Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அ.தி.மு.க அம்மா அணிக்கு புதிய நிர்வாகிகள் நியமனம்: டி.டி.வி தினகரன் அதிரடி!

Featured Replies

அ.தி.மு.க அம்மா அணிக்கு புதிய நிர்வாகிகள் நியமனம்: டி.டி.வி தினகரன் அதிரடி!

 

அ.தி.மு.க அம்மா அணிக்கு புதிய நிர்வாகிகளை நியமித்து டி.டி.வி தினகரன் உத்தரவிட்டுள்ளார்.

டி.டி.வி தினகரன்

முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியும் இணைய வேண்டும் என்று தினகரன் தெரிவித்தார். இதற்காக 60 நாள்கள் காலக்கெடு விதித்தார். அந்தக் காலக்கெடு இன்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து, எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு டி.டி.வி தினகரன் மேற்கொள்ள இருக்கும் சுற்றுப் பயணம் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.


இந்நிலையில், அ.தி.மு.க அம்மா அணிக்கு புதிய நிர்வாகிகள் பட்டியலை டி.டி.வி தினகரன் வெளியிட்டுள்ளார். அதன்படி, அ.தி.மு.க அம்மா அணியின் அமைப்பு செயலாளர்களாக, முன்னாள் அமைச்சர் பி. பழனியப்பன், செந்தில் பாலாஜி, எஸ்.டி.கே. ஜக்கையன், தோப்பு வெங்கடாசலம், டி.கே.எம் சின்னையா, கு.ப. கிருஷ்ணன், மேலூர். ஆர். சாமி, சேலஞ்சர் துரை, சண்முகவேலு, மாதவரம் மூர்த்தி உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 


அதேபோல, கொள்கை பரப்பு துணைச் செயலாளர்களாக நாஞ்சில் சம்பத் மற்றும் இளவரசன் நியமிகப்பட்டுள்ளனர். அதேபோல, பல்வேறு பொறுப்புகளுக்கு புதிய நிர்வாகிகளை நியமித்து தினகரன் உத்தரவிட்டுள்ளார்.

http://www.vikatan.com/news/tamilnadu/98052-dinakaran-appoints-new-administrators-for-admk-amma-faction.html

  • தொடங்கியவர்

 

கட்சி அலுவலகம் செல்வதை யாரும் தடுக்க முடியாது: தினகரன்

 

சென்னை:''நான், கட்சி அலுவலகம் செல்வதை, யாரும் தடுக்க முடியாது; தேவைப்படும் போது செல்வேன்,'' என, தினகரன் தெரிவித்தார்.

சென்னையில், நேற்று அவர் கூறியதாவது:

அ.தி.மு.க.,வில் ஏற்கனவே நிறைய நிர்வாகிகள் இருந்தாலும், 2019 லோக்சபா தேர்தலில், மாபெரும் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, சிறப்பாக செயல்படக் கூடியவர்களுக்கு, புதிய பொறுப்புகளை வழங்கி உள்ளோம். அணிகள் இணைப்பிற்கு, நான் இடையூறாக இருப்பதாக, நண்பர்கள் கூறியதால், 60 நாட்கள் ஒதுங்கி இருந்தேன். ஆனால், அவர்களால் இணைய முடியவில்லை. எனவே, கட்சி பணியை துவக்கி உள்ளேன்.
 

 

சர்வ அதிகாரம்


பொதுக்கூட்டம் மட்டுமின்றி, கட்சி வளர்ச்சிக்காக, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பேன். கட்சியின் துணை பொதுச்செயலர் செல்வதற்கு, யாரும் தடை போட முடியாது. தேவைப்படும் போது, கட்சி அலுவலகம் செல்வேன்.தங்களுக்கு சர்வ அதிகாரம் இருப்பது போல, தினகரனையும், அவரது குடும்பத்தினரையும் ஒதுக்கி வைப்பதாக, அமைச்சர்கள் அறிவித்தனர். என்னை நீக்கும் அதிகாரம் பொதுச்செயலருக்கு மட்டுமே உள்ளது.

அவர் செயல்பட முடியாத நிலையில் உள்ளதால், துணை பொதுச்செயலர் என்ற முறையில், அதிகாரம் எனக்கு உள்ளது. அவர்கள் என்னை ஒதுக்கி வைப்பதாகக் கூறுவது, சிறு பிள்ளைத்தனமானது.
 

