Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

20 நூற்றாண்டின் தொடக்கம் வரை பூணூல் அணியும் வழக்கம் யாழ்பாண சைவர்களிடம் இருந்தது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்துச் சைவர்களிடம் பூணூல் அணியும் வழக்கமும் சிவதீட்சை பெறும் வழக்கமும் இருந்ததததாக குறிப்பிடுகிறார், Rev. James Cartman, OBE, M.A., B.D., M.Th. தன்னுடைய Hinduism in Ceylon என்ற நூலில்.

பூணூல் அணியும் பழக்கம் எப்படித் தோன்றியது, அது முதலில் எதைக் குறிப்பதற்காக அணியப்பட்டது என்பவற்றைப் பற்றிப் பலரும் பல்வேறு கருத்துக்களைக் கொண்டுள்ளார்கள். ஒருவேளை அது நெசவோடு தொடர்புடையதாக இருக்கலாம். நூல் நூற்போர் தம் தொழிலைக் காட்ட இதை முதன்முதலில் பயன்படுத்தியிருக்கலாம். என்றோ ஒரு நாள் நெசவுத் தொழில் சமூகச் செல்வாக்குப் பெற்றிருந்த நாளில் மக்களின் ஆட்சி அவர்கள் கைகளிலிருந்திருக்கலாம்.

இன்றும் இலங்கையில், தாய் தந்தையரின் சிதைக்குக் கொள்ளி வைக்கும் போதும், ஈமச் சடங்குகளைச் செய்யும் போதும், மாணிக்கவாசகரின் திருப்பொற்சுண்ணத்தைப் பாடிச் சுண்ணமிடித்து , சைவமுறைப்படி ஈமக்கிரியைகள் செய்யும் போது, பூணூல் அணிவது வழக்கத்திலுள்ளது.

தலைமையைக் குறிக்கும் அடையாளமாக பூணூல் பயன்பட்டிருக்கலாம், இறந்தவரின் பின் குடும்பத் தலைமையை ஏற்பதாக இச்சடங்கு பொருள் தருகிறது. இன்று பூணூல் அணிவது, பெரும்பாலும் பிராமணர்களாக இருந்தாலும், பொன்னில் ஆபரணங்கள் செய்யும் பொற்கொல்லர்கள்(தட்டார்கள்) பூணூல் அணிந்திருப்பதை நான் அவதானித்துள்ளேன்.

இன்று பூணூல் அணிவது, பெரும்பாலும் பிராமணர்களாக இருந்தாலும், பொன்னில் ஆபரணங்கள் செய்யும் பொற்கொல்லர்கள்(தட்டார்கள்) பூணூல் அணிந்திருப்பதை நான் அவதானித்துள்ளேன்.

அதை விடத் தமிழ்நாட்டில் ஒரு சிறிய கிராமத்திலுள்ள கோயிலுக்கு நான் என்னுடைய பெற்றோருடன் போயிருந்த போது, அந்தக் கோயில் குருக்கள், நாங்கள் கோயிலுக்குப் போயிருந்த போது அங்கு வந்திருந்த அந்த ஊர்ச் செட்டியாரின் குடும்பத்தினரை அறிமுகப்படுத்தி வைத்தார், அன்று மாலை அந்தச் செட்டியாரின் வீட்டில் விருந்துக்குப் போன போது, அந்தச் செட்டியாரின் வயதான மாமனாரும், பூணூல் அணிந்திருந்தார். நான் உண்மையிலேயே குழம்பிப் போய் விட்டேன்,

உண்மையில் நாட்டுக் கோட்டைச் செட்டியார்கள், மற்றச் செட்டி சாதிகள் போலல்லாது சுத்தமான, கலப்பில்லாத தமிழ்ச்சாதி, தமிழர்களின் பாரம்பரியத்தை மறக்காது, திரைகடலோடியும் திரவியம் தேடு எனபதை மறக்காது, வர்த்தகத்தில் பேரும், புகழுமடைந்த தமிழர்கள் அவர்கள். அவர்களும் பூணூல் அணியும் போது, எப்படி அது பிராமணர்களுக்கு மட்டும் சொந்தமாக இருக்க முடியும், அல்லது தமிழ்நாட்டின் பணமுள்ள உயர்ந்த சாதியினரை மட்டும் பிராமணர்கள் பூணூல அணியும் உரிமை கொடுத்துத் தங்கள் கைக்குள் போட்டுக் கொண்டார்களா?

