Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆட்டம் காணும் தேசிய அரசாங்கம்

Featured Replies

ஆட்டம் காணும் தேசிய அரசாங்கம்

 

மக்­களின் பல்­வேறு வகை­யான அர்ப்­ப­ணிப்­புக்கள், தியா­கங்­க­ளுக்கு மத்­தியில் உரு­வாக்­கப்­பட்ட ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான தேசிய நல்­லாட்சி அர­சாங்­க­மா­னது இன்று பல்­வேறு சவால்­க­ளுக்கும் நெருக்­க­டி­க­ளுக்கும், சிக்­கல்­க­ளுக்கும் முகம் கொடுத்­துள்­ளது.

அதா­வது எந்த நேரத்தில் நல்­லாட்சி அர­சாங்கம் உடையும் அல்­லது எந்த நேரத்தில் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சி நல்­லாட்சி அர­சாங்­கத்­தி­லி­ருந்து பிரிந்து செல்லும் என்ற கேள்­விகள் தொடர்ச்­சி­யாக அனைவர் மத்­தி­யிலும் எழுந்­து­கொண்­டி­ருக்­கின்­றன. அந்­த­ள­விற்கு ஸ்ரீ­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சிக்கும் ஐக்­கிய தேசி­யக்­கட்­சிக்­கு­மி­டையில் கருத்து மோதல்­களும் முரண்­பா­டு­களும் வெடித்­துள்­ளன.

நீயா, நானா என்ற போக்­கி­லேயே இரண்டு கட்­சி­க­ளி­னதும் செயற்பாடுகள் அமைந்­தி­ருக்­கின்­றன. மக்கள் வெறுப்­ப­டைந்து செல்லும் அள­விற்கு கட்­சி­க­ளுக்­கி­டை­யி­லான முரண்­பா­டுகள் வலு­வ­டைந்து செல்­கின்­றன.

2015 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் 8 ஆம் திகதி என்ன நோக்­கத்­திற்­காக புதிய அர­சாங்கம் அமைக்­கப்­பட்­டதோ, அதன் பின்னர் 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் எந்த நோக்­கத்­திற்­காக தேசிய நல்­லாட்சி அர­சாங்கம் அமைக்­கப்­பட்­டதோ அந்த நோக்­கங்கள் எல்லாம் மறக்­கப்­பட்டு இன்று தமது அர­சியல் இருப்­புக்­கா­கவும் சுய­நல அர­சி­ய­லுக்­கா­கவும் இரண்டு பிர­தான கட்­சி­களும் செயற்­பட்­டுக்­கொண்­டி­ருக்­கின்­றவா என்ற சந்­தேகம் ஏற்­படும் அள­விற்கு நிலை­மைகள் மாறி­யுள்­ளன.

தேசிய நல்­லாட்சி அர­சாங்­கத்தில் இடம்­பெ­று­கின்ற ஐக்­கிய தேசி­யக்­கட்சி, மற்றும் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சி ஆகி­ய­வற்­றுக்­கி­டையில் தொடர்ச்­சி­யாக முரண்­பா­டு­களும் விமர்­ச­னங்­களும் ஏற்­பட்டு வரு­கின்­றன. இரண்டு தரப்பும் ஒ­வ­ருக்கொருவர் பரஸ்­பரம் குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்­துக்­கொண்­டி­ருக்­கின்­றன. இரண்டு கட்­சி­க­ளுக்­கு­மி­டையில் நில­வு­கின்ற முரண்­பா­டு­களை பார்க்­கும்­போது எங்கே இந்த நல்­லாட்சி அர­சாங்கம் வீழ்ச்­சி­ய­டைந்து சென்­று­வி­டுமோ என்ற சந்­தேகம் பொது­மக்­க­ளுக்கு ஏற்­ப­டு­கின்­றது.

