Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உங்கள் பாதுகாப்பை நீங்களே உறுதிப்படுத்துங்கள் - துணைவேந்தர்

Featured Replies

உங்கள் பாதுகாப்பை நீங்களே உறுதிப்படுத்துங்கள் - துணைவேந்தர்

யாழ்பல்கலைக்கழகத்தில் நேற்று கைலாசபதி கலையரங்கில் நடந்த சுட்டுக்கொல்லப்பட்ட மாணவன் சிவரஞ்சனுக்கான நினைவுக் கூட்டத்தில் கருத்துத் தெரிவித்த துணைவேந்தர் பேராசிரியர் குமாரவடிவேல் நீங்களே உங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தி கொண்டு இவ் இக்கட்டான சூழ்நிலையிலும் உங்கள் கல்வியை தொடர்ந்து கற்கையை பூர்த்தி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

நேற்று கைலாசபதி கலையரங்கில் காலை 10 மணியளவில் இடம்பெற்ற இந்நினைவுக் கூட்டத்தில் நூற்றுக்கணக்கான பல்கலைக்கழக சமூகத்தினர் பங்கு பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.pathivu.com/

அதை எப்படி உறுதிப்படுத்துவது என்பதையும் துணைவேந்தர் சொல்லிக் கொடுத்தால் மாணவர்களிற்கு இன்னும் வசதியாக இருக்குமே?

எனது ஆலோசனைகள்:

1. மாணவர்கள் ஒரு இடமும் தனியாகப் போய்வரக்கூடாது. குறைந்தது ஐவர் சேர்ந்த குழுவாகச் செல்லலாம்.

2. வெளியே செல்லும்போது வீட்டிலுள்ள மற்றவர்களிற்கு எங்கே போகின்றார்கள் என்பதை அறிவித்துவிட்டுச் செல்லவேண்டும்.

3. வசதி இருந்தால் கையில் எப்போதும் கைத்தொலைபேசி அல்லது பேஜரை வைத்திருப்பது சிறப்பானது.

4. தினமும் ஒரே மாதிரியான நிகழ்ச்சித் திட்டத்தில் இயங்கக்கூடாது. எழுந்தமானமான நிகழ்ச்சித் திட்டத்திற்கமையவும் செயற்படவேண்டும். உதாரணமாக தினமும் ஒரே இடத்தில் கூடிக்கதைப்பதை, தினமும் ஒரே பாதையால் போய்வருவதை, தினமும் ஒரே நேரத்தில் போய் வருவதை தவிர்க்கலாம்.

5. தினமும் ஒரே மாதிரி உடை அணிவதை, ஒரே உடையை அணிவதை தவிர்க்கலாம். தலைமயிர் வாரும் முறையை, தலை மயிர் வெட்டைக் கூட மாற்றலாம். மீசை, தாடி போன்றவற்றை எடுக்கலாம், வளர்க்கலாம். கிழமைக்கு கிழமை ஸ்டைலை மாற்றலாம். இதை பகிடியாகச் சொல்வதாக எடுக்க வேண்டாம். பலரின் உயிரை இந்த ஆலோசனை காப்பாற்றியுள்ளது.

6. தினமும் குறிப்பிட்ட கடைக்கு, தொலைத்தொடர்பு நிலையங்களிற்கு, இன்டர்நெட் கபேயிற்கு(இது அங்கு இருந்தால்) செல்வதை தவிர்த்து வெவ்வேறு இடங்களிற்கு சென்று தமது நாளாந்த தேவைகளை எழுந்தமானமான முறையில் பூர்த்தி செய்யலாம்.

7. தினமும் ஒரே மாதிரியான போக்குவரத்து முறையை பாவிப்பதை தவிர்க்கலாம். உதாரணத்திற்கு இன்று துவிச்சக்கர வண்டியைப் பாவித்தால் நாளை நண்பனின் மோட்டார் வண்டியில் போகலாம்.

8. அறிமுகம் இல்லாதவர்கள் பல்கலைக்கழகத்தினுள் வந்துசெல்வது பற்றி அவதானமாக இருக்கலாம்.

9. போக்குவரத்து செல்லும் போது தனியாகப் போகாமல் மக்கள் கூட்டத்துடன் போகலாம்.

10. அறிமுகம் இல்லாதவர்களுடன் அரசியல் கதைப்பதை தவிர்க்கலாம். அறிமுகம் இல்லாதவர்கள் வலியவந்து கதை தந்தால் அவர்களை வெட்டி விலகுவது நன்று.

11. தனியாக ஒரு அறையில் வாழ்வதை தவிர்க்கலாம். எப்பொழுதும் ஒரு அறையில் ஆகக்குறைந்தது இன்னொருவருடன் கூட இருப்பது நன்று.

