Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பை பரிசீலிக்கக் கோரும் சசிகலாவின் சீராய்வு மனு மீது இன்று விசாரணை: உச்ச நீதிமன்றம் தகவல்

Featured Replies

சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பை பரிசீலிக்கக் கோரும் சசிகலாவின் சீராய்வு மனு மீது இன்று விசாரணை: உச்ச நீதிமன்றம் தகவல்

 

 
02CHKANVKSASIKALA

சசிகலா   -  PTI

ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை சீராய்வு செய்யக்கோரி அதிமுக (அம்மா) அணியின் பொதுச் செயலாளர் சசிகலா தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கை விசாரித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் நால்வருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் அபராதமும் விதித்தது.

இதை எதிர்த்து ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நால்வரும் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம் நால்வரையும் விடுதலை செய்தது. இதை எதிர்த்து கர்நாடக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவ ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த பிப்ரவரி 14-ம் தேதி தீர்ப்பளித்தனர்.

அப்போது, “உயர் நீதிமன்ற தீர்ப்பு ரத்து செய்யப்படுகிறது. முதல் குற்றவாளியான ஜெயலலிதா வழக்கு விசாரணை காலத்தில் இறந்ததால் அவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்படுகிறார். எனினும் சிறப்பு நீதிமன்ற தீர்ப்பு சசிகலா உள்ளிட்ட மூவருக்கும் பொருந்தும்” என அறிவித்தனர். இதையடுத்து மூவரும் கடந்த பிப்ரவரி 15-ம் தேதி பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் சசிகலா, சுதாகரன், இளவரசி தரப்பில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மறு பரிசீலனை செய்யக்கோரும் சீராய்வு மனுக்களை தாக்கல் செய்தனர். அந்த மனுவில், “அரசு ஊழியரான ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் எங்களுக்கு (சசிகலா தரப்பு) தலா 4 ஆண்டு சிறை தண்டனை வழங்கியது.

இதை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம் ஜெயலலிதா இறந்துவிட்டதால், அவர் மீதான வழக்கை முடித்து வைப்பதாக அறிவித்தது. ஜெயலலிதாவை விடுவித்திருப்பதன் மூலம், அரசு ஊழியர் அல்லாத எங்களை ஊழல் தடுப்பு சட்டப்பிரிவின் கீழ் தண்டிக்க முடியாது. எனவே, எங்களையும் இவ்வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் தீர்ப்பு அளித்த நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ் கடந்த மே மாதம் ஓய்வு பெற்றார். எனவே இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கிய மற்றொரு நீதிபதியான அமிதவ ராய் தலைமையிலான அமர்வு முன்னிலையில் மறு சீராய்வு மனு ஏற்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று உச்ச நீதிமன்றத்தின் இணையதளத்தில், “சசிகலா, சுதாகரன், இளவரசி தரப்பு தாக்கல் செய்த சீராய்வு மனு புதன்கிழமை பிற்பகல் 1.35 மணியளவில் விசாரணை பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இந்த மனு நீதிபதி அமிதவ ராயின் சேம்பரில் நீதிபதி ரோஹின்டன் ஃபாலி நரிமன் முன்னிலையில் விசாரணை நடைபெறும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே இவ்வழக்கை விசாரிக்க தாமதம் ஏற்பட்டதால், இன்று விசாரணை நடைபெற வாய்ப்புள்ளது. நீதிபதியின் சேம்பரில் விசாரணை நடப்பதால் பெரிதாக வழக்கறிஞர்களின் வாதம் இடம்பெறாது எனத் தெரிகிறது.

http://tamil.thehindu.com/india/article19406795.ece?homepage=true

  • தொடங்கியவர்

சசிகலா சீராய்வு மனு தேதி குறிப்பிடாமல் தள்ளி வைப்பு !

 

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு கடந்த பிப்ரவரி மாதம் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது உச்சநீதிமன்றம்.

சசிகலா

இதைத்தொடர்ந்து மூவரும் பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் தண்டனை அனுபவித்து  வருகின்றனர். தங்களுக்கு வழங்கப்பட்ட நான்கு வருட சிறைத் தண்டனையை மறுசீராய்வு செய்ய , சசிகலா தரப்பு, உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தது. வழக்கில் இருந்து முழுவதுமாக விடுவிக்க வேண்டும் என அந்த மனுவில் கோரிக்கை வைத்திருந்தனர். இந்த மனுவை ஏற்றுக்கொண்டது   உச்சநீதிமன்றம். அதன் நீதிபதிகள் அமித்தவராய் கோஷ், ரோஹின்டன், பாரி நாரிமன் அமர்வு முன், சீராய்வு மனு  இன்று ஆகஸ்ட் 2-ம் தேதி  விசாரணைக்கு  வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில்  இந்த சீராய்வு மனு இன்றைய பட்டியலில் இடம் பெறவில்லை. சசிகலா சீராய்வு மனு மீதான விசாரணை, தேதி அறிவிக்கப்படாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது என்கிறது உச்சநீதிமன்றம்.

