Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

2020 இல் மஹிந்தவின் ஆட்சி

Featured Replies

2020 இல் மஹிந்தவின் ஆட்சி

எதிர்­வரும் 2020 ஆம் ஆண்டில் மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மையிலான அணி­யினர் ஆட்­சிக்கு வரலாம் என்ற தொனியில்  அமைச்­ச­ரவைப் பேச்­சா­ளரும்   அமைச்­ச­ரு­மான ராஜித சேனா­ரட்ன நேற்று கருத்து வெளி­யிட்டார்.  

Image result for ராஜித சேனா­ரட்ன virakesari

அர­சாங்கத் தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று நடை­பெற்ற   வாராந்த அமைச்­ச­ரவை முடி­வு­களை அறி­விக்கும்   செய்­தி­யாளர் 

சந்­திப்பில்  ஊட­க­வி­ல­யாளர் ஒருவர் எழுப்­பிய  கேள்­விக்கு பதி­ல­ளிக்­கும்­போதே அவர் இந்தக் கருத்தை வெளி­யிட்டார். 

அமைச்சர் அங்கு மேலும் குறிப்­பி­டு­கையில்:-

ஒன்று அல்­லது இரண்டு மேல் நீதி­மன்­றங்­களை  ட்ரயல் அட்பார் நீதி­மன்­றங்­க­ளாக மாற்றி கடந்த ஆட்­சி­யா­ளர்கள் தொடர்­பான  ஊழல் குற்­றச்­சாட்­டுக்கள் குறித்து விசா­ரணை முன்­னெ­டுக்­க­வேண்டும். 

  2020 ஆம் ஆண்டு வரை இதனை இழுத்­த­டிப்­ப­தற்கு இட­ம­ளிக்க முடி­யாது. அப்­படி 2020 ஆம் ஆண்டு வரை  இந்த  விசா­ர­ணைகள் இழுத்­த­டிக்­கப்­பட்டால் அதன்­பின்னர் மஹிந்­த­வுக்கு எதி­ரான  குற்­றச்­சாட்டை  மஹிந்­தவே  விசா­ரணை செய்யும் நிலைமை ஏற்­பட்­டு­வி­டலாம். 

கேள்வி: அப்­ப­டி­யானால் 2020 ஆம் ஆண்டில் மஹிந்த ராஜ­பக்ஷ ஆட்­சிக்கு வரலாம் என்று கூறு­கி­றீர்­களா?

பதில்: ஒரு விட­யத்தை நன்­றாகப் புரிந்­து­கொள்­ளுங்கள்,  நாங்கள் ஆட்­சிக்கு வரா­விடின் அவர்­கள்தான் ஆட்­சிக்கு வரு­வார்கள்.  இல்­லா­விடின் ஜே.வி.பி.யால் ஆட்­சிக்கு வர­மு­டி­யுமா? நாம் யதார்த்­தத்­தையும் புரிந்­து­கொள்­ள­வேண்டும். 

கேள்வி: மாகா­ண­சபைத் தேர்­தல்­களை  பிற்­போ­டு­வ­தற்கு  அர­சாங்கம்  முயற்­சிப்­ப­தாக குற்­றம்­சாட்­டப்­ப­டு­கின்­றது. ?

பதில்: அப்­படி இல்லை மாகா­ண­சபைத் தேர்­தல்­களை  ஒரே தரத்தில் நடத்­த­வேண்டும் என்­பதில் அர­சாங்கம் உறு­தி­யாக இருக்­கி­றது.  இது தொடர்பில் நாங்கள் மக்­க­ளுக்கு வாக்­கு­றுதி வழங்­கி­யி­ருக்­கிறோம். அந்த வாக்­கு­று­தியை நிறை­வேற்­றவே முயற்­சிப்போம்.   மாகா­ண­சபைத் தேர்­தலை ஒரே நாளில் நடத்­த­வேண்டும் என்­பதே எமது நோக்கம். குறிப்­பாக  மாகா­ண­சபைத் தேர்­த­லையும் உள்­ளூ­ராட்சித் தேர்­த­லையும் ஒரே தினத்தில் நடத்­து­வ­தற்கே ஆராய்­கின்றோம். அதே­போன்று பாரா­ளு­மன்றத் தேர்­த­லையும் ஜனா­தி­பதித் தேர்­த­லையும்   ஒரே தினத்தில் நடத்­து­வ­தற்கு ஆராய்­கின்றோம். 