12. வசதி இருந்தால் தூர இடங்களில் இருந்து பல்கலைக்கழகத்திற்கு சென்றுவருவதை தவிர்க்கலாம்.

யாழ் கள நண்பர்களும் உங்கள் ஆலோசனகளைக் கூறுவதோடு, எனது ஆலோசனைகளில் ஏதாவது பிழைகள் இருந்தால் சுட்டிக்காட்டலாமே?

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா இராணுவத்தால் கைது செய்யப்பட்ட பகீரதன் நிலமை என்னாகிவிட்டது?

மாப்பிளை சொல்வது போன்ற விடயங்கள் சாத்தியமா தெரியவில்லை. ஏன் என்றால் சிறிலங்காப் புலனாய்வுப்பிரிவினர், குறித்த ஒருவர் பற்றி நீண்ட பின்தொடர்வின் பின்னர் தான் கொல்கின்றனர். இவ்வளவு நாளும் பல்கலைக்கழகம் மூடியிருந்ததால் குறித்த மாணவர் எங்கு என்று அவர்களால் கண்டு பிடிக்க முடியாமல் இருந்திருக்கும். தற்போது, திறக்கப்பட்டுள்ளதால், குறித்த மாணவரைப் பின்தொடர முடிகின்றது.

என்னைப் பொறுத்தவரைக்கும், சிறிலங்கா அரசால் பாதுகாப்புப் பிரச்சனை என உணர்கின்ற மாணவர்கள், தற்காலிகமாக வெளியில் திரிவதை, நிறுத்தி வைப்பதும், பாதுகாப்பற்ற நிலையில் வெளியில் உலாவுவதை நிறுததுவதும் தான் சரியான வழி.

13. தமிழ் தேசியத்திற்கு ஆதரவாக செயற்படும் மாணவர்கள் தமது நடவடிக்கைகளை இரகசியமாக வைத்திருக்க வேண்டும். பல்கலைக் கழகத்தில் நடைபெறும் பொது நிகழ்வுகளில் உரையாற்றுவதை தவிர்ப்பதும் நல்லது.

14. யாழ் பல்கலைக்கழக மாணவர் சங்க பிரதிநிதிகள் அறிக்கைகளை வெளிவிடும்போது தமது தனிப்பட்ட அடையாளங்கள் வெளியில் தெரியாதபடி நடந்துகொள்ள வேண்டும்.

15. ஆபத்தான பொறுப்புக்கள், உதாரணமாக பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் பொறுப்பு குறுகிய காலத்தை உடையதாகவும், சுழற்சி முறையில் மாற்றம் செய்யப்படக்கூடியதாகவும் இருக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளே செயல்படுகின்ற புலநாய்வாளர்கள் மத்தியிலும் அவதானமாக இருக்க வேண்டும் குறிப்பாக உங்கள நண்பர் என்று கூறிகொண்டு இருப்பவரே உளவாளியாக இருக்கலாம்...

உள்ளே செயல்படுகின்ற புலநாய்வாளர்கள் மத்தியிலும் அவதானமாக இருக்க வேண்டும் குறிப்பாக உங்கள நண்பர் என்று கூறிகொண்டு இருப்பவரே உளவாளியாக இருக்கலாம்...

16. தமிழ்த் தேசியம் சம்மந்தமான விடயங்களை நண்பர்களுடன் பரிமாறும் போது கவனமாக இருக்க வேண்டும். பழகும் நண்பரைப் பற்றி ஆழமாக அறிந்திருக்க வேண்டும். கூடுதலாக புதிய நண்பர்கள் பற்றி எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

17. பொது இடத்தில் பகிடிகள் விடும்போது ஒருவரின் தனிப்பட்ட அடையாளங்கள் உயிர் நண்பானாலேயே காட்டிக் கொடுக்கப்பட்டுவிடலாம். பொது இடங்களில், மூன்றாம் நபருக்கு முன்னால் பகிடிகள், முசுப்பாத்திகள் விடுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

  • தொடங்கியவர்

யாழ் மக்கள் பாதுகாப்பு நிலைவரம் எந்த வரையறைக்குள்ளும் அடங்காது ஒரு

கொடிய சூழ்நிலையிலுள்ளது. தமிழ் அரச அதிகாரிகளோ மாணவர்களோ பொதுமக்களோ

எவருமே தங்களிடமிருக்கும் அடையாளங்களின் மூலம் தங்களை வெளிப்படுத்தினாலும்

அவர்கள் மதிக்கப்படுவதில்லை.

துணைவேந்தரால் என்ன செய்ய முடியும். மாப்பிள்ளையின் ஆலோசனைகளையும்

பின்பற்றக் கூடியதானதுதான். அதையும் மீறி நடக்கும் பாதுகாப்பின்மையைத்

தடுப்பதற்கு புலிகள் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றுவதுதான் ஒருவழி.

