Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை சண்டையால் தமிழக மீனவர்களுக்கு ஆபத்து: ஜெ. எச்சரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை சண்டையால் தமிழக மீனவர்களுக்கு ஆபத்து: ஜெ. எச்சரிக்கை

சென்னை: இலங்கையில் நடக்கும் சண்டையால் தமிழக மீனவர்களின் வாழக்கை கேள்விக்குறியாகி விட்டது என அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா கூறியுள்ளார். தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்தி வரும் தாக்குதலை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமருக்கு முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை: மீனவர்கள் அச்சுறுத்தலின்றி பத்திரமாக மீன் பிடிக்கவும், கரைக்கு திரும்பும் வகையில் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை. கடந்த 25ம் தேதி அன்று நாகப்பட்டினத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் ஆறு பேரில் கலியபெருமாள் என்ற மீனவர் இலங்கை கடற்படையினரால் சுடப்பட்டு இறந்துள்ளார். உடன் சென்ற அஜிஸ்குமார் காயமடைந்துள்ளார். மீதமுள்ள நான்கு பேர் உயிர் தப்பி கரைக்கு திரும்பியுள்ளனர். இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் சுடப்படுகிற சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. தற்போது இறந்துள்ள கலிய பெருமாளின் இரண்டு மகன்களும் கடந்த தி.மு.க., ஆட்சியின் போது இலங்கை கடற்படையினரால் சுடப்பட்டு இறந்துள்ளனர் என்பது வேதனைக்குரிய விஷயம். இலங்கையில் ராணுவத்திற்கும், விடுதலைப் புலியினருக்கும் நடக்கும் சண்டையால் ராமேஸ்வரம், ராமநாதபுரம் பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல முடியாமல் பெரும் பாதிப்புக்கு ஆளாகின்றனர். இது குறித்து தி.மு.க., எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மத்திய அரசும் இதை கண்டு கொள்ளாமல் இருப்பது மிகுந்த வேதனைக்குரிய விஷயம். மீனவர்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி தொடர்ந்து தி.மு.க., அரசு வஞ்சித்து வருகிறது என்பதை நாட்டு மக்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். கடந்த 25ம் தேதி இலங்கை கடற்படையினரால் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்த நாக்கப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர் கலியபெருமாளின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், அ.தி.மு.க., சார்பில் குடும்ப நல நிதி உதவியாக 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

* பிரதமருக்கு கருணாநிதி கடிதம்: தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி பிரதமருக்கு முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் கருணாநிதி எழுதியுள்ள கடிதம் வருமாறு: தமிழகத்தைச் சேர்ந்த கடலோர மீனவர்கள் எதிர் கொண்டு வரும் பிரச்னைகள் மற்றும் சோகங்களை தங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன். குறிப்பாக கடந்த 10 நாட்களாக நடந்து வரும் சம்பவங்கள் தமிழக அரசுக்கு மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. இம்மாதம் 14ம் தேதியன்று நாகை கடலோரம் ஒன்பது மீனவர்களுடன் சென்ற படகு மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தினர். அதில் யாரும் காயமடையாத போதிலும் படகு பெரும் சேதமடைந்தது. மீனவர்கள் பிடித்திருந்த மீன்களை கடற்படையினர் எடுத்துச் சென்றுள்ளனர்.

இதன்பின், 16ம் தேதியன்று புதுக்கோட்டை மாவட்ட கடலோரத்தில் இலங்கை கடற்படையினர் மீனவர்கள் சென்ற இரண்டு படகுகளை நாசப்படுத்தியுள்ளனர். மீனவர்களை தாக்கி, வலைகளை சேதப்படுத்தி மீன்களை எடுத்துச் சென்றுள்ளனர். இதனால், உயிரைக் காக்க கடலில் குதித்து அனைத்து மீனவர்களும் தப்பினர். அடுத்ததாக, 24ம் தேதியன்று ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அருள்தாஸ் மற்றும் மூன்று மீனவர்கள் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது அவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில், அருள்தாஸ் காயமடைந்தார். அதே நாளில் மேலும் 10 படகுகள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு, மீனவர்கள் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து 26ம் தேதியன்று கலியபெருமாள், அஜீஸ்குமார் மற்றும் ஐந்து மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதில், கலியபெருமாள் மரணமடைந்துள்ளார். அஜீஸ்குமார் காயமடைந்துள்ளார். இந்திய கடல் பகுதிக்குள் நியாயமான முறையில் தொழில் செய்ய சென்று அப்பாவி மீனவர்கள் மீது அடுத்தடுத்து 10 நாட்களாக இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியிருக்கும் சம்பவங்கள் மிகுந்த கவலையளிக்கிறது. எனவே, பிரதமர் இவ்விஷயத்தில் தலையிட்டு தமிழகத்தைச் சேர்ந்த அப்பாவி மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தாமல் இருக்கும்படி உத்தரவிடுமாறு அந்நாட்டு அரசை வலியுறுத்த வேண்டும். இவ்விஷயத்தில் அவசரமாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். இவ்வாறு முதல்வர் வலியுறுத்தியுள்ளார்

-தினமலர்

ஆச்சரியமாக இருக்கிறதே! மீனவர்களின் பிரச்சனை சம்மந்தமாக செல்வி ஜெயா கலைஞருக்கு கடிதம் எழுதியுள்ளாரா?

இலங்கையில் நடக்கும் சண்டையால் தமிழக மீனவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்றால் இதை எவ்வாறு தடுக்கலாம் என்று செல்வி ஜெயா நினைக்கிறார்? இந்தியப் படையை இலங்கைக்கு அனுப்பிவைக்கலாமா? அல்லது இலங்கைக்கு இன்னும் நான்கு, ஐந்து போர்க் கப்பல்களை பரிசாகக் கொடுக்கலாமா?

பாம்புக்கு பால் வார்த்தால் கடைசியில் இப்படித்தான் நடக்கும்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.