Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் சாதித்தது என்ன?

Featured Replies

கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் சாதித்தது என்ன?

 

2009 ஆம் ஆண்டு முள்­ளி­வாய்க்கால் பேர­வ­லத்­துடன் தமிழ் மக்­க­ளுக்­கான உரிமைப் போராட்டம் வேறு வடி­வத்தை பெற்­றி­ருந்­தது. கடந்த காலத்தில் அஹிம்சை ரீதி­யாக போரா­டிய தமிழ் தேசிய இனத்தின் கோரிக்­கை­க­ளையும், அபி­லா­ஷை­க­ளையும் தென்­னி­லங்­கையின் இரு பிர­தான கட்­சி­களும் கண்­டு­கொள்­ள­வில்லை. மாறாக தமிழ் மக்­களின் பிர­தி­நி­தி­களால் மேற்­கொள்­ளப்­பட்ட ஜன­நா­யக ரீதி­யான போராட்­டங்­களை அடக்­கு­வ­திலும், அவற்றை இழி­வு­ப­டுத்­து­வ­தி­லுமே  கவனம் செலுத்­தி­யி­ருந்­தனர். இதன்­கா­ர­ண­மாக தென்­னி­லங்கை ஆட்­சி­யா­ளர்கள் மீது அதி­ருப்தி அடைந்த இளை­ஞர்கள் ஆயு தம் ஏந்திப் போராட வேண்­டிய நிலைமை ஏற்­பட்­டி­ருந்­தது. ஆயுத ரீதி­யாக தமிழ் மக்­களால் மேற்­கொள்­ளப்­பட்ட போராட்­டத்தை பயங்­க­ர­வா­தத்­திற்கு எதி­ரான யுத்தம் என்ற பேரில் மஹிந்த அர­சாங்கம் சர்­வ­தேச நாடு­களின் உத­வி­யுடன் முடி­வுக்கு கொண்­டு­வந்­தி­ருந்தது. அதன்­பின்­ன­ரான தமிழ் தேசிய அர­சியல் என் ­பது மீண்டும் ஜன­நா­யக வழி­யையே நம்பி இருக்க வேண்­டிய சூழலை உரு­வாக்­கி­யுள்­ளது. 

யுத்தம் முடி­வ­டைந்த பின்னர் தமிழ் மக் கள் தமது தலை­மை­யாக தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­பையே நம்பிச் செயற்­பட்­டி­ருந்­தனர். தமி­ழீழ விடு­தலைப் புலி­களால் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு உரு­வாக்­கப்­பட்­டி­ருந்­த­துடன், தமிழ் மக்­க­ளது அபி­லா­ஷை­களை முன்­னி­றுத்­தியே தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பும் தேர்­தல்­களில் போட்­டி­யிட்டு இருந்­தது. அதன் அடி­ப­்ப­டை­யி­லேயே தமிழ் மக்­களின் ஆணை­யையும் அது பெற்­றி­ருந்­தது. ஆனால் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு கடந்த 8 ஆண்­டு­களில் எதைச் சாதித்து இருக்­கின்­றது என்ற கேள்வி இன்று எல்லோர் மனங்­க­ளிலும் எழுந்­தி­ருக்­கின்­றது. 2013 ஆம் ஆண்டு நடை­பெற்ற வட­மா­காண சபைத் தேர்­தலின் போது பல்­வேறு அழுத்­தங்­க­ளுக்கு மத்­தியில் தமிழ் மக்கள் அலை அலை­யாக திரண்டு வந்து வழங்­கிய ஆணையின் அடிப்­ப­டையில் அதிக பெரும்­பான்மை பலத்­துடன் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு வடக்கு மாகா­ண ­ச­பையில் ஆட்­சி­ய­மைத்­தது. மாகா­ண­ ச­பைக்குள் எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்கள் சிலர் இருக்­கின்ற போதும் ஆளும் கூட்­ட­மைப்பு உறுப்­பி­னர்­களே எதிர்க்­கட்சி போன்றும் செயற்­பட்டு வந்­தி­ருந்­தனர். இதன் கார­ண­மா­கவே மாகாண சபைக்குள் பல்­வேறு குழப்­பங்கள் ஏற்­பட்­டி­ருந்­தன. இந்த நிலையில் அந்த குழப்­பங்­களை கட்­டுப்­ப­டுத்த வேண்­டிய தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­மை­யாக இருந்­தாலும் சரி அல்­லது பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளாக இருந்­தாலும் சரி அதனை கட்­டுப்­ப­டுத்­து­வதை விடுத்து அந்த பிரச்­ச­ினைகள் கட்­சிக்குள் விஸ்­வ­ரூபம் எடுக்கும் வகையில் செயற்­பட்­டி­ருக்­கின்­றனர். 

