Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜீவ சமாதி அடைய உண்ணாவிரதம் ஆரம்பிப்பு

Featured Replies

ஜீவ சமாதி அடைய உண்ணாவிரதம் ஆரம்பிப்பு
 

 

ஜீவசமாதி அடைய அனுமதிக்கக் கோரி, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கின் குற்றவாளி முருகன், வேலூர் சிறையில்  உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளார்.

துறவி ஆடைகளுடன் வேலூர் ஆண்கள் மத்திய சிறைச்சாலையில் தண்டனைக் கைதியாக இருக்கும் முருகன். சிறைத்துறை தலைவருக்கு, கடந்த மாதம் மனுவொன்றை, வேலூர் சிறை அதிகாரிகள் மூலம் அனுப்பியிருந்தார். அம்மனுவில், கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக, சிறைத் தண்டனை அனுபவித்துவரும் நிலையில், தனது விடுதலை கேள்விக்குறியாகியுள்ளது. சிறை வாழ்க்கையை வெறுப்பதாகவும் ஜீவசமாதி அடைய அனுமதிக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

இக்கோரிக்கையை வலியுறுத்தி, கடந்த மாதம் 17ஆம் திகதி முதல், சிறையில் வழங்கப்படும் உணவை சாப்பிட மறுத்து, பழங்களை மட்டும் சாப்பிட்டு வந்தார். அவர் அளித்த மனுவின் மீது, கடந்த ஒரு மாதமாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில், வேலூர் சிறைச்சாலையில், வடக்கு நோக்கி அமர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தை, முருகன், நேற்று தொடங்கியுள்ளார். பழங்களை சாப்பிட மறுத்ததுடன், தண்ணீரை மட்டும் குடிக்கிறார் என்று கூறப்படுகிறது. ஜீவசமாதி அடைவது குறித்து, தமிழக முதலமைச்சருக்கு கோரிக்கை மனுவையும் அளித்துள்ளார்.

இது தொடர்பாக சிறைத்துறை அதிகாரிகள் கூறும்போது, “சிறையில்ஈ ஜீவசமாதி அடைய அனுமதிக்க வேண்டும் என்று, ஏற்கெனவே மனு அளித்திருந்தார். இதன் மீது எந்த முடிவும் எட்டப்படாத நிலையில், உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளார்.

“தொடர்ந்து அவர் உண்ணாவிரதம் இருந்தால், ஓரிரு நாளில் அவரை சிறைச்சாலையில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று கூறினார்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/ஜீவ-சமாதி-அடைய-உண்ணாவிரதம்-ஆரம்பிப்பு/175-202533

  • கருத்துக்கள உறவுகள்

அகிம்சை, ஆன்மிகம் இவையெல்லாம் கிந்தியாவில் இருந்தாலும் அவற்றை மதிப்பதில்லை என்பதை இனத்தை தியாகதீபம் திலீபனின் உண்ணாவிரம் இருந்து எந்த வித பயனும் இல்லை என்பதை உணர்ந்தும் ஏன் இந்த வேலை முருகனுக்கு ?

  • தொடங்கியவர்

ராஜீவ் கொலைவழக்கு குற்றவாளி முருகனின் உண்ணாவிரதம் குறித்து கருத்து கூற போலீஸ் மறுப்பு

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட முருகன், ஜீவசமாதி அடையப்போவதாக் கூறி கடந்த மூன்று நாட்களாக வேலூர் சிறையில்உண்ணாவிரதம் மேற்கொண்டுவரும் நிலையில், இது குறித்து சிறைத்துறை அதிகாரிகள் கருத்துதெரிவிக்க மறுத்துள்ளனர்.

ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளி உண்ணாவிரதம்படத்தின் காப்புரிமைAFP

இது தொடர்பாக சிறைத்துறையின் கூடுதல் இயக்குநர் விடம் கேட்டபோது, ''முருகன் ஒரு மனு அளித்துள்ளார். இறைவனை வேண்டி ஜீவசமாதி அடையப்போவதாக கூறியுள்ளார். கடந்த மூன்று நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்,'' என்று கூறினார்.

முன்னதாக, முருகன் தனது விருப்பப்படி மதநம்பிக்கையுடன் இருப்பதுபற்றிகேட்டபோது, ''தற்போது இதில் வேறு தகவல்களை கூறமுடியாது,'' என்று தெரிவித்தார்

26 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்துவரும் முருகன் தனது விருப்பத்தை மனுவாக எழுதி சிறைத்துறை அதிகாரிகளுக்கு அளித்துள்ளார்.

ராஜீவ் காந்தி கொலைவழக்கில், முருகன் அவரது மனைவி நளினி, சாந்தன் மற்றும் பேரறிவாளனுக்கு அளிக்கப்பட்டிருந்த தூக்குத்தண்டனையை 2014-இல் உச்சநீதிமன்றம் ஆயுள் தண்டனையாக மாற்றி உத்தரவிட்டது. இதற்கு பின்னர் நால்வருக்கும் விடுதலை அளிக்கக்கோரிப் பல போராட்டங்கள் தமிழகத்தில் நடந்துள்ளன. அந்த போராட்டங்களுக்கு எதிராக விமர்சனங்களும் எழுந்துள்ளன.

ஜீவசமாதி அடைய கோரி ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளி உண்ணாவிரதம்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

தற்போது வேலூர் சிறையில் இருக்கும் முருகன், நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்ட சமயங்களில் காவி உடையில், நீளமான தாடியுடன் தோன்றும் காட்சிகள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

முருகனின் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் அண்மையில் இலங்கையில் வந்த முருகனின் தாயாரை சந்திக்க அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது என்றும், அதை எதிர்த்து முருகன் வழக்கு நடத்திவருகிறார் என்றும் கூறினார்.

