்றும் 2017 ஆம் ஆண்டு ஐ.நா. மனி­வு­ரி­மைகள் கூட்­டத்­தொ­டரில் இலங்கை அர­சாங்­கத்­திற்கு கால அவ­காசம் வழங்க வேண்டும் என்­ப­திலும், அதற்கு தமிழ்த்தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வரை இணங்கச் செய்­வ­திலும் அவர்கள் வெற்றி கண்­டி­ருந்­தனர். 

இலங்கை அர­சாங்கம் இலங்­கையின் கேந்­திர முக்­கி­யத்­து­வத்தை பயன்­ப­டுத்திக் கொள்­வ­தற்கு சர்­வ­தேச சமூ­கத்­திற்கு ஒத்­து­ழைப்பு அல்­லது அனு­மதி வழங்­கி­ய­மை­யா­லேயே இந்த கால அவ­காசம் வழங்­கப்­பட்டு அர­சாங்­கத்தின் மீது அழுத்­தங்­களைக் குறைத்து ஒரு நெகிழ்வுப் போக்கை சர்­வ­தேச சமூகம் கடைப்­பி­டித்து வரு­கி­றது என்ற விமர்­சனம் பத்தி எழுத்­தா­ளர்கள் முதல் அர­சியல் ஆய்­வா­ளர்கள் சக­ல­ராலும் முன்­வைக்­கப்­பட்­டி­ருந்­தது. ஒடுக்­கப்­பட்ட தேசிய இன­மான தமிழ் தேசிய இனம் தனது கோரிக்­கை­களை முன்­வைத்து மக்­களை அணி­தி­ரட்டி போரா­டாத வகையில் எந்­த­வொரு நாடும் அந்த தேசிய இனத்தின் நலன்­களின் மீது பெரி­தாக அக்­கறை செலுத்­தாது என்றும் அந்தப் பிரச்­சி­னையை தனது நலன்­க­ளுக்­கா­கவே பயன்­ப­டுத்திக் கொள்ளும் என்றும் பல தரப்­பி­னராலும் சுட்­டிக்­காட்­டப்­பட்­டது. இந்த விமர்­ச­னங்கள் சென்­ற­டைந்­த­த­னாலோ என்­னவோ இன்று பல தரப்­பி­னரும் இலங்­கைக்கு விஜ­யங்­களை மேற்­கொள்­கின்­றனர். அத்­துடன் அர­சாங்­கத்­திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் கருத்­துக்­க­ளையும் வெளி­யி­டு­கின்­றனர்.

தமிழ் தரப்பைப் பொறுத்­த­வ­ரையில் சர்­வ­தேச சமூ­கத்தை பகைத்துக் கொள்ள முடி­யாத ஒரு நிலை­யிலும் இரு பிர­தான கட்­சி­க­ளுடன் இணைந்து பணி­யாற்­றினால் எதை­யா­வது சாதித்து விடலாம் என்ற நிலை­யிலும்  எதிர்­பார்ப்­புக்­க­ளுடன் ஆட்சி மாற்­றத்­திற்கு ஒத்­து­ழைத்­தது. ஆட்சி மாற்றம் ஏற்­பட்­ட­வுடன் ஒரு புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாகும். அதன் ஊடாக வெகு விரைவில் ஒரு அர­சியல் தீர்வு கிடைக்கும். அது நாம் வைத்த தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தை வெற்­றி­யடைச் செய்யும் என்று தமிழ்த்தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் தெரி­வித்­த­துடன், 2016 ஆம் ஆண்டின் இறு­திக்குள் இனப்­பி­ரச்­சி­னைக்கு ஒரு அர­சியல் தீர்வு கிடைத்து விடும் என்ற நம்­பிக்­கை­யையும் ஊட்­டி­யி­ருந்தார். பின்னர் அது தன்­னு­டைய கணிப்­பீடு என்று நியா­யப்­ப­டுத்­தினார். இந்த ஆண்டின் தொடக்­கத்தில் அர­சியல் யாப்பு பணிகள் யாவும் சிறப்­பாக நடை­பெற்றுக் கொண்­டி­ருப்­ப­தா­கவும் இந்த ஆண்டு இறு­திக்குள் தீர்வு எட்­டப்­பட்டு விடும் என்றும் தெரி­வித்­தி­ருந்தார். ஆனாலும், இந்த ஆண்டும் கடந்த ஆண்டைப் போலவே நகரும் சாத்­தி­யமே அதிகம் உள்­ளது. 