 

அழைப்பு


அமைச்சர்கள் ஏதோ பயம் காரணமாக, என்னை ஒதுங்கி இருக்க சொன்னார்கள். பயத்தில் இருந்து விடுபட்டு, எங்களோடு வந்து விடுவர். விரைவில், இரு அணிகள் இணையும் செய்தி வரும். தேர்தல் வரும் போது தான், கூட்டணி குறித்து முடிவு செய்வோம். மத்திய அமைச்சரவையில் இணைய கோரினால், அப்போது முடிவு செய்யப்படும். எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவில் பங்கேற்கும்படி, முதல்வருக்கு அழைப்பு கொடுப்போம்; அவர் நிச்சயம் பங்கேற்பார்.
லோக்சபா தேர்தலில், எங்கள் வேட்பாளர்கள், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவர். ஜெ., வழியில் மாபெரும் வெற்றியை பெறுவோம்.இவ்வாறு தினகரன் கூறினார்.
 

 

ஆக., 14 முதல் சுற்றுப்பயணம்


அ.தி.மு.க., பன்னீர் அணி சார்பில், மாவட்டந் தோறும் செயல்வீரர்கள் கூட்டம் என்ற பெயரில், பொதுக்கூட்டம் நடத்தப்படுகிறது. அதில், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் பேசி வருகிறார். அ.தி.மு.க., பழனிசாமி அணி தரப்பில், தமிழக அரசு சார்பில், மாவட்டந்தோறும் எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழா நடத்தப்படுகிறது. அதில், முதல்வர் பழனிசாமி பங்கேற்கிறார்.

தற்போது மூன்றாவதாக, தினகரன், ஆக., 14 முதல், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, தன் பலத்தை நிரூபிக்க, மாவட்ட வாரியாக, எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழா பொதுக்கூட்டங்களை நடத்த உள்ளார். அவர் பங்கேற்கும் முதல் பொதுக்கூட்டம், வரும், 14ல், மதுரை மாவட்டம், மேலுாரில் நடக்கிறது.
 

 

'எந்த தடையும் இல்லை'


 

''தினகரன் மட்டுமல்ல, அ.தி.மு.க., தொண்டர்கள் யாரும், தலைமை அலுவலகத்திற்கு வரலாம்,'' என,வருவாய் துறை அமைச்சர் உதயகுமார் கூறினார்.

மதுரை, திருமங்கலத்தில் அவர் கூறியதாவது: அ.தி.மு.க., அரசுக்கு எதிராக போராட்டம் அறிவித்துஉள்ள பன்னீர்செல்வம், மனசாட்சிப்படி செயல்பட வேண்டும். தன் மனசாட்சியை கேட்டு, இந்த அரசை குறை சொல்லட்டும். 'இரு அணிகளும் இணைவது கனவிலும் நடக்காது' என, பன்னீர் அணியினர் பேசுகின்றனர்.

யார் அவர்களை கனவு காண சொன்னது. இரு அணிகளும் கண்டிப்பாக இணையும். முதல்வர் பழனிசாமி, அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்.தொண்டர்களில் யாரையும் இழக்க, நாங்கள் தயாராக இல்லை. தினகரன் மட்டுமல்ல, அ.தி.மு.க.,வின் எந்த தொண்டனும் கட்சி தலைமை அலுவலகம் வரலாம்; அதற்கு எந்த தடையும் இல்லை. தினகரன் கட்சி அலுவலகம் வருவதாக கூறியதற்கும், போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டதற்கும் தொடர்பு இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
 

 

60 பேருக்கு பதவி


தினகரன், நேற்று தன் ஆதரவாளர்கள், 60 பேருக்கு பதவி வழங்கினார். இதில், 20 எம்.எல்.ஏ.,க்கள் இடம் பெற்றுள்ளனர். அமைப்பு செயலர்களாக, எம்.எல்.ஏ.,க்கள் பழனியப்பன், செந்தில் பாலாஜி உட்பட, 18 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். கொள்கை பரப்பு துணைச் செயலர்களாக சம்பத், இளவரசன் நியமிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே உள்ள நிர்வாகிகள் யாரும் மாற்றப்படவில்லை.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1826772

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.