2012 ஆம் ஆண்டு பெப்­ர­வரி, மற்றும் மார்ச் மாதக்­கா­லப்­ப­கு­தியில் இடம்­பெற்­ற­தாக கூறப்­படும் மத்­திய வங்கி பிணை மோசடி விவ­கா­ரத்­தி­லேயே இரண்டு கட்­சி­க­ளுக்­கு­மி­டை­யி­லான பிரச்­சினை ஆரம்­ப­மா­னது. அதி­லி­ருந்து கடந்த இரண்டு வரு­டங்­க­ளா­கவே இரண்டு கட்­சி­க­ளுக்­கு­மி­டை­யி­லான முரண்­பா­டுகள் தொடர்ந்­த­வண்­ணமே உள்­ளன. எனினும் தமது அர­சியல் இருப்­புக்­களை தக்க வைத்துக்கொள்வதற்காக இரண்டு பிர­தான கட்­சி­களும் அர­சாங்­கத்தை நீடித்துக் கொண்­டி­ருக்­கின்­றன.

இவ்­வாறே நிலைமை நீடித்தால் தேசிய அர­சாங்கம் தொடர்ந்து செல்­லுமா என்ற ஆதங்கம் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றது. குறிப்­பாக 2015 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் 8 ஆம் திகதி நாட்டில் ஆட்­சி­மாற்றம் ஏற்­பட்­டது. அதன்­பின்னர் சில தினங்­க­ளி­லேயே ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஸ்ரீ­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் தலை­வ­ராக நிய­மிக்­கப்­பட்டார். அந்த நிமி­டத்­தி­லி­ருந்து ஐக்­கிய தேசி­யக்­கட்­சியும் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியும் தமது கட்­சி­களை பலப்­ப­டுத்தும் செயற்­பா­டு­களை மிகவும் வலு­வா­ன ­மு­றையில் முன்­னெ­டுப்­ப­தற்கு ஆரம்­பித்­து­விட்­டன.

அதனைத் தொடர்ந்து 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி பாரா­ளு­மன்றத் தேர்தல் நடை­பெற்­றது. அந்தப் பாரா­ளு­மன்றத் தேர்­தலில் எந்­த­வொரு கட்­சிக்கும் ஆட்சி அமைக்­கக்­கூ­டிய பெரும்­பான்மை பலம் கிடைக்­கா­ததால் இரண்டு கட்­சி­களும் இணைந்து தேசிய அர­சாங்­கத்தை அமைத்­தன. அதி­லி­ருந்து தேசிய அர­சாங்கம் இது­வரை சுமு­க­மாக பய­ணித்­த­தாக கூற முடி­யாது.

பல்­வேறு சிக்­கல்கள், நெருக்­க­டிகள் தோன்­றிக்­கொண்டே இருக்­கின்­றன. அதிலும் குறிப்­பாக ஸ்ரீ­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சி­யா­னது தொடர்ச்­சி­யாக அர­சாங்­கத்­திற்கு சிவப்­புக்­கொடி காட்­டிக்­கொண்டே வரு­கின்­றது. இன்னும் சில நாட்­களில் வெளி­யே­றி­வி­டுவோம் என்ற பதத்­தை சுதந்­தி­ரக்­கட்­சி­யா­னது அடிக்­கடி கூறிக்­கொண்­டி­ருக்­கின்­றது.

அதற்­கேற்­றாற்போல் இரண்டு கட்­சி­க­ளி­னதும் அமைச்­சர்கள் பரஸ்­பரம் விமர்­ச­னங்­களை முன்­வைத்­துக்­கொண்­டி­ருக்­கின்­றனர். குறிப்­பாக உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் விட­யத்தில் கூட இரண்டு கட்­சி­க­ளுக்­கு­மி­டையில் பாரிய முரண்­பா­டு­களும் கருத்­து­மோ­தல்­களும் காணப்­ப­டு­கின்­றன. அதன்­படி தேசிய அர­சாங்கம் விரைவில் சித­றி­வி­டுமா என்ற கேள்­விகள் எழுப்­பப்­பட்­டுக்­கொண்­டி­ருக்­கின்ற நிலையில் முரண்­பா­டு­களின் உச்­சத்­திற்கு இரண்டு கட்­சி­களும் வந்­துள்­ளன.