அது நடக்கும் போதுதான் மக்களால் நிம்மதியுடனிருக்க முடியும்.

இவ்வாறான எனது கருத்து நம்பிக்கையற்ற நிலையில் இன்றுள்ள புலம்பெயர்

தமிழர்களிடையே கேலிக்குரியதாகக் கூட இருக்கலாம். ஆனால் இச் சம்பவம்

விரைவில் நடந்தேற வேண்டும். அதுவே நமக்கும் நிம்மதியைத் தரும்.

நன்றிகள் மாப்பிள்ளை,

இவை யாழ்ப்பணத்தில் உள்ள மாணவருக்கு மட்டுமின்றி, சிறிலங்கா அராஜகத்திற்குற்பட்ட அனைத்துப் பிரதேசங்களிலும் வாழும் தமிழ் மக்களனைவரும் இன்று கடைப்பிடிக்க வேண்டியவை.

விரும்பியோ விரும்பாமலோ ஒரு போரளியாகவே வாழும் நிர்ப்பந்தம், அல்லாவிடில் அப்பாவியாய் சாகும் தூர்ப்பாக்கியம்.

சிறிலங்கா இராணுவத்தால் கைது செய்யப்பட்ட பகீரதன் நிலமை என்னாகிவிட்டது?

மாப்பிளை சொல்வது போன்ற விடயங்கள் சாத்தியமா தெரியவில்லை. ஏன் என்றால் சிறிலங்காப் புலனாய்வுப்பிரிவினர், குறித்த ஒருவர் பற்றி நீண்ட பின்தொடர்வின் பின்னர் தான் கொல்கின்றனர். இவ்வளவு நாளும் பல்கலைக்கழகம் மூடியிருந்ததால் குறித்த மாணவர் எங்கு என்று அவர்களால் கண்டு பிடிக்க முடியாமல் இருந்திருக்கும். தற்போது, திறக்கப்பட்டுள்ளதால், குறித்த மாணவரைப் பின்தொடர முடிகின்றது.

18. என்னைப் பொறுத்தவரைக்கும், சிறிலங்கா அரசால் பாதுகாப்புப் பிரச்சனை என உணர்கின்ற மாணவர்கள், தற்காலிகமாக வெளியில் திரிவதை, நிறுத்தி வைப்பதும், பாதுகாப்பற்ற நிலையில் வெளியில் உலாவுவதை நிறுததுவதும் தான் சரியான வழி.

18. சிறிலங்கா அரசால் பாதுகாப்புப் பிரச்சனை என உணர்கின்ற மாணவர்கள், தற்காலிகமாக வெளியில் திரிவதை, நிறுத்தி வைப்பதும், பாதுகாப்பற்ற நிலையில் வெளியில் உலாவுவதை நிறுததுவதும் தான் சரியான வழி. தற்காலிகமாக பல்கலைக்கழகத்திற்கு வகுப்புக்களிற்கு போவதை நிறுத்தலாம். தவறவிடும் வகுப்புக்களை எட்டிபிடிக்க நண்பர்களின் உதவியை நாடலாம். இடையிடையே எழுந்தமானமாக வீட்டைவிட்டு வெளியே செல்வதையும் தவிர்க்கலாம்.

19. தெருவில் நண்பர்களுடன் போகும்போது அரட்டை அடிப்பதை அல்லது ஏதாவது கதைத்துக் கொண்டு செல்வதை தவிர்க்கலாம். வீட்டினுள் நடப்பதை ஒட்டுக் கேட்கவே பல காதுகள் இருக்கும் இந்தக் காலத்தில் வெளியில் கதைப்பதை ஒற்றுக் கேட்டு அதை ஆராய்ச்சி செய்து, தகவல்களைப் பெற நூற்றுக் கணக்கான காதுகள் இருக்கக்கூடும்! உங்களைப் பின்தொடர்பவர்களிற்கு நீங்கள் கதைக்கும் ஒரு சிறு துரும்பு கூட முக்கியமான தகவல்களைப் பெறுவதற்கு உதவிவிடும். உளவாளிகள் ஒரு மிகச்சிறிய தடயத்தைவைத்து மிகப்பெரும் தகவல்களைத் திரட்டக்கூடிய ஆற்றல்கள் படைத்தவர்கள் என்பதை மனதில் வைத்திருக்கவும். உதாரணமாக "பூவின் செய்முறையை முடித்துவிட்டாயா" என நண்பரிடம் கேட்டால் அது உங்கள் நண்பன் உயிரியல் படிக்கும் மாணவன் என்பதை காட்டிக் கொடுத்துவிடும்.

20. நண்பர்கள் வந்தால் வீட்டிற்கு வெளியில் நின்று கதைப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள்! அவர்களுடன் வீட்டினுள் வைத்து கதையுங்கள்.

Edited by மாப்பிளை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.