Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசுக்கு தலையிடி கொடுக்கும் விஜயதாசவின் கதை முடியுமா.? நாளை தீர்க்கமான முடிவு

Featured Replies

அரசுக்கு தலையிடி கொடுக்கும் விஜயதாசவின் கதை முடியுமா.? நாளை தீர்க்கமான முடிவு

 

 

Image result for விஜேதாச ராஜபக்ஷ virakesari

நல்லாட்சி அரசாங்கத்துக்கு தலையிடியைக் கொடுத்து வந்த நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக் ஷவுக்கு எதிராக ஆளும் கட்சி எம்.பிக்கள் போர்க்கொடி ஏந்தியுள்ளனர். நாளை திங்கட்கிழமை அமைச்சர் விஜேதாச ராஜபக் ஷ தமது அரசியல் வாழ்க்கை குறித்து தீர்க்கமான முடிவொன்றை எடுக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. 

இதேவேளை நாளை திங்கட்கிழமை மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறி சேன தலைமையில் ஆளும் கட்சி எம்.பிக்களின் கூட்டமொன்று நடைபெறவுள்ளது. இக்கூட்டத்திலும் அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ குறித்து ஆராயப்படவுள்ளதாக நம்பகரமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணையின் போது வெளிவந்த தகவல்களை அடுத்து முன்னாள் நிதி அமைச்சரும் வெளிவிவகார அமைச்சருமான ரவி கருணாநாயக்க ராஜினாமா செய்ய வேண்டுமென ஐக்கிய தேசியக்கட்சியும் ஆளும் தரப்பிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் அழுத்தம் கொடுக்க ஆரம்பித்தன. 

ஒருபடி மேலே சென்று ஒன்றிணைந்த எதிர்க்கட்சி அமைச்சர் ரவி கருணாநாயக்க மீது நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தது. இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள திகதி நிர்ணயிக்கப்படவிருந்த வேளையில் ரவி கருணாநாயக்க அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்தார். 

மத்திய வங்கி பிணைமுறி மோசடி விவகாரத்தில் விசாரணை முடிவுற்று ஒரு நிலைப்பாட்டுக்கு வருவதற்கு முன்னர் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த அமைச்சரொருவர் தனது பதவியை இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது என குறித்து ஐ.தே. கட்சி அமைச்சர்கள், எம்.பிக்கள் ஆதரவளார்கள் விரக்தியடைந்தனர். கடந்த ஆட்சிக் காலத்தில் பெருந்தொகையாக ஊழல் மோசடியில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர்கள் எதுவித தண்டனையுமின்றி சுகபோகம் அனுபவித்துக் கொண்டிருக்கும் நிலையில் தமது சகா ஒருவர் இராஜினாமா செய்ய நேர்ந்தது ஐ.தே.கட்சியினரை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

ராஜபக் ஷ குடும்பத்தினர் மற்றும் கடந்த ஆட்சியில் ஊழல் மோசடியில் ஈடுபட்ட அமைச்சர்கள் முக்கியஸ்தர்கள் மீது உரிய நேரத்தில் வழக்குத் தொடராதது மற்றும் சீனாவுடன் ஹம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தம் செய்து கொண்டது குறித்து பகிரங்கமாக விமர்சித்தது போன்ற காரணங்களுக்காகவே அமைச்சர் விஜேதாச ராஜபக் ஷ மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவர முனைந்தனர். 