இந்தப் பூணூலைத் தமக்கு எப்போதும் அணிந்து கொள்ளும் உரிமையைப் பார்ப்பனர் வைத்துக் கொண்டுள்ளனர். ஆண்டுக்கொரு முறை ஆவணி அவிட்டம் நாளில் பூணூலைப் புதுப்பித்துக் கொள்வதைப் பெரும் விழா போன்று பெருமையுடன் கொண்டாடுவார்களாம். பதின்மூன்று வயதிற்குள் இப்பூணூல் அணியப்பட வேண்டுமென்பது மரபு.

பூணூல் அணிந்த பின் அதை அணிவோர் புதிய ஒரு பிறப்பு எய்துவதாக இச்சடங்குக்குப் பொருள் கூறப்படுகிறது. முதன்முதல் பூணூல் அணியும் சடங்கை உபநயனம் என்று கூறுவர். பூணூல் அணிந்தவன் காயத்திரி என்ற மந்திர அறிவுரை பெற்றுப் புதுப்பார்வை பெறுகிறான் என்பது இதன் பொருள். இவ்வாறு, முற்காலத்தில் குடும்பத் தலைமை, சமூகத் தலைமையைக் குறிக்க அணிவிக்ப்பட்ட பூணூல் பின்னர் மெய்யியல் தெளிவு பெற்றோரைக் குறிப்பதாக மாறிப் பின்னர் ஒரு குறிப்பிட்ட சாதியாரின் தனிவுடைமையாகிய கதையாகி விட்டதாம். அப்படியானால், பூணூல் அணிவது தமிழரின் மரபா?.தமிழ்நாட்டில் இந்தச் உபநயனச் சடங்கைத் தீக்கை (தீட்சை) பெறுதல் என்றும் அழைப்பார்களாம். அதாவது ஒரு ஆசானிடம் அறிவுரை பெற்று இறைப்பணி புரோகிதம் அல்லது ஆசிரியப்பணி செய்ய ஏற்புப் பெறுவது என்பதே இதன் பொருள் அதாவது ஒருவகையான உரிமத்தின் அடையாளம். தமிழ்நாட்டில் பிராமணர்களுக்கு மட்டும் தான் தீட்சை பெறுவார்களா அல்லது பிராமணரல்லாத இந்துக்களும் பெறுவார்களா என்பது எனக்குத் தெரியாது.

102-0219_IMG.jpg

102-0224_IMG.jpg

(யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் சிவதீட்சை பெறும் சடங்கு ( இவர்கள் பிராமணச் சிறுவர்களல்ல)

8.jpg

"யாழ்நகர் பிறந்து தமிழ் காத்தான் எங்கள் நாவலன் இறவாப் புகழ் போர்த்தான்"

ஈழத்தில் தீட்சை பெறுபவர் தான் தீட்சைபெறுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னரும், தீட்சைபெற்றபின் ஒருமாதமும் சைவ உணவுகளை உட்கொள்ள வேண்டும். (அசைவ உணவுகளை உண்பவராக இருந்தால்) அதன்பின் தீட்சைபெறும் நாளன்று நீராடியபின் கோவிலுக்குச் சென்று, தீட்சைக்கான சடங்குகளைச் செய்துமுடித்த பின் கோயில் குருக்கள் பல மந்திரங்களைக் காதில் ஒதுவார் அதில் முக்கியமானது ஓம் சிவாயநம, சில மந்திரங்களை தீட்சை பெறாத இன்னொரு இந்துவுக்குக் கூடத் திருப்பிச் சொல்லக் கூடாதென்பது நம்பிக்கை.

ஈழத்தில், பெரும்பாலான இந்துக்கள் தீட்சை பெறுவார்கள், தீட்சை பெறும் சடங்கை, சிறு வயதில் பாடசாலைகளிலேயே நடத்துவார்கள், நானும் கூடத் தான் சின்ன வயதிலேயே சிவதீட்சை பெற்று விட்டேன், அப்படியென்றால் நானும் பூணூல் அணியலாமா? :rolleyes:)

இந்த விடயத்தைப் பற்றி உணர்வுகள் ரசிகர் மன்றத்தில் வழக்கம் போல் வட்டமாக நின்று கும்மியடிக்குமாறு, வழக்கமாகக் கும்மியடிப்பவர்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றிகள்: உணர்வுகள் இணையத்திற்கு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.