Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சசிக்கு ஆம்புலன்ஸ் மூலம் வெளி உணவு: சிறை ஏட்டுவின் 'சாம்ராஜ்யம்'

Featured Replies

சசிக்கு ஆம்புலன்ஸ் மூலம் வெளி உணவு:
சிறை ஏட்டுவின் 'சாம்ராஜ்யம்'
 
 
 

பெங்களூரு: 'அ.தி.மு.க.,வின் சசிகலாவுக்கு தேவையான பொருட்கள், சிறை வாசலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட ஏட்டு ஒருவரின் உதவியுடன், ஆம்புலன்ஸ் மூலமாக சிறைக்குள் செல்வது வாடிக்கையாக உள்ளது' என தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

சசி  ஆம்புலன்ஸ் வெளி உணவு

பெங்களூரு சிறை உயர்அதிகாரிகளுக்கு, சிறை அதிகாரி மற்றும் ஊழியர்கள் சிலர் எழுதிய மொட்டை கடிதம் ஒன்று நேற்று வெளியானது.
அதன் விபரம்:பெங்களூரு சிறையின், புற வாசல் பாதுகாப்புக்கு, கர்நாடக தொழில் பாதுகாப்பு பிரிவு ஏட்டு கஜராஜ மாகனுாரு என்பவரை, அரசு நியமித்திருந்தது. சிறையிலுள்ள கைதிகளை சந்திக்க வரும் உறவினர்களை, சோதனை செய்வது, இவரது பணி. ஆனால், சில கைதிகளை சந்திக்க வருபவர்களுக்கு, ராஜ மரியாதை செய்கிறார்.
சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலாவை இவரை சந்திக்க வரும் தொழிலதிபர்கள், தமிழக அரசியல் பிரமுகர்கள், எம்.எல்.ஏ., மற்றும் எம்.பி.,க்கள் என பலரிடமும், அனுமதி ரசீது பெறாமலும், வருகை பதிவேட்டில், பெயர், விலாசத்தை குறிப்பிடாமலும், நேரடியாக முறைகேடாக அழைத்து செல்கிறார்.
சசிகலாவின் சகோதரி மகனான தினகரன், இளவரசி மகன் விவேக், கட்சியின் கர்நாடக பிரிவு செயலாளர் புகழேந்தி, வக்கீல் செந்தில் ஆகியோர் தினமும் இரவு 7:00 மணிக்கு பின், சிறைப்பகுதிக்கு வருகின்றனர். இவர்கள் அனைவரும், கஜராஜுடன் போன் மூலமாக தொடர்பில் உள்ளனர். இந்த ஊழல் ஏட்டு, நான்கு சிம் கார்டுகள், மூன்று மொபைல் போன்கள் பயன்படுத்துகிறார்.
கட்சியின் ஓசூர் பிரமுகர் மகாதேவ், சிறையில் உள்ள சசிகலாவுக்கு தேவையான பொருட்களை, ஏட்டு கஜராஜ் மூலமாக, சசிகலாவுக்கு கொண்டு செல்கிறார். சசிகலாவுக்கு சிறையில் தனி அறை அமைத்து கொடுத்துள்ளார்.