எது எப்படியிருந்தும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக் ஷ மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்படவுள்ளதாக பத்திரிகைகளில் செய்தி வெளி வந்ததுமே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ எம்.பி. இப் பிரேரணைக்கு எதிராக கருத்துக்களை தெரிவிக்க ஆரம்பித்துவிட்டார். இதற்கும் ஒருபடி மேலாகச் சென்று ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் விஜேதாச ராஜபக் ஷவை தம்முடன் இணைந்துக்கொள்ளும்படி அழைப்பும் விடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும். 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் குறித்து விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட பாரிய நிதி மோசடி தொடர்பான ஜனாதிபதி விசாரணைக்குழு மற்றும் நிதிக்குற்றப்புலனாய்வுப் பிரிவு ஆகியவற்றிற்கு கிடைத்த முறைபாடுகளில் 90 முறைப்பாடுகள் விசாரணை செய்யப்பட்டு அது தொடர்பான கோவைகள் வழக்குத் தொடரவென சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் சட்டமா அதிபர் திணைக்களம் இந்த கோவைகள் குறித்து அலட்டிக் கொள்ளவில்லை. அத்துடன் வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கவுமில்லை. இதற்கு காரணம் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக் ஷ என குற்றஞ்சாட்டப்படுகிறது. 

இதேவேளை விஜயதாச ராஜபக் ஷ முன்னார் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். பின்னர் அவர் ஐக்கிய தேசியக்கட்சியில் இணைந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது. 

விஜயதாச ராஜபக் ஷ வகிக்கும் நீதி அமைச்சர் பதவி குறித்து இன்னும் ஓரிரு தினங்களுக்குள் குழுவொன்றை அமைத்து தீர்க்கமான முடிவொன்று எடுக்கப்படுமென்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஐ.தே.கட்சி செயற்குழு மற்றும் பாராளுமன்ற குழுக் கூட்டத்திலும் தெரிவித்துள்ளார். 

ஐ.தே.கட்சி செயற்குழுக் கூட்டமும், பாராளுமன்றக் குழுக் கூட்டமும், கடந்த 17 ஆம் திகதி வியாழக்கிழமை ஐ.தே.கட்சி தலைமையகமான சிறிகொத்தாவில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் விஜயதாச ராஜபக் ஷவிடமிருந்து நீதி அமைச்சுப் பதவியைப் பறிக்கத் தீர்மானித்துள்ளதாகவும் தெரியவருகிறது. 

நீதியமைச்சர் விஜேயதாச ராஜபக் ஷவின் அமைச்சுப் பதவி தொடர்பாக ஒரு தீர்மானத்தை எடுக்கவே விஷேடமாக இக்கூட்டம் கூட்டப்பட்டது. இக் கூட்டத்தில் கலந்து கொண்டு பலர் விஜயதாச ராஜபக் ஷவின் செயற்பாடுகளை கடுமையாக விமர்ச்சித்ததுடன் அவர் வகிக்கும் நீதி அமைச்சர் பதவி குறித்து தீர்மானமொன்றை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளனர். 

இருந்தும் விஜேதாச ராஜபக் ஷவுக்கு ஆதரவாக எவரும் கருத்துத் தெரிவிக்காததுடன் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க விஜயதாச ராஜபக் ஷவுக்கு கருத்து தெரிவிக்க சந்தர்ப்பம் வழங்கியபோதும் அவர் வழமைபோல் வழக்குகளை துரிதப்படுத்த தம்மால் முடியாதென்றும் அதற்காக அரசியலமைப்பில் திருத்தம் கொண்டுவரப்பட வேண்டுமென்று தெரிவித்துள்ளார். 

இருந்தும் அவரது இந்தக் கருத்தை கூட்டத்துக்கு வருகை தந்திருந்த எவரும் ஏற்றுக்கொள்ளாததுடன் அதற்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளனர். என்ன செய்யவேண்டுமென இக் கூட்டத்தில் கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க கேள்வி எழுப்பியதும் கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர்கள், எம்.பிக்கள் அவரை நீதி அமைச்சர் பதவியிலிருந்து நீக்கும்படி தெரிவித்துள்ளனர். தேவைப்பட்டால் அதற்காக வாக்கெடுப்பொன்றை நடத்தும்படியும் கூட்டத்தில் கலந்து கொண்டோர் தெரிவித்துள்ளனர். இதன்படி விஜயதாச ராஜபக் ஷவின் நீதி அமைச்சர் பதவி தொடர்பாக ஒரு குழு அமைத்து ஓரிரு தினங்களில் தீர்மானம் எடுக்கப்படுமென ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 

http://www.virakesari.lk/article/23354

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.