காணாமல் ஆக்­கப்­பட்டோர் அலு­வ­ல­கத்­திற்கு எத்­த­கைய முடிவும் மேற்­கொள்ள அதி­காரம் இல்­லாத நிலையில் அதற்­கான ஒப்­பு­தலை ஜனா­தி­பதி வழங்­கி­யுள்ளார். அத்­துடன் அது ஏதோ சமா­தா­னத்தை நிலை­நாட்டக் கூடிய விதத்தில் செயற்­படும் என்­ப­தா­கவும் ஒரு மாயைத் தோற்­றமும் அர­சாங்­கத்தால் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. 

அர­சியல் கைதிகள் விவ­காரம் முதல் மனி­த­வு­ரி­மைகள் ஈறாக ஐ.நா.வின் விசேட பிர­தி­நி­திகள் குழு தெரி­வித்­துள்ள கருத்­துக்­களை அவ­தா­னிக்­கையில், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இன்னும் கொஞ்சம் காத்­தி­ர­மாக செயற்­பட்­டி­ருக்­க­லாமோ என்று எண்ணத் தோன்­று­கின்­றது. வழி­ந­டத்தல் குழு அர­சியல் யாப்பு தொடர்பில் 60 இற்கும் மேலான அமர்­வு­களை நடத்­தி­யி­ருக்­கி­றது. இந்த அமர்­வு­களில் தமிழ் மக்­களின் மீதும் பாரிய கவனம் செலுத்­தப்­பட்­டுள்­ள­தாக தெரி­ய­வில்லை. இதை அவ­தா­னிக்­கின்ற பொழுது இருக்­கின்ற அர­சியல் யாப்பில்  பாரிய மாற்­றங்கள் செய்­வ­தற்­கான வாய்ப்­புக்கள் இருப்­ப­தா­கவும் தெரி­ய­வில்லை.  அனைத்து அர­சியல் தலை­மை­க­ளி­னதும் எண்­ணமும் பல்­வேறு தரப்­பி­னராலும் வலி­யு­றுத்­தப்­படும் ஒரு தேர்­த­லுக்கு முகம் கொடுப்­பது எப்­படி என்­ப­தி­லேயே குவிந்­தி­ருப்­பதை அவ­தா­னிக்க முடி­கி­றது. ஆனால், எந்­த­வொரு கட்­சியும் தற்­போ­தைய சூழலில் தேர்­த­லுக்கு முகம் கொடுக்க தயா­ரில்லை என்­ப­தையும் அறிய முடி­கி­றது. 