உதா­ர­ண­மாக இரண்டு கட்­சி­களும் இணைந்­துதான் புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்கும் செயற்­பாட்டை ஆரம்­பித்­தன. ஆனால் இன்று அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்கும் செயற்­பா­டுகள் ஸ்தம்­ப­ித­ம­டையும் நிலைமை காணப்­ப­டு­கின்­றது. இதற்கு இரண்டு பிர­தான கட்­சி­க­ளுக்­கு­மி­டையில் காணப்­ப­டு­கின்ற முரண்­பா­டு­களே மிக முக்­கிய கார­ணங்­க­ளாக அமைந்­தி­ருக்­கின்­றன.

குறிப்­பாக புதிய அர­சி­ய­ல­மைப்பில் உள்­ள­டக்­கப்­ப­ட­வுள்ள தேர்தல் முறை மாற்றம், அர­சியல் தீர்வு விவ­காரம் மற்றும் நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறை­ மாற்றம் ஆகிய விட­யங்­களில் இரண்டு பிர­தான கட்­சி­க­ளுக்கும் இடையில் பாரிய முரண்­பா­டுகள் ஏற்­பட்­டுள்­ளன. ஆனால் இந்த இரண்டு கட்­சி­களும் முரண்­பா­டான நிலை­மைக்கு வந்­துள்ள இந்த சந்­தர்ப்­பத்தில் ஒரு விட­யத்தை புரிந்­து­கொள்­ள­வேண்டும்.

அதா­வது எவ்­வா­றான வாக்­கு­று­தி­களை பொது­மக்­க­ளுக்கு வழங்­கி­விட்டு தாம் தேசிய அர­சாங்­கத்தை நிறு­வினோம் என்­பதை இரண்டு பிர­தான கட்­சி­களும் மறந்­து­வி­டக்­கூ­டாது. 2015 ஆம் ஆண்டு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான சுதந்­தி­ரக்­கட்­சியின் ஒரு பிரிவு ஐக்­கிய தேசி­யக்­கட்சி, மற்றும் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு என்­பன இந்த நாட்டு மக்­க­ளுக்கு பல்­வேறு வாக்­கு­று­தி­களை வழங்­கி­விட்டு ஆட்­சிக்கு வந்­தன.

விசே­ட­மாக இனப்­பி­ரச்­சி­னைக்­கான அர­சியல் தீர்வு, ஜனா­தி­பதி முறை­மையில் மாற்றம், புதிய தேர்தல் முறை, மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உள்­ளக ரீதியில் விசா­ரணை, காணாமல் போனோர் விவ­கா­ரத்­திற்கு தீர்வு, காணிகள் விடு­விப்பு விவ­காரம், யுத்­தத்தால் பாதிக்­கப்­பட்ட மக்­களின் வாழ்­வா­தா­ரத்தை கட்­டி­யெ­ழுப்­புதல், பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நஷ்­ட­ஈ­டு­ வ­ழங்­குதல், நாட்டின் பொரு­ளா­தார அபி­வி­ருத்­தியை மேற்­கொள்­ளுதல் ஆகிய விட­யங்­களை முன்­வைத்தே இரண்டு பிர­தான கட்­சி­களும் ஆட்­சிக்கு வந்­தன. மக்­களும் பல்­வேறு தியா­கங்கள், அச்­சு­றுத்­தல்கள், அர்ப்­ப­ணிப்­புக்­க­ளுக்கு மத்­தி­யி­லேயே ஆட்சி மாற்­றத்­திற்கு பங்­க­ளிப்பு செய்­தன.