பிபிசி தமிழிடம் பேசிய முருகனின் சட்ட ஆலோசகர் புகழேந்தி முருகன் ஜீவசமாதி அடையவிருப்பதாக முன்னதாகவே அறிவித்திருந்தார் என்றும், கடந்த ஏழு ஆண்டுகளாக தீவிரமாக விஷ்ணு பக்தராக உள்ளார் என்றும் கூறினார்.

 

சிறையில் பிறந்த நளினி-முருகன் தம்பதியின் மகள் ஹரித்திரா தற்போது லண்டனில் வசித்துவருகிறார்.

மருத்துவராக வேலைசெய்துவரும் ஹரித்திராவுக்கு திருமண ஏற்பாடுகள் செய்யவேண்டி நளினி ஆறுமாத காலம் விடுப்புவேண்டும் என்று விண்ணப்பித்துள்ள ஒரு வார காலத்தை அடுத்து முருகன் ஜீவாசமாதி அடைய விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது என்றும் புகழேந்தி தெரிவித்தார்.

ஜீவசமாதி அடைய கோரி ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளி உண்ணாவிரதம்

''26 ஆண்டுகளுக்கு மேலாக முருகன் மற்றும் நளினி இருவரும் சிறையில் உள்ளனர். இருவரும் தங்களது மகளை கடந்த 2004ல் நேரில் சந்தித்த கடைசிமுறை. தற்போது தங்களது மகளின் திருமணத்திற்கு ஏற்பாடுகள் செய்துவருகின்றனர். அதற்குக் குறைந்தபட்சம் ஆறு மாத காலம் பரோலில் விடுவிக்குமாறு நளினி கேட்டுள்ளார். இதற்கிடையில், முருகன் தனக்கு விடுதலை இல்லாத இந்தச் சிறை வாழ்க்கையின் துன்பத்தைப் போக்க ஜீவசமாதி அடையவேண்டும் என்று மனு கொடுத்துள்ளார்,'' என்று புகழேந்தி கூறினார்.

http://www.bbc.com/tamil/india-40992367

  • தொடங்கியவர்

உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள முருகனின் உடல் நிலை மோசமடைந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவிப்பு

 


உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள முருகனின் உடல் நிலை மோசமடைந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவிப்பு
 

ஜீவ சமாதி அடைய உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள முருகனின் உடல் நிலை மோசமடைந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவிக்கும் முருகன் கடந்த 6 நாட்களாக வேலூர் சிறைச்சாலையில் ஜீவ சமாதி அடைவதற்காக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றார்.

கடந்த 25 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அனுபவித்துவிட்ட நிலையில், இனியும் விடுதலை கிடைக்காது என்பதால் தான் ஜீவ சமாதி அடையப்போவதாக முருகன் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

மூன்று வேளை நீர் மாத்திரம் அருந்தி கடந்த 6 நாட்களாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளதால், அவரின் உடல் நிலை மோசமடைந்துள்ளதாக வைத்தியர்கள் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளனர்.

இதனால் முருகனை கட்டாயமாக உணவருந்தச் செய்தல், அவருக்கான சிகிச்சைகள் தொடர்பில் சிறை அதிகாரிகள் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளதாக ‘த ஹிந்து’ செய்தி வௌியிட்டுள்ளது.

இதேவேளை, சிறை விதிமுறைகளை முருகன் மீறியுள்ளமையால், அவரை யாரும் சந்திப்பதற்கு மூன்று மாதம் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://newsfirst.lk/tamil/2017/08/உண்ணாவிரதத்தில்-ஈடுபட்-6/

  • தொடங்கியவர்

13 நாள்களுக்குப் பிறகு உண்ணாவிரதத்தைக் கைவிட்டார் முருகன்!

 

முருகன்

 டிஜிபி-யின் ஆலோசனையை ஏற்று 13 நாள்களுக்குப் பிறகு, உண்ணாவிரதத்தை முருகன் கைவிட்டுள்ளார்.

1991 மே 21-ம் தேதி, பிரதமர் ராஜீவ் காந்தி, மனிதவெடிகுண்டு மூலம் சென்னையில் படுகொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவத்துக்கு, விடுதலைப்புலிகள் அமைப்பின் மீது குற்றம் சாட்டப்பட்டது. மேலும், பேரறிவாளன், நளினி, சாந்தன், முருகன் போன்றோர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கிலிருந்து ஏழு தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று தொடர்ந்து ஆதரவுக் குரல்கள் எழுந்துவருகின்றன. இந்நிலையில், வேலூர் சிறையில் 26 ஆண்டுகளாகத் தண்டனை அனுபவித்துவரும் முருகன், ஜீவசமாதி அடைய அனுமதி கோரி, ஏ.டி.ஜி.பி-க்கு மனு அளித்தார். மேலும், இதுதொடர்பாக, பிரதமர் மோடிக்கும் முருகன் கடிதம் எழுதியிருந்தார். இதையடுத்து, கடந்த 18-ம் தேதியிலிருந்து அவர் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்துவருகிறார். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய பிறகும், சிறை விதிகளை மீறி அவர் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்துவருகிறார்.

 

இந்நிலையில், மருத்துவர்களின் ஆலோசனை மற்றும் டிஜிபி-யின் ஆலோசனை ஆகியவற்றின் காரணமாக தன்னுடைய உண்ணாவிரதத்தைக் கைவிடுவதாக முருகன் அறிவித்துள்ளார்.

http://www.vikatan.com/news/tamilnadu/100809-murugan-ends-fasting-in-prison.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.