எதை­யா­வது செய்து தேர்­தல்­களை ஒத்திப் போட வேண்டும் என்­ப­திலும் அது அர­சாங்­கத்­திற்கு நெருக்­கடி கொடுத்து விடக் கூடாது என்­ப­திலும் பிர­தான கட்­சிகள் அனைத்தும் ஒரே நிலையில் உள்­ளன. இதன் ­கா­ர­ண­மா­கவே அர­சியல் யாப்பை பௌத்த பிக்­குகள் விரும்­ப­வில்லை என்றும், அர­சியல் நிர்­ணய சபையில் இருந்து விமல் ­வீ­ர­வன்ச தரப்­பினர் வெளி­யே­று­கின்ற அறி­விப்­பையும் பார்க்க வேண்­டி­யுள்­ளது. தமிழ்த்தேசியக் கூட்­ட­மைப்பு தலை­மையைப் பொறுத்­த­வ­ரையில் முத­ல­மைச்­சரின் தனிப்­பட்ட செல்­வாக்கை குறைத்து அதன் மூலம் ஒரு மாற்றுத் தலை­மைக்­கான அவ­சர நகர்­வு­களை தடுத்து நிறுத்தி தேர்­த­லுக்கு முகம் கொடுப்­ப­தற்­கான ஆயத்­தங்­களும் நடை­பெ­று­கின்­றன. கூட்­ட­மைப்பின் பங்­காளிக் கட்­சிகள் அனைத்தும் ஏதோ ஒரு விதத்தில் தமி­ழ­ரசுக் கட்­சிக்கு அழுத்தம் கொடுத்து வரு­வ­தையும் அவ­தா­னிக்க முடி­கி­றது. ஈ.பி.­ஆர்­.எல்.எப். தொடக்­கத்தில் இருந்தே தமி­ழ­ரசுக் கட்­சி­யி­னதும், தமிழ்த்தேசியக் கூட்­ட­மைப்பு தலை­வ­ரி­னதும் தன்­னிச்­சை­யான முடி­வு­களை விமர்­சித்து வந்­தி­ருக்­கின்­றது. புளொட் அமைப்பும் தமி­ழ­ரசுக் கட்சி தனது மேலாண்­மையை நிலை­நி­றுத்­து­வ­தற்­காக தவ­றுக்கு மேல் தவறு செய்து வரு­வ­தாக குற்றம் சுமத்­தி­யுள்ளது. ரெலோ தமி­ழ­ரசுக் கட்­சிக்கும், தங்­க­ளுக்கும் இடையில் ஒரு பேச்­சு­வார்த்தை இடம்­பெற்று அதில் எட்­டப்­படும் முடி­வுகள் கூட்­ட­மைப்பின் ஒருங்­கி­ணைப்புக் குழுவில் விவா­திக்­கப்­பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்­துள்­ளது. இது­வரை காலமும் அங்­கத்­துவ கட்­சிகள் எதுவும் தமி­ழ­ரசுக் கட்­சி­யிடம் தனிப்­பட்ட ரீதியில் இரு கட்­சி­க­ளுக்­கி­டையில் பேச்­சு­வார்த்தை நடத்த வேண்டும் என்று கோரி­ய­தில்லை. மாறி­வந்த அர­சியல் சூழல் தொடர்பில் விவா­திப்­ப­தற்கு கூட்­ட­மைப்பின் ஒருங்­கி­ணைப்புக் குழுக் கூட்­டத்தை கூட்ட வேண்டும் என்றே அங்­கத்­துவ கட்­சி­களில் ஒன்று கோரி வந்­தது. புளொட் எத்­த­கைய கோரிக்­கை­யையும் முன்­வைக்­க­வில்லை. 

இந்த நிலையில் தற்­போது கூட்­ட­மைப்பில் ஏற்­பட்டு இருக்கும் குழப்­ப­க­ர­மான நிலை­யா­னது அனை­வ­ரையும் கவலை கொள்ளச் செய்­துள்­ளது. கூட்­ட­மைப்பின் இந்த நிலைக்கு தமி­ழ­ரசுக் கட்­சியே காரணம் என்­ப­தா­கவும் பங்­காளிக் கட்­சி­களின் கூற்றில் இருந்து தெரி­ய­வ­ரு­கி­றது. நாளுக்கு நாள் தென்­ப­குதி அர­சியல் சூழலில் ஏற்­ப­டு­கின்ற பர­ப­ரப்­பான நிலையில் தமிழ் தரப்பு ஐக்­கி­யத்­துடன் செயற்­பட்டால் ஒரு வலி­மை­யான அழுத்­தத்தை அர­சாங்­கத்­திற்கு கொடுத்து குறைந்த பட்சம் சில வாக்­கு­று­தி­களைப் பெற்றுக் கொள்ள முடியும். அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு அறிகுறியாக சில நாளாந்தப் பிரச்சினைகளை தீர்த்து வைக்குமாறு அரசாங்கத்தை கோர முடியும். தங்கள் மீது எழுந்துள்ள விமர்சனங்களுக்கு பதில் அளிக்கும்முகமாக சர்வதேச சமூகம் நடந்து கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கும் இந்த சூழலையும், அதன் காரணமாக அரசாங்கத்திற்குள் எழுந்திருக்கக் கூடிய பிரச்சினைகளையும் கையாளக் கூடிய ஒரு சக்தியாக தமிழ் தலைமை தன்னை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும். இதற்கு தமிழ் அரசியல் தரப்பில் உள்ள அனைவரையும் ஒன்றிணைத்து எந்தவொரு தரப்பும் தனது மேதாவித்தனத்திற்கு இடமளிக்காமல் தமிழ் மக்களின் நலன்சார்ந்து முடிவெடுக்க வேண்டிய தருணமிது. இது தொடர்பில் சம்பந்தப்பட்டவர்கள் சிந்திப்பார்களா...?

–ருத்­திரன்-–

 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-07-22#page-8

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.