ஆனால் இந்த அனைத்து விட­யங்­க­ளையும் மறந்­து­விட்டு இன்று இரண்டு பிர­தான கட்­சி­களும் முரண்­பட்­டுக்­கொண்­டி­ருப்­ப­துடன் தேசிய அர­சாங்­கத்தின் நீடிப்பை கேள்­விக்­கு­றி­யாக்­கி­யுள்­ளன. அதா­வது தேசிய அர­சாங்கம் உடைந்து விட்டால் அல்­லது சுதந்­தி­ரக்­கட்­சி­ அதி­லி­ருந்து பிரிந்து சென்­று­விட்டால் ஐக்­கிய தேசி­யக்­கட்­சிக்கு ஆட்சி அமைப்­பது கடி­ன­மான விட­ய­மல்ல. அக்­கட்­சிக்கு தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் ஆத­ரவைப் பெற்று ஆட்சி அமைக்கும் இய­லுமை காணப்­ப­டு­கின்­றது.

ஒரு­வேளை தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு ஐ.தே.க.வுக்கு ஆட்சி அமைக்க உத­வா­வி­டினும் கூட ஐ.தே.க. பெரும்­பான்மை பல­மற்ற ஆட்­சியை அமைக்­கலாம். உட­ன­டி­யாக அதனை சவா­லுக்­குட்­ப­டுத்த முடி­யாது. ஆனால் இவ்­வாறு தேசிய அர­சாங்­கத்தை உடைத்­துக்­கொண்டு சுதந்­தி­ரக்­கட்சி வெளி­யே­றினால் அடுத்து என்ன நடக்கும் என்­பதைப் பற்றி அனை­வரும் சிந்­திக்­க­வேண்டும். ஒரு­வேளை சுதந்­தி­ரக்­கட்சி அர­சாங்­கத்­தி­லி­ருந்து வெளி­யே­று­மானால் தேசிய அர­சாங்கம் எந்த நோக்­கத்­திற்­காக அமைக்­கப்­பட்­டதோ அந்த நோக்கம் நிறை­வே­றாமல் போகும் அபாயம் காணப்­ப­டு­கின்­றது.

குறிப்­பாக நீண்­ட­கா­ல­மாக புரை­யோ­டிப்போய் கிடக்கும் தேசியப் பிரச்­சி­னைக்கு தீர்வு கிடைக்­கா­மல்­போகும் அபாயம் காணப்­ப­டு­கின்­றது. இந்த நிலை­மையை ஏற்­ப­டுத்த வேண்­டுமா என்­பது குறித்து சுதந்­தி­ரக்­கட்சி சிந்­திக்­க­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். மறு­புறம் சுதந்­தி­ரக்­கட்சி தேசிய அர­சாங்­கத்தில் நீடித்தால் கூட தீர்­வுத்­திட்டம் என்­பது சாத்­தியம் இல்லை என்ற கருத்­து­ வா­தங்கள் முன்­வைக்­கப்­பட்டே வரு­கின்­றன.

அத­னையும் தாண்டி ஏதோ ஒரு­ வ­கையில் நல்­லது நடக்கும் என்ற நம்­பிக்கை மக்­க­ளுக்கு காணப்­ப­டு­கின்­றது. ஆனால் தேசிய அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும் இரண்டு பிர­தான கட்­சி­க­ளி­னதும் செயற்­பா­டு­களை பார்க்­கும்­போது அந்த மக்­களின் நம்­பிக்கை சிதை­வ­டைந்­து­போ­வதை காண­மு­டி­கின்­றது.