கேள்வி: இவை எல்­லா­வற்­றுக்கும் முன்னர் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பை  நடத்­து­வது குறித்து  நீங்கள் கருத்து வெளி­யிட்­டீர்­களா?

பதில்: இந்தத் தேர்­தல்­க­ளுக்கு முன்னர் உண்­மையில்  சர்­வ­ஜ­ன­வாக்­கெ­டுப்பை நடத்­து­வதே சிறப்­பாக இருக்கும். காரணம்   நான் இது­தொ­டர்பில் ஜனா­தி­ப­தி­யி­டமும் பேசினேன். அவரும்  சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு குறித்து ஆரா­ய­வேண்டும் என்று  கூறினார். 

கேள்வி:  சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பை சுதந்­தி­ரக்­கட்சி எதிர்க்­கின்­றதே?

பதில்: சுதந்­தி­ரக்­கட்சி எதிர்­காது என்றே கரு­து­கின்றேன். சர்­வ­ஜ­ன­வாக்­கெ­டுப்பை நடத்­து­வதன் மூலம் சுதந்­தி­ரக்­கட்­சிக்கே அதிக நன்மை இருக்கிறது. இன்று சர்வஜன வாக்கெடுப்பை  ஐக்கியதேசியக்கட்சியும் தமிழ் தேசியக்கூட்டமைப்பும், மக்கள் விடுதலை முன்னணியும் கோரிநிற்கின்றன.  எதிர்ப்பதாயின்  மஹிந்தமட்டுமே  இதனை எதிர்ப்பார். எனவே அனைவரும் விரும்பி நிற்கின்றபோது சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவதே சிறந்ததாக அமையும்.  

http://www.virakesari.lk/article/23234

  • தொடங்கியவர்

மாத இறு­திக்குள் அதி­ரடி தீர்­மா­னம்

p5-8c0aba99629f94dc2514bb7ac3b23e48b96b7bb0.jpg

 

என்ன நடக்­கப்­போ­கின்­றது என்­ப­தனை பொறுத்­தி­ருந்து பாருங்கள் என்­கிறார் ராஜித
(ரொபட் அன்­டனி)

நாட்டு மக்கள் நல்­லாட்சி அர­சாங்­கத்­திற்கு வழங்­கிய ஆணை நிறை­வேற்­றப்­படும் வகை­யி­லான அதி­ரடித் தீர்­மா­னங்கள் இந்த ஆகஸ்ட் மாதத்தில் மேற்கொள்ளப்படும். எவ்­வா­றான தீர்க்­க­மான மிகவும் முக்­கி­ய­மான தீர்­மா­னங்கள், நட­வ­டிக்­கைகள் வரப்­போ­கின்­றன என்­பதை நீங்கள் பார்ப்­பீர்கள் என்று அமைச்­ச­ரவைப் பேச்­சா­ளரும் அமைச்­ச­ரு­மான ராஜி­த­ சே­னா­ரட்ன தெரி­வித்தார்.

தற்­போது இடம்­பெறும் நிகழ்­வுகள் கூட மிகத்­தீர்க்­க­மா­னவை என்­பது உங்­க­ளுக்குத் தெரியும். எனவே பொறுத்­தி­ருந்து பாருங்கள் இந்த மாத்­திற்குள் என்ன நடக்­கின்­றது என்று பார்ப்போம் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

அர­சாங்கத் தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று நடை­பெற்ற வாராந்த அமைச்­ச­ரவை முடி­வு­களை அறி­விக்கும் செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அங்கு எழுப்­பப்­பட்ட கேள்­வி­க­ளுக்கு அமைச்சர் தொடர்ந்து பதி­ல­ளிக்­கையில்

கேள்வி: இவ்­வ­ருடம் ஆகஸ்ட் மாதத்தில் பாரிய அர­சியல் திருப்­பங்­களை ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய தீர்­மா­னங்கள் இடம்­பெ­றலாம் என்று நீங்கள் கூறி­யி­ருந்­தீர்கள்? என்ன தான் நடக்­கப்­போ­கின்­றது?