 

'நீதிபதி பாலி  நாரிமன், 'இந்த வழக்கில் இருந்து விலகிக்கொள்வதாக ஏற்கனவே தெரிவித்திருந்ததால்' இன்றைய விசாரணை தள்ளிப்போயிருக்கலாம் என்கிறது உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் வட்டாரம். . 

http://www.vikatan.com/news/tamilnadu/97699-sasikala’s-review-petition-hearing-postponed.html

  • தொடங்கியவர்

சசிகலா தாக்கல் செய்த சீராய்வு மனுவை நீதிபதி ரோஹின்டன் விசாரிக்கக் கூடாது: மூத்த வழக்கறிஞர்கள் திரண்டதால் பரபரப்பு

 

ரோஹின்டன் ஃபாலி நரிமன்

falisnariman20100712

ஃபாலி நரிமன்

maxresdefault%201

ரோஹின்டன் ஃபாலி நரிமன்

falisnariman20100712

ஃபாலி நரிமன்

சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பை சீராய்வு செய்ய கோரி அதிமுக (அம்மா) அணியின் பொதுச் செயலாளர் சசிகலா தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் நேற்று ஒத்திவைத்தது.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 14-ம் தேதி தீர்ப்பளித்தது. அப்போது, “வழக்கில் ஜெயலலிதா இறந்ததால் அவர் விடுவிக்கப்படுகிறார். சசிகலா உள்ளிட்ட மூவருக்கும் தலா 4 ஆண்டு சிறை தண்டனை உறுதி செய்யப்படுகிறது” என அறிவித்தனர். இதையடுத்து மூவரும் பிப்ரவரி 15-ம் தேதி பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் சசிகலா, சுதாகரன், இளவரசி தரப்பில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மறு பரிசீலனை செய்ய கோரும் சீராய்வு மனுக்களை தாக்கல் செய்தனர். அந்த மனுவில், “அரசு ஊழியரான ஜெயலலிதா இறந்துவிட்டதால், அவர் மீதான வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது. அதன் மூலம், அரசு ஊழியர் அல்லாத எங்களை ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் தண்டிக்க முடியாது. எங்களையும் வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வழக்கில் தீர்ப்பு அளித்த நீதிபதி பினாகி சந்திரகோஷ் கடந்த மே மாதம் ஓய்வு பெற்றார். எனவே மற்றொரு நீதிபதியான அமிதவ ராய், நீதிபதி ரோஹின்டன் ஃபாலி நரிமன் ஆகியோர் அடங்கிய அமர்வு புதன்கிழமை (நேற்று) இம்மனுவை விசாரிக்கும் என உச்ச நீதிமன்றம் அறிவித்தது. இந்த தகவல் நேற்று முன்தினம் மாலை வெளியானதும், நீதிபதி ரோஹின்டன் ஃபாலி நரிமன், சசிகலாவின் சீராய்வு மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் பிரசாந்த் பூஷண் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

 

ரோஹின்டன் விலகல்

இதேபோல முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் முகுல் ரோஹத்கி உள்ளிட்ட மூத்த வழக்கறிஞர்கள் இவ்வழக்கை நீதிபதி ரோஹின்டன் விசாரிக்க கூடாது என தலைமை நீதிபதியிடம் வலியுறுத்தினர். அவர்கள் கூறும்போது, “பொதுவாக குற்றவியல் வழக்குகளில் சீராய்வு மனு தாக்கல் செய்த 30 நாட்களுக்குள் விசாரிக்க வேண்டும். அதிலும் ஏற்கெனவே தீர்ப்பளித்த உச்ச நீதிமன்ற நீதிபதியே வழக்கை விசாரிக்க வேண்டும்.

இவ்வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி பினாகி சந்திர கோஷ் மே 31-ம் தேதி ஓய்வு பெற்றுவிட்டார். உச்ச நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டதால், சசிகலாவின் சீராய்வு மனுவை விசாரிப்பதில் தாமதம் ஏற்பட்டது. இவ்வழக்கில் தீர்ப்பளித்த மற்றொரு நீதிபதி அமிதவ ராய் தலைமையிலான அமர்வில் நீதிபதி ரோஹின்டன் இடம்பெறக்கூடாது.

ஏனெனில் ரோஹின்டன் ஃபாலி நரிமன் மூத்த வழக்கறிஞர் ஃபாலி நரிமனின் மகன். ஃபாலி நரிமன் இவ்வழக்கில் முதல் குற்றவாளியான ஜெயலலிதாவின் ஜாமீனுக்காக உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகி வாதிட்டுள்ளார். தந்தை ஆஜரான வழக்கில் மகன் ரோஹின்டன் நரிமன் தீர்ப்பு அளிப்பது முறையாக இருக்காது. எனவே ஃபாலி நரிமனின் மகனான நீதிபதி ரோஹின்டன் நரிமன் இவ்வழக்கை விசாரிக்க கூடாது” என்றனர்.

மூத்த வழக்கறிஞர்களின் எதிர்ப்பை தொடர்ந்து சசிகலா தரப்பின் சீராய்வு மனு நேற்று விசாரணை பட்டியலில் இருந்து உடனடியாக நீக்கப்பட்டது. இதனிடையே இவ்வழக்கில் இருந்து நீதிபதி ரோஹின்டன் நரிமன் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய நீதிபதி நியமிக்கப்பட்ட பிறகே, சசிகலாவின் சீராய்வு மனு மீது விசாரணை தொடங்கும் எனத் தெரிகிறது.

http://tamil.thehindu.com/india/article19412985.ece

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.