இந்த இடத்தில் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியும் ஐக்­கிய தேசி­யக்­கட்­சியும் மக்­க­ளுக்கு வழங்­கிய வாக்­கு­று­திகள் மற்றும் அந்த வாக்­கு­று­தி­களை கொண்டு மக்கள் வைத்த நம்­பிக்கை என்­ப­வற்றை ஒரு­போதும் மறந்­து­வி­டக்­கூ­டாது. தேசிய அர­சாங்கம் மீது மக்கள் வைத்த நம்­பிக்­கையை கேள்­விக்­குட்­ப­டுத்­தவும் ஒரு­போதும் முயற்­சிக்­கக்­கூ­டாது. இது இரண்டு பிர­தான கட்­சி­க­ளி­னதும் பொறுப்பும் கட­மை­யு­மாக இருக்­கி­றது.

தேசிய அர­சாங்­கத்தின் தற்­போ­தைய நிலைமை தொடர்பில் பொது­மகன் ஒருவர் இவ்­வாறு கருத்து பகிர்­கிறார் ''தேசிய அர­சாங்கம் விரைவில் உடைந்­து­விடும் என்றே நான் எதிர்­பார்க்­கின்றேன். இந்த அர­சாங்கம் வந்­த­தி­லி­ருந்து எந்த அபி­வி­ருத்­தியும் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை. மாறாக குப்பை உள்­ளிட்ட மக்­களின் பிரச்­சி­னை­களே அதி­க­ரித்­தி­ருக்­கின்­றன. இரண்டு கட்­சிகள் இணைந்து ஆட்சி அமைத்தால் இந்த நிலை­மைதான் ஏற்­படும். ஏதா­வது ஒரு­கட்சி ஆட்சி அமைத்தால் இந்த சிக்கல் ஏற்­பட்­டி­ருக்­காது. ஆனால் இங்கு நிலைமை மாறியே காணப்­ப­டு­கின்­றது. எப்­ப­டி­யி­ருப்­பினும் என்­னு­டைய கணிப்பின் பிர­காரம் விரைவில் தேசிய அர­சாங்கம் உடைந்து விடும். அதன்­பின்னர் ஐ.தே.க. தனித்து ஆட்சி அமைக்கும். அப்­போ­தா­வது நல்­லது நடக்கும் என நாம் எதிர்­பார்க்­கிறோம்" இவ்­வாறு வெளி­யி­லி­ருந்து அர­சாங்­கத்தைப் பார்த்­துக்­கொண்­டி­ருக்கும் பொது­மகன் ஒருவர் கூறு­கின்றார்.

மிகவும் விசே­ட­மாக ஒரு விட­யத்தை இரண்டு பிர­தான கட்­சி­களும் புரிந்­து­கொள்­ள­வே­ணடும். அதா­வது மிக நீண்­ட­கா­லத்­திற்குப் பின்னர் புரை­யோ­டிப்­போ­யி­ருக்கும் தேசிய பிரச்­சி­னைக்கு தீர்வு காண்­ப­தற்கு ஒரு சிறந்த சந்­தர்ப்பம் கிடைத்­தி­ருக்­கி­றது. அந்த சந்­தர்ப்­பத்தை இழந்­து­வி­டாமல் விரைந்து இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வைக் காண்­ப­தற்கு அனைத்துத் தரப்­பி­னரும் முன்­வ­ர­வேண்டும். அதனை விடுத்து கிடைத்­துள்ள இந்த சந்­தர்ப்­பத்­தையும் இழந்­து­வி­டக்­கூ­டாது.

