Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசியல் கைதிகள் மூவரது வழக்கை விரைந்து முடிக்க நடவடிக்கை

Featured Replies

அரசியல் கைதிகள் மூவரது வழக்கை விரைந்து முடிக்க நடவடிக்கை

 

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் உள்ள வழக்குகளை அன்றாடம் விளக்கத்துக்கு எடுத்து முடிவுறுத்தப்பட வேண்டும் என பிரதம நீதியரசரால் மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் இந்த வழக்கை விசாரணைக்கு நியமிக்கின்றேன்.

இவ்வாறு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தெரிவித்தார்.

அநுராதபுரம் சிறையில் உணவு ஒறுப்புப் போராட்டம் நடத்தும் மூன்று அரசியல் கைதிகளின் வழக்கு வவுனியா மேல் நீதிமன்றத்தில் மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது. அதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அரசியல் கைதிகள் மூவரும் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். தமது வழக்குகள் வவுனியா மேல் நீதிமன்றத்தில் நடத்தப்பட வேண்டும். வேறு நீதிமன்றங்களுக்கு எக்காரணம் கொண்டும் மாற்றப்படக் கூடா என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

“இந்த வழக்கு கடந்த 4 வருடங்களாக இந்த நீதிமன்றிலே தவணை வழங்கப்படுகின்றது. நாம் 8 வருடங்கள் 3மாதங்களாக விளக்கமறியலில் இருந்து வருகின்றோம். இந்த வழக்கு இதுவரை காலமும் விளக்கத்துக்கு எடுக்காததன் காரணமாக நாம் மூவரும் கடந்த 20 ஆம் திகதி முதல் சாகும் வரையான உணவு ஒறுப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றோம். இன்று (நேற்று) வரையில் 4 நாள்கள் உணவு ஒறுப்பில் ஈடுபட்டுள்ளோம். இந்த வழக்கானது இந்த நீதிமன்றத்திலே தொடர்ந்தும் இடம்பெறவேண்டும். இல்லாவிட்டால் தாங்கள் சாகும்வரை உணவு ஒறுப்புப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம்.”-என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

இது தொடர்பில் மன்றால் சிறைச்சாலை உத்தியோகத்தரிடம் வினவப்பட்டது. எதிரிகள் மூவரும் கடந்த 20ஆம் திகதியிலிருந்து உணவு தவிா்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.

“இந்த வழக்கானது தொடர்ந்து 4 வருடங்களாக இந்த நீதிமன்றிலே நடந்து வருகின்றது. இந்த எதிரிகள் கடந்த கிட்டத்தட்ட 8 வருடங்களாக விளக்கமறியலில் இருந்து வருகின்றனர். தற்போது உணவு ஒறுப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த எதிரிகள் இவ்வாறு உணவு ஒறுப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு அவர்களது உயிருக்கு ஏதும் ஏற்பட்டால் அது தொடர்பில் நான் பொறுப்புக்கூற வேண்டியவனாக உள்ளேன்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் உள்ள வழக்குகளை அன்றாடம் விளக்கத்துக்கு எடுத்து முடிவுறுத்த வேண்டும் என்று பிரதம நீதியரசரால் மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் இந்த வழக்கை விசாரணைக்கு நியமிக்கின்றேன்.” – என்று வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தெரிவித்தார்.

அனைத்து சாட்சிகளுக்கும் அழைப்புக்கட்டளை பிறப்பிக்கப்பட்டது. வழக்கின் விசாரணைகள் அடுத்த மாதம் 25,26,27 ஆகிய திகதிகளுக்கு நியமிக்கப்பட்டது.

2009ஆம் ஆண்டு காலப்பகுதியில் வவுனியா மேல் நீதிமன்ற நியாதிக்க எல்லையான புதுக்குடியிருப்பு வள்ளிபுனம் இடைக்கட்டு பகுதியில் 18 கடற்படை சிப்பாய்களுக்கும், 8 இராணுவச் சிப்பாய்களுக்கும் மரணத்தை விளைவித்தனர் என்று தெரிவித்து பயங்கரவாத தடைக் கட்டளைச்சட்டத்தின் கீழ் இராசதுரை திருவருள், மதியரசன் சுலக்சன், கணேசன் தர்சன் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனா். அவா்களில் ம. சுலக்சன், க. தர்சன் ஆகிய இருவருக்கும் எதிராக 2013ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25ஆம் திகதி மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபரால் குற்றப்பகிா்வுப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

முதலாம் எதிரியான இராசதுரை திருவருள் என்பவரை இந்த வழக்கிலே சேர்த்து 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12ஆம் திகதி வவுனியா மேல் நீதிமன்றிலே சட்டமா அதிபரால் குற்றப்பகிர்வுப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணைகளானது வவுனியா மேல் நீதிமன்றிலே நடத்துவதற்கு திகதி நியமிக்கப்பட்டிருந்தது. சட்டமா அதிபர் திணைக்களத்தால் இந்த வழக்கை நடத்துவதற்கு அரச சட்டவாதி ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தார். இந்த வழக்கின் சாட்சி ஒருவருக்கு மரண அச்சுறுத்தல் இருப்பதன் காரணமாக வழக்கை வேறு ஒரு நீதிமன்றத்துக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. அதற்காக கடந்த முதலாம் திகதி தவணை வழங்குமாறு கோரப்பட்டிருந்தது.

அதனடிப்படையில் நேற்று தவணை வழங்கப்பட்டது. நேற்று வழக்கை நீதிமன்றிலே அழைத்தபோது, வழக்குத் தொடர்பிலே நடவடிக்கைகளை எடுப்பதற்கு மேலதிக கால அவகாசம் தேவை என அரச சட்டவாதி மாதினி விக்னேஸ்வரன் தெரிவித்தாா்.

http://newuthayan.com/story/22292.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.