பதில்: என்ன நடக்­கப்­போ­கின்­றது என்­பதை பொறுத்­தி­ருந்து பாருங்கள், இப்­போதே அதி­ரடித் தீர்­மா­னங்­களை எடுப்­ப­தற்கு அர­சாங்கம் தொடங்­கி­விட்­டது. இந்த மாத இறு­திக்குள் பல முக்­கி­ய­மான தீர்க்­க­மான தீர்­மா­னங்கள் எடுக்­கப்­ப­டலாம். மிக விசே­ட­மாக இந்த நாட்டு மக்கள் நல்­லாட்சி அர­சாங்­கத்­திற்கு வழங்­கிய மக்கள் ஆணைக்கு ஏற்ப நட­வ­டிக்­களை அர­சாங்கம் எடுக்கும். மக்கள் வழங்­கிய ஆணையை நிறை­வேற்றும் வகை­யி­லான அதி­ரடி நட­வ­டிக்­கைகள் அர­சாங்­கத்­தினால் எடுக்­கப்­படும். பொறுத்­தி­ருந்து பாருங்கள். பல முக்­கி­ய­மான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட போகின்­றன. இப்­போது இடம்­பெ­று­கின்ற நிகழ்­வுகள் கூட இதன் ஒரு தொட­ரா­கவே காணப்­ப­டு­கின்­றன. ஆரம்­பக்­கட்ட நட­வ­டிக்­கை­க­ளையே தற்­போது பார்க்­கின்­றீர்கள்.

கேள்வி: ஷிரந்தி ராஜ­ப­க்ஷ­விடம் விசா­ரணை நடத்தும் போது மக்கள் ஆர்ப்­பாட்டம் செய்­கின்­றனர். என்­னதான் நடக்­கின்­றது?

பதில்: ஆம் பஸ்­களில் வந்து ஆர்ப்­பாட்டம் செய்­கின்­றனர். அவர்­க­ளிடம் அதிகம் பணம் இருக்­கி­றது. திருடன் என்றும் கூறு­கின்­றனர். எல்லாம் திட்­ட­மி­டப்­பட்டு முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றது. எனவே அவர்கள் எதை நினைத்­தாலும் செய்­வார்கள். குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரி­வுக்கு விசா­ர­ணைக்­காக செல்­கின்­ற­வர்கள் விகா­ர­மா­தேவி ஆகி­வி­டு­கின்­றார்கள். ஒரு சம­யத்தில் விகா­ர­மா­தேவி எப்­படி இந்த இடத்­திற்கு வந்தார் என்றும் எண்­ணத்­தோன்­று­கி­றது.

கேள்வி: அமைச்­ச­ர­வையில் அம்­பாந்­தோட்டை உடன்­ப­டிக்கை குறித்து பேசப்­பட்­டதா?

பதில்: அம்­பாந்­தோட்­டை­து­றை­முக உடன்­ப­டிக்கை முடிந்து விட்­டது. அது­தொ­டர்பில் பாரா­ளு­மன்­றத்­திற்கும் அறி­விக்­கப்­பட்­டது. அமைச்­ச­ர­வை­யிலும் ஆரா­யப்­பட்­டது. இனி செய்­வ­தற்கு ஒன்­று­மில்லை.

கேள்வி: விசேட நீதி­மன்றம் ஒன்றை அமைப்­பது தொடர்பில் அமைச்­ச­ர­வையில் பேசப்­பட்­டதா?

பதில்: விசேட நீதி­மன்றம் என்­பது தவறு. உண்­மையில் விசேட நீதி­மன்றம் அமைப்­ப­தற்கு அர­சி­ய­ல­மைப்பில் திருத்தம் செய்­ய­வேண்டும். ஆனால் கடந்­த­கால ஊழல்­களை விரை­வாக விசா­ரித்து முடிப்­ப­தற்கு இரண்டு மேல் நீதி­மன்­றங்­களை விசே­ட­மா­ன­தாக எடுத்து ட்ரயல் அட்பார் முறையில் விசா­ரணை நடத்­தலாம்.

இது இரண்டு மாதங்­களில் விசா­ர­ணை­களை முடிப்­ப­தற்கு உதவும். இத­னைத்தான் நாங்கள் பேசினோம். இவ்­வாறு இரண்டு மேல் நீதி­மன்­றங்­களை ட்ரயல் அட்பார் நீதி­மன்­றங்­க­ளாக உரு­வாக்கி துரி­த­க­தியில் வழக்­கு­களை விசா­ரிக்க அமைச்­சர்கள் மட்­டத்தில் இணக்­கப்­பாடு எட்­டப்­பட்­டுள்­ளது.