இதனைக் கருத்தில் கொண்­டா­வது இரண்டு பிர­தான கட்­சி­களும் இணைந்து செயற்­ப­டு­வ­தற்கு முன்­வ­ர­வேண்டும். சுதந்­தி­ரக்­கட்­சியின் பேச்­சா­ளரும் அமைச்­ச­ரு­மான டிலான் பெரேரா இவ்­வாறு ஒரு கருத்­தினை வெளி­யிட்­டி­ருந்தார். ''தேசிய பிரச்­சி­னைக்கு தீர்வு கிடைக்கும் என்ற ஒரு நோக்­கத்­திற்­கா­கவே நாங்கள் தேசிய அர­சாங்­கத்தில் ஒட்­டிக்­கொண்­டி­ருக்­கின்றோம். இல்­லா­விடின் இந்த அர­சாங்­கத்­தி­லி­ருந்து எப்­போதோ வெளி­யேறி­யி­ருப்போம். ஒரு­வேளை இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வை இந்த அர­சாங்­கத்தின் ஊடாக காண முடி­யாது என்ற நிலைமை தோன்­றினால் நாங்கள் உட­ன­டி­யாக இந்த அர­சாங்­கத்­தி­லி­ருந்து வெளி­யே­றி­வி­டுவோம். இதனை அனை­வரும் புரிந்­து­கொள்­ள­வேண்டும். எமது பொறு­மைக்கும் ஒரு எல்லை உண்டு என்­பதை ஐக்­கி­ய­தே­சி­யக் ­கட்சி புரிந்து கொள்­ள­வேண்டும்" இவ்­வாறு இரா­ஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா குறிப்­பிட்­டி­ருந்தார்.

இங்கு மிக முக்­கி­ய­மாக கவ­னிக்­கப்­ப­ட­வேண்­டிய விடயம் என்­ன­வெனில் ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் என்ன நோக்­கத்­திற்­காக தேசிய அர­சாங்­கத்தை அமைத்­தார்­களோ, அந்த நோக்கம் நிறை­வே­றாமல் போய்­வி­டுமோ என்ற அச்சம் அனைவர் மத்­தி­யிலும் ஏற்­பட்­டுள்­ளது. இதனை ஜனாதிபதியும் பிரதமரும் முதலில் புரிந்துகொள்ளவேண்டியது அவசியமாகும். தேசிய அரசாங்கம் எந்தநோக்கத்திற்காக அமைக்கப்பட்டுள்ளது என்பதை ஜனாதிபதியும் பிரதமரும் உணர்ந்து கொண்டு தாங்கள் இருவருமாக இந்த விடயத்தில் தலையிட்டு அணுகுமுறைகளை முன்னெடுக்கவேண்டிய அவசியமாகும்.

தேசிய அரசாங்கம் ஆட்டம்காண ஆரம்பித்து விட்டது என்பது அனைவருக்கும் தெரிகிறது. ஆனால் அதனை அப்படியே விடுவதா? இல்லை இனப்பிரச்சினையைத் தீர்க்கும் வகையிலான புதிய அரசியலமைப்பை கொண்டுவரும் வரை தேசிய அரசாங்கத்தை கொண்டுசெல்வதா என்பதை ஜனாதிபதியும் பிரதமருமே தீர்மானிக்க வேண்டும். இரண்டு பேரும் இரண்டு பிரதான கட்சிகளினதும் தலைவர்களாக இருக்கின்றனர். எனவே இரண்டு கட்சி உறுப்பினர்களுக்குமிடையில் தேசிய அரசாங்கம் தொடர்பில் எவ்வாறான முரண்பாடுகள் காணப்பட்டாலும் அவற்றை சமாளித்து நாட்டை முன்கொண்டு செல்லவேண்டிய இயலுமை இரண்டு பிரதான கட்சிகளின் தலைவர் களுக்கும் இருக்கின்றது.

இந்த இயலுமையை ஜனாதிபதியும் பிரதமரும் புரிந்துகொள்ளவேண்டும். தற்போதைய ஆட்சிக்காலத்தில் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஜனாதிபதியும் பிரதமரும் சிதைத்துவிடக்கூடாது. பல்வேறு அரசியல் ஆபத்துக்களுக்கு மத்தியில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சம்பந்தன் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் தார்மீக ஆதரவை வெளியிட்டுக்கொண்டிருக்கின்றார் என்பதை ஜனாதிபதியும் பிரதமரும் மறந்துவிடக்கூடாது. 

ரொபட் அன்டனி

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-08-05#page-3

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.