Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறையில் பிறந்த நாள்... சசிகலாவை வாழ்த்தச் செல்லும் தினகரன்!

Featured Replies

சிறையில் பிறந்த நாள்... சசிகலாவை வாழ்த்தச் செல்லும் தினகரன்!

 
 

சசிகலா -ஜெயலலிதா

“ஜெயலலிதா பரிசாகத் தரும் புடவை, உறவுகளின் வாழ்த்து, நெருக்கமானவர்களின் பூங்கொத்து என்று பிறந்த நாளை கொண்டாடியவர் சசிகலா. இந்தப் பிறந்த நாள் அவருக்கு மறக்க முடியாததாக அமைந்துவிட்டது” என்று உருக்கமாக சொல்கிறார் சசிகலாவுக்கு நெருக்கமான ஒருவர். 

ஆகஸ்ட் 18-ம் தேதி சசிகலாவின் பிறந்த நாள். அ.தி.மு.க-வின் அதிகார சத்தியாக இருந்தபோதுகூட அவருடைய பிறந்த நாள் குறித்து பெரும்பாலனவர்களுக்கு தெரியாது. சசிகலாவின் பிறந்த நாளை அவருடைய உறவுகள் கூட வெளிப்படுத்த மாட்டார்கள். காரணம் ஜெயலலிதா மீதான பயம். அதனால் சசிகலா தனது பிறந்த நாளை வேதா இல்லத்தில் நான்கு சுவற்றுக்குள்ளே கொண்டாடுவார். ஜெயலலிதாவுடன், வேதா இல்லத்தில் சசிகலா தங்கத் தொடங்கிய ஆரம்ப காலத்தில், தனது பிறந்த நாள் அன்று கணவர் நடராஜனை சந்திக்க சென்றுவிடுவார் சசிகலா. ஜெயலலிதாவும் மறுப்பு ஏதும் சொல்லாமல் சசிகலாவை அனுப்பிவைப்பார்.  உறவுகளுடன் அன்றை தினத்தை கழிக்கவேண்டும் என்று சசிகலா விரும்புவார். 

33 மூன்று ஆண்டுகாலம் ஜெயலலிதாவுடனே அவர் பிறந்த நாளைக்கொண்டாடி இருக்கிறார். 96-ம் ஆண்டு தி.மு.க.ஆட்சிக்கு வந்த பிறகு, ஜெயலலிதா மற்றும் சசிகலா மீதான வழக்குகளினால் சிறையில் தள்ளப்பட்டார். அப்போது ஒரு முறை அவருடைய பிறந்த நாள் சிறையில் கழிந்துள்ளது. ஜெயலலிதா இருந்தவரை சசிகலாவின் பிறந்த நாளுக்கு முதல் வாழ்த்தே ஜெயலலிதாவிடம் இருந்து தான்வரும். பிறந்ந நாள் அன்று காலையில் புதிய புடவையும் சசிகலாவுக்குப் பிறந்த நாள் பரிசாக வழங்குவாராம் ஜெயலலிதா. அதே போல், சசிகலாவின் கணவர் நடராஜன் பிறந்த நாள் வாழ்த்தை ஆண்டுதோறும் மறக்காமல் சொல்லிவிடுவார். சசிகலாவுக்கு நெருக்கமான அதிகாரிகள் சிலரும் போயஸ்கார்டனில் அவருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவிப்பார்கள்.

சசிகலா -தினகரன்

போயஸ் தோட்டத்தில் பணிபுரிந்த ஊழியர்கள் பெரும்பாலானவர்கள் சசிகலாவினால் நியமிக்கப்பட்டவர்கள் என்பதால் அவர்களும் பிறந்த நாள் அன்று சசிகலாவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துவிடுவார்கள். கோவிலுக்குச் செல்வது, உறவுகளை சந்திப்பது என்று அன்றைய நாளை மகிழ்ச்சியாகவே கழிப்பார் சசிகலா. ஆனால் இந்த ஆண்டு பெங்களுரு சிறையில் பிறந்த நாளைக் கொண்டாட வேண்டிய நிலையில் சசிகலா உள்ளார். ஏற்கெனவே சிறையில் சலுகைகளை அனுபவித்தற்காக, கடும் நெருக்கடிகள் இப்போது சசிகலாவுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சிறையில் தனது பிறந்த நாளை புத்தாடை அணிந்து கூட கொண்டாட முடியாத நிலை சசிகலாவுக்கு உள்ளது. அவருக்கு இருக்கும் ஒரே ஆறுதல் அவருடன் இளவரசி இருப்பது மட்டுமே.