வட­மா­காண சபை தொடர்­பாக பல்­வேறு விமர்­ச­னங்­களை கூட்­ட­மைப்பு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் முன்­வைத்து வரு­கின்­றனர். வட­மா­காண சபை என்ன செய்­தது எனவும் அவர்கள் கேள்வி எழுப்­பியும் இருக்­கின்­றனர். வட­மா­கா­ண ­சபை என்­பது அதி­கா­ர­மற்ற ஒன்று. அதற்­கு­ரிய அதி­கா­ரங்­களைப் பெற்று மக்­க­ளுக்கு சேவை செய்ய அது இன்னும் போராட வேண்­டியே இருக்­கி­றது. மாகா­ண­சபை அதி­கா­ரங்­களை வைத்து எத­னையும் சாதித்து விட முடி­யாது என்­பது கடந்த கால வர­லாறு. இந்த நிலையில், 2015 ஆம் ஆண்டு நடை­பெற்ற பாரா­ளு­மன்றத் தேர்­தலின் போது வடக்கு, கிழக்கு இணைந்த சுயாட்சி, சமஷ்டி அடிப்­ப­டையில் ஒரு நிரந்­தர தீர்வு உள்­ளிட்ட மீள­்கு­டி­யேற்றம், காணாமல் ஆக்­கப்­பட்டோர் விவ­காரம், அர­சியல் கைதிகள் பிரச்­சினை என தமிழ் மக்கள் முன்­னுள்ள பல பிரச்­ச­ினை­களை தமது தேர்தல் விஞ்­ஞா­ப­ன­மாக  முன்­வைத்து தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு மக்கள் ஆணையைக் கோரி­யி­ருந்­தது. இத­ன­டிப்­ப­டையில் 14 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் மக்­களின் ஆணை­மூலம் நேர­டி­யாக தெரிவு செய்­யப்­பட்­ட­துடன், இரு உறுப்­பி­னர்கள் தேசி­யப்­பட்­டியல் மூலமும் தெரிவு செய்­யப்­பட்­டனர். இதனால் கூட்­ட­மைப்பில் 16 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் இருக்­கின்­றார்கள்.

ரணில் –- மைத்­திரி அர­சாங்­கத்­திற்கு நிபந்­த­னை­யற்ற ஆத­ரவை வழங்கி இந்த அர­சாங்­கத்தை சர்­வ­தேச அழுத்­தங்­களில் இருந்து காப்­பாற்­றிய கூட்­ட­மைப்பு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அதன் மூலம் தமிழ் மக்­க­ளுக்கு பெற்றுக் கொடுத்­தது என்ன...? 2016 ஆம் ஆண்­டுக்குள் தீர்வுவரும் என கூட்­ட­மைப்பு தலைவர் இரா.சம்பந்தன் முன்னர் கூறி­யி­ருந்தார். ஆனால் தற்­போது 2017 ஆம் ஆண்டும் இறு­திக்­கா­லாண்டை அண்­மித்­துள்­ளது. எந்த தீர்வை அவரால் பெற முடிந்­தது. அல்­லது எந்த தீர்வைப் பெற முடியும் என நம்­பிக்­கையை வழங்க முடிந்­தது. குறைந்த பட்சம் தமிழ் அர­சியல் கைதி­க­ளை­யா­வது விடு­தலை செய்ய முடிந்­த­தா..? 

2015 ஆம் ஆண்டு  ஐ.நா. மனி­த­வு­ரிமை பேர­வையில் நிறை­வேற்­றப்­பட்ட 30-1 தீர்­மானம் நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்­கான அறி­கு­றிகள் எது­வு­மின்­றியே அதே தீர்­மா­னத்தை அமுல்­ப­டுத்­து­வ­தற்கு 34-1 இன் மூலம் அர­சாங்­கத்­திற்கு மேலும் இரண்டு ஆண்­டுகள் கால அவ­காசம் வழங்­கப்­பட்டு இருக்­கி­றது. தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு தலை­மையின் ஆத­ர­வுடன் இந்த கால­நீ­டிப்பில் அர­சாங்கம் வெற்றி பெற்­றி­ருக்­கி­றது. அந்த கால நீடிப்பு வழங்கி 6 மாதங்கள் கடந்து விட்­டது. இதன் பின் கிடைத்த மாற்றம் என்ன..? 