அந்த அறையில், எல்.இ.டி., 'டிவி', ஏ.சி., விலை மதிப்புள்ள கட்டில், தமிழக உணவு தயாரிக்கும் வகையில், இண்டக்சன் அடுப்பு, குளிர்சாதன பெட்டி ஏற்பாடு செய்துள்ளார்.சசிகலாவுக்காக இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை, சமையல் செய்ய தேவையான பொருட்கள், காய்கறிகள் மற்றும் ஓசூர் எம்.எல்.ஏ., வீட்டில், சமைக்கப்பட்ட சிறப்பு உணவு உட்பட பல பொருட்களை, சோதனை செய்யாமல், கே.ஏ., - 42 ஜி 919 மற்றும் கே.ஏ., - 42 ஜி 799 ஆகிய இரண்டு ஆம்புலன்ஸ்கள் மூலமாக, சிறைக்குள் கொண்டு செல்கிறார்.
சசிகலாவை சந்திக்க தமிழகத்திலிருந்து யார் வந்தாலும், கஜராஜ் மூலமாக தான் சிறைக்குள் செல்கின்றனர். உள்துறை அமைச்சருக்கு நெருக்கமானவர் என்று கூறிக்கொண்ட, ஆஸ்திரேலியா பிரகாஷ் என்பவரையும், நேராக உள்ளே அழைத்து வருவார்.சசிகலாவை சந்திக்க வரும் அரசியல் வாதிகள், சிறை தலைமை அதிகாரி காண்காணிப்பாளர் அலுவலகத்தில், ஆலோசனை நடத்துவார்கள். இந்த முறைகேடு பணிகளுக்காக, கஜராஜ், லட்சக்கணக்கான ரூபாய் பெற்றுள்ளார். தினகரன் மூலம், பன்னரகட்டா மெயின் ரோட்டில் 30 சதுர அடிக்கு 40 சதுர அடியில் ஒரு மனையும் வாங்கியுள்ளார்.
அவரது சொந்த ஊரான, ஹாவேரி மாவட்டம், ராணிபென்னுாரு தாலுகா, நாகேனஹள்ளியில், இரண்டு அடுக்கு மாடி வீட்டை கட்டி வருகிறார். பெங்களூரில் இரண்டு கார்கள் வாங்கியுள்ளார். அக்கார்களை பினாமி பெயரில், எலக்ட்ரானிக் சிட்டி அருகிலுள்ள நிறுவனங்களுக்கு வாடகைக்கு அளித்தும், பணத்தை, அவனது உறவினர், நண்பர் வங்கி கணக்கிற்கு போட்டு கொள்கிறார்.
சிறை ஊழியர்களிடம், 'தலைமை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் வலது கை' என்று மிரட்டுகிறார். அவன் யாரையாவது அழைத்து வரும் போது, சிறைக்குள் அனுமதிக்க மறுத்தால், தலைமை கண்காணிப்பாளரிடம் சொல்லி திட்டு வாங்க வைக்கிறான். வேறு பணிக்கு மாற்றுகிறார்.
சசிகலா மட்டுமின்றி, சிறையில் அடைக்கப்பட்ட ஐ.ஏ.எஸ்., அதிகாரி கங்காரம் படேரியா, கறுப்பு பணமாற்றத்தில் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்திய ஜெயசந்திரா, வீரேந்திரா, டி.ஜி.எஸ்., ரியல் எஸ்டேட் சச்சின் நாயக்,திசா சவுத்ரி ஆகியோருக்கும், சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ ஏற்பாடு செய்து கொடுத்தார்.
கஜராஜ், தமிழக எம்.எல்.ஏ., ஒருவருக்கு சொந்தமான, ஆனேகல்லில் உள்ள ரிசார்ட்டில், 'பார்ட்டி' கொடுக்கிறார். ஏட்டு குறித்த அனைத்து முறைகேடும் தெரிந்தும், தலைமை

 

கண்காணிப்பாளர், கண் இருந்தும் குருடராக உள்ளாரோ அல்லது அவரது அனுமதியின் பெயரில் தான் நடக்கிறதோ தெரியவில்லை. இந்த ஏட்டு, தலைமை கண்காணிப்பாளர் அறையில் தினமும் இருக்கிறார். இந்த அனைத்து தகவல்களும், கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
ஊழல் ஏட்டிடம், சி.ஐ.டி., விசாரணை நடத்த வேண்டும். இரண்டு, மூன்று முறை, தமிழகத்தின் சென்னைக்கு சென்று வந்துள்ளார். இது குறித்தும் விசாரணை நடத்த வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.-இப்படிக்குநொந்த சிறை அதிகாரி மற்றும் ஊழியர்கள்.இவ்வாறு கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

சசி வக்கீல் வாக்குவாதம்


சிறையில் உள்ள சசிகலாவை சந்திக்க, அவர் தரப்பு வக்கீல்களான, அசோகன், மகேஷ், மூர்த்திராவ் ஆகியோர், பெங்களூரு சிறை வளாகத்துக்கு, நேற்று வந்தனர். அவர்களை அனுமதிக்க, சிறை ஊழியர்களை மறுத்தனர். இதனால், அவர்கள் சிறை ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதன் பின், மூவரும் உள்ளே சென்றனர்.பிளாஸ்டிக் மற்றும் துணிப்பைகள், கர்நாடக சிறைத்துறை விதிமுறை புத்தகம் ஆகியவற்றை தங்களுடன் கொண்டு சென்றனர். பையில் என்ன இருந்தது என்று தெரியவில்லை.
 

ரூபாவை சந்திக்க அனுமதி மறுப்பு



டி.ஐ.ஜி., ரூபா, போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு துறைக்கு, சமீபத்தில் இடமாற்றம் செய்யப்பட்டார். தற்போது, இவரது அலுவலகம், பெங்களூரு நிருபதுங்கா சாலையில் உள்ள, போலீஸ் டி.ஜி.பி., கட்டடத்தின் இரண்டாவது மாடியில் உள்ளது. அங்கு, ரூபாவை சந்திக்க செல்லும் மீடியாக்களை, டி.ஜி.பி., அலுவலக அதிகாரிகள் அனுமதிக்க மறுத்து வருகின்றனர். இது பற்றி கேட்ட போது, 'டி.ஜி.பி., உத்தரவால், ரூபாவை சந்திக்க அனுமதி இல்லை' என்றனர். 

http://www.dinamalar.com/news_detail.asp?id=1818953

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.