 அர­சி­ய­ல­மைப்பு என்­பதை நாம் குற்­றங்­களை மறைப்­ப­தற்­கான ஒரு கோர்­வை­யாக பயன்­ப­டுத்த முடி­யாது. எனவே இந்த மேல் நீதி­மன்­றங்­களை ட்ரயல் அட்பார் நீதி­மன்­றங்­க­ளாக மாற்றி செயற்­ப­டு­வ­தற்கு சட்­டமா அதி­பரும் பிர­தம நீதி­ய­ர­சரும் இணங்­கினால் போது­மா­னது.

அண்­மையில் பிர­தமர் ரணில் விக்­கி­ம­சிங்க தலதா மாளி­கைக்கு சென்­ற­போது ''சேர் எப்­போது திரு­டர்­களைப் பிடிப்­பீர்கள்'' என்று வய­தான பெண்­மணி ஒருவர் வின­வினார். நான் திரு­மண வீடு­க­ளுக்கு செல்லும் போது அங்கு வரும் பெண்கள் என்னை சற்று ஒதுக்­குப்­பு­ற­மாக அழைத்து சென்று சுற்­றி­வ­ளைத்து '' சேர் எப்­போது திரு­டர்­களைப் பிடிப்­பீர்கள்'' என்று கேட்­கின்­றனர். நான் அமைச்­ச­ரவைப் பேச்­சாளர் என்­பதால் இந்தப் பிரச்­சி­னைக்கு பாரி­ய­ளவில் முகம் கொடுக்­கின்றேன்.

கேள்வி: அப்­ப­டி­யானால் என்­னதான் நடக்­கின்­றது?

பதில்: இல்லை இங்கு ஒரு விட­யத்தை கவ­னிக்­க­வேண்­டி­யுள்­ளது. தற்­போது ஆணைக்­கு­ழு­வொன்று அரச சாட்­சி­யாக சென்ற ரவி கரு­ணா­நா­யக்க பதவி இழக்­க­வேண்­டி­யுள்­ளது. இதுதான் நிலைமை, மேலும் சட்­டமா அதி­பரின் யோசனை இல்­லாமல் நட­வ­டிக்­கை­களை எடுக்கக் கூடாது என பிர­தமர் கூறி­வ­ரு­கிறார். ஒரு துப்­பாக்­கியை வைத்­தி­ருந்­தவர் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­ப­டு­கிறார். 3000 ஆயு­தங்­களை வைத்­தி­ருந்­தவர் பிணையில் விடு­விக்­கப்­ப­டு­கின்றார் இதுதான் நிலைமை.

கேள்வி: அமைச்சர் விஜ­ய­தாஸ விசேட நீதி­மன்ற கோரிக்­கையை நிரா­க­ரித்­தாரா?

பதில்; ஆம் அதனை அவர் நிரா­க­ரித்தார். ஆனால் இங்கு நிரா­க­ரிப்­பது முக்­கி­ய­மல்ல. பிரச்­சி­னையைத் தீர்ப்­பதே முக்­கி­ய­மா­ன­தாகும். உதா­ர­ண­மாக நான் சுகா­தார அமைச்­ச­ராக இருந்து கொண்டு பிரச்­சினை ஒன்று வரும்­போது சட்­டத்தின் படி இதனைத் தீர்க்க முடி­யாது என்று மக்­க­ளுக்கு கூற முடி­யாது. விளக்­க­ம­ளிக்­கத்­து­கொண்­டி­ருப்­ப­தையே தொழி­லாக கொள்­ள­மு­டி­யாது. ஏதோ ஒரு­வ­கையில் பிரச்சினைகளைத் தீர்க்கவேண்டும்.

கேள்வி: உங்கள் அரசாங்கம் வந்ததும் எப்.சி.ஐ.டி. பாரிய ஊழல் எதிர்ப்பு ஆணைக்குழு என பல நிறுவனங்கள் அமைக்கப்பட்டன. இன்றுவரை எதுவும் நடக்கவில்லை. நீங்கள் கூறும் இந்த மேல் நீதிமன்ற விவகாரமும் அப்படியே அமைந்துவிடுமா?

பதில்: பொதுவான முறைமையின் கீழ் ஒரு நீதிமன்றத்தின் விசாரணை முடிய 10 வருடங்களும் 2 மாதங்களும் தேவை. ஆனால் ட்ரயல் அட்பார் மூலமாக இரண்டு மாதங்களில் விசாரணைகளை முடிக்கலாம். எனவே ஒன்று அல்லது இரண்டு மேல் நீதிமன்றங்களை ட்ரயல் அட்பார் முறையில் மாற்றி விசாரணைகளை முன்னெடுப்பதே சரியாக அமையும் என நம்புகிறோம். 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-08-17#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.