அ.தி.மு.க-விலிருந்து சசிகலாவை நீக்க வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒழித்துவரும் நிலையில் அவருடைய பிறந்த நாள் சசிகலா அணியினரால் கூட உற்சாகமாக கொண்டாடப்படுவது சந்தேகம் தான். 

 

சசிகலாவின் பிறந்த நாள் அன்று, அவரை சிறையில் சென்று சந்திக்க திட்டமிட்டார் அ.தி.மு.க-வின் துணைப் பொதுச்செயலாளர் தினகரன். அதற்காக சென்னையில் இருந்து பெங்களூரு செல்கிறார். நாளை சசிகலாவை சந்தித்து பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவிக்க உள்ளார். மேலும், சசிகலாவின் பிறந்த நாளில் மன்னார்குடி மற்றும் கர்நாடகாவில் உள்ள ஓர் ஆலயம் ஆகியவற்றில் சிறப்பு பூஜைகளும் நடைபெற உள்ளன. ஜெயலலிதாவின் வாழ்த்தும் இல்லை, உறவுகளின் ஆசியும் இல்லாத பிறந்த நாளாக இந்தப் பிறந்த நாள் சசிகலாவுக்கு அமைந்துவிட்டது.

http://www.vikatan.com/news/politics/99427-sasikalas-66th-birthday-at-parappana-agrahara-and-dinakaran-on-the-way-to-bengaluru.html

  • தொடங்கியவர்

'விரைவில் சில ஆபரேஷன்கள்' - தினகரன் சூசகம்

 

சசிகலாவின் பிறந்தநாளை முன்னிட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அவரை, டி.டி.வி.தினகரன் சந்தித்துப் பேசினார்.

டி.டி.வி.தினகரன்


அ.தி.மு.க. அணிகள் இணைப்பு தொடர்பான பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியிருப்பதாகக் கூறப்படும் நிலையில், சிறையில் சசிகலாவைச் சந்தித்து ஆலோசனை நடத்திவிட்டு வந்திருக்கிறார் தினகரன். இந்தச் சந்திப்பின்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்புகள், ஓ.பன்னீர்செல்வம் அணியினரின் செயல்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து சசிகலாவுடன் தினகரன் ஆலோசித்திருக்கலாம் என்று தெரிகிறது.

 

இந்தச் சந்திப்புக்குப் பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், ’எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின்னர், இரண்டு அணிகளாகப் பிரிந்த அ.தி.மு.க., தொண்டர்களின் விருப்பதால் தானாகவே இணைந்தது. ஆனால், இன்றைய சூழலில் தொண்டர்களின் விருப்பம் வேறாக இருக்கிறது. பதவியில் இருக்கும் சிலர் தங்களின் பதவியைக் காப்பாற்றிக்கொள்ளும் வகையில் அணிகளை இணைப்பது குறித்து பேசிவருகின்றனர். சுயநலத்துக்காக இணையும் இந்த இணைப்பு அதிக நாள்களுக்கு நீடிக்காது. கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து பொதுச்செயலாளர் சசிகலா ஆலோசனைகள் வழங்கினார். அவரது ஆலோசனைகளின்படி சில ஆபரேஷன்கள் நடக்கும். மேலூரில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்துக்கு சில எம்.எல்.ஏ-க்கள் வந்தனர். மேலும் சில எம்.எல்.ஏ-க்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணியில் ஸ்லீப்பர் செல்களாக இருக்கின்றனர். தேவைப்படும்போது பலத்தை நிரூபிப்போம். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா இல்லம் நினைவிடமாக்கப்படும் விவகாரத்தில், அவரின் வாரிசுகளிடம் முறையான அனுமதி பெற்று அரசு நடவடிக்கைகளில் இறங்க வேண்டும். அவரின் மரணம் குறித்த நீதி விசாரணை மூலம் சசிகலா குற்றமற்றவர் என்பது நிரூபணமாகும்’ என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.

http://www.vikatan.com/news/tamilnadu/99504-sleeper-cell-mlas-in-eps-camp-says-ttv-dinakaran.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.