வடக்கு, கிழக்கு இணைந்த சுயாட்சி பற்றி தேர்தல் மேடை­களில் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­பினர் பேசி­வந்­தனர். ஆனால் இன்று அர­சாங்கம் வடக்கு, கிழக்கு இணைப்பு கிடை­யாது என கூறி­வ­ரு­கின்­றது.  தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சிலரும் வடக்கு, கிழக்கு இணைப்பு தற்­போ­தைக்கு சாத்­தியம் இல்லை என கூறு­கின்­றனர். ஒற்­றை­யாட்சி முறைக்­குள்­ளேயே தீர்வு என அர­சாங்கம் கூறு­கின்­றது. பௌத்த சம­யத்­திற்கே முன்­னு­ரிமை வழங்க வேண்டும் என பௌத்த மகா­நா­யக்­கர்கள் கோரு­கின்­றனர். ஜனா­தி­பதி, பிர­த­ம­ரு­டைய கருத்­துக்கள் கூட அதனை ஆமோ­திப்­ப­தா­கவே அமைந்­தி­ருக்­கின்­றது. இந்த நிலையில், தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தை முழு­மை­யாக மீறிய நிலையில் ஒரு தீர்வை அர­சாங்கம் திணிக்க முற்­பட்­டுள்­ளது. நிபந்­த­னை­யற்ற ஆத­ரவை வழங்கி வரு­கின்ற தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு இந்த விட­யத்தில் காத்­தி­ர­மாக என்ன செய்­தி­ருக்­கின்­றது. குறைந்த பட்சம் மக்­க­ளையும், சமூக செயற்­பாட்­டா­ளர்­க­ளையும் ஒன்­றி­ணைத்து தமது தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தை நடை­மு­றைப்­ப­டுத்த அழுத்­தத்தை வழங்­கி­யி­ருக்­கின்­றதா..?

கடந்த ஆட்சிக் காலத்தைப் போன்று தற்­போதும் திட்­ட­மிட்ட சிங்­கள குடி­யேற்றங்கள், இன­வி­கி­தா­சா­ரத்தை குழப்பும் வகை­யி­லான குடிப்­ப­ரம்­பல்கள், தமி­ழரின் ஆட்­புல அடை­யா­ளத்தை சிதைக் கும் எல்லை மீள்­நிர்­ணயம் என்­பன மேற்­கொள்­ளப்­பட்டு வரு­ கின்­றது. கிழக்கு மாகாணம் முழு ­மை­யாக பறிபோய்விட்டது. வவு னியா, மன்னார், முல்லைத் தீவு என வடக்­கிலும் நிலப்­ப­றிப்புக்கள் தீவி­ர மாக இடம்­பெ­று­கி­றது. இதைத்­த­டுப்­ப­தற்கு தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களால் என்ன செய்ய முடிந்­தது. குறைந்த பட்சம் பொருத்து வீடு வட பகு­திக்கு பொருத்­த­மற்­றது என கூறி தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­பினர் அதனை எதிர்த்து வந்­தனர். நீதி­மன்­றத்­திலும் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பால் வழக்குத் தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது. ஆனால் வடக்கில் 6000 பொருத்து வீடுகள் மத்­திய மீள்­கு­டி­யேற்ற அமைச்­சினால் நேர­டி­யாக வழங்­கப்­ப­டு­கி­றது. அதற்­கான நட­வ­டிக்­கைகள் இறு­திக்­கட்­டத்தை அடைந்­தி­ருக்­கின்­றது. இதைக் கூட 16 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் ஒன்று சேர்ந்து தடுக்க முடி­யாமல் போய்­விட்­டது. பொருத்து வீட்டைக்கூட தடுக்க முடி­யாத இவர்கள் தீர்வை பெற்றுத்தரு­வார்கள் என்று எவ்­வாறு நம்ப முடியும்..?

காணாமல் ஆக்­கப்­பட்டோர் தமக்கு நீதி கோரி மேற்­கொண்டு வரும் போராட்டங்­களை அரை­யாண்டை எட்­டி­யுள்­ளது. போராட் ­ட­க்க­ளங்கள் அவர்­க­ளது சொந்த இடங்கள் போல் மாறி அந்த மக்கள் அந்த இடத்தி­ லேயே நிரந்­த­ர­மாக இருந்து போராட வேண்­டிய நிலை ஏற்­பட்­டி­ருக்­கின்­றது. அவர்கள் உளரீதி­யா­கவும் கடு­மை­யாக பாதி­ப்­ப­டைந்து வரு­கின்­றனர். 16 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர் கள் இருந்தும் அவர்­க­ளது போராட்­டத்தை முடித்து வைக்க முடிந்­ததா..? அர­சாங்­கத்­திற்கு அழுத்­தத்தைக் கொடுத்து அந்த மக்கள் நம்பும் படி­யான வாக்­கு­று­தியை வழங்­கி­யா­வது அந்தப் போராட்­டத்தை முடித்து வைக்க முடி­யாத நிலையே தொடர்­கி­றது. தமது வாகனக் கொள்­வ­னவு தொடர்­பிலும்,  பாரா­ளு­மன்ற விவா­தங்­களின் போது சம்­மந்தம் இல்­லா­மலும் சில பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் பேசி வரு­கின்­றனர். வடக்கில் இளைஞர், யுவ­திகள் வேலை­வாய்ப்புக் கோரி மாதக்­க­ணக்கில் போரா­டு­கி­றார்கள். அவர்­க­ளுக்கு வேலை­வாய்ப்பை வழங்க பாரா­ளு­மன்­றத்தில் கூட்­ட­மைப்பு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் முன்­வைத்த திட்டம் என்ன...? யுத்தம் மௌனிக்கச் செய்­யப்­பட்ட போது தமிழ் மக்கள் எதிர்­நோக்­கி­யி­ருந்த பிரச்­ச­ினைகள் இன்றும் தொடர்­கி­றது. இணக்க அர­சியல் எனக் கூறி அர­சாங்­கத்­து­ட­னான உறவை வலுப்­ப­டுத்தி அந்த மக்­க­ளுக்­காக செய்­தவை என்ன...?

மாறாக வடக்­கிற்கு கொண்டுவரப்­பட்ட சில அபி­வி ­ருத்தி திட்­டங்­களைக் குழப்பி மத்­திய அமைச்சர் சார்­பாக ஒரு குழுவும், பாதிக்­கப்­பட்ட மக்கள் சார்­பாக ஒரு குழுவும் என பிரிந்து அத் திட்­டங்­களை நடை­மு­றைப்­ப­டுத்­தாமல் விட்­டதே மிச்சம். வவு­னியா பொரு­ளா­தார மத்­திய நிலைய விவ­கா­ரத்தில் கூட்­ட­மைப்பு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் செயற்­பா­டுகள் யாவரும் அறிந்­ததே. ஆக, ஆட்சி மாற்­றத்­திற்கு பின்­ன­ரான இணக்க அர­சியல் மூலம் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் வரிச்­ச­லு­கை­ளையும், சொகுசு வாக­னங்­க­ளையும், பாரா­ளு­மன்ற பத­வி­க­ளையும், வெளிநாட்டு பயணங்களையும், மாவட்ட மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைமைப் பதவிகளையும் பெற்றுக் கொண்டதை தவிர மக்களுக்காக அவர்களால் முழுமையாக எதை செய்ய முடிந்திருக்கின்றது. ஜனாதிபதி, பிரதமருடன் விருந்துகளிலும், வீட்டு வைப வங்களிலும் பங்குபற்றியதுடன், அவர் களை தமது வீடுகளுக்கும் அழைத்து கொண் டாட்டங்களை செய்ய முடிந்திருக்கின்றது. தென்னிலங்கை ஆட்சியாளர்களுடன் அந்நி யோன்னியமாக பழக முடியும் என்றால் அந்த நட்பையும், தொடர்பையும் பயன்படுத்தி மக்களுக்கான பிரச்சினைகளை ஏன் தீர்க்க முடியாது...? தமிழ் மக்களுக்காகவும் இவர்க ளால் எதையும் செய்ய முடியவில்லை. தமது கட்சியின் ஒற்றுமையையும் காக்க முடியவில்லை. இவ்வாறான நிலையில் இவர்களை நம்பி தீர்வுக்காக தமிழ் தேசிய இனம் காத்து இருப்பதன் மூலம்  அதனை அடைய முடியுமா...? மக்கள் விழிப்படைந்து தமது தலைமைக்கும், பிரதிநிதிக்கும் அழுத் தம் கொடுக்காத வரை தமிழ் மக்களால் எதனையும் பெறமுடியாது என்பதே கள ஜதார்த்தம்

ருத்திரன்-

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-08